ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்: ஜான்பாண்டியன் கோரிக்கை..


அப்பாவிகளை, ஆயுதம் ஏந்தாத பொதுமக்களை படுகொலை செய்த ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் இனத்தின் மீது யுத்தத்தின்போது சர்வதேச சட்டங்கள் அத்தனையும் மீறி தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை வீசி அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தது ராஜபக்ச அரசுதான்.

பள்ளிக் கூடங்களையும், மருத்துவமனைகளையும் இலக்கு வைத்து ரசாயன ஆயுதங்களை ஏவியது ராஜபக்ச அரசுதான்.

கொடுரமான செயலை செய்து இன்று சர்வதேசத்தின் முன் போர் குற்றவாளியாக நிற்கும் ராஜபக்சவை ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற அனுமதித்திருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இப்படி ஈவு, இரக்கமற்று லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல் ஐ.நா. மன்றத்தின் தீர்மானத்தை மதிக்காமல், காலில் போட்டு மிதித்து விட்டு ஐ.நா. விசாரணை குழுவை நாட்டிற்குள் செல்ல அனுமதி மறுத்து வரும் ராஜபக்சவை ஐ.நா. பொதுச் சபையில் பேச அழைத்திருப்பது ஐ.நா. மன்றத்திற்கு அவமான செயலாகும்.

அப்பாவிகளை, ஆயுதம் ஏந்தாத பொதுமக்களை படுகொலை செய்த ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும். இன்று வரை தமிழக மீனவர்களை கொடுரமாக தாக்குவது, உடைமைகளை பறிப்பது, அழிப்பது என்றும், கைது நடவடிக்கை என்ற பெயரில் சித்தரவதை செய்வது, பிடிக்கப்பட்ட படகுகளை பழைய இரும்புக்கு விற்பது என்று எண்ணற்ற கொடுஞ்செயல்களை செய்து வரும் ராஜபக்சவை பேச அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இந்திய மத்திய அரசும், ராஜபக்சவை ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 22 செப்டம்பர், 2014

மனித உரிமைப் போராளி தோழர்.பி.வி.பக்தவத்சலம்!

அடிப்படையில் பொதுவுடைமைவாதியான தோழர்.பி.வி.பக்தவத்சலம் அனைவராலும் தோழர்.பி.வி.பி. என்று அன்போடு அழைக்கப்படக் கூடியவர். மனித உரிமைப் போராளி எனும் சொல்லுக்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர். தமிழகத்தில் பலதரப்பட்டவர்களால் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த மக்களின், மனிதர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுவந்த மார்க்சிய-லெனினிய புரட்சிகர இயக்கத்தின் தோழர்களோடு இணைந்து தனது மனித உரிமைப் போரை தொடுக்கத் துவங்கியவர், ”சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகளைப் பெறாமல் வேறு உரிமைகளில் பயனில்லை” என்று முழங்கினார். தமிழகத்தில் அதிகமாக சாதிய ஒடுக்குமுறைகள் நிறைந்து காணப்படும் தருமபுரி மாவட்டத்தின் ஒரு காட்டுப்பகுதில் கட்டப்பட்ட தனது குடியிருப்புக்கு செம்பண்ணை என்று பெயரிட்டு அங்கிருந்து தனது மார்க்சிய-லெனினிய ரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்தார். ஒருமுறை, அந்த செம்பண்ணையில் வைத்து தோழர்.பி.வி.பி.-யை தீர்த்துக்கட்டிவடலாம் என்று கங்கணம் கட்டிய தமிழக காவல்துறையினர் பலமுறை முயற்சித்தும் முடியவில்லை; எனவே அப்பகுதி கூலிப்படையினரை வைத்து தோழர்.பி.வி.பி.-யை தீர்த்துக்கட்டிவிடலாம் என்று திட்டம் தீட்டிய காவல்துறையினர், கூலிப்படையினரிடம் சென்று உதவி கேட்டபோதுதான் அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. என்னே ஆச்சரியம்! “மனித உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிற ஒரு போராளியை நாங்கள் மட்டுமல்ல; வேறு எந்த கூலிப்படையினரும் கொல்ல முன்வரமாட்டார்கள்” என்று கூலிப்படையினரே கூறிய பின்பு தான் காவல்துறையினரின் மனமும் கலங்கியது. தனது போராட்ட பணி மூலம் மக்களின் மனதை மட்டுமல்ல, கூலிப்படையினரின் மனதையும் கவர்ந்த தோழர்.பி.வி.ப. அவர்களின் வரலாற்றை நீக்கிவிட்டு மனித உரிமை போராட்ட வரலாற்றை எழுதிவிட முடியாது. போராளிகள் மீது மிகுந்த பற்று கொண்ட தோழர்.பி.வி.பி. தனக்கு பிறந்த 3 பெண் குழந்தைகளுக்கும் அக்காலத்தில் போராளிகளாகத் திகழ்ந்த பெண் போராளிகளின் பெயர்களையே சூட்டினார். 1990-களில் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கான உரிமை மீட்புப் போரில் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து களமாடிய தன்னுடைய மார்க்சிய-லெனினிய தோழரான டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களோடு தானும் இணைந்து பட்டியலின மக்களுக்கான உரிமைமீட்பில் பங்குகொண்டார். அதோடு மட்டுமல்ல, 1997-ல் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்னிறுத்தி துவங்கப்பட்ட ”புதிய தமிழகம்” கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தான் முழுமையான விடுதலை அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்த தோழர்.பி.வி.பி. “தேர்தல்களில் பங்கெடுத்தல் கூடாது” என்கிற மார்க்சிய-லெனினிய இயக்க கோட்பாட்டையும் புரட்சிகர இயக்க தோழர்களின் விமர்சனங்களையும் மீறி, புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராக இந்திய பாராளுமன்ற, தமிழக சட்டமன்ற தேர்தல்களில் களமிறங்கினார். 1999-ல் நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் திருநெல்வேலி (பொது) நாடாளுமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளராய் போட்டியிட்டு சுமார் 1,12,941 வாக்குகளும், அதைத்தொடர்ந்து 2001-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேடப்பட்டி (பொது) தொகுதியில் போட்டியிட்டு 26,958 வாக்குகளும் பெற்று தமிழக பிரதான கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைவரும் மிரளும் வகையில் தனது போர்குண வீரியமிக்க வரலாற்றுச் சிறப்புவாய்ந்த வாதங்களைப் பதிவு செய்த தோழர்.பி.வி.ப. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க புதிய தமிழகம் கட்சி தொடுத்த அனைத்து வழக்குகளையும் தானே முன்னின்று வாதாடி வென்றுகாட்டினார். குறிப்பாக கண்டதேவி தேரோட்டத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட தொடுக்கப்பட்ட வழக்கில், ஒடுக்கப்பட்ட மக்கள் தேர்வடம் பிடிப்பதற்கான உரிமையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத் தந்தார். மேலும் பட்டியலின மக்களுக்கான 18 % இடஒதுக்கீட்டில் 6 %-மே நிரப்பப்பட்ட நிலையில் நிரப்பப்படாத பின்னடைவு பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி தொடுத்த வழக்கில் இவருடைய பங்கு குறிப்பிடத்தகுந்தது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூலிஉயர்வுக்காக புதிய தமிழகம் தொழிற்சங்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளிலும் இவருடைய பங்கு மகத்தானது. அவர் மறைந்தாலும் அவர் சார்பாக புதிய தமிழகம் கட்சி தொடுக்கும் குறிப்பாக உள்ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் கவனித்து வரும் தோழர்.பி.வி.பி. அவர்களின் புதல்வி வழக்கறிஞர்.திருமதி.அஜிதா மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர்.திரு.சரவணவேல் ஆகியோருக்கும் இந்த சமூகம் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளது. தன் வாழ்நாளெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மீட்புக்காக நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடிய தோழர்.பி.வி.ப. ஆசிய கண்டத்தின் மிகச்சிறந்த வழக்கறிஞர் ஆவார். அமெரிக்கா, ஈராக் அதிபர் சதாம் உசேனை தூக்கிலிட முற்பட்டபோது உலகம் முழுவதிலுமிருந்து 6 வழக்கறிஞர்கள் சதாம் உசேனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக வாதாட தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஆசிய கண்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டவர் தோழர்.பி.வி.பி. என்பது அவரின் வரலாற்றில் மறைக்கப்பட முடியாத நிகழ்வாகும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே தங்கள் சமுதாயத்துக்காகப் போராட துணிவிழந்து நிற்கிற இக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவராகப் பிறக்காவிட்டாலும் தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மீட்புக்காகவே வாழ்ந்து மறைந்த மனித உரிமைப் போராளி, வழக்கறிஞர் தோழர்.பி.வி.பக்தவத்சலம் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு தினமான 02.09.2014 அன்று புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நமது செம்மாந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்

ராஜபக்சேவை ஐ.நா.மன்றத்தில் உரையாற்ற அனுமதிக்ககூடாது.

ராஜபக்சேவை ஐ.நா.மன்றத்தில் உரையாற்ற அனுமதிக்ககூடாது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் செப்படம்பர் 23 ஆம்தேதி அனைத்து மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கிவிட்ட நிலையில், அதற்கு ஒத்துழைக்க முடியாது என்று இலங்கை அரசு அறிவித்தது. இவ்விசாரணைக்கு ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு அளிக்கும்படி ராஜபக்சேவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்தார். அதே நாளில் வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்த ராஜபக்சே,‘‘எந்த விசாரணையையும் ஏற்க முடியாது. ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்’’ என்று கூறியிருக்கிறார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்த திமிர் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து நாடுகளும் அதன் முடிவையும், அதன் துணை அமைப்புகளின் முடிவையும் ஏற்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு பிடிவாதம் பிடிக்கிறது; இலங்கையின் இத்தகைய செயல்பாடுகள் ஐ.நா. அமைப்புக்கு மட்டுமின்றி, அதில் உறுப்பினர்களாக உள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகும்.
இத்தகைய சூழலில் அடுத்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற ராஜபக்சே அழைக்கப்பட்டிருக்கிறார். கூட்டத்தின் முதல் நாளிலேயே பிற்பகல் அமர்வில் முதல் ஆளாக பேச அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. அமைப்பையும், அதன் பொதுச் செயலாளர் பான்.கி.மூன், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆகியோரையும் அவமதித்த இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் சரியானதாக இருக்கும். அதைவிடுத்து ராஜபக்சேவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்து ஐ.நா. அவையில் பேச அனுமதிப்பது போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ஊக்குவிக்கும் செயலாக அமையும்.
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், ஐ.நா. மற்றும் அதன் துணை அமைப்புகளின் மதிப்பை காப்பாற்றும் வகையிலும் ஐ.நா. பொது அவையில் உரையாற்ற ராஜபக்சேவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஐ.நா. திரும்பப் பெற வேண்டும்; ராஜபக்சேவை ஐ.நா.மன்றத்தில் உரையாற்ற அனுமதிக்ககூடாது. என்பதனை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் செப்படம்பர் 23 ஆம் திகதி அனைத்து மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தலைவர் தமிழினவேந்தர் பெ.ஜான்பாண்டியன் அவர்கள் சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டனஉரையாற்றுகிறர்

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி- 10,000 போலீசார் குவிப்பு ..

பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பரமக்குடியில் 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தின விழா இன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சந்தைப்பேட்டை அருகே உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர் அஞ்சலி செலுத்த அரசு நேரம் ஒதுக்கியது. அதன்படி காலை 7 மணிக்கு விழா துவங்கியவுடன் அவரது சொந்த ஊரான செல்லூர் மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமன் தலைமையில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு தேவேந்திர பண்பாட்டுக் கழகம் தலைவர் அழகர்சாமி தலைமையில் வந்தவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சுந்தரராஜன், மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, எம்.எல்.ஏ. முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் கார்மேகம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முனியசாமி ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம் பிரபு, மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட செயலாளர் ரங்கநாதன் மற்றும் முத்துசாமி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தமிழரசி, சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகவேல், திசைவீரன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், நகர செயலாளர் சேதுகருணாநிதி, நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் திவாகர், இளைஞர் அணி துரைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் பழனி ஆகியோரும், மக்கள் விடுதலை கட்சி சார்பில் தலைவர் முருகவேல் ராஜன், மதிமுக சார்பில் எம்.பி.கணேசமூர்த்தி மற்றும் இமானுவேல்சேகரன் மகள்கள் மேரி வசந்தாராணி, பாபின் விஜயராணி, சுந்தரி பிரபாராணி, ஜான்சிராணி ஆகியோரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இவர்கள் தவிர ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். கடந்த ஆண்டு நினைவு நாள் அன்று கலவரம் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10,000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய தெருக்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பதட்டமான இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்துள்ளனர். 10 இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தி அஞ்சலி செலுத்த வருபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி...


பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11–ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் இமானுவேல்சேகரன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் உதயகுமார், சுந்தர்ராஜ், மாவட்ட செயலாளர் தர்மர், அன்வர், ராஜா எம்.பி., முருகன் எம். எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சதன் பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. திசை வீரன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் திவாகர், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பொன்துரைசாமி, பரமக்குடி நகர செயலாளர் சேது கருணாநிதி ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவனர் திருமாவளவன், இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
டாக்டர் அம்பேத்கார் சட்ட பாதுகாப்பு மையத்தின் தலைவர் வக்கீல் கந்தசாமி தலைமையில் வக்கீல்கள் பசுமலை, அருளானந்தம், ராம்கில்லடியன், கணேசன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 40 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் அஞ்சலி செலுத்த வருபவர்களின் வாகனங்களை கண்காணிக்க சென்னை அண்ணாபல்கலைக் கழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 3 ஆளில்லா குட்டி விமானங்களை பறக்கவிட்டு கண்காணிக்கப்படுகிறது.
முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பரமக்குடி நகரில் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 5 மாவட்டங்ளில் இருந்து 10 மோப்பநாய்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பரமக்குடி நகர் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து ராமநாதபுரம், ராமேசுவரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் சிவகங்கை, இளையான்குடி, அண்டக்குடி, நயினார் கோவில் வழியாக ராமநாதபுரம், ராமேசுவரம் செல்கிறது.

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பல்வேறு கட்சி நிர்வாகிகள், அமைப்பினர் அஞ்சலி...


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 57-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அரசியல் கட்சியினர் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர்.
முதலாவதாக, இமானுவேல் சேகரனின் மகள் ஜான்சி ராணி, பேத்தி ஹெலன், பேரன்கள் கோமகன், சந்திரசேகரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி ஆகியன எடுத்துவந்து அஞ்சலி செலுத்தினர். இளைஞர்கள் பலரும் நினைவிடத்தில் முடி காணிக்கை செலுத்தினர்.
இதையடுத்து, அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, காவல் துறை சார்பில், ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
5 மாவட்டங்களிலிருந்து 10 போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 56 நடமாடும் போலீஸ் ரோந்து வாகனங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வருவோருக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் தலைமையில் 2 டி.ஐ.ஜி.க்கள், 5 எஸ்.பி, 9 ஏடி.எஸ்.பி., 30 டி.எஸ்.பிக்கள் உள்பட மொத்தம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சனி, 13 செப்டம்பர், 2014

இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் !..

இமானுவேல் சேகரனாரின் நினைவிடம் (விதைக்கப்பட்ட இடம்)

இம்மானுவேல் சேகரனின் 57-வது நினைவு நாள்..

இம்மானுவேல் சேகரனின் 57-வது நினைவு நாள்..

புதிய தமிழகம்..வீரவணக்கம்..

மாடக்கோட்டை சுப்பு : நினைவுநாள்:--செப்டரம்பர்13...

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: கண்காணிப்பு பணியில் 3 ஆளில்லா குட்டி விமானங்கள்...


பரமக்குடியில் நடைபெ றும் இமானுவேல் சேக ரன் நினைவு தினத்தை யொட்டி கண்காணிப்பு பணியில் 3 ஆளில்லா குட்டி விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஆளில்லா விமானங்கள்

பரமக்குடியில் இமானு வேல் சேகரன் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் செப் டம்பர் 11-ந்தேதி கடைபிடிக் கப்பட்டு வருகிறது. இதே போல இந்த ஆண்டும் இமா னுவேல் சேகரன் நினைவு தினம் இன்று (வியாழக்கி ழமை) கொண்டாடப்படுகி றது. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்க ளுக்கு சில விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம், போலீஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர். 40 இடங்களில் கண்கா ணிப்பு கேமி ராக்கள் பொருத் தப்பட்டுள்ளன. இதில் பதி வாகும் காட்சிகள் நகர் போலீஸ் நிலையத்தில் அமைக் கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்யப் படும்.

மேலும் அஞ்சலி செலுத்த வருபவர்களின் வாகனங் களை கண்காணிக்க சென்னை அண்ணா பல்க லைக்கழகத்தில் எம்.ஐ.டி. பிரிவு தக்தா குழுவை சேர்ந்த 6 பேர் கொண்டு வந்துள்ள 3 ஆளில்லாத குட்டி விமா னங்கள் பறக்க விடப்பட்டுள் ளது. இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்கா ணிப்பு கேமிரா மூலம் சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பதிவு செய்யப்படும். இதற் கான சோதனை ஓட்டம் நேற்று காலை பரமக்குடியில் உள்ள ராஜா சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்றது. இந்த கண் காணிப்பு சோதனையை சென்னை டெக்னிக்கல் போலீஸ் டி.ஐ.ஜி. சாரங்கன் பார்வையிட்டார்.

போலீஸ் குவிப்பு

தொடர்ந்து இந்த 3 ஆளில்லா குட்டி விமானங் கள் நேற்று மாலை முதல் பறக்கவிடப்பட்டு கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கிறது. சட்டம் ஒழுங்கு ஏ.டி. ஜி.பி. ராஜேந்திரன் ஆலோ சனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதட் டமான பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தெய்வ திருமகணார் தியாகி இம்மானுவேல் தேவேந்திரர் அவர்களின் 57 வது குருபூஜை மற்றம் தேவேந்திரர் தெய்வ வழிபாட்டு விழா....

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள்..

மண்ணின் மைந்தருக்கு செல்லூர் மக்கள் முளைப்பாரி கொண்டு வழிபடும் காட்சி

தேவேந்திரர் படை சூழ அய்யா இம்மானுவேல் சேகரன் அவர்களின் 57 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு தேசம் சார்பாக குவைத்தில் வெகு சிறப்பாக அனுசரிக்கபட்டது !..

புதிய தமிழகம்..வீரவணக்கம்

இம்மானுவேல் சேகரனின் 57-வது நினைவு நாள்..

இம்மானுவேல் சேகரனின் 57-வது நினைவு நாள்..ராம்விலாஸ் பஸ்வான்..m.p

தியாகி இமானுவேல் சேகரன் நினைவுயிடத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் அஞ்சலி...

இம்மானுவேல் சேகரனின் 57-வது நினைவு நாள்..

இம்மானுவேல் சேகரனின் 57-வது நினைவு நாள்..

அக்.6-இல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு...


பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்திய, புதிய தமிழகம் கட்சி தலைவர் க.கிருஷ்ணசாமி வரும் அக். 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: கடந்த 2011-இல் நடந்த சம்பவத்தைப் பயன்படுத்தி, கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் அரசு விதித்துள்ளது.
6 பிரிவுகளாக பிரிந்துள்ள தாழ்த்தப்பட்டோரை தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும். இமானுவேல் சேகரனின் பிறந்த நாளையும், நினைவு நாளையும் அரசே கொண்டாட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள் இட ஒதுக்கீட்டினை சீர்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்டோரை ஒருங்கிணைத்து வரும் அக். 6-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் கூறினார்.

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி: விதிமுறைகளை மீறியதாக கிருஷ்ணசாமி மீது வழக்கு


இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் கடந்த 11–ந் தேதி அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள் அஞ்சலி செலுத்த குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.வுக்கு மாலை 3 மணிமுதல் 4 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் அவர் அந்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வராமல் 4.20 மணிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் 5.30 மணி வரை அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேந்தோணி கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் பரமக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்படி விதிகளை மீறிய கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. புதிய தமிழகம் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கதிரேசன் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

புதிய தமிழகம் கட்சி நிர்வாகியை கத்தியால் குத்தியவர் கைது

ஓமலூர்:ஓமலூர் அருகே, புதிய தமிழகம் கட்சி நிர்வாகியை, கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற கும்பலில், முக்கிய குற்றவாளியை, போலீஸார் கைது செய்தனர்.
ஓமலூர் அருகே, ஆர்.சி., செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து, இவரது மகன் பாபு, 37. இவர், புதிய தமிழகம் கட்சியின், மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, பாபு தனது பைக்கில், செம்மாண்டப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அவரை வழி மறித்து தாக்கிய மூன்று பேர் கொண்ட கும்பல், பாபுவின் கழுத்தில், கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றது. படுகாயமடைந்த பாபு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணை நடத்திய, ஓமலூர் போலீஸார், பாலிக்காடு காலனியை சேர்ந்த நல்லப்பன் மகன் இளங்கோவன், 31, என்பவரை, நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள, பாலிக்காடு காலனியை சேர்ந்த ராமச்சந்திரன், ஜெகன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்த தாமதமாக வந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்காக புதிய தமிழகம் கட்சியினருக்கு பகல் 2 முதல் 3 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் வராமல், மாலை 5 மணிக்கு மேல் வந்து அஞ்சலி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில், டாக்டர் க.கிருஷ்ணசாமி, மாவட்டச் செயலாளர் கதிரேசன் ஆகியோர் மீது பரமக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இம்மானுவேல் சேகரனின் 57-வது நினைவு நாள்..

இம்மானுவேல் சேகரனின் 57-வது நினைவு நாள்..

புனித பூமியில் புதிய தமிழகம் இணையதள நண்பர்களின் வீரவணக்கப் பேரணி..

இம்மானுவேல் சேகரனின் 57-வது நினைவு நாள்..

இம்மானுவேல் சேகரனின் 57-வது நினைவு நாள்..

தியாகி இமானுவேல்சேகரனார் 57 ம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தலில் ...தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

தியாகி இமானுவேல்சேகரனார் 57 ம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தலில் இன்று பரமக்குடியில் தியாகியின் நினைவிடத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழினவேந்தர்பெ.ஜான்பாண்டியன் அவர்களின் ஆணையேற்று கழகத்தின் பொதுச் செயலாளர் ஜா.பிரிசில்லாபாண்டியன் அவர்கள் வீரவணக்க அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது...............................................
" இந்த வரலாற்று சிறப்பு நாளில் இங்கு கூடியுள்ள தோழர்களே தலைவர் தமிழினவேந்தரின் பாசத்திற்குரிய சகோதரர்களே! தலைவர் தமிழினவேந்தர் இன்று இந்த நிகழ்வில் தவிர்க்க முடியாத சூழலில் கலந்துகொள்ள முடியாத காரணத்தால் என்னை இங்கே அனுப்பியுள்ளார். அவரது ஆணையையேற்று இங்கே ஐயா தியகி இமானுவேல் செகரனாருக்கு வீரவணக்க மரியாதை கட்சியின் சார்பில் செய்யப்பட்டது.
தியாகி ஐயா இமானுவேல்சேகரனார் சமூகங்களிடையே உள்ள சாதி முரண்பாடுகளை வேரறுத்து சமநிலைச் சமுதாயம் அமைய வேண்டும் என்று போராடிய , முழக்கமிட்ட மாபெரும் தலைவர். அவர் விட்டு சென்ற அப்போராட்ட களத்தை சமுக தளத்திலும் , அரசியல் தளத்திலும் அவர் வழியில் தலைமையேற்று முன்னெடுத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் நம் தலைவர் தமிழினவேந்தர். அன்று தொடங்கி இன்று வரை நெடுங்காலமாக நாம் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அரசு சார்பில் விழா எடுத்து மரியாதை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்னெடுக்கிறோம். ஆனால் அரசியல் களம் ஒன்றே நாம் அக்கோரிக்கையை வென்றெடுக்கும் அதிகாரத்தை நமக்கு அளிக்கும் என்பதனை அறியாது இருந்தால் எப்படி நமக்கு வெற்றி கிடைக்கும் எனவே நாம் அரசியல் களத்தில் அணிதிரள வேண்டும் தலைவர் தமிழினவேந்தர் உங்களை அரசியல் களம் நோக்கி அழைக்கிறார் ..........அணிதிரள்வீர்....என்றார்.

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி: விதிமுறைகளை மீறியதாக கிருஷ்ணசாமி மீது வழக்கு


இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் கடந்த 11–ந் தேதி அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள் அஞ்சலி செலுத்த குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.வுக்கு மாலை 3 மணிமுதல் 4 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் அவர் அந்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வராமல் 4.20 மணிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் 5.30 மணி வரை அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேந்தோணி கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் பரமக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்படி விதிகளை மீறிய கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. புதிய தமிழகம் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கதிரேசன் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

பரமக்குடியில் மக்கள் வெள்ளத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள்.

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு....


கோவில்பட்டியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தியாகி இம்மானுவேல் சேகரன்தியாகி இம்மானுவேல் சேகரனின் 57–வது நினைவு நாளை முன்னிட்டு, கோவில்பட்டி புது ரோடு அம்பேத்கார் சிலை அருகே அவரது உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. உருவ படத்துக்கு புதிய தமிழகம் கட்சி ஒன்றிய செயலாளர் பி.அன்புராஜ் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட பொறுப்பாளர் கே.கருப்பசாமி, மாநில தொண்டர் அணி செயலாளர் பூவானி லட்சுமண பாண்டியன், ஒன்றிய தலைவர் கே.கனகராஜ், நகர இளைஞர் அணி செயலாளர் எம்.மாடசாமி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கே.பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெற்கு திட்டங்குளம்கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தில், தியாகி இம்மானுவேல் சேகரனின் உருவச்சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் ஆனி முத்துராஜ், தொகுதி செயலாளர்கள் பாஸ்கரன், மகேசுவரன், நகர செயலாளர்கள் முத்து கணேஷ், ராமசெல்வம், கிளை செயலாளர் செந்தூர்பாண்டியன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மாடத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட மகளிர் அணி தலைவி ரஞ்சிதமணி தலைமையில், தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இம்மானுவேல் சேகரனின் 57-வது நினைவு நாள்..

பரமக்குடியில் புதிய தமிழகத்தின் அலை.

காட்டுப் பரமக்குடியில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் கொடி ஏற்றும் போது.