ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனமாக செயல்படும் நிர்வாகத்தை கண்டித்து மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ...!!!

தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனமாக செயல்படும் நிர்வாகத்தை கண்டித்து மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ...!!!
தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணியில் வெள்ள நீரை வெளியேற்றுவதில் சுணக்கம் காட்டும் மாவட்ட நிர்வாம் போர்கால அடிப்டையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெள்ள நிவாரண பணியை மேற்பார்வையிட நீதி மன்ற மேற்பார்வையில் குழூ அமைத்திட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம் .டி .எம் .எல் .ஏ .,அவர்கள் வழக்கு தொடந்துள்ளார். இன்று மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

தத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…

தத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…….
தமிழகத்தில் கனமழை கடந்த ஒரு மாத காலமாக பெய்து வருகிறது. இம்மழையில் பெரும் பாதிப்புக்குள்ளான கடலூா் மாவட்டம், சென்னை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் போன்றவை ஆகும். கடலூா் மாவட்டத்திலும் சென்னை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களை பல அரசியல் கட்சி தலைவா்கள், பிரமுகா்கள் சென்று ஆறுதல் கூறியும், உணவு உடை வழங்கியும் போட்டோவுக்கு போஸ்ஸீம் கொடுத்தனா். சிலா் தனது கட்சிக் கொடியை அறிமுக படுத்திக்கொண்டே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தனா். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவா்களுக்கும், பிரமுகா்களுக்கும் சென்னை மற்றும் கடலூா் போன்ற மாவட்டங்கள் கண்ணுக்கு தெரிந்ததே தவிர, தென்தமிழகத்தின் முத்து நகரமான தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதே வருத்தப்படக்கூடியது. ஆனால் ஒரே ஒரு அரசியல் கட்சி தலைவா், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் அய்யா அவா்கள் மட்டும் தான் இன்றைய நாள் வரை தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்து வருகிறார்.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக தூத்துக்குடியில் முகாமிட்டு தனது தொகுதிக்கு உட்பட்ட ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கு சென்று வெள்ளநீா் பாதித்த இடங்களை பார்வையிட்டு, மக்களுக்கு உணவு, உடை, அரிசி ஆகியவைகளை வழங்கிட தனது கட்சியின் பொறுப்பாளா்களுக்கு உத்திரவிட்டா். மேலும் அனைத்து சமுதாய மக்களின் குறைகளை கேட்டு அவா்கள் வெள்ளத்தால் எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளார்கள் என்பதை வீடு வீடாக சென்று மதிப்பீடு செய்யவும் தனது கட்சிகாரா்களுக்கு உத்தரவு பிறபித்தார். மேலும் டாக்டா் அய்யா அவா்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனே தொடா்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். ஒரு தாலுகாவில் வெள்ளநீரை சமாளிக்க முடியாத மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று அறிக்கையும் வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம குறிஞ்சி நகரில் தேங்கி இருந்த வெள்ளநீரை அதிகாரிகள் வெளியேற்றும் வரை தா்ணா போராட்டம் மேற்க்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளம், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் விவசாய நிலங்களை பைக்கில் சென்று பயணம் செய்து பார்வையிட்டார். தனிநபா் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க உடனடி நடவடிக்கை மேற்க்கொண்டார். தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு எந்த ஒரு உதவியும் செய்யாதததை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டார். பல இடங்களில் பொதுமக்களும் வெள்ளநீரை வெளியேற்றாததைக் கண்டித்து சாலை மறியல் செய்தனா்.
டாக்டா் அய்யா அவா்கள் தனது தொகுதி மட்டும் அல்லாமல் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை இரவு, பகல் என்று பாராமலும் உணவு வேளை என்றும் பாராமலும் தூத்துக்குடி மக்களை கவனித்து வந்தார். தமிழக அரசுக்கு நிவாரண நிதி வழங்கிட பல அறிக்கை விட்டும், ”செவிடன் காதில் சங்கு ஊதினார் போல” தமிழக அரசு கண்டு கொள்ள வில்லை. ஆதலால் டாக்டா் அய்யா அவா்கள் இன்று மதுரை உயா்நீதி மன்றத்தில் - தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப்பணியில் வெள்ளநீரை வெளியேற்றுவதில் சுணக்கம் காட்டும் மாவட்டநிர்வாகம் போர்கால அடிப்டையில் நடவடிக்கைஎடுக்க வலியுறுத்தியும், வெள்ள நிவாரண பணியை மேற்பார்வையிட நீதி மன்ற மேற்பார்வையில் குழு அமைத்திட உத்திரவிட கோரியும் வழக்கு தொடரபட்டுள்ளது. இந்த வழக்கில் டாக்டா் அய்யா அவா்களே நேரடியாக வாதிட்டார்கள். மதுரை உயா்நீதி மன்றமும் உடனடியாக வெள்ள நீர் அகற்ற அரசு நடவடிக்கை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்திரவு பிறபித்துள்ளது. இவ்வழக்கில் புதிய தமிழகம் கட்சியின் வழக்கறிஞா்களான திரு. பாஸ்கா் மதுரம், திரு. கனகராஜ், திரு.பவுன்ராஜ், திரு.குமார், திரு.கார்மேகம், திரு.வீரபாண்டி ஆகியோர் டாக்டா் அய்யாவுடன் உடன் இருந்தனா்.
தமிழகத்தில் நிகழ்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சணையை உயா்நீதி மன்றம் வரை சென்று மக்களின் துன்பங்களை துடைத்த புதிய தமிழகம் டாக்டா் அய்யா அவா்களை போன்று தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவா்களை எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து நான் கண்டது இல்லை.
எனவே தத்தெளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா் – டாக்டா் அய்யா அவா்களை சாரும் என்பதில் சொல்வதில் இன்றியமையாதது.
நன்றி.
------------- என்றும் டாக்டா் அய்யா அவா்களின் வழியில் 

முதுகுளத்தூர் பயங்கரம்...!!!

முதுகுளத்தூர் பயங்கரம்...!!!
ஆசிரியர்: டி. எஸ். சொக்கலிங்கம்
பதிப்பாசிரியர்: அ. ஜெகநாதன்
முதல் பதிப்பு: நவம்பர் 1957
இரண்டாம் பதிப்பு:
பிப்ரவரி 2008
பக். 158
விலை ரூ. 100
கவின் நண்பர்கள் வெளியீடு
ஆர்சி. நடுத்தெரு,
வ. புதுப்பட்டி - 626116, விருதுநகர்.
1957 பொதுத்தேர்தல் அதற்கடுத்த இடைத்தேர்தல் ஆகியவற்றை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இரு சாதிகளுக்கிடையில் கொந்தளிப்பு எழுந்தது. அதை அடக்க 1957 செப்டம்பர் 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடுசெய்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அமைப்பின் இம்மானுவேல் சேகரன் அம்மக்கள் சார்பாகக் கலந்துகொண்டார். மறவர்கள் சார்பில் உ. முத்தராமலிங்கத் தேவர். கூட்டத்தில் இம்மானுவேலின் தலைமைத் தகுதி குறித்து விவாதம் எழுந்தது. இருவரும் சேர்ந்து கையெழுத்திடும் கூட்டறிக்கைக்கு முத்துராமலிங்கத் தேவர் ஒப்புக்கொள்ளாத நிலையில், ஒரே வாசகம் உள்ள தனித்தனி அறிக்கைகள் வெளியிடும் ஆட்சியரின் முயற்சியில் உருவான சமாதானத் திட்டத்தோடு கூட்டம் முடிந்தது. மறுநாள் செப்டம்பர் 11இல் இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இரு சமூகத்தினரிடையே எழுந்த மோதல் பல உயிர்களையும் பலிகொண்டது. சேதமான சொத்துகள் இருதரப்பிலும் இருந்தன. ஒரு மாதத்திற்கும் மேலாக இம்மோதல் நீடித்தது. வரலாற்றின் குருதி எழுதிய வரைபடமாகத் தமிழக வரலாற்றில் முதுகுளத்தூர் பதிவானது. அடங்க மறுத்ததும் திமிறி எழுந்ததுமான செயல்பாடுகளால் பள்ளர்கள் எழுச்சி பெற்றது உண்மை.
1957இல் முதுகுளத்தூரில் நேர்ந்த தேவேந்திரர் எழுச்சியைக் குறித்து அந்தக் காலகட்டத்தில் இரு நூல்கள் வெளிவந்துள்ளன. இதைக் கலவரமாகச் சித்திரித்து தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் (1958), பயங்கரமாக அதை வர்ணித்து டி.எஸ். சொக்கலிங்கம் எழுதிய முதுகுளத்தூர் பயங்கரம் (1957). 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இவ்விரண்டு நூல்களும் அடுத்தடுத்து மறுபதிப்புக் கண்டுள்ளன.
முத்துராமலிங்கத் தேவருக்கு எதிரான காங்கிரஸின் ஆதரவு நூல்களேயானாலும் இவை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. ஒடுக்கப்பட்ட சாதி, ஆதிக்கச் சாதிக்கு எதிராக மேல் எழும் ஒரு நிகழ்வைக் கலவரமாகப் பார்ப்பதற்கும் பயங்கரமாகப் பார்ப்பதற்குமான வித்தியாசமே அது.
தினகரன் சுயசாதி அபிமானத்தையும் கடந்து பள்ளர்கள் ஆதரவு நிலைப்பாடெடுத்து எழுதினார். விளைவாகச் சொந்தச் சாதியினரால் கொல்லவும்பட்டார். சொக்கலிங்கத்தின் நூலிலும் பள்ளர்கள் ஆதரவு இழையோடுகிறது. அது காங்கிரஸ், குறிப்பாகக் காமராஜ் என்ற தறியிலிருந்து புறப்பட்ட இழையாகும்.
சம்பவக் காலத்தில் டி.எஸ். சொக்கலிங்கம் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளைப் பத்திரிகையாளர் மயிலைநாதன் தொகுத்து முதுகுளத்தூர் பயங்கரம் என்னும் பெயரில் இந்நூலாக்கினார். முதுகுளத்தூர் சம்பவம், அரசியல் நிகழ்வல்ல, வகுப்புகளுக்கிடையிலான போராட்டமே என்பதை நிறுவிக்காட்டுவதே ஆசிரியரின் நோக்கம். குறிப்பிட்ட நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்த சம்பவங்கள், அவற்றைக் குறித்த பத்திரிகைச் செய்திகளில் படிந்துள்ள அரசியல் சாயம், அறியாமையின் தூசு, சதியின் பகுதி ஆகியவற்றை விளக்குவன நூலின் முதல் இரண்டு பகுதிகள். முதுகுளத்தூர் பகுதி நிலவரிகூட வசூலிக்க முடியாதபடி அராஜகப் பிடியில் இருந்தது பற்றிய விவரம் மூன்றாம் பகுதி. தலைவிரித்தாடிய அராஜகமும் அப்பகுதியைப் பார்வையிட வந்த மத்திய உள்துறை அமைச்சர் தத்தாரின் வருகையைப் பற்றிய விவரணையும் தொடரும் பகுதிகள். பள்ளர்களின் துயர வரலாறும் சட்ட சபையில் காங்கிரஸ் கட்சிமீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் அரசின் நடவடிக்கைகள் பற்றியதும் இறுதிப் பகுதிகள். இந்நூலின் முன் இணைப்பாக 'மதுரைக் கோயில் நுழைவு',
'உ. முத்துராமலிங்கம் பொய்மையால் வேயப்பட்ட காகித ஓடம்' என்னும் பதிப்பாசிரியரின் இரு கட்டுரைகளும்,
டி. எஸ். சொக்கலிங்கம் பற்றிய பொன். தனசேகரனின் அறிமுகக் கட்டுரையும் உள்ளன. பின்னிணைப்பாகத் பி. மருதையாவின் அறிக்கையும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது சகஜானந்தரின் சட்டசபைப் பேச்சும் அமைக்கப்பட்டுள்ளன.
சம்பவ காலத்தில் எழுதப்பட்ட இப் பிரதிகளை, நிகழ்ச்சிகளை வரலாற்றில் வைத்துப்பார்க்கும் அரிய வாய்ப்பை மறுபதிப்பு செய்திருக்கும் பதிப்பாசிரியருக்குக் காலம் அளித்திருக்கிறது. அதனால் நிகழ்வுகளை அலசிக் கொள்கைரீதியான தர்க்கங்களோடு
அ. ஜெகநாதன் முன்னுரை எழுதியுள்ளார். அரசியல் சூழலை விளக்கும் இன்னும் பல அம்சங்கள் தேவைப்படினும் பயனுள்ள முன்னுரை.
சொக்கலிங்கத்தின் நூல் சந்தேகமில்லாமல் காங்கிரஸ் சார்பு எழுத்துகள்தாம். அவை முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக இருப்பதால் பள்ளர்கள் ஆதரவு எழுத்துகளாகத் தோற்றம் தருகின்றன. தன் தொகுதிவாழ் மக்களின் சாதிகளைத் தம் கைப்பட எழுதிவைத்திருந்த காமராஜரின் சுயசாதி ஆதரவு நிலைப்பாட்டை, அவர் பள்ளர்களை ஆதரிப்பதால் நாம் புறக்கணித்துவிட முடியாது. கட்சி அரசியலில் சாதிகளின் செல்வாக்கை மறுக்க முடியாத மோசமான நிலையை ஒப்புக்கொண்டு சொக்கலிங்கமும் வருந்துகிறார் என்பது தான் நிலைமை.
அது அரசியல் கலவரமல்ல, வகுப்பு மோதல், அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தம் ஆதிக்கத்திலேயே இன்னொரு சாதியினரை வைத்திருக்க விரும்பி அதன் பொருட்டு வன்முறையில் ஈடுபட்டதன் விளைவே முதுகுளத்தூர் பயங்கரம் என்பதாக இந்நூல் பேசுகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் தற்காத்துக்கொள்ள மேற்கொண்ட எதிர்ப்பு தன்னெழுச்சியாக நேர்ந்ததாகச் சொக்கலிங்கம் நூல் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாகக் காங்கிரஸ் சேவையின் விளைவு அது என்பதாகப் பீற்றிக்கொள்கிறது. அது காங்கிரஸ் சேவையின் விளைவென்றால் காங்கிரஸ்காரர் அனைவருக்கும் அதில் பங்கு உண்டுதானே.
சொக்கலிங்கத்துக்குத் தன் காங்கிரஸ் ஆதரவு வாதத்திற்கு வலுச் சேர்க்கப் பெரியாரின் நிலைப்பாட்டையும் பாராட்ட நேர்ந்துவிடுகிறது. முதுகுளத்தூர் சம்பவத்தில் பள்ளர்களின் பக்கம் பெரியார் சார்புநிலை எடுத்ததற்கு அரசியல் காரணம் கற்பிக்கும் பிந்தைய வரலாறுகளை முன் உணர்ந்தோ என்னவோ ஒடுக்கப்படும் பிரிவினர்மீது எப்போதும் கவனம் குவிக்கும் பெரியாரின் இயல்பே இந்த சார்பு நிலைக்குக் காரணம் எனச் சொக்கலிங்கம் இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். பெரியார், திராவிடம் என்ற கருத்தாக்கங்கள்மீது எப்போதும் எதிர் நிலை எடுப்பவர் சொக்கலிங்கம் என்பது வரலாறு அறிந்த செய்தி. பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலும் இட ஒதுக்கீடு வேண்டுமா என்பது சொக்கலிங்கத்தின் புகழ்பெற்ற கிண்டல். திராவிடர் கழகங்களின் உயிர்மூச்சான இட ஒதுக்கீட்டையே கிண்டல் செய்த சொக்கலிங்கம் பெரியாரை வேறு வழியின்றிப் பாராட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
தேவேந்திரர்களின் தன்னெழுச்சியை, காங்கிரசின் ஆதரவு நிலைப்பாடுமீது சார்புணர்ச்சி எழுமாறு உருவாகிவிட்டது. அதற்கு உதவுவதுபோல் நூலின் முன் இணைப்புக் கட்டுரைகள் இரண்டும் காங்கிரஸ் கட்சி தேவேந்திரர் சமுகத்திற்கு உழைத்ததாகக் காங்கிரஸ் பலபடப் பேசும் வைத்தியநாத அய்யரையும் ராமேசுவரி நேருவையும் (நூல் நெடுக இவர் பெயர் ராஜேசுவரி நேரு என்று பதிவாகியுள்ளது. நூலில் காணலாகும் பல பிழையான பெயர்களுடன் இதுவும் சேர்த்தி) புகழ்ந்து தள்ளுகின்றன.
உணர்ச்சியின் பெருக்கில் கோபத்தின் திசைவழியில் இயங்கும் முன் இரு கட்டுரைகளின் மிகை அழுத்தம் காங்கிரஸ் சார்பு எழுத்தான இந்நூலைச் சொக்கலிங்கம் என்ற சுதந்திரப் போராட்ட வீரரின் சமத்துவ இந்தியா நோக்கிய கனவு பற்றிய எழுத்தாக நினைக்கவைத்துவிடுகின்றது.
ஒரு காலகட்டத்தில் ஒருவருக்கு எதிராக இருந்தவர்கள் இன்னொரு காலகட்டத்தில் அவருக்குச் சார்பான நிலை எடுப்பது நாடாளுமன்ற அரசியலில் தவிர்க்க இயலாதது. தேவரை எதிர்த்த தினகரனோடு தோள் சேர்ந்து நின்ற ஆறுமுகம் பின்னாளில் தேவரைப் பாராட்டிப் புத்தகம் எழுதினார். சொக்கலிங்கத்தின் நிலைப் பாட்டையே அவருக்குப் பிறகும் வாழ்ந்த மயிலைநாதன் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அது நடக்காதபோது அவரைக் குருத்துரோகி என்று சொல்வதும் மீண்டும் யோசிக்க வேண்டியவை. ஏ.கே. செட்டியார், மயிலைநாதன், தி.வ. மெய்கண்டார், அன்பு பொன்னோவியம் போன்றோர் வரலாற்றின் தொடர்ச்சிக்கு அளிக்கும் ஆவணச் சேகரிப்புப் பங்களிப்பை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. நமது விமர்சனங்கள் வரலாற்றுக்குதவும் அவர்களின் இருப்பைக் காலிசெய்துவிடக் கூடாது. அதேசமயம் சந்தர்ப்பவாதப் புத்தக வியாபாரிகளைச் சாடுவதை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.
முதுகுளத்தூர் சம்பவத்தைப் பள்ளர்களின் விடுதலைப் போராட்டமாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த பட்டியலின மக்களின் எழுச்சியாகப் பார்ப்பதும் உணர்வதும் தேவேந்திரர் எழுச்சிப் பயணத்தில் நல்ல ஆரம்பம் .

வரவேற்க்கிறேன் ....!!!,

வரவேற்க்கிறேன் ....!!!,..நேற்று 30.9.2015 தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பரமகுடியில் உள்ள ஐயா இமானுவேல் சேகரன் நினைவு இடத்திலும்,முதுகுளத்தூரில் உள்ள வீரன் சுந்தரலிங்கம் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..தேவேந்திரர்களின் நமக்கு நாமே ... திட்டம் ..... சட்டமன்ற தேர்தல் நெருங்குகிறது . தமிழகத்தின் பிரதான கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உ ள்ளன ... திமுக தனது இருப்பை காட்டிக்கொள்ள திராவிட திருமகன் ஸ்டாலின் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் சில நாடகங்களை நடத்தி வருகின்றார் .. தென் மாவட்டங்களில் சுற்று பயணம் செய்துவருகின்றார் .... நேரடி விவாதம் வேறு நடத்துகின்றார் ...தேவேந்திர குல மக்கள் என்ன செய்து கொண்டு இருகின்றீர்கள் ..?.... அவரை சந்தித்து திமுக ஆட்சி அமைந்தால் " தேவேந்திர குல வேளாளர் " என்று அறிவிக்கப்படுமா ..?.....திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பீர்களா ..?.... ஏன் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை ..?.. எத்தனை அமைச்சர் பதவி கொடுப்பீர்கள் ..?.... ............................போன்ற கேள்விகளை எழுப்பலாமே ..?.....நமக்கு உ ரிய அரசியல் அதிகாரம் , நமது கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளுக்கு நமது வாக்குகள் இல்லை என்பதை தெளிவுபடுத்தலாமே ..?.... என்று எனது முகனூலில் பதிவு செய்து இருந்தேன்..அதற்க்கு பதில் சொல்லும் விதமாக மு.க .ஸ் டாலின் அவர்கள் பரமக்குடியில் அய்யா இம்மானுவேல் சேகரனுக்கும் , முதுகுளத்தூரில் தளபதி சுந்தரலிங்ககுடும்பனார் அவர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை மனதார வரவேற்கிறேன் ... இதே அணுகுமுறையை திமுகவில் தேவேந்திர குல சமுகத்திற்கு உ ரிய பிரதிநிதித்துவமும், எங்கள் மக்களின் கோரிக்கைகளை திமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ...நன்றி ..!!!

சட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவதற்கு இடமே இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் குற்றச்சாட்டு.

சட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவதற்கு இடமே இல்லை:
டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் குற்றச்சாட்டு.
தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிப்பதாக கூறி புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் , அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரமில்லா நேரத்தின்போது தம்மை பேச அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கோரிக்கை வைத்தார். இதற்கு அனுமதி மறுத்ததால் அவர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார். அவையின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிப்பதாக கூறி அவரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவதற்கு இடமே இல்லை என்றார்

காலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வலியுறுத்தி - புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து போராடும்..

காலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வலியுறுத்தி - புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து போராடும் .....புதிய தமிழகம் கட்சி தலைவர். டாக்டர் .க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A அவர்கள் அறிக்கை: ......விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சமுதாய மக்களின் அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவர்கள் கவுரவமான முறையில் நடத்தப்பட வேண்டும். இதுவே மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளாக கூறப்பட்டாலும் நடைமுறையில் செயலுக்கு வருவதில்லை.
தமிழ் சமுதாயத்தின் மூத்த குடிமக்கள் தற்போதும் "ன்' விகுதி வைத்து ஒருமையில் அழைக்கப்படுகின்றனர். பட்டியலின பிரிவில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படக்கூடிய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதை அரசு நிறைவேற்றவில்லை.
பட்டியலின துறைக்கு சமூக நீதித்துறை அல்லது பட்டியலினத்துறை என பெயரிடுவது, உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் நடக்கவுள்ளது.முதற்கட்டமாக 20 முதல் 24ம் தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும். 20ம் தேதி திருச்சி, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், அரியலூர், 21ம் தேதி மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கடலூர், 22ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, நாகப்பட்டணம், விழுப்புரம், திருவாரூர், 23ம் தேதி ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், 24ம் தேதி சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடக்கும். இப்போராட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து வேண்டும்.

தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்

தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவேந்திரகுல வேளாளர் வகுப்பினருக்கு மத்திய மாநில அரசுகள் விவசாயத்தில் சிறப்பு நிதிகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 7ஆம்தேதி முதல் நவம்பர் 15 வரை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தபோவதாக தெரிவித்தார்.
மேலும் மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயரை வைக்கவேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை திரும்பி பார்க்க வைத்த வரலாற்று நிகழ்வு ...!!!

டெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை திரும்பி பார்க்க வைத்த வரலாற்று நிகழ்வு ...!!!
இலங்கை தமிழர்களுக்காக, டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் 2009 அக்டோபர் 2ம் தேதி அன்று நடத்திய ஐந்து நிமிடம் போராட்டம். உலகத்தில் பல நாடுகள் மற்றும் ஐநா சபை திரும்பி பார்க்க வைத்த போராட்டம்.
இந்த போராட்டத்திற்க்காக உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது. அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள், உலக நாடுகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
இந்த போராட்டம் முடித்து விட்டு, சென்னை திரும்பிய டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A .,அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் தாக்க பட்டு , அதில் அலுவலக கண்ணாடி உடைந்தது, பூந்தோட்டி உடைந்தது என்று உலகத்தில் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கையில் பல லட்சம் தமிழர்களை ராஜபக்சே கோன்ற போது. இந்த உலக நாடுகள் எங்கே போனது என்று கேள்வி எழுப்பினார்.
இந்த போராட்டத்திற்க்காக இன்று வரை டெல்லி நீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A .,அவர்கள், மாநில அமைப்புச் செயலாளர் வி.கே அய்யர் அவர்கள், கரூர் பாண்டியன், தஞ்சை குணா, திருச்சி அய்யப்பன், திருச்சி சங்கர் உட்பட 12 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது

கொலை குற்றவாளியையே சாட்சிக்கு அழைப்பாதா – டாக்டர் கிருஷ்ணசாமி

கொலை குற்றவாளியையே சாட்சிக்கு அழைப்பாதா – டாக்டர் கிருஷ்ணசாமி
விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில், கொலை குற்றம் சுமத்தப்பட்ட யுவராஜை சாட்சியத்திற்காக அழைக்கும் சி.பி.சி.ஐ.டி.-ன் போக்கு, சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்
சென்னையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் வழக்கறிஞர் மாளவியா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில், மர்மமான முறையில் உயிரிழந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கு விவகாரத்தில், காவல்துறை உயரதிகாரிகள் மீதே குற்றச்சாட்டுள்ள நிலையில், விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு, மனு தாக்கல் செய்யப்படும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மேலும், கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள யுவராஜை, சாட்சியம் அளிக்க அழைப்பாணை விடுத்திருக்கும் சி.பி.சி.ஐ.டி.-ன் போக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளதென்று தெரிவித்தார்.தலித் பெண் என்பதால் தான், தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரம் என்று பொய் தகவலை பரப்புகிறது காவல்துறை என வழக்கறிஞர் மாளவியா தெரிவித்தார்.

விஷ்ணுபிரியா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள்.,

விஷ்ணுபிரியா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள்., வலியுறுத்தியுள்ளார்...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தற்கொலை செய்துக் கொண்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியாவின் வீடு கடலூர் கோண்டூரில் உள்ளது.
சனிக்கிழமையன்று அவரது வீட்டிற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள் அவர்கள் வந்திருந்தார். அங்கு விஷ்ணுபிரியாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதோடு அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக செயல்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில், குற்றவாளிகளை நெருங்கும் நேரத்தில் அவருக்கு உயர் அதிகாரிகளால் நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 1 நம்பர் லாட்டரி ஒழிப்பு, இரவு 10 மணிக்கு மேல் செயல்படும் டாஸ்மாக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தார். மேலும், மில்அதிபர் ஒருவரது கொலை வழக்கினையும் விசாரித்தார்.
கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடர்பாக வழக்கில் சம்பந்தமில்லாத 4பேரை குண்டர் தடுப்புக்காவலில் அடைக்கவும் அவருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் அவர் ஈடுபட கொடுக்கப்பட்ட நெருக்கடியே அவரது மரணத்திற்கு காரணம். எனவே, இதில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்று கருதுவதால் சிபிஐ விசாரணையை கோருகிறோம்.
இச்சம்பம் போலீஸ்துறையில் பெண்கள் பணியாற்ற அச்சப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் ...

விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் . டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தல் ..

விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் . டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தல் ..
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தற்கொலை செய்துகொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியாவின் வீடு கடலூர் அருகே கோண்டூரில் உள்ளது.
அவரது வீட்டுக்கு சனிக்கிழமை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் வந்திருந்தார்.
அங்கு விஷ்ணுபிரியாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் கூறியது: விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக செயல்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில், குற்றவாளிகளை நெருங்கும் நேரத்தில் உயரதிகாரிகளால் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பான வழக்கில் சம்பந்தமில்லாத 4 பேரை குண்டர் தடுப்புக்காவலில் அடைக்க விஷ்ணுபிரியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட கொடுக்கப்பட்ட நெருக்கடியே அவரது மரணத்துக்குக் காரணம். எனவே இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்று கருதுவதால், சிபிஐ விசாரணை கோருகிறோம்.
இச்சம்பவம் காவல் துறையில் பெண்கள் பணியாற்ற அச்சப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
அப்போது, கட்சியின் மாவட்டச் செயலர்கள் எம்.வி.ராஜா, ச.வெற்றிசெல்வன், மாநில இளைஞரணிச் செயலர் பாஸ்கர்மதுரம், மாவட்ட துணைச் செயலர்கள் ர.சுதாகர், எஸ்.பாலமுருகன், நகரச் செயலர் கு.அ.ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்ப முயற்சி:

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்ப முயற்சி:டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள். குற்றச்சாட்டு...
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள். குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் வழக்கறிஞர் மாளவியாவை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. பொறியியல் மாணவர் கோகுல் ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக 3 மாத காலம் என்ன நடவடிக்கையை இந்த காவல்துறை எடுத்து வந்ததோ, அதேபோல டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணத்திற்கு காரணமானவர்களையும் காப்பாற்றுவதற்கு உண்டான நடவடிக்கையிலும் இறக்கியிருக்கிறார்கள்.
இப்படி சுற்றி வலைத்து யாராவது ஒருவரை பலிகாடாக்கி அந்த வழக்குகளை முடிப்பதற்காக முயற்சி செய்கிறார்கள். அது தவறானது. என்றார் அவர்.

தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து சட்டமன்றத்தில் .

தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து சட்டமன்றத்தில் ..... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .. டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் ..தேவேந்திர குல வேளாளர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் ஒவ்வோரு சமுதாயமும் தங்களுடைய அடையாளத்திற்க்கா போராடி வருகின்றனர். அது போலவே காலாடி, பண்ணாடி, வாதிரியான், தேவேந்திர குலத்தான், பள்ளன் போன்ற பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கக் கூடிய ஒரே சமுதாய மக்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்று இந்த சமூக மக்கள் தொடர்ந்து 60 வருடங்களுக்கு மேலாக போராடியும், குரல் கொடுத்தும் வருகிறார்கள்.
அது எந்த விதத்திலும் தவறு இல்லை. இதை ஒரு அரசாங்கம் ஒரு சின்ன ஒருசொட்டு மையுங்கூட செலவாகாது அதற்க்கு உத்தரவு போடுவதற்க்கு. இன்றைக்கு இருக்கும் திராவிட இயக்கங்களுக்கு மனசு வரவில்லை.
இதனால் வெறுப்புற்ற அச் சமூக மக்கள், திராவிட கட்சிகளின் அரசாங்கமும் , திராவிட இயக்கங்களும் நம்மை இன்னும் பள்ளர்/ மள்ளர் என்று கூப்பிட்டு என்று கூப்பிட்டு சிறுமைப் படுத்தி பார்ப்பதில் தான் அதிமுக , திமுக விரும்புகிறது என்பதை நினைத்து , வெறுப்புற்ற மக்கள் , அப்படியானால் இந்த பாட்டியலில் இருந்தே விடு பட வேண்டும் என்று நினைக்க துவங்கி விட்டனர்.
பட்டியலே வேண்டாம் என்றும் சொல்ல
ஆரம்பித்து விட்டனர். இதில் நியாயம் இருகின்றது.
இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் அந்த மக்களுடைய பார்வை இப்போழுது ; இந்த அரசாங்கம் தங்களை ஒரு கெளரவத்தோடு அழைப்பதற்க்கு தயங்குகிற காரணத்தினால் இந்த ஒதுக்கீடு- தாழ்த்தப் பட்ட பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உணர்வுகள் தேவேந்திர குல மக்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.
இட ஒதுக்கிடே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த இழிவோடு பட்டியலுக்குள் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.
பொதுவாக தங்களை பட்டியலில் இருந்து விடுவித்து, எம்.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக படித்தவர், படிக்காதவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு கூறினார்..

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் கோவையில் நிருபர்களிடம் இன்று கூறியது:

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் கோவையில் நிருபர்களிடம் இன்று கூறியது:
தேசிய நெஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகள் படிப்படியாக அகற்றப்படும் தனது பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், அகற்றவில்லை. இதை கண்டித்து நாடு முழுவதும் ஸ்டிரைக் நடக்கிறது. இதற்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது.
மேற்கு மண்டல மாவட்டங்களில் கூலிப்படை கலாச்சாரம் பரவி வருகிறது. துவக்கத்திலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். நாமக்கமல் டிஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் உண்மை நிலைய கண்டறிய சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். மேலும் உடனடியாக யுவராஜை கைது செய்ய வேண்டும் என்றார்.

காலச்சுவடுகள் ...1995 சட்டமன்ற தேர்தல் .

காலச்சுவடுகள் ...1995 சட்டமன்ற தேர்தல் .....தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஐந்து சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்கு நிலவரம்.
*இராஜபாளையம்-26,706.
*ஓட்டப்பிடாரம்-24,585.
*ஸ்ரீவில்லிபுத்தூர்-20,364.
*வாசுதேவநல்லூர்-9000.
*ஸ்ரீவைகுண்டம்-8000.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் வெற்றி பெற்றார். அவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு உறுப்பினர் என்று சட்டமன்றத்தில் பதிவு ஆனது..அப்போது தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது ..

03.10.15) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA அவர்கள்..

03.10.15) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA அவர்கள் இன்று கடலூர் கோண்டூர் டிஎஸ்பி விஷ்ணுபிரியா அவர்கள் இல்லத்திற்கு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணத்திற்கு உயர் அதிகாரிகளின் அழுத்தமே காரணம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA அவர்கள் கடலூர் கோண்டூரில் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வரும் என கூறினார்.

தலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்.... புதிய தமிழகம் கட்சி நிறுவனர் . டாக்டர் .க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A ., அவர்கள்

தலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்.... புதிய தமிழகம் கட்சி நிறுவனர் . டாக்டர் .க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A ., அவர்கள் ..தமிழகத்தின் நிர்வாக நலன் கருதி, தலைமைச் செயலக கிளையை மதுரைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை தென்னகத்தில் வலுவடைந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களில் இருப்பதுபோல மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
புதிய வருவாய் கோட்டங்கள்
மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி என்பது மட்டும் ஜனநாயகம் அல்ல. அந்த ஆட்சி மக்கள் எளிதில் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதை கருத்தில் கொண்டுதான், புதிய மாவட்டங்களும், தாலுகாக்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில், தமிழகத்தில் புதிதாக 9 வருவாய் கோட்டங்களும், 65 புதிய வட்டங்களும், 59 குறுவட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோட்டாட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் சூழலில், தலைமைச் செயலகம் மட்டும் தனது அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி நிற்கிறது. அதுவும் தென்னக மக்களுக்கு பாரமாக, தமிழகத்தில் வடக்கு ஓரமாக ஒதுங்கி நிற்கிறது.
தென்னகத்தின் அவஸ்தை
சென்னையில் தலைநகர் இருப்பதன் அவஸ்தையை தென்னகத்தில் பிறந்தவர்களால்தான் உணர முடியும். சென்னையில் புறப்படும் மின்சார ரயில் தென்னகத்தை அடைய வேண்டுமானால், இடையில் நிறுத்தி டீசல் எஞ்சின் மாற்ற வேண்டிய சூழல் தொடர்கிறது. தென்னக மக்கள் சென்னை போக வேண்டுமானால் 3 மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டிய அவலமும் நீடிக்கிறது. சுமார் 700 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள கன்னியாகுமரி மக்கள், தலைமைச் செயலக அதிகாரி ஒருவரை சந்திக்க வேண்டும் என்றால் குறைந்தது 2 நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டிய கட்டாயமும் தொடர்கிறது.
கிராம மக்களைப் பொருத்தவரையில் ஆட்சியர் அலுவலகங்கள் தான் தலைமைச் செயலகங்கள் என்றாலும் அதிகாரம் எல்லாம் சென்னையில்தான் குவிந்திருக்கிறது. தகுதியிருந்தும் உரிமை மறுக்கப்படும்போது, மேல்முறை யீட்டிற்காக மக்கள் சென்னை செல்கிறார்கள். பணி நியமனம், இடமாற்றம், நில ஒதுக்கீடு போன்றவற்றிற்கு சென்னை சென்றே ஆக வேண்டும். இவ்வளவு ஏன்? உள்ளூர் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால்கூட, சென்னையில் இருந்து உத்தரவு வர வேண்டியது இருக்கிறது.
வேலை, தொழில் வாய்ப்பு இல்லை
தென்னகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. அதில் படித்து வெளியேறுபவர்கள் எல்லாம் சென்னைக்குப் படையெடுக்கிறார்கள். தென்தமிழகம் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கி இருப்பதற்கு காரணம் இங்கே யாரும் தொழில் தொடங்க முன்வராததுதான். கட்டமைப்பு வசதி இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதனால், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும், தொழில்பேட்டைகளும் காத்தாடுகின்றன.
இதை கருத்தில் கொண்டுதான் "தென்தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்பட வேண்டும் என்றால், அதிகார மையம் பக்கத்தில் இருக்க வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆண்டுக்கு ஒருமுறையேனும் மதுரையில் கூட்ட வேண்டும்" என்று சட்டப்பேரவையிலேயே வலியுறுத்தி யுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கோடைக்கு நகர், குளிர்காலத்துக்கு ஜம்மு என்று இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன. சென்னை மாகாணமாக இருந்தபோது, அதன் கோடைக்கால தலைநகராக சென்னையும், குளிர்கால தலைநகராக ஊட்டியும் இருந்தது. ஆட்சி யாளர்களின் சொகுசுக்காக அரசு ஆவணங்கள் மலையேறிச் செல்லும்போது, மக்களின் வசதிக்காக அவை மதுரைக்கு வந்தால் என்ன? என்பது தென்னக மக்களின் கோரிக்கை.

புதிய தமிழகம் போராளிகள் திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு வீரவணக்கம்!

புதிய தமிழகம் போராளிகள் திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு வீரவணக்கம்!
அக்டோபர் – 6: புதிய தமிழகம் கட்சியின் புரட்சிகரமிக்க போராட்ட வரலாற்றின் துவக்கப்புள்ளி என்று கூறலாம். அதுமட்டுமல்ல தென்மாவட்ட தேவேந்திர மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத கறுப்பு நாளும் கூட. 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் எனும் கிராமத்தில் அன்றைய தமிழ்நாடு அரசின் காவல்துறை என்கிற பெயரில் செயல்பட்ட கள்ளர்துறை குற்றவாளிகளைத் தேடுகிறோம் என்கிற பெயரில் ஒட்டுமொத்த கிராமத்தையே சூறையாடிய நிகழ்வு நடந்தேறியது. பொதுமக்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் காவல் அளிப்பதற்காக பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் வழங்கி உருவாக்கப்பட்ட காவல்துறை, கள்ளர்துறையாக உருவெடுத்து கொடியன்குளம் கிராம மக்களின் வீடுகளை சூறையாடி, வீடுகளிலிருந்த பணம், பொருள், நகைகளையெல்லாம் களவாடி கொள்ளையடித்துச் சென்ற அந்த நிகழ்வு தமிழக அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு மட்டுமல்ல அழிக்கமுடியாத அவமானமுமாகும். அதோடுமட்டுமல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் கிணற்றில் மலத்தை அள்ளிக் கலந்த மிகக்கேவலமான, அருவருக்கத்தக்க, அசிங்கப்படத்தக்க, காரி உமிழத்தக்க சம்பவங்களும் தமிழக காவல்துறையால் அரங்கேற்றப்பட்டன. நேருக்கு நேர் நின்று எதிர்க்கத் துணிவில்லாத கோழைகள் மானமிழந்து, சுயமரியாதையிழந்து அரசு இயந்திரத்திற்கு அடிமையாக, அடிவருடியாக செயல்பட்டு அரசு அதிகாரத்தை துணைக்கழைத்து கொள்ளையடித்த கொடியன்குளம் வன்முறை எனும் இந்த காவல்துறை அத்துமீறலைக் கண்டித்தும், சி.பி.ஜ. விசாரணைக் கோரியும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையிலமைந்த அன்றைய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பாக 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் நாள் சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. தாய்மார்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான போராளிகள் திரண்ட அந்த பிரமிக்கத்தக்க பேரணி சென்னையை அதிரவைத்ததோடு மட்டுமல்லாமல் தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தது. கூட்டமைப்புத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடந்த அந்த பேரணியில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் ஒன்று திரண்டதோடு, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர்.இராமதாஸ், ஆவடி சுந்தர்ராஜன், ஆகியோர் பங்கேற்றனர். ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் திரண்டிருந்ததை சீரணித்துக்கொள்ளமுடியாத தமிழக அரசு அன்றைய காலகட்டத்தில் சென்னையில் பிரபல ரவுடியாக வலம்வந்த அயோத்திக்குப்பம் வீரமணி மூலம் கூட்டத்தினர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. இதற்காகவே காத்துக்கொண்டிருந்த தமிழக கள்ளர்துறை வழக்கம்போல் தங்களது துப்பாக்கிச் சூடு எனும் அரசபயங்கரவாதத்தை அரங்கேற்றியது. முன்பு சொன்னதுபோல ஆண்டாண்டு காலமாக நேருக்கு நேர் நின்று எதிர்க்கத் துணிவில்லாத கோழைகள் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி நிகழ்த்திய அந்த மெரினா துப்பாக்கிச்சூட்டில் திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியம் ஆகிய இரண்டு போராளிகள் வீரமரணமடைந்தனர். பல தோழர்கள் படுகாயமடைந்தனர். இந்த அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஆளுங்கட்சிக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியம் ஆகிய இரண்டு போராளிகளின் உயிர்த்தியாகத்துக்கு முன்னால் ஒட்டுமொத்த அரசு இயந்திரமே தோற்றுப்போனது. கோழைகளால் ஏவிவிடப்பட்ட அரசின் அடக்குமுறையை தோற்கடித்து, புதிய தமிழகம் போராளிகளின் புரட்சிகர போர்க்குணமிக்க போராட்ட வரலாற்றை திலகமிட்டு துவக்கிவைத்த திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியம் ஆகிய இரண்டு போராளிகளின் உயிர்த்தியாகத்தை இந்த நாளில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும் நம்முடைய புரட்சிகர வீரவணக்கத்தை செலுத்திக்கொள்வோம்.
எழுவோம் எழுவோம் விழவிழ எழுவோம்!
விழவிழ எழுவோம்! வீறுகொண்டு எழுவோம்!!
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும்வரை எழுந்து கொண்டேயிருப்போம்!!!...

காலச்சுவடுகள் 1996.....அக்டோபர்...6..... சென்னையை குலுக்கிய பேரணி ...!!!..

காலச்சுவடுகள் 1996.....அக்டோபர்...6..... சென்னையை குலுக்கிய பேரணி ...!!!.. ..தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் .... டாக்டர் .க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் 
கொடியங்குளத்தில் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 31ல் காவல்துறை அரங்கேற்றிய அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் நீதி கேட்டு முதற்கட்டமாக அக்டோபர் 6ல் சென்னை மெரினாவில் பேரணி, அந்த பேரணியிலும் காவல்துறை அரங்கேற்றிய அத்துமீறலால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் இரண்டு இளைஞர்கள் தன்னுயிரை நீத்த சம்பவம் தமிழகமெங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மென்மேலும் கொந்தளிப்பை உருவாக்கியது.
ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கியே வைக்கவும், அடிக்கி வைக்கவும் எண்ணுகின்ற அரசும், அதிகார வர்க்கமும் ஒருபக்கம், ஒடுக்கு முறையையும், அடக்குமுறையையும் நெஞ்சுக்கு நேர் எதிர் கொண்டு தூள்தூளாக்கு வதற்கு முடிவு செய்து அணிவித்துக் கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களோ இன்னொரு பக்கம்.
சமூக கொடுமைகள் மற்றும் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளான அனைத்து சமுதாய மக்களையும் ஒரு சேர ஒடுக்கப்பட்ட மக்கள் என்று நாம் குறிப்பிட்டாலும் கூட, அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அணி அணியாய் களம் கண்டவர்கள், இழப்புகளை எதிர்க் கொண்டவர்கள், அடிக்க அடிக்க எழுந்து நின்றவர்கள், ஒடுக்க ஒடுக்க ஒங்கி நின்றவர்கள், களத்திலும் கருத்திலும் அடங்க மறுத்து நின்றவர்கள் தென் தமிழகத்தினுடைய தேவேந்திகுல வேளாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
தேவேந்திரகுல வேளாளர்களை பொருத்தமட்டிலும் வரலாற்றில் இன்று போலவே என்றும் வறிய நிலையில் இருந்தவர்கள் அல்ல நில உடமையாளர்களாக இருந்து இந்த மண்ணில் எந்த விதமான அடிமைத்தனத்துக்கும் ஆளாகாமல் இருந்தவர்கள். இடைப்பட்ட காலத்தில் அரச படையெடுப்புகளில் நிலப்பறிப்புகளுக்கு ஆளாகி மீண்டும் தங்களுடைய முதன்மை இடத்தை பிடிக்க வேண்டுமே என்ற தாகத்தோடும், கோபத்தோடும் போராட்டங்களில் இயற்கையான முன்னனி பாத்திரத்தையும், தலைமை பாத்திரத்தையும் தாங்கிவரும் தகுதியைப் படைத்தவர்களாக மாறினர்.
தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்திய தேசத்திலேயும் ஒடுக்கப்பட்ட மக்கள் வரலாறுகள் எழுதப்படுகின்ற போது தேவேந்திரகுல மக்களுடைய வீர வரலாறுகள் எழுதப்படாமல் இருக்கமுடியாது.
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காக தங்களுடைய அடையாளங்களை மீட்டெடுப்பதற்காக தமிழகத்திலே அக்டோபர் 6-ஆம் தேதி நடத்திய பேரணி முதல் மைல்கல்லாக அமைந்தது.
பல நூறாண்டு காலமாக மறைக்கப்பட்ட தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்டெடுக்கப் பட்டது. இந்த சரித்திர நிகழ்வுகளை புதிய தமிழகம் கட்சியின் தாய்க் கழகமான தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிகழ்த்தியது.

நெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும்..

நெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும் அவர்களுடைய பண்பாட்டுத் தலைவர்களுமாகிய (வேந்தன்) தேவேந்திரர், முருகன், மள்ளர், திருமால் மள்ளர், சிவன் மள்ளர், பார்வதி, சேர வேந்தர், சோழ வேந்தர், பாண்டிய வேந்தரும் அனைத்துக் தமிழ் இலக்கியங்களிலும் பலவாறு புகழ்ந்து பேசப்படுவார்கள். சங்க காலத் தமிழ் இலக்கியங்கியங்கள் தொடங்கி இன்று வரை இலக்கியங்களில் பேசப்படும் நெல்லின் மக்களாகிய மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களின் பண்பாட்டு மேலாண்மை, தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முழுமையானது.
சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட அனைத்துத் தமிழ் இலக்கியங்களும் இந்த தேவேந்திர மள்ளர்களின் புகழ் பாடும். இலக்கியங்களில் நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிற்பபையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும். அரசர்களின் இந்நெல் நாகரிகத்தின் தலைவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்நெல் நாகரிகத்தினைத் தோற்றுவித்த மக்களின் தற்போதைய பெயர்களான மள்ளர், பள்ளர், தேவேந்திரர், தேவேந்திர குலத்தார், தேவேந்திர குல வேளாளர், பண்ணாடி, காலாடி, குடும்பன், குடையர், அதிகாரி, குடும்பனார், மூப்பனார், பணிக்கர், வாய்காரர் (வாய் – நீர்வரும் வாய், மதகு), குளத்து மள்ளர் முதலிய பெயர்களுக்கும் தற்போதும் இம்மக்களுடைய முதன்மைத் தொழில் நஞ்செய் விவசாயம் என்பதுவும் நெல் நாகரிகத்தின் தொன்மையும் தொடர்ச்சியையும் இந்நாகரிகத்தின் பங்களிப்பையும் உணர முடியும்.