ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 7 பிப்ரவரி, 2015

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி ஆதரவு...


சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தை எதிர்த்து போராடி வரும் சட்டக் கல்லூரி மாணவர்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்துப் பேசினார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிப்பதாகவும் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
நியாயமான கோரிக்கைகளுக்காக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கிருஷ்ணசாமி, இடமாற்றம் தொடர்பாக மாணவர்களுடன் பேசிய தமிழக அரசு முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆலங்குளம் சிமெண்டு ஆலையை செயல்படுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் 9 இடங்களில் மறியலுக்கு முயற்சி 2 பெண்கள் உள்பட 339 பேர் கைது..



விருதுநகர் மாவட்டத்தில் ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி செயல் படுத்த கோரி 9 இடங்களில் மறியலுக்கு முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 339 கைது செய்யப்பட்டனர்.

அறிவிப்பு


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சிமெண்டு ஆலையை ரூ.165 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தி அதனை மீண்டும் செயல் படுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் நேற்று கடை அடைப்பு மற்றும் மறியல் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று ஆலங்குளத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மாவட்டத்தின் பிற பகுதியில் சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந் தன. இதனால் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கப் படவில்லை.

மறியல்


மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் கோரிக்கையை வலியுறுத்தி மறியல் செய்ய முயன்ற புதிய தமிழகம் கட்சி யினர் கைது செய்யப் பட்ட னர். விருதுநகரில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராம ராஜ் தலைமையில் 18 பேரும், ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜ லிங்கம் தலைமையில் 117 பேரும், சாத்தூரில் மத்திய மாவட்ட செயலாளர் செல்லக் கனி தலைமையில் 46 பேரும், கிருஷ்ணன் கோவிலில் ஒன் றிய செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் 29 பேரும் கைதாயினர்.

சிவகாசி

சிவகாசியில் கார்த்தி தலை மையில் 2 பெண்கள் உள்பட 22 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் 31 பேரும், ஆலங்குளத்தில் ஒன்றிய செய லாளர் அழகுமலை தலைமை யில் 33 பேரும், காரியாபட்டி யில் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் 26 பேரும், அருப்புக்கோட்டையில் ராமச்சந்திரன் தலைமையில் 17 பேரும் கைதாயினர். மொத்தம் 2 பெண்கள் உள்பட 339 பேர் கைதாயினர். 

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு....

krishnasamy
சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தை எதிர்த்து போராடி வரும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
சென்னை உயர் நீகதிமன்ற வளாகத்தில் செயல்பட்டுவரும், டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தை சட்டக் கல்லூரி மாணவர்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்துப் பேசினார்.
 
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
 
கிருஷ்ணசாமி, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இடமாற்றம் தொடர்பாக மாணவர்களுடன் பேசிய தமிழக அரசு முடிவெடுத்திருக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேர் கைது

ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி மீண்டும் இயக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் இயங்கி வரும் அரசு சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் மாவட்டம் முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதையடுத்து, பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
    இதில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்கு நிறுத்தப்பட்டிருந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் மறியலில் ஈடுபட்ட 18 பேரையும் கைது செய்தனர்.
    இதேபோல், சிவகாசி பேருந்து நிலையம் முன்பு தொகுதி கழக செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 22 பேரும், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் தனசேகரன் தலைமையில் 17 பேரும், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் 26 பேரும், ராஜபாளையம் அரசு பிரசவ மருத்துவமனை வளாகம் முன்பு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் 117 பேரும், ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் தொழிற்சாலை வளாகம் முன்பு வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் அழகுமலை தலைமையில் 33 பேரும், சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு நகரச் செயலாளர் செல்லக்கனி தலைமையில் 46 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமையில் 31 பேரும், கிருஷ்ணன்கோயில் பேருந்து நிறுத்தம் முன்பு செயலாளர் பொன்ராஜ் தலைமையில் 29 பேரும் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 339 பேரை போலீஸார் கைது செய்தனர். 

விருதுநகர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேர் கைது

ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி மீண்டும் இயக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் இயங்கி வரும் அரசு சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் மாவட்டம் முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதையடுத்து, பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
    இதில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்கு நிறுத்தப்பட்டிருந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் மறியலில் ஈடுபட்ட 18 பேரையும் கைது செய்தனர்.
    இதேபோல், சிவகாசி பேருந்து நிலையம் முன்பு தொகுதி கழக செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 22 பேரும், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் தனசேகரன் தலைமையில் 17 பேரும், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் 26 பேரும், ராஜபாளையம் அரசு பிரசவ மருத்துவமனை வளாகம் முன்பு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் 117 பேரும், ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் தொழிற்சாலை வளாகம் முன்பு வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் அழகுமலை தலைமையில் 33 பேரும், சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு நகரச் செயலாளர் செல்லக்கனி தலைமையில் 46 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமையில் 31 பேரும், கிருஷ்ணன்கோயில் பேருந்து நிறுத்தம் முன்பு செயலாளர் பொன்ராஜ் தலைமையில் 29 பேரும் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 339 பேரை போலீஸார் கைது செய்தனர். 

ஆலங்குளம் சிமென்ட் ஆலையை இயக்க புதிய தமிழகம் கட்சி 9 இடங்களில் மறியல்..

விருதுநகர்:ஆலங்குளம் சிமென்ட் ஆலையை இயக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களில் நடந்த மறியலை தொடர்ந்து, 339 பேர் கைது செய்யப்பட்டனர். ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையை நவீனப்படுத்த அரசு ஒதுக்கிய ரூ. 165 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்து, ஆலையை திறக்க கோரி விருதுநகர் மாவட்டத்தில் பிப்.6ல் பொதுகடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் அறிவித்திருந்தது. அதன் படி கட்சியினர் நேற்று சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் மறியலில் ஈடுப்பட்டனர் . கடைகள், போக்குவரத்துக்கள் வழக்கம் போல் இயங்கின. விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் நகர தலைவர் ராமராஜ் தலைமையில் 18 பேர் பங்கேற்றனர்.

* சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே புதிய தமிழகம் மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்திக் தலைமையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாண்டியம்மாள் முன்னிலையில் 20 பேர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கைதுசெய்தார். ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் பொன்னுச்சாமி, வக்கீல் குமார், நகர் செயலாளர் முத்து முன்னிலை வகித்தனர். போக்குவரத்து பிரிவு செயலாளர் காளிமுத்து, கனகராஜ், கண்ணன், பெரியசாமி கலந்துகொண்டனர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் உட்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணன்கோவிலில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பவுல் ராஜ் தலைமையில் 29 பேரை கைது செய்தனர்.
* சாத்தூர் காமராஜர் சிலை எதிரில் மாவட்ட மத்திய செயலாளர் செல்லக்கனி தலைமையில் அக்கட்சியினர் 46 பேர் ரோடு மறியல் செய்ய முயன்றனர். போலீசார் கைது செய்தனர். முன்னதாக கடைகளை அடைக்க கோரி கட்சியினர் முன்னாள் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.
மாவட்டம் முழுவதும் கட்சியினர் 339 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

குற்றவாளிகளை கைது செய்யக்கோாி தேவேந்திரகுல மக்கள் சாலை மறியல்..

கீழப்பாவூா் ஒன்றியம் வெள்ளங்கால் கிராமத்தில் மாாிச்செல்வம் மற்றும் முருகன் இருவரும் 05.02.2015 நேற்று அடித்து கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் குற்றவாளிகள் கைது செய்யப்பட் வில்லை. இதைக்கண்டித்து சுரண்டை - பாவூா்சத்திரம் செல்லும் போக்குவரத்து சாலையில் தேவேந்திரகுல மக்கள் 300 மேற்பட்டோ் சாலை மறியல் செய்தனா்.
இச்சம்பவத்தில் கோட்டாட்சியா், தாசில்தாா் மற்றும் டிஎஸ்பி மற்றும் ஏடிஎஸ்பி அவா்களின் பேச்சுவாா்த்தைகளின் உடன்படிக்கையின்படி குற்றவாளிகள் இரண் நாட்களுக்குள் கைது செய்யப்படுவா். குற்றவாளிகள் மாற்று சமுதாயத்தினராக இருந்தால் அவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நடைவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததன்போில் சாலைமறியல் கைவிடப்பட்டது.
மேலும் புதிய தமிழகம் மேற்கு மாவட்டச்செயலாளா் திரு. ஜெயக்குமாா் அவா்கள் பேசுகையில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும். அதுவரைக்கும் மாாிச்செல்வம் மற்றும் முருகன் அவா்களின் உடல்களை வாங்கமாட்டோம் என்றும் குற்றவாளிகள் கைது செய்யவில்லை என்றால் 40க்கும் மேற்றபட்ட கிராம மக்களை ஒன்றுதிரட்டி புதிய தமிழகம் நிறுவனத் தலைவா் டாக்டா் அய்யா அவா்களின் தலைமையில் பாவூா்சத்திரம் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சாலை மறியல் மற்றும் போரட்டம் நடைபெறும் என்று அறிவித்தாா்.
இந்நிகழ்ச்சியின்போது புதிய தமிகம் மேற்கு மாவட்டச் செயலாளா் திரு. ஜெயக்குமாா் நெல்லை மாநகா் மாவட்டச் செயலாளா் திரு.இராமகிருஷ்ணன் கிழக்கு மாவட்டச் செயலாளா் திரு. நடராஜன் மற்றும் கீழப்பாவூா் ஒன்றிய செயலாளா்முருகேசன் மற்றும் கடையநல்லூா் ஒன்றிய செயலாளா் மகேஷ் மற்றும் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளா் சந்திரன் மற்றும் முன்னாள் மாவட்ட மாணவரணி ஆறுமுகச்சாமி அவா்கள் உடனிருந்தனா்.