ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கமுதி அருகே தேவேந்திரர்- மறவர்களிடையே மோதல்

கமுதி அருகே தேவேந்திரர்- மறவர்களிடையே மோதல்



கமுதி அருகே தேவேந்திரர்- மறவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன் அவர்கள் கடந்த 26ம் தேதி முதல் கட்சி பிரசாரக கூட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தி வருகிறார். இந்நிலையில், 30-12-2010 அன்று கமுதியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் மண்டலமாணிக்கம் என்ற இடத்தைக் கடந்து பச்சேரி என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜான் பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், மண்டல மாணிக்கத்தைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கல், கம்பு போன்றவற்றால் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில், பதட்டத்தைத் தடுக்க போலீசார் தடியடி மற்றும் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். கமுதி டி.எஸ்.பி., தில்லை நடராஜன் தலைமையிலான போலீசார் இருதரப்பினருக்கிடையே சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக