ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

தேவேந்திரகுல வேளாளரும் ‘எஸ்.சி.’ பட்டியலும் ஓர் வரலாற்றுக் கண்ணோட்டம் – பேராசிரியர் பெ. தங்கராஜ், MA. M.phil.....(Pandyan Mallar அண்ணனுக்கு நன்றி )


மள்ளர்கள் (தேவேந்திரர்கள்) எஸ்.சி. பட்டியலிலிருந்து விலகுதல்
6. அடுத்து, யாரைக் கேட்டு தேவேந்திர குல வேளாளரை எஸ்.சி. அட்டவணையில் சேர்த்தார்கள். அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? எனக் கேட்பவர், யாரைக் கேட்டு எடுக்க வேண்டும் எனக் கூறுகிறார் என்று சிலர் கேட்கலாம்.
அப்படிப்பட்டவர்களுக்குக் கூறுகிறோம். இந்திய சுதந்திரப் போராட்டம் யாரைக் கேட்டு நடந்தது? எத்தனை பேருக்கு அதில் ஈடுபாடு இருந்தது? இருப்பினும், சுதந்தரப் போராட்டம் நடந்தது, சுதந்நிரமும் வந்தது. தலைவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மாறுபாடு கொண்டிருந்தனர்.
பெரியார், அம்பேத்கார், ராம் மனோகர் லோகியா போன்ற பெருந்தலைவர்கள் இந்தியாவுக்குக் சுதந்திரம் தருவதை தள்ளிப் போட வேண்டும். சமூகக் கொடுமைகளை ஒழிக்கும் பணியை பிரிட்டிஷ் அரசு செய்ய வேண்டும் எனக் கேட்டு சைமன் குழுவிடமும், கிரிப்ஸ் குழுவிடமும் மனுக் கொடுத்ததை நாடறியும். நாட்டில், பல முக்கிய சாதிகள், குறிப்பாக நாடார், சாமார், யாதவ், மாலா, மாதிகா, ஆதிதிராவிடா (பறையர்), தேவேந்திரர், புலையர், ஈழவர் ஆகியோர் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிக் கவலைப்படவில்லை, மாறாக, சுதந்திரம் கிடைத்தால், வெள்ளைக்காரர்கள் இருக்கும் இடத்தில் பார்ப்பனரும் மற்ற 5 - 6 சாதிக்கார்களும் அதிகாரத்தைப் பெறுவார்கள். கொடுமைகள்தான் அதிகமாகும் எனத் கருதினார்கள். இதே காரணத்தைக் கூறியதற்காக நீதிக் கட்சிக்காரர்களையே ‘தேசத் துறோகிகள்’ என்றுதான் கூறினார்கள்.
1885 ல் காங்கிரஸ் கட்சியை இரண்டு பேர்கள்தான் ஆரம்பித்தார்கள். அந்த இருவரும் வெள்ளைக்காரர்கள். தி.மு.கா. வை 7 பேர்கள் சேர்ந்துதான் ஆரம்பித்தார்கள். பெரும் புரட்சியை ஒரு சிலர்தான் நடத்த முடியும். புரட்சிக் கருத்துகளை ஒரு சில அறிஞர்கள்தான் கூறமுடியும்.
தமிழ்நாடு முழுவதும் தேவேந்திரகுல வேளாளர் தங்களை எஸ்.சி அட்டவணையில் சேர்த்ததைப் பற்றி, கவலையில் மூழ்கியுள்ளார்கள். 'குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பரித்தது என்ற பழமொழிபோல், இப்போது தலித் என்று பேசுகிறார்கள். கேட்டால் சாதிகளை இணைக்கிறோம் என்கிறார்கள். எஸ்.சி பட்டியல் இருக்கட்டும். முதலில் மற்ற பட்டியல் சாதிகளை ஏன் இனைக்கவில்லை? அல்லது இணையவில்லை? யார் வேண்டுமானாலும் எஸ்.சி. யாக, தலித்தாக இருக்கட்டும். நாங்கள் தமிழர், எனவே, தமிழனாகவே இருக்க விரும்புகிறோம்.
7. அடுத்து, தேவேந்ரகுல வேளாளர் எஸ்.சி. அட்டவணையிலிருந்து வெளியேறினால் முன்னேற முடியுமா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நாம் கூற விழைவது என்னவெனில், முன்னேற்றம் என்பது ஒரு சிலர் அரசு வேலைக்குச் செல்வதல்ல! எத்தனையோ வேறு பல அம்சங்கள் உள்ளன. அந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் தடையாயிருப்பது இந்த எஸ்.சி. அட்டவணை.
பட்டியலை ஏன் இழிவாகக் கருத வேண்டும்? எனச் சிலர் கேட்கிறார்கள். இழிவு இல்லை என்பவர் ஏன் அவரே அப்பெயரை வைத்துக் கொள்ளட்டுமே!. என்கிறோம். மேற்குறிப்பிட்ட கருத்துக்களைக் கூறுவோர் ஒதுக்சீட்டை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார், மற்ற எந்த அம்சத்தையும் கணக்கில் எடுத்துத் சிந்திக்கவில்லை. வேலை வாய்ப்புப் பெற்றவர்களின் இந்த வாதமும் ஒருவகை சுயநலமாகும்.
இதுகாறும் எடுத்து ஆய்வு செய்த பிரச்சனைகளின் அடிப்படையில், கீழக்கண்ட இரண்டு செய்திகள் தெரியவருகின்றன, அனவ;
1. வெள்னளக்காரர்கள் டி.சி. பட்டியல் உருவாக்கியதன் நோக்கம், இந்தியாவில் அரசியலதிகாரம் ஒரு சில சாதிக்கரர்களிடம் குவிந்து விடாமல் தடுப்பதற்காக.
2. காங்கிரசும், மற்ற மேல் மட்டத்திலிருந்து சாதிக் காரர்களும் இப்பட்டியலைப் பயன்படுத்திய விதம் நேர்மாறானது. யார் யாரை நிரந்தரமாய் அ|ழுத்த எண்ணினார்களோ, அவர்களையெல்லாம் இப்பட்டியலில் சேர்த்து விட்டார்கள்.
இச்சதியைச் செய்ததில், வந்தேரிகள் செய்த செயல்கள் நாட்டின் பூர்வீகக் குடிகளை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கத்தில் இருந்துள்ளது. இங்கே வந்தேறிகள் என்பது இருவரைக் குறிக்கும் 1, இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்துகுடியேரியவர்கள். 2. இந்தியாவிலேயே ஒரு பகுதியிலிருந்து பிரிதொரு பகுதியில் குடியேறியவர்கள்
உதாரண்மாக. தமிழகத்திற் குடிபுகுந்த தெலுங்கு, கன்னட மலையாள் சாதிகள், மராத்தி நாட்டில் குடிபுகுந்த குஜராத்திகள், கர்நாடகாவில் குடிபுகுந்த மராத்தியர்கள், வங்காளத்தில், குடிபுகுந்த பீகாரிகள்.
மராட்டிய மாநிலத்தின் பொருளாதார ஆதிக்கம் குஜராத்திகளிடம் உள்ளது. என்று அம்மாநிலத்தில் ஒரு குமுறல் உள்ளது.
எஸ்.சி. பட்டியல் உருவாவதற்கு முன், டி.சி பட்டியல் உருவாக்கிய போது அதில் மண்ணின் மைந்தர்களை சேர்க்கப்படக் கூடாது என்று வெள்ளைக்காரர்கள் விதி வகுத்ததிலிருந்து இதை உணரலாம் இந்தியத் துணைக் கண்டத்தில் மண்ணின் மைந்தர்களும் தொடர்ந்து பகை இருந்து வருவதை உணர்ந்ததால்தான் வெள்ளைக்கரர்கள் இது போன்ற விதியை வகுத்துள்ளார்கள். ஆனால் சமூகப் பிரச்சனைகளை ஒழுங்குபடுத்துவதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதனால்தான் 1857 ல் வெடித்த சிப்பாய் கலகத்திற்குப் பின் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தார்கள். ( Non – Intervention Policy )
சமூகப் பிறச்சனைளில் தலையிடாக் கொள்கையைக் கடைபிடித்ததால் சாதி மத ஆபாச அறிவினங்களை வரிந்து கட்டி வளர்த்தார்கள். வருண (அ)தர்மத்தை வலுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ, அவையனைத்தையும் செய்தார்கள்.
(தொடரும்).....(Pandyan Mallar அண்ணனுக்கு நன்றி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக