ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.
பி.எஸ்.ஆர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பி.எஸ்.ஆர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 ஏப்ரல், 2012

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை: அமைச்சர்

சென்னை: ""பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை,'' என்று, அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

சட்டசபையில் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) எழுப்பிய பிரச்னைக்கு பதிலளித்து, உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழுவின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், பாரதியார் பல்கலைக்கழகத்தில், 35 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க, 20 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்குப் பின் ஏற்படக் கூடிய செலவை, மாநில அரசே ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, "தினமலர்' நாளிதழில் கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவர்களின் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். பின், 24 பேர் மட்டுமே பணியில் சேர்ந்தனர். இந்த நியமனங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. "பாரதியார் பல்கலைக் கழகம், நியமனத்தின் போது விதிகளை முழுமையாகக் கடைபிடித்துள்ளது. முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை' என்று கோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, ஆசிரியர் சங்கத்தினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் பணியில் சேரவில்லை. மீதமுள்ள 23 பேரும், கடந்த 1ம் தேதி முதல் பணியில் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

செவ்வாய், 20 மார்ச், 2012

மதுவுக்கு அடிமையான சமுதாயம் சாதனை படைக்க முடியாது ஜான்பாண்டியன் பேச்சு


தஞ்சை: மதுவுக்கு அடிமையான சமுதாயம் சாதனை, சரித்திரம் படைக்க முடியாது என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம் சார்பில் அரசியலில் முத்தரையர்களின் நிலை குறித்த பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜான்பாண்டியன் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள முத்தரையர் அனைவரும் வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும். நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உறுதுணையாக இருக்கும். ஏழை, எளிய மக்கள் மீது பொய் வழக்கு போடுவதை போலீசார் நிறுத்த வேண்டும்.
பல வழக்குகள் போட்டு என்னை சிறையில் அடைத்தாலும், எனது சிந்தனைகளை யாரும் சிறை வைக்க முடியாது. இன்று அமைச்சர் பதவி வகிக்கும் நமது சமூகத்தினர் நமக்காக எந்த பணிகளையும் செய்வதில்லை. தேர்தல் நேரத்தில் ஓட்டு என்னும் ஆயுதத்தை நாம் கையில் எடுத்தால் எவராலும் நம்மை அசைக்க முடியாது.
ஆட்சிகள் மாறலாம். காட்சிகளும் மாறலாம். ஆனால், சமுதாயம் மாறாது. முத்தரையரும், தேவேந்திர குலத்தினரும் இணை பிரியாத நண்பர்கள். நாம் ஒன்றாக இருந்து வரலாறு படைப்போம்.
உழைக்கும் நமது சமுதாயத்தை இழிவுபடுத்துவோரை தூக்கி எறிவோம். மதுவுக்கு அடிமையான சமுதாயம் சாதனை படைக்கவும், சரித்திரம் படைக்கவும் முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்: ஜான்பாண்டியன் பேட்டி


சங்கரன்கோவில் இடைத்தேர்தலில்
அ.தி.மு.க. வெற்றி பெறும்: 
ஜான்பாண்டியன் பேட்டி
தஞ்சை, மார்ச். 15-
 
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
பல பிரிவுகளாக உள்ள முத்தரையர் சங்கங்களை ஒன்று கூட்டி ஒரே அணியில் திரட்டி மக்களுக்கு, சமுதாயத்திற்கு தொண்டு செய்ய முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம் பாடுபட்டு வருகிறது. அவர்களுக்கு ஆலோசனை, அறிவுரை வழங்க வந்துள்ளேன்.
 
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். அங்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஆளும் கட்சியால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அதனால் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
 
இடைத்தேர்தலில் தனித்து நிற்பது சாத்தியம் இல்லை. கூட்டணி சேர்ந்தால் தான் வெற்றி பெறும். தி.மு.க., ம.தி.மு.க. ஓட்டுக்கள் தான் வாங்கும். வெற்றி பெற முடியாது.
 
தமிழகத்தில் நிலவும் மின்தடைக்கு மத்திய அரசு தான் காரணம். கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் கொடுத்தது. ஆனால் அ.தி.மு.க. அரசுக்கு மத்திய அரசு உதவாமல் பாரபட்சமாக நடந்து வருகிறது. மத்திய அரசு கொடுத்தால் தான் மின் தடை நீங்கும். எனவே தமிழகத்தில் மின் தடையை நீக்க மத்திய அரசை கேட்பதோடு மட்டும் அல்லாமல் தமிழக மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியாவது தமிழக அரசு மின்தட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.
 
அ.தி.மு.க. ஆட்சியில் என்கவுன்ட்டர்கள், பரமக்குடி சம்பவம் போன்றவை வருந்தத்தக்கது. பரமக்குடி சம்பவத்திற்கு அதிகாரிகள் திட்டமிட்டு செய்த சதி தான் காரணம். என்கவுன்ட்டர் நடத்தக்கூடாது. குற்றம் செய்தவர்களை நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.காவல்துறை துப்பாக்கிசூடு நடத்துவதை கண்டிக்கிறோம்.
 
இலங்கை தமிழர்களை அழித்த ராஜபக்சே அரசை கலைத்து விட்டு ராஜபக்சேவை சிறையில் வைக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். இதில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
பேட்டியின் போது முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்க பொது செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் ஜான்பாண்டியன் பேட்டி

கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-03-15 10:43:23தஞ்சை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
தஞ்சையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அங்கு அதிமுக குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். தமிழகத்தில் உள்ள மின் தட்டுப்பாட்டுக்கு காரணம் மத்திய அரசுதான். மத்திய தொகுப்பிலிருந்து தான் கூடுதலான மின்சாரம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
5 பேர் பரமக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக முதல்வருக்கு தெரிந்து நடந்ததா? இல்லை. இது அதிகாரிகள் திட்டமிட்டு செய்த படுகொலைகள். சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக்கொள்கின்றனர். சென்னையில் கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றது தவறு. ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அவர்களை கொன்றது நியாயமில்லை.
இலங்கையில் தமிழர்களை அழித்த ராஜபக்ஷேவை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அமெரிக்கா ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்க கோரி தமிழக கட்சிகள் ஓரணியில் நின்று மத்திய அரசை வலியுறுத்தியும் மத்திய அரசு மவுனம் சாதிப்பது கண்டிக்கதக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் ஜான்பாண்டியன் பேட்டி



பதிவு செய்த நேரம்:2012-03-15 10:43:23தஞ்சை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
தஞ்சையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அங்கு அதிமுக குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். தமிழகத்தில் உள்ள மின் தட்டுப்பாட்டுக்கு காரணம் மத்திய அரசுதான். மத்திய தொகுப்பிலிருந்து தான் கூடுதலான மின்சாரம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
5 பேர் பரமக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக முதல்வருக்கு தெரிந்து நடந்ததா? இல்லை. இது அதிகாரிகள் திட்டமிட்டு செய்த படுகொலைகள். சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக்கொள்கின்றனர். சென்னையில் கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றது தவறு. ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அவர்களை கொன்றது நியாயமில்லை.
இலங்கையில் தமிழர்களை அழித்த ராஜபக்ஷேவை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அமெரிக்கா ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்க கோரி தமிழக கட்சிகள் ஓரணியில் நின்று மத்திய அரசை வலியுறுத்தியும் மத்திய அரசு மவுனம் சாதிப்பது கண்டிக்கதக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் ஜான்பாண்டியன் பேட்டி

கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-03-15 10:43:23தஞ்சை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
தஞ்சையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அங்கு அதிமுக குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். தமிழகத்தில் உள்ள மின் தட்டுப்பாட்டுக்கு காரணம் மத்திய அரசுதான். மத்திய தொகுப்பிலிருந்து தான் கூடுதலான மின்சாரம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
5 பேர் பரமக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக முதல்வருக்கு தெரிந்து நடந்ததா? இல்லை. இது அதிகாரிகள் திட்டமிட்டு செய்த படுகொலைகள். சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக்கொள்கின்றனர். சென்னையில் கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றது தவறு. ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அவர்களை கொன்றது நியாயமில்லை.
இலங்கையில் தமிழர்களை அழித்த ராஜபக்ஷேவை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அமெரிக்கா ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்க கோரி தமிழக கட்சிகள் ஓரணியில் நின்று மத்திய அரசை வலியுறுத்தியும் மத்திய அரசு மவுனம் சாதிப்பது கண்டிக்கதக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 11 மார்ச், 2012

இடைத்தேர்தல் நடைபெறும் சங்கரன்கோவிலில் கிராம கிராமமாக சென்ற டாக்டர் கிருஷ்ணசாமி!





அதிமுக கூட்டணியில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, கூட்டணி வைத்திருந்தது டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி. தற்போது புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவுள்ளது.

புதிய தமிழகம் கட்சிக்கென்று சங்கரன்கோவில் தொகுதியில் கனிசமான வாக்கு வங்கி உள்ளது. இதனிடையே இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்துவதா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதா என்பன போன்ற கேள்விகளை மக்களிடம் கலந்து ஆலோசிபதற்காக 24.02.2012 அன்று சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஈச்சந்தா நடுவக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சென்றார்.

அங்கே அவரது ஆதரவாளர்களையும், மக்களையும் சந்தித்த அவர், தேர்தல் பற்றிய கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது அவர்கள், தலைவர் (கிருஷ்ணசாமி) எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருவோம் என்றனர்.

வன்னிக்கோனேந்தலில் சரத்குமார் எம்எல்ஏ, டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பிரச்சாரம் [Restore Description] 1/1 சங்கரன்கோவில்.மார்ச்.11 - சங்கரன்கோவில் தொகுதி வன்னிக்கோனேந்தல் , தேவர்குளம் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். சில மணி நேர இடைவெளியில் இரு தலைவர்கள் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது அப்பகுதி தொண்டர்கள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் போது தமிழகத்தை ஏமாற்றியவர் இன்னமும் ஏமாற்றி கொண்டிருப்பவர் கருணாநிதி. அவரின் பேச்சை மக்கள் நிச்சயம் நம்பவேண்டாம். மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவரின் வேட்பாளர் முத்து செல்விக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டினார். பின்னர் பிரச்சாரத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எதிர்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். அவரால் தான் எந்த நேரமும் மக்களுக்கு என்ன தேவையோ அதை தேவையான நேரத்தில் கொடுக்க முடியும். அதனால் தான் பள்ளி மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் மற்றும் உலகிலேயே முன்னோடி திட்டமான இலவச லேப்டாப் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்காலத்ததை பற்றி சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் தன் குடும்பத்ததை பற்றிய சிந்தனை மட்;டுமே செய்பவர் கருணாநிதி. அதனால் தான் இந்த கரண்ட் தட்டுப்பாடு. அதுவும் விரைவில் தீர்ந்து விடும் என்று பேசினார். இந்த பிரச்சாரங்களை தேவர்குளம் வன்னிக்கோனேந்தல் பகுதி தேர்தல் பொறுப்பாளரும், திருவாருர் மாவட்ட செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் திருவாருர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மேலநீலித நல்லுார் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குணசீலன், ஊராட்சி செயலாளர்கள் வன்னிக்கோனேந்தல் வெளியப்பதேவர், அடைக்கலாபுரம் செல்வராஜ், தொழிற்சங்க துணை செயலாளர் செல்வராஜ், குருக்கள்பட்டி செயலாளர் பிச்சைபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இருந்தனர். தலைவர்களின் இந்த பிரச்சாரங்களை காண ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்ததை கண்டதுமே அதிமுகவின் தேர்தல் எழுச்சி வெட்ட வெளிச்சாமானது.

வன்னிக்கோனேந்தலில் சரத்குமார் எம்எல்ஏ, டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பிரச்சாரம்
1/1
சங்கரன்கோவில்.மார்ச்.11 - சங்கரன்கோவில் தொகுதி வன்னிக்கோனேந்தல் , தேவர்குளம் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். சில மணி நேர இடைவெளியில் இரு தலைவர்கள் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது அப்பகுதி தொண்டர்கள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் போது தமிழகத்தை ஏமாற்றியவர் இன்னமும் ஏமாற்றி கொண்டிருப்பவர் கருணாநிதி. அவரின் பேச்சை மக்கள் நிச்சயம் நம்பவேண்டாம். மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவரின் வேட்பாளர் முத்து செல்விக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டினார். பின்னர் பிரச்சாரத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எதிர்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். அவரால் தான் எந்த நேரமும் மக்களுக்கு என்ன தேவையோ அதை தேவையான நேரத்தில் கொடுக்க முடியும். அதனால் தான் பள்ளி மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் மற்றும் உலகிலேயே முன்னோடி திட்டமான இலவச லேப்டாப் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்காலத்ததை பற்றி சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் தன் குடும்பத்ததை பற்றிய சிந்தனை மட்;டுமே செய்பவர் கருணாநிதி. அதனால் தான் இந்த கரண்ட் தட்டுப்பாடு. அதுவும் விரைவில் தீர்ந்து விடும் என்று பேசினார். இந்த பிரச்சாரங்களை தேவர்குளம் வன்னிக்கோனேந்தல் பகுதி தேர்தல் பொறுப்பாளரும், திருவாருர் மாவட்ட செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் திருவாருர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மேலநீலித நல்லுார் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குணசீலன், ஊராட்சி செயலாளர்கள் வன்னிக்கோனேந்தல் வெளியப்பதேவர், அடைக்கலாபுரம் செல்வராஜ், தொழிற்சங்க துணை செயலாளர் செல்வராஜ், குருக்கள்பட்டி செயலாளர் பிச்சைபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இருந்தனர். தலைவர்களின் இந்த பிரச்சாரங்களை காண ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்ததை கண்டதுமே அதிமுகவின் தேர்தல் எழுச்சி வெட்ட வெளிச்சாமானது.

Home வன்னிக்கோ னேந்தலில் சரத்குமார் - கிருஷ்ணசாமி பிரச்சாரம்

வன்னிக்கோனேந்தலில் சரத்குமார் எம்எல்ஏ, டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பிரச்சாரம்
1/1
சங்கரன்கோவில்.மார்ச்.11 - சங்கரன்கோவில் தொகுதி வன்னிக்கோனேந்தல் , தேவர்குளம் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். சில மணி நேர இடைவெளியில் இரு தலைவர்கள் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது அப்பகுதி தொண்டர்கள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் போது தமிழகத்தை ஏமாற்றியவர் இன்னமும் ஏமாற்றி கொண்டிருப்பவர் கருணாநிதி. அவரின் பேச்சை மக்கள் நிச்சயம் நம்பவேண்டாம். மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவரின் வேட்பாளர் முத்து செல்விக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டினார். பின்னர் பிரச்சாரத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எதிர்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். அவரால் தான் எந்த நேரமும் மக்களுக்கு என்ன தேவையோ அதை தேவையான நேரத்தில் கொடுக்க முடியும். அதனால் தான் பள்ளி மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் மற்றும் உலகிலேயே முன்னோடி திட்டமான இலவச லேப்டாப் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்காலத்ததை பற்றி சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் தன் குடும்பத்ததை பற்றிய சிந்தனை மட்;டுமே செய்பவர் கருணாநிதி. அதனால் தான் இந்த கரண்ட் தட்டுப்பாடு. அதுவும் விரைவில் தீர்ந்து விடும் என்று பேசினார். இந்த பிரச்சாரங்களை தேவர்குளம் வன்னிக்கோனேந்தல் பகுதி தேர்தல் பொறுப்பாளரும், திருவாருர் மாவட்ட செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் திருவாருர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மேலநீலித நல்லுார் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குணசீலன், ஊராட்சி செயலாளர்கள் வன்னிக்கோனேந்தல் வெளியப்பதேவர், அடைக்கலாபுரம் செல்வராஜ், தொழிற்சங்க துணை செயலாளர் செல்வராஜ், குருக்கள்பட்டி செயலாளர் பிச்சைபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இருந்தனர். தலைவர்களின் இந்த பிரச்சாரங்களை காண ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்ததை கண்டதுமே அதிமுகவின் தேர்தல் எழுச்சி வெட்ட வெளிச்சாமானது.

திங்கள், 5 மார்ச், 2012

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு ஜான்பாண்டியன் ராமநாதபுரம் வருகை: பாதுகாப்புக்கு போலீஸ் குவிப்பு






பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 5 மாதத்திற்கு பின் ஜான்பாண்டியன் ராமநாதபுரத்திற்கு இன்று வந்தார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பரமக்குடியில் நடந்த கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 பேர் பலியானார்கள். கலவரத்தையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜான் பாண்டியன் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனிடயே ராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழக் கரை, புல்லந்தை கிராமத்தில் அவரது ஆதரவாளரான முத்துராக்கு இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை ஜான்பாண்டியன் வந்தார். இதையொட்டி ராமநாதபுரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஞாயிறு, 4 மார்ச், 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு


சென்னை: பரமக்குடி உயிர்ப்பலிகள் நடந்த சில மாதங்களுக்குள் மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி.
வரும் 18ம் தேதி நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நேரில் சந்தித்து, வரும் 18ம் தேதி நடைபெற உள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.முத்துச்செல்விக்கு தங்கள் கட்சியின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்தார்.

அதற்கு முதல்வர் ஜெயலலிதா தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது கழக பொருளாளரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில் தலித்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். அப்போது ஜெயலலிதா அரசை அராஜகம் மிகுந்த அரசு என வர்ணித்து கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார் கிருஷ்ணசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 3 மார்ச், 2012

சங்கரன்கோயில் இடைத்தேர்தல்: முதல்வரை சந்தித்தப்பின் கிருஷ்ணசாமி பேட்டி

1/1
சென்னை, மார்ச்.- 3 - சங்கரன் கோயில் சட்டபேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:- புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சென்னையில் நேற்று தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவைஇன்று (நேற்று) அவரது இல்லத்தில் சந்தித்து பேசினேன் அப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க, வேட்பாளருக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவுஅளிக்கிறது என்பதை அவரிடத்திலே கூறினேன். முன்னதாக பரமக்குடி துப்பாக்கி சம்பவம்சம்மந்தமாக எங்களது கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துரைத்தோம் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதிஅளித்துள்ளார். இதையடுத்து எங்கள் கட்சி அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவரிடம் நிருபர்கள்கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும் வருமாறு:- கேள்வி: அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாக முன்பு அறிவித்தீர்களே.? பதில்:அன்று இருந்த சூழ்நிலையில் அந்த முடிவை மேற்கொண்டோம் தற்போது சங்கரன்கோவில் அ.தி.மு.க. தேர்தல் பணி குழுவில் எங்களை இணைத்துகொண்டு புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவார்கள், இவ்வாறு டாக்டர்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

புதன், 29 பிப்ரவரி, 2012

பரமக்குடி படுகொலைகளும், சி.பி.ஐ. விசாரணையும்



கடந்த 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ம் நாள், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன் என்பார் ஆதிக்கச் சாதி இந்துக்களால் தனது 33ம் வயதில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சமூக நீதிக்காகப் போராடியதன் காரணமாக படுகொலை செய்யப்பட்டதால், அவர் பட்டியலின மக்களால் 'தியாகி'யாக கருதப்பட்டதோடு, அவரது  ஒவ்வொரு நினைவுநாளின் போதும் அவரது நினைவிடம் அமைந்துள்ள பகுதிக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பட்டியலின மக்கள் போன்றோர் பெருந்திரளாக ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக அணிவகுத்து, அவருக்கு மரியாதை செலுத்த ஆரம்பித்தார்கள். அவ்வப்போதைய ஆளும் திராவிட அரசுகளின், ஆதிக்க ஜாதியினருக்கு ஆதரவான செயல்பாடுகளும், பட்டியலின மக்களுக்கு எதிரான திட்டமிட்ட கண்டுகொள்ளாமையையும், அடக்குமுறைகளையும் மீறி ஆண்டுக்கு ஆண்டு இப்படியாகத் திரளும் மக்களின் எண்ணிக்கை பல இலட்சங்களைக் கடந்தும், கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே வந்தது. அரசியல் கட்சிகளைக் கடந்து, பட்டியலின மக்களின் தன்னெழுச்சியான ஒன்றிணைதலைக் கண்ட ஆதிக்க ஜாதியினருக்கு இது எரிச்சலூட்ட ஆரம்பித்தது.

இப்படிப்பட்ட சூழலில், கடந்த 10.09.2011 அன்று, கமுதி வட்டம் பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த பழனிகுமார் என்ற பட்டியலின மாணவர் ஆதிக்க ஜாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியின் தலைவரான பெ. ஜான் பாண்டியன் அந்த ஊருக்கு செல்லவிருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவருக்கு மவட்ட ஆட்சித் தலைவரால் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
   
மறுநாள், தியாகி இம்மானுவேல் சேகரனது 54ஆவது நினைவு நாளான 11.09.2011 அன்று அதிகாலை முதலே, பரமக்குடி வழியாகச் செல்லும் அனைத்து போக்குவரத்து வழித்தடங்களும் வழக்கம்போல வேறுபாதையில் மாற்றிவிடப்பட்டது. காலைமுதலே அவரது நினைவிடத்தில் மக்கள் திரள ஆரம்பித்தார்கள். இதற்கிடையில் ஜான் பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார். அந்த செய்தி பரமக்குடியில் திரண்டிருந்த மக்களுக்கு எட்டிய உடனே, அவரை விடுதலை செய்யக்கோரி சிலர் ஆயுதங்கள் ஏதுமின்றி, அமைதியாக அறவழியில் ஒன்றுகூடி ஆர்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபடுகிறார்கள். சுமார் 200பேர் அளவில் அங்கு திரள்கிறார்கள். இதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, காவல் துறையினரின் காட்டு தர்பாரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 6பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், 33பேருக்கு படுகாயமும் ஏற்பட்டது.

மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் பாண்டியன் அவர்களை வெளிஉலகுக்கு கொண்டுவரக்கோரி, வழக்கறிஞர் இரஜினிகாந்த் மற்றும் விஜேந்திரன் ஆகியோரால் ஆட்கொணர்வு நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்படுகிறார்.       

அந்த வாரமே, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள், பரமக்குடியில் படுகாயம் அடைந்த 33பேருடைய உடல்நிலை குறித்து, மதுரை மற்றும், இராமநாதபுரம் மாவட்டத்தின் மாவட்ட நீதிபதிகளும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்ததில், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மனுவில் கோரியபடியே அறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிட்டது. அவர்களும் பார்வையிட்டு கூட்டு அறிக்கையும் தாக்கல் செய்தார்கள். அந்த கள ஆய்வு அறிக்கையின் படி, படுகாயமடைந்தவர்களில் மூன்று பேரின் உடல்நிலை மிகவும் கவலைகிடமானதாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் அரசின் செலவில் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டுமென வழக்கறிஞர்களால் கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது.

இதற்கிடையில் மாநில அரசானது, மேற்கண்ட நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட கணேசன், பன்னீர்செல்வம், ஜெயபால், தீர்ப்புக்கனி, முத்துக்குமார், வெள்ளைச்சாமி ஆகிய 6பேரது குடும்பத்தினருக்கும் தலா ஒரு இலட்சம் ருபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவிப்பு செய்தது.

இந்நிலையில் வழக்கறிஞர்கள் முருகன், புகழேந்தி, திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), சாமுவேல்ராஜ் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), செல்வம், மள்ளர் நாடு நல சங்கம், வையவன், டாக்டர்.அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சட்ட பாதுகாப்பு மையம், சத்திய மூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி) மதுரை மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் குருவிஜயன் (பகுஜன் சமாஜ் கட்சி) ஆகிய பதினோறு மனுதாரர்கள் இந்த வழக்கை மத்திய குற்ற புலனாய்வுக்கு மாற்ற கோருதல், நிகழ்வில் தொடர்புடைய காவல் அதிகாரிகளை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய வேண்டும், காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டும், என்பது போன்ற பல்வேறு பரிகாரங்களைக் கோரி பொதுநல வழக்குகளை சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்தார்கள். நிகழ்விடம் மதுரை உயர்நீதிமன்ற விசாரணை எல்கைக்குள் வருவதால் அனைத்து வழக்குகளும் மதுரைக்கு மாற்றப்பட்டது.

எங்களுக்கு வேண்டியது நீதி; நிதி அல்ல:

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த ஒவ்வொரு தருணத்திலும், சமூக நலனில் அக்கறை கொண்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூறுக்கும் அதிகமான வழக்கறிஞர்களும், பாதிக்கப்பட்ட மக்களும், பல்வேறு அமைப்புகளிச் சேர்ந்தவர்களும் அரசியல் கட்சியினரும் பெருந்திரளாக நீதிமன்றத்தில் திரண்டார்கள். இழப்பீடு தொகையை முன்னிலும் அதிகமாக அறிவித்து அதனை ஏற்றுக் கொண்டு வழக்கினை தள்ளுபடி செய்யக்கோரி காவல்துறையின் வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டதை தொடர்ந்து, "எங்களுக்கு வேண்டியது நீதி; நிதி அல்ல" என்பது போன்ற பல்வேறு சுவரொட்டிகளும், போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொது விசாரணை உள்ளிட்ட வழிகளிலும் சமூக நீதியில் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகளால் மாநிலமெங்கும் நடத்தப்பட்டது. குறிப்பாக, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், பரமக்குடியில் காவல்துறையினரின் கோர தாண்டவத்தை கண்டித்து சிறப்பு கூட்டம் நடத்தியதோடு, மத்திய குற்றப் புலனாய்வுத் துரையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தீர்மானம் ஏற்றியது. இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் குழுக்கள் பரமக்குடிக்குச் சென்று கள ஆய்வு செய்தார்கள். 

பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு கடந்த 23.12.2011 அன்று நீதிபதிகள் கே. என். பாட்சா மற்றும் எம். வேணுகோபால் ஆகியோருக்கு முன்பாக வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள். பொ.இரத்தினம், சங்கரசுப்பு, இராதாகிருஷ்ணன், என்.ஜி.ஆர்.பிரசாத், பிரபுராஜதுரை மற்றும் ரஜினி ஆகியோரும், அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர். நவநீத கிருஷ்ணன், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர். சுப்ரமணியம் உள்ளிட்ட பலரும் வாதம்செய்தார்கள்.

விசாரணைக்கு ஏற்கத்தக்க தகுதியான வழக்கா?:

வழக்கறிஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டக்கல்லூரி மாணவர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் கட்சியை சார்ந்த உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலர் போன்றோரைத் தவிர நிகழ்வில் பாதிக்கப்பட்ட எவரும் வழக்கு தொடரவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கத்தக்க வகையிலான தகுதிபெற்ற வழக்கு அல்ல என காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்டோர் சார்பாக 20க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் ஏற்கனவே கவல்துறைக்கும், அரசுக்கும் அனுப்பப்பட்டு அதற்கான சான்றுகளும் இங்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு பொது நல வழக்கு. எனவே, வழக்குக்கு தொடர்பே இல்லாத, சமூக நலனில் அக்கறை கொண்டுள்ள குடிமக்கள் எவரும் வழக்கு தொடரலாம் என்று மனுதாரர்களின் சார்பில் வாதிடப்பட்டதை ஏற்றுக்கொண்டு, காவல்துறை தரப்பு வாதத்தை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது விசாரணைக்கு ஏற்கத்தக்க தகுதியான வழக்கே என்று கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

ஒரு நபர் விசாரணை ஆணையம்:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசானது, 'விசாரணை ஆணையங்கள் சட்டம்', 1952 ன் படி, பரமக்குடி நிகழ்வு தொடர்பாக விசாரணை செய்து, இரண்டு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை தர வேண்டுமென்ற உத்தரவுடன்,  சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி. சம்பத் அவர்களின் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை கடந்த 13.09.2011 அன்று அமைத்துள்ளது. அந்த அறிக்கை சமர்பிக்கப்பட்ட பிறகு மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். எனவே, இந்த வழக்கை தமிழக காவல்துறை மிகச்சிறப்பாகவே விசாரித்து வருவதால் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் வசம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டிய தேவையில்லை என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதம் செய்தார். அதற்கு, ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது கள ஆய்வு செய்யும் ஒரு அமைப்பு மட்டுமே. அந்த ஆணையமானது தனது கருத்தை அறிக்கை வடிவில் தயாரித்து சில பரிந்துரைகளுடன் சமர்பிக்கும். அந்த பரிந்துரைகளை அரசு ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம். எனவே ஆணையத்தின் அறிக்கை வரும்வரையில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்தீர்ப்பு நெறிகளைச் சுட்டிக்காட்டி வாதம் செய்தார்கள். மேலும் மாநில அரசின் காட்டுப்பாடில் இயங்கும் ஆணையத்தின் விசாரணையை பாதிக்கப்பட்ட மக்கள் நம்பத்தயாரில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள் விசாரணை ஆணையம் வந்தபோது வாயில் கருப்புதுணி கட்டி தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்ததுடன், அந்த ஆணையத்தையும் புறக்கணித்துள்ளார்கள். எனவே, அரசு தரப்பினரின் இந்த வாதமும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

சோகமான, அச்சமூட்டுகிற, உணர்ச்சிமிக்க நிகழ்வு:

இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர், நீதிமன்றமானது, ஆயுதங்கள் ஏதுமின்றி, அமைதியாக அறவழியில் ஒன்றுகூடி ஆர்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட சாராரின்மீது எந்தவித நியாயமான தேவையும் இல்லாமல் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். இது ஒரு சோகமான, அச்சமூட்டுகிற, உணர்ச்சிமிக்க நிகழ்வாகும் என்று கூறியது.

பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை: 

குடிமக்களுக்கு வெளிப்படையான, பாரபட்சமற்ற விசாரணையை உத்தரவாதப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மேலும், குடிமக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் செய்யவேண்டிய வகையில், முழுமையான நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும் உத்தரவாதத்தையும் வழங்க வேண்டியது அத்தியாவசியமானது. உள்ளூர் காவல் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் எழுந்திருக்கும் சூழலில், அவ்வழக்கில் அதே காவல் அதிகாரிகளே விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கும் சூழலில் விசாரணை குறித்த ஐயப்பாடு எழுவது இயல்பானதே.

விசாரணையானது நியாயமானதாக இருந்தால் மட்டும் போதாது. அது வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும். அதேவேளையில் அந்த விசாரணை, பாதிக்கப்பட்டோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைக்கும் வகையிலும் அமைய வேண்டும். 

மத்திய குற்றப் புலனாய்வுத் துறை:

வலுவான மற்றும் அழுத்தமான காரணங்கள் உள்ளதால், இந்த வழக்கில் வெளிப்படையான, நடுநிலையான விசாரணை தேவை என நாங்கள் கருதுகிறோம். எனவே, இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் இந்த தீர்ப்பின் நகல் கிடைத்ததிலிருந்து, பத்து நாட்களுக்குள் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்க வேண்டும். ஏதாவதொரு மத்திய குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் அந்த விசாரணையைக் கண்காணிக்க வேண்டும். வெளிப்படையான, வீரியமான விசாரணைக்காக, மாநில அரசு தனது பூரண ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் நல்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படியாக பல்வேறு தரப்பினர்களின் தொடர் போராட்டத்தினால், ஊர் கூடி தேர் இழுத்ததின் காரணமாக கிடைத்த ஒரு இடைக்கால வெற்றியே இந்த தீர்ப்பாகும். இதே முனைப்புடன் தொடர்ந்து அடுத்த கட்ட பணிகளை முன்னெடுத்தலில் தான் அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி நாம் பயணிக்க முடியும்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது- ஜான்பாண்டியன் அறிவிப்பு


  
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது- ஜான்பாண்டியன் அறிவிப்பு
நெல்லை, பிப். 28-
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது என அக்கட்சி தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-
 
சங்கரன்கோவில் தொகுதியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 25-ந் தேதி நடந்தது. கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் பிறகு அரசியல் உயர்மட்ட குழு தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது. 
 
சங்கரன்கோவிலில் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப் படாது. கடந்த காலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் ஜனநாயகம் எப்படி கேலி கூத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்தலை சந்தித்து, காலத்தை வீணாக்குவதை விட கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
எனவே தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் எந்த வேட்பாளர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என எண்ணிப் பார்த்து வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 27 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவிலில் நாலு சடுகுடு!



மார்ச் 18-ல் தேர்தலைச் சந்திக்க இருக்கும் சங்கரன்கோவில் தனித்தொகுதி​யில் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்​தும், தங்களுடைய வேட்​பாளர்​களைக் களம் இறக்கி விட்டன. ஆளும் அ.தி.மு.க​-விடம் இருந்து தொகுதியைத் தட்டிப்பறிக்க பிரதான எதிர்க்கட்சிகள் கடுமையாகப் போட்டி போடும் நிலையில், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் பற்றிய அலசல்... 
முத்துச்செல்வி: இந்தத் தொகுதியில் போட்டியிட நான், நீ எனப் பலரும் அ.தி.மு.க-வில் வரிந்து கட்டிய சமயத்தில், யாருமே எதிர்பார்க்காமல் இவரது பெயரை ஜெயலலிதா அறிவித்தார். இதனால், இந்தத் தொகுதியில் ஸீட் கேட்டுக் காத்திருந்த பலருக்கும் கடும் அதிருப்தி. அதனால் உள்கட்சியிலேயே சிலர் எதிராகக் காய் நகர்த்துகிறார்கள்.
தொகுதியில் இருக்கும் கணிசமான முக்குலத்தோர் வாக்குகள் இதுவரை அ.தி.மு.க-வுக்கு சாதகமாக இருந்தன. ஆனால், சசிகலா குடும்பத்தினர் மீதான அதிரடி நடவடிக்கைகள் அந்த சமூகத்தினரிடம் அதிர்ச்சியை ஏற் படுத்தி இருப்பதால், இந்த முறை அந்த வாக்குகள் மொத்தமாகக் கிடைப்பது சந்தேகமே. இது போன்ற பிரச்னைகளை சமாளிக்கத்தானோ என்னவோ, 34 அமைச்சர்களை உள்ளடக்கிய 43 பேர் கொண்ட மெகா குழுவை அறிவித்து இருக்கிறார் ஜெயலலிதா.
வெற்றி வாய்ப்பு குறித்து முத்துச்​செல்வியிடம் பேசினோம். ''கடந்த தி.மு.க ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் சீர்படுத்தி செம்மையான ஆட்சியை அம்மா நடத்தி வருகிறார். ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை அம்மா செயல்படுத்தி வருகிறார். அதை எல்லாம் சொல்லி வாக்கு கேட்பேன். மறைந்த அமைச்சர் கருப்பசாமி விட்டுச் சென்றிருக்கும் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்த வாய்ப்பு கொடுக்கும்படி வாக்காளர் களிடம் கேட்பேன், வெற்றி பெறுவேன்'' என்றார் பவ்யமாக.
ஜவஹர் சூர்யகுமார்: தி.மு.க-வில் ஸீட் கேட்டு உள்ளூர், வெளியூர்ப் பிரமுகர்கள் பலரும் காத்​திருந்த நிலையில், யாருமே எதிர்பாராத ஜவஹர் சூர்யகுமாருக்கு வாய்ப்பு. இவரை வெற்றி பெற​வைக்க வேண்டும் என்று ஸ்டாலின், அழகிரி தரப்பில் இருந்து அவரவர் ஆதரவாளர்களுக்கு உத்தரவு வந்து இருப்பதால், தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் வேலை செய்கிறார்கள்.
காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்த இவர், இடையில் ம.தி.மு.க. பக்கம் தாவி, அதன் பின்னரே தி.மு.க-வுக்கு வந்தவர் என்ற  அதிருப்தி இருக்கிறது. தீவிர வாக்கு சேகரிப்புக்கு இடையே நம்மிடம் பேசிய அவர், ''தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது வழக்குப் போட்டு பழிவாங்குவதில் காட்டும் அக்கறையில் பாதியைக்கூட மக்கள் நலனை மேம்படுத்துவதில் இந்த அரசு காட்டவில்லை. ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில் மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்போம் என்று சொன்னார்கள். ஆனால், ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டு இப்போது 10 மணி நேரமானதுதான் சாதனை. சமச்சீர்க் கல்வி, புதிய சட்டமன்றக் கட்டடம், அண்ணா நூலகம் போன்றவற்றை முடக்க நினைப்பதை மக்களிடம் எடுத்துச் சென்று நியாயம் கேட்பேன். எங்களுக்குத்தான் வெற்றி'' என்றபடி கிளம்பினார்.
சதன் திருமலைக்குமார்: வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இந்தத் தொகுதிக்குள் வருவதால், சொந்த பலத்தைப் பரிசோதிக்க நினைத்து ம.தி.மு.க.  தனியே களம் இறங்குகிறது. வேட்​பாளரான டாக்டர் சதன் திருமலைக்குமார், தொகுதி மக்களுக்கு ஏற்கெனவே அறிமுகம். இதே தொகுதியில் 1996-ல் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த இவர், 2005-ல் பக்கத்துத் தொகுதியான வாசுதேவநல்லூரில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-ஆக இருந்தவர். வைட்டமின் 'ப' இல்லாமல் களம் இறங்கி இருப்பது ம.தி.மு.க-வுக்கு மைனஸ். ஆனாலும், ஆளும் கட்சிக்கு இணையாக ஒரு மாதத்துக்கு முன்பே பிரசாரக் களத்தில் இருப்பது சாதகம்.
சதன் திருமலைக்குமாரிடம் பேசியபோது, ''இந்த அரசு மீதும் மக்களுக்கு ஏமாற்றம் வந்துவிட்டது. அதனால், எங்களை மாற்று சக்தியாக மக்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வும் இந்த மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இப்போது இருக்கும் அ.தி.மு.க.வும் எதையும் செய்வதாகத் தெரியவில்லை. கட்சி எல்லைகளைக் கடந்து தமிழர் நலனுக்காகப் பாடுபடும் வைகோவை இந்த மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமையும்'' என்றார் நம்பிக்கையுடன்.
முத்துக்குமார்: தே.மு.தி.க-வுக்கு இந்தத் தொகு​தியில் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை என்றபோதிலும், ஜெயலலிதாவிட்ட சவாலை எதிர்கொள்வதற்காகவே தனித்துக் களம் இறங்கி இருக்கிறது. வேட்பாளரான முத்துக்குமார் 2006 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு 5,531 வாக்குகள் பெற்றவர்.  விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் இங்கு முகாமிட்டு, கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்யும் திட்டம் இருக்கிறது.
கம்ப்யூட்டர் இன்ஜீனியரான முத்துக்குமாரிடம் பேசுகையில், ''பால்விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் தட்டுப்பாடு போன்றவற்றால் அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வேண்டாதவர்களைப் பழிவாங்கும் செயலில் மட்டுமே தீவிரம் காட்டுவதால், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அளவுக்கு அதிகமாக வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அது, இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும்'' என்றார் உற்சாகமாக.
வாக்காளர்களின் மனதில் இருப்பது யாரோ?

சனி, 25 பிப்ரவரி, 2012

ஜான்பாண்டியன் திமுகவுக்கு ஆதரவு?








தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் இன்று சங்கரன்கோவிலில் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சங்கரன் கோவிலுக்கு வந்தார்.


நகரின் வைஸ்ணவி மகாலில் திரளாக கலந்துகொண்ட தனது கட்சியினரிடம் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் தனித்துப் போட்டியிடவேண்டுமா? வேறு கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? என்று கேட்டு பதிலை துண்டு சீட்டில் எழுதித்தருமாறு கேட்டார்.

இதையடுத்து தொண்டர்கள் தங்கள் கருத்துக்களை எழுதிக்கொடுத்தனர்.  ரகசிய கருத்து கேட்பு முடிவின்படி
தனித்துப்போட்டியிடுவதா?

அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்று முடிவெடுத்து அறிவிக்கும் அதிகாரம்
கட்சியின் நிறுவனர் ஜான்பாண்டியனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து பேசிய ஜான்பாண்டியன்,   ‘’நீங்கள் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டீர்கள்.   நீங்கள்
எதிர்ப்பார்க்கும் வகையில் நல்ல முடிவினை மேற்கொள்வேன்’’ என்றார்.

ஆனால், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களோ திமுகவிற்கே ஆதரவு கொடுப்பதற்கே வாய்ப்புகள் இருக்கலாம் என்று
சூசகமாக தெரிவித்தனர்.














சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது: டாக்டர் கிருஷ்ணசாமி







சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது என்று டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

புதிய தமிழக கட்சியின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி,

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்தினேன். அங்கு அடிப்படை வசதிகள் தீர்க்கப்படவில்லை. குடிநீர் வசதி, மயான வசதி போன்ற வசதிகள் இல்லை. கூட்டணி குறித்து விவாதம் செய்தோம்.

ஆளும் கட்சிகள் இடைத்தேர்தலில் அதிகாரம் செலுத்தும் நிலை கடந்த சில ஆட்சிகளில் உள்ளது. அதே நிலை இந்த ஆட்சியில் ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். அங்கு 32 அமைச்சர்கள் முகாம் இட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். அவர்களை திரும்ப அழைக்க வேண்டும்.

நெல்லை பொறுப்பாளர்கள் தவிர பிற மாவட்ட பொறுப்பாளர்களை திரும்ப அழைப்பதன் மூலம் பிற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும். சட்டமன்ற தேர்தல் நடந்து 9 மாதம் தான் ஆகிறது. அதில் அ.தி.மு.க. பெரிய வெற்றி பெற்றுள்ளது.

எனவே இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

எனவே கால விரயம், பொருள் விரயத்தை தவிர்க்க சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது. தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஓரிரு நாளில் அரசியல் உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்வோம்.

சென்னையில் நடந்த என்கவுன்டர் சம்பவம் ஏற்புடையதல்ல. 90 சதுரஅடி வீட்டில் இருந்து அவர்கள் தப்பி இருக்க முடியாது. அவர்களை கைது செய்திருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் போட்டியில்லை: கிருஷ்ணசாமி

மதுரை: சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். மேலும் அவர், சங்கரன்கோவில் தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும். தொகுதியில் 32 அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு சிறந்தது அல்ல. அவர்களை அங்கிருந்து திருப்பியழைக்க வேண்டும் என கூறினா

புதிய தமிழகம் விரும்பினால் ஆதரவு ஜான்பாண்டியன் பேட்டி

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்


நெல்லை: சங்கரன்கோவிலில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி ஆதரவு கேட்டால், நாங்கள் கொடுக்க தயாராக இருக்கிறோம். இதுவரையில் எந்த கட்சியினரும் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. எங்களின் கோரிக்கைகளை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி வைப்போம். பிப்.25ம் தேதி சங்கரன்கோவில் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் எங்கள் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.
 கூட்டணி குறித்து அதிமுக பேசினால், ஆடித்தபசு விழாவில் எங்கள் சமூகத்தினருக்கு மண்டகப்படி, தியாகி இமானுவேல்சேகரனுக்கு அரசு விழா, பரமக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது  வழக்குப்பதிவு ஆகிய கோரிக்கைகளை முன்வைப்போம். பரமக்குடியில் பலியான குடும்பங்களை பார்க்க முடியாதவாறு எனக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இதை கண்டித்து இன்று அனைத்து மாவட்ட தலைநகரிலும் தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். போட்டியின்போது  மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், இன்பராஜ், கண்மணிமாவீரன், மாவட்ட இணைச் செயலாளர் செல்வராஜ்,  இளைஞரணி செயலாளர் பொன்ராஜ், மாணவரணி செயலாளர் அருண் உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது - கிருஷ்ணசாமி பேட்டி


நெல்லை: அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டுமெனில் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 32 அமைச்சர்களை முதலமைச்சர் ஜெயலலிதா விலக்கி கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமையன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

அதிமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் மின்வெட்டு குறையவில்லை. அண்மை காலமாக சட்டம் ஓழுங்கு சீர்குலைந்து விட்டது. கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று கூறி போலீசார் 5 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வேறு எங்கெல்லாம் கொள்ளையடித்தார்கள் என விசாரித்து இருக்கலாம்.

இந்திய அரசியல் சட்டப்படி நீதித்துறை அனுமதியில்லாமல் யாருடைய உயிரையும் பறிக்க முடியாது. 5 பேரையும் சுட்டுக் கொன்றது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பாளை சித்தா கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும். மாணவர்கள் படிப்பை தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்களை அனுப்பியது தவறு. அங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க அவர்களை விலக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.