ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 26 டிசம்பர், 2011

சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள் !

சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள்!
ஜெயலலிதா - சசிகலா
அ.தி.மு.க ஒரு பார்ப்பனியக் கட்சி என்பதோடு தரகு முதலாளிகளின் கட்சி என்ற நிலைக்கு கொண்டுவந்து சாதித்திருப்பவர் ஜெயலிலிதா எனில் அதற்கு பொருத்தமான தொண்டர் குண்டர் ரவுடி படைகளை உருவாக்கி தீனி போட்டு உள்ளூர் தளபதிகளை வைத்து அ.தி.மு.கவின் மக்கள் முகத்திற்கு உருவம்கொடுத்தது சசிகலா கும்பல்தான்.கூடங்குளம், பால் பேருந்து கட்டண உயர்வு, முல்லைப் பெரியாறு முதலான மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் தீவிரமான போராட்டங்கள் வளரும் காலத்தில் சசிகலா நீக்கம் குறித்த செய்தி ஊடகங்களின் மாபெரும் சென்சேஷனாக முன்வைக்கப்படுகிறது.
அ.தி.மு.கவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர்கள் தகுதியிலிருந்தும் சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட பன்னிரெண்டு உறவினர்கள் அடங்கிய மன்னார்குடி கும்பல் நீக்கப்பட்டது குறித்து பார்ப்பன ஊடகங்கள் மகிழ்வதோடு துள்ளிக் குதிக்கின்றன. தினமலர், தினமணி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் முதலான பார்ப்பன பத்திரிகைகளும், சோ, சு.சாமி, பா.ஜ.க முதலான பார்ப்பனக் கும்பல்களும் இதை ஆரவாரத்துடன் ஆதரிப்பதோடு அதற்கு பொருத்தமான கிசுகிசு செய்திகளையும் விரிவாக முன்வைக்கின்றன. இறுதியில் ஜெயாவின் அனைத்து பாவங்களுக்கும் இந்த மன்னார்குடி கும்பல்தான் காரணமென்றும் இனி அவர் எந்த நெருக்கடியுமின்றி ‘நல்லாட்சி’யை தொடருவார் என்றும் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.
எம்.ஜி.ஆரால் திட்டமிட்டு தமிழக அரசியலுக்குள் பாசிச ஜெயா திணிக்கப்பட்ட போதும் பின்னர் அவர் வாரிசு சண்டையில் வெற்றி பெற்ற போதும் பார்ப்பன ஊடகங்கள் அவரை மற்ற திராவிட அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு இருப்பவர் என்று போற்றிக் கொண்டாடின. நாகரீகமானவர், கான்வென்டு கல்வி கற்றவர், ஊழலற்றவர், குடும்ப பந்தங்கள் இல்லாதவர், படித்தவர், பண்பாளர், தமிழினித்தின் தனித்தன்மையை மறுத்து பாரத ஒற்றுமையை போற்றுபவர், இன வெறி இல்லாதவர், இந்துமத ஆன்மீக விசயங்களை சமரசமின்றி பின்பற்றுபவர் என்பதாக இவை நீண்டன.
திராவிட இயக்கங்களையும், தமிழ்நாட்டையும் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான சந்தேகப்பட்டியலில் வைத்திருக்கும் இந்திய ஊடகங்கள் அதற்கு மாற்றாக அ.தி.மு.கவையும், ஜெயாவையும் முன்னிருத்தின. பிராமணர் சங்கம், ஜெயேந்திரன், ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி போன்ற அவாள் கட்சிகளெல்லாம் ஜெயாவை முன்னுதாரமாண இந்து அரசியல்வாதியாக போற்றி வந்தன.
90களில் ஜெயா ஆட்சியைப் பிடித்ததும் பின்னர் சசிகலா நட்பு உறுதியடைந்ததும், தொடர்ச்சியாக ஜெயா சசிகலா கும்பல் முழு தமிழ்நாட்டையும் தடுப்பார் யாருமின்றி மொட்டையடித்து கொள்ளையடித்ததுமான காலத்தில் இந்த பார்ப்பன ஊடகங்கள் அணுகுமுறை எப்படி இருந்தன?
இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சசிகலாவை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய பார்ப்பன ஊடகங்கள் பாசிச ஜெயாவை மட்டும் அதிலிருந்து நீக்கி சுத்தமானவர் என்று அறிவித்தன. அதாவது சசிகலாவின் மன்னார்குடி கும்பல்தான் 91-96 வரையிலான ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு காரணம், ஜெயலலிதா அதை தடுக்க முடியாதபடி கட்டுண்டு கிடந்தார் என்றுதான் அவர்கள் சித்தரித்தார்கள்.
பின்னர் தேர்தலில் படுதோல்வியுற்று புறக்கணிப்ப்பட்ட காலத்தில் இந்த பார்ப்பன கிச்சன் காபினெட் சசிகலாவை மட்டும் குறிவைத்து தனிமைப்படுத்தின. அதற்கு தோதாக அப்போது இதே போல சசிகலாவை நீக்கியதாக ஜெயா அறிவித்தார். பின்னர் சேர்ந்து கொண்டார். 2001இல் ஆட்சிக்கு வந்த போதும் பார்ப்பன ஊடகங்கள் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஓதிக்கொண்டே வந்தன. அப்போதும் இதே போன்று நாடகம் நடந்தது. இடையில் பிரிந்து போன ஜெயா பின்னர் சசிகலாவுடன் சேர்ந்து கொண்டார்.
இப்போது 2011இல் ஜெயா ஆட்சியைப் பிடித்த பிறகும் பார்ப்பன ஊடகங்கள் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்கு “மன்னார்குடி மாஃபியாவை” நீக்குமாறு விரும்பின. ஒரு வேளை அப்படி முற்றிலும் விலக்காவிட்டாலும் ஆட்சி அதிகார அமைப்புகளிலிருந்து அவர்களை தள்ளி வைக்கமாறு கோரின. துக்ளக் சோ இது குறித்து பலமுறை புலம்பியிருக்கிறார். தற்போது சசிகலா நீக்கத்திற்காக ஜெயாவுக்கு பாராட்டுமழை பொழிந்திருக்கும் சு.சாமி மாமாவும் அப்படித்தான் அடிக்கடி பேசி வந்தார். மன்னார்குடி மாஃபியா என்ற வார்த்தையே சு.சாமி அறிமுகப்படுத்திய ஒன்று.
இப்போது ஆட்சியில் அசுரபல பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.க அரசை மன்னார்குடி கும்பல்தான் கட்டுப்படுத்துகிறது, தலைமை செயலகத்தில் சசிகலாவின் பினாமியான பன்னீர்செல்வம் என்ற அதிகாரிதான் உண்மையான தலைமை செயலாளராக ஆட்சியை, அதிகாரிகளை தீர்மானிக்கிறார், இதனால் பல நல்ல அதிகாரிகள் அதிருப்தி அடைந்து மத்திய அரசு வேலைகளுக்கு மாற்றுமாறு கோரினர், அமைச்சர்கள் – அதிகாரிகள் அனைவரும் சசிகலா கும்பலின் விருப்பத்தின்படியே நடந்து கொண்டனர், இறுதியில் பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்து ஜெயா ஆட்சியை இழந்தால் யாரை கொண்டுவருவது, அதற்கு சசிகலா செய்து வந்த முயற்சிகள் உளவுத்துறை மூலம் ஜெயாவுக்கு வந்து அவர் கோபம் அடைந்தார் முதலான பல செய்திகள் கிசுகிசு பாணியில் பார்ப்பன ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.
இவற்றில் உண்மை இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால் சசிகலாவின் நட்புதான் ஜெயாவின் எல்லா தவறுகளுக்கும் அடிப்படை காரணமென்று பார்ப்பன ஊடகங்கள் சித்தரிக்கும் சதிதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அரசியலாகும்.
இந்த ஆட்சியிலேயே ஜெயா கொண்டு வந்துள்ள தலைமைச் செயலக இட மாற்றம், அண்ணா நூலக இட மாற்றம், சமச்சீர்கல்வியை தடை செய்ய உச்சநீதிமன்றம் வரை சென்றும், பழையை பாடபுத்தகங்களை அச்சிட்டும் செய்த வக்கிர செலவு, மக்கள் நலப் பணியாளர்களை நீக்கியது, ஈழத்தாயாக வேடம் போட்டு பின்னர் மூவர் தூக்கை உறுதி செய்தது, கூடங்குளத்தில் போராடும் மக்களை ஆதரிப்பது போல பின்னர் எதிர்த்தது, பால் விலை, பேருந்து கட்டண உயர்வை அதிரடியாக உயர்த்தியது என்று ஏகப்பட்ட பாசிச தர்பாரை நாம் அன்றாடம் தரிசித்து வருகிறோம்.
இந்த பாசிச தர்பாருக்கும் சசிகலா நட்புக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. இவையெல்லாம் பாசிச ஜெயா அவரளவிலேயே தனிப்பட்ட முறையிலேயே செய்த காட்டு தர்பார் நடவடிக்கைகள். இப்போது விடுங்கள், முந்தைய ஆட்சியில் கரசேவைக்கு ஆளனுப்பியது, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை அச்சுறுத்தியது, ஆடு கோழி பலி தடைச்சட்டம் கொண்டு வந்து சூத்திர-பஞ்சம மக்களை பார்ப்பனியமயமாக்க முயன்றது, ஈழம் என்று பேசுபவரை தடா,பொடாவில் உள்ளே தள்ளி கொடுமைப்படுத்தியது, ஆர்.எஸ்.எஸ் போற்றும் நடவடிக்கைகளை மனங்குளிரச் செய்தது, சாலைப்பணியாளர் நீக்கம், ஒரிரவில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது முதலான நடவடிக்கைகள் காட்டுவது என்ன?
இவையெல்லாம் ஜெயலலிதாவை ஒரு பார்ப்பன பாசிஸ்ட் என்பதுடன் இவையனைத்தம் அவரது முழு விருப்பத்திலிருந்து மட்டுமே பிறந்திருக்கிறது என்பதையம் நாம் புரிந்து கொள்ளலாம். எனில் சசிகலாவின் நட்புக்கு எந்த பங்குமில்லையா என்றால் அப்படி இல்லை.
இதில் ஜெயாவையும் சசிகலாவையும் பிரித்து பார்த்து புரிந்து கொள்வது சரியல்ல. ஏனெனில் அ.தி.மு.க என்றொரு ஓட்டுப் பொறுக்கி கட்சி, அழகிரி ஃபார்முலாவுக்கு முன்னரேயே கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் அதே ஃபார்முலாவை கண்டுபிடித்து அறிமுகம் செய்த கட்சி, மாவட்ட அளவிலும் உள்ளூர் அளவிலும் சாராய ரவுடிகள், மணல் மாஃபியாக்கள், மதுக்கடை உரிமையாளர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், ரியல் எஸ்டேட்டில் கோடிகளைக் குவிப்பவர்கள் கொண்ட கட்சியை தொடர்ந்து நடத்தவும், காசை வீசி தமது அரசியல் நடவடிக்கைகளை செய்து கொள்ளவும் ஊழல் என்பது அ.தி.மு.கவிற்கு அத்தியாவசியமான ஒன்று.
ஊழல் என்றொரு வஸ்து இல்லாமல் அ.தி.மு.கவோ இல்லை கான்வென்டு சீமாட்டி ஜெயாவோ இல்லை. முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி கும்பல் மட்டும் கொள்ளையடிக்கவில்லை, அவர்களது உள்ளூர் தளபதிகள் அனைவரும் மும்முரமாக கொள்ளையடித்தார்கள். அந்தக் கொள்ளையும் அந்தக் கொள்ளையின் விளைவாக உருவான ஒரு ஒட்டுண்ணிக் கும்பலும்தான் அ.தி.மு.கவின் அஸ்திவாரம்.
90களில் இந்தக் கொள்ளை பாரம்பரிய முறைகளில் நேரடிப் பணம், நேரடி சொத்து குவிப்பு, என்று நடந்த போது ஏற்பட்ட பிரச்சினைகள் இப்போது இல்லை. ஊழல் என்பது ஒரு சூட்கேசில் வைத்து கொடுக்க்கப்படும் பணமாக நடப்பில் இல்லை. அது ஸ்விஸ் வங்கி போன்று தேசங்கடந்தும் ரியல் எஸ்டேட், சுயநிதிக் கல்லூரிகள், சாராய ஆலைகள் என்று சட்டபூர்வமாகவும் மாறிவிட்ட பிறகு பழைய பாணியில் சொத்து சேர்த்து பிடிபடும் நிலைமையில் ஜெயலலிதா இன்று இல்லை.
எனவே ஜெயா சசிகலாவின் நட்பு என்பது உறவுப்பூர்வமாக இருக்கிறது என்பதை விட தொழில் பூர்வமாக, அதிகார பங்கு பூர்வமாக பிணைக்கப்பட்டிருப்பது என்பதுதான் உண்மை. இதில் அவர்களது தனிப்பட்ட உறவு என்பது இத்தகைய மாபெரும் அதிகார சாம்ராஜ்ஜியத்தின் மேல்தான் நடமாடுகிறது என்பது முக்கியம். எனவே இங்கு சசிகலா போய்விட்டார் என்றால் அந்த ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் ஏதோ பங்கு பிரிக்கும் சண்டை நடக்கிறது என்றுதான் பொருளே தவிர மாறாக அங்கு ஊழலே பிரிந்து போய்விட்டது என்பது பாமரத்தனம்.
மேலும் அரசு, சாராய ஆலைகள், தொலைக்காட்சி தொழில் என்று ஏகப்பட்ட முறையில் பிணைக்கப்பட்டிருக்கும் ஜெயா சசிகலா நட்பு என்பது அப்படி ஒரு குழயாடிச் சண்டையால் பிரிந்து போகும் ஒன்றல்ல. அதனால்தான் இதற்கு முன்னர் அவர்கள் அப்படி பிரிந்திருந்தாலும் கூடிய சீக்கிரத்தில் ஒன்று சேர்ந்தார்கள். இந்த ஒன்றுகூடலை சாதித்தது மேற்படி பிரிக்க முடியாதபடி இருக்கும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் நலனை அப்படி கைவிட்டு விட முடியாதபடி இருக்கும் நிர்ப்பந்தம்தான்.
இப்போது சசிகலா நீக்கப்பட்டாலும் விரைவில் அவர் சேர்க்கப்படலாம். ஒருவேளை அப்படி சேராமல் இருக்கும் பட்சத்தில் சொத்து வாரிசுரிமைச் சண்டை நடக்கும். அப்படி ஒரு சண்டை நடக்கும் பட்சத்தில் இருவருக்கும் அது பாதகம் என்பதால் தோழிகள் மீண்டும் இணையவே வாய்ப்பிருக்கிறது. மேலும் பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டாலும் அவரது பினாமி மூலம் ஆட்சி தொடரும் என்பதோடு தொடர்ந்து அதிகார மையமாக அவரே இருப்பார். அதில் ஏதாவது செய்து ஜெயாவை நீக்கிவிட்டு அ.தி.மு.கவை கைப்பற்றலாம் என்றால் அதற்கு தேவைப்படும் நட்சத்திர முகம் கொண்ட தலைமைக்கு பொருத்தமாக சசிகலா கும்பலிடம் யாருமில்லை. இப்படியாக ஜெயா சசிகலா நட்பு என்பது யாரும் பிரிக்க முடியாதபடி சேர்ந்திருக்கிறது.
அடுத்து ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக சசிகலா மட்டும்தான் ஆட்சியை நடத்தினார், ஊழல் செய்தார் என்பது பச்சையான பொய். இருவரும் அதை மனமொப்பி சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், செய்வார்கள். அதிலும் குறிப்பாக இதில் முடிவு செய்யும் உரிமை பாசிச ஜெயாவிடமே இருக்கிறது. அதற்கு ஆதாரமாகத்தான் இந்த ஆட்சியிலும், இதற்கு முன்னரும் அவர் மேற்கண்ட பாசிச நடவடிக்கைகளை பட்டியல் இட்டோம். இவையெல்லாம் ஜெயா என்றொரு தனிநபர் குறிப்பிட்ட வர்க்க, சாதி, மத பிரிவினரின் நலனுக்காக எடுத்த பாசிச நடவடிக்கைகள். இதில் சசிகலா கும்பல் முடிவெடுத்திருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது.
ஒட்டு மொத்தமாக பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை நியாயப்படுத்துவதற்காகவே பார்ப்பன ஊடங்கள் சசிகலா கும்பலை மட்டும் குறிவைத்து தாக்குகின்றது. மேலும் பார்ப்பன புரோக்கர்கள், பா.ஜ.க முதலான பார்ப்பனியக் கட்சிகளும் சசிகலா கும்பலை வர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் வெறுக்கின்றன. இது புதுப் பணக்காரன் பரம்பரைப் பணக்காரன் மேல் கொண்டிருக்கும் பகையைப் போன்றதுதான். அ.தி.மு.க ஒரு பார்ப்பனியக் கட்சி என்பதோடு தரகு முதலாளிகளின் கட்சி என்ற நிலைக்கு கொண்டுவந்து சாதித்திருப்பவர் ஜெயலிலிதா எனில் அதற்கு பொருத்தமான தொண்டர் குண்டர் ரவுடி படைகளை உருவாக்கி தீனி போட்டு உள்ளூர் தளபதிகளை வைத்து அ.தி.மு.கவின் மக்கள் முகத்திற்கு உருவம்கொடுத்தது சசிகலா கும்பல்தான்.
இப்படித்தான் இரண்டின் நலனும் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைத்திருக்கின்றன. இதில் சசிகலாவை தவிர்த்து மற்ற ஊழல் தளபதிகளை நீக்குமாறு பார்ப்பன ஊடகங்கள் கோரவில்லை. ஏனெனில் அந்த் தளபதிகளெல்லாம் அம்மா காட்டும் திசையில் ஐந்தடி பள்ளத்தில் விழுந்து வணங்கக் கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. இடையில் சசிகலா கும்பல் புரட்சித்தலைவியன் கிச்சன் காபினெட்டாக இருப்பதுதான் அவர்களுடைய கவலை. அதனால்தான் மன்னார்குடி கும்பலை தூக்கி எறிந்து விட்டு பார்ப்பனர்களின் கிச்சன் காபினெட்டை திணிக்க அவர்கள் துடிக்கிறார்கள்.
அதன் பொருட்டே சசிகலா நீக்கத்தை அவர்கள் விண்ணதிர கொண்டாடி மகிழ்கிறார்கள். இதன் மூலம் பாசிச ஜெயாவின் குற்றங்களுக்கு அவர் காரணமில்லை என்று சொல்வதன்மூலம் அவரது காட்டு தர்பார் நடவடிக்களை தொடருவதற்கு மக்களிடையே ஒரு நல்லெண்ணப் பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறார்கள். பார்ப்பன ஊடகங்களின் இந்த சதியை நாம் புரிந்துகொள்வதோடு முறியடிப்பதும் அவசியம்.ஃ
நம்மைப்பொறுத்த வரை ஜெயா சசிகலா கும்பல் என்பது ஜெயாவின் தலைமையில் இயங்கக்கூடிய ஒரு பாசிச கும்பல்தான். ஒட்டு மொத்தமாக இந்த கும்பலை தூக்கி ஏறிவதுதான் நமது கடமையாக இருக்க வேண்டுமே அன்றி நல்ல பாம்புகளுக்கிடையே கெட்ட பாம்பு, ‘நல்ல பாம்பு’ என்று தேடுவது அறிவீனம். அப்படி தேடச்சொல்லி தமது நலனை நியாயப்படுத்தும் பார்ப்பன ஊடகங்களை பலரும் புரிந்து கொள்ளவில்லை.
அரசியல் என்றால் அதை ஒரு கிசுகிசு நடவடிக்கைகள் போல கற்றுத்தரும் இந்த ஊடகங்களின் செல்வாக்கிலிருந்து நாம் விடுபடுவதும், மக்கள் நலனிலிருந்து அரசியல் என்றால் என்னவென்று புரிந்து கொள்வதும்தான் இந்த பிரச்சினையை புரிந்து கொள்ள உதவும். பதிவுலகில் பலரும் இதை ஒரு கிசுகிசு நடவடிக்கையாக பேசி விவாதிப்பது பலன்தராது. மாறாக பார்ப்பன ஊடகங்களின் பிரச்சாரத்தை மறைமுகமாக ஏற்றுக் கொள்வதாகவே அவை மாறும்.

விழித்துக் கொண்டார் ஜெ விரட்டப்பட்டார் சசிகலா


உடன் பிறவாச் சகோதரி சசிகலா உட்பட 14 பேரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் ஜெயலலிதா இப்படி ஒரு அதிர்ச்சியைக் கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதாவின் நிழல் போல கடந்த 20 வருடங்களாகச் செயற்பட்டு வந்த சசிகலாவுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
அரசியல் தலைவர்களினால் சம்பாதித்த நல்ல பெயரை அவர்களது வாரிசுகள் சந்தி சிரிக்க வைப்பதே வழøயான சம்பவம் ஆனால் ஜெயலலிதாவின் வாழ்வில் இது நேர்மாறாக நடந்துள்ளது. சசிகலாவும் அவரது பரிவாரங்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் போயஸ் கார்டனிலும் ஆடிய ஆட்டத்தால் பொசுங்கிப்போன எம்.ஜி.ஆர். விசுவாசிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறி இன்னொரு அரசியல் கட்சியில் சேர்ந்தனர். இன்னும் சிலர் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அழகிரியின் பெயர்தான் அதிகம் அடிபட்டது. அழகிரியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று மக்கள் குமுறினார்கள். நான் முதல்வரானதும் அழகிரியிடமிருந்து மதுரையை மீட்பேன் என்று ஜெயலலிதா சபதமிட்டார். அழகிரியின் கட்டுப்பாட்டில் இருந்து மதுரையை மீட்டார். கருணாநிதியால் செய்ய முடியாததை ஜெயலலிதா செய்து காட்டினார். அழகிரியைக் கருணாநிதி அடக்கி வைத்திருந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் நேரான பாதையில் சென்றிருக்கும்.
ஸ்டாலின், அழகிரி, கருணாநிதி அபிமானிகள் என திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்துள்ளது. அன்புமணியின் பின்னால் நிற்பவர்கள் தவிர பாட்டாளி மக்கள் கட்சியில் நீடிக்கமுடியும். தமிழக காங்கிரஸில் எத்தனை கோஷ்டி இருக்கிறöதன்று தலைவி சோனியாவுக்கே தெரியாது. மாவட்டம் தோறும் கோஷ்டிகள் உண்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதாவின் விசுவாசிகள் மட்டுமே நீடிக்கலாம். அதுவும் எத்தனை நாட்கள் என்று சரியாக கணிப்பிடற முடியாது. புதிய பதவிக்கு ஒருவரை ஜெயலலிதா நியமிப்பார். அடுத்த நொடியே அவர் தூக்கி எறியப்படுவார். எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் வெளியேற்றப்பட்டார்கள். சசிகலாவின் வட்டத்துக்குள் இருப்பவர்கள் மட்டும் பதவியில் நீடித்தார்கள். இந்த உண்மை ஜெயலலிதாவுக்குத் தெரியவந்ததும் சசிகலா உட்பட 14 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
கட்சித் தலைவர் அவரின் பிள்ளைகள் இரண்டாம் கட்டத் தலைவரின் பிள்ளைகள், மாவட்ட செயலாளர்களின் வாரிசுகள் இவர்களின் உறவினர்கள் ஆகியோரின் ஆதிக்கமே அரசியல் கட்சிகளுக்குள் உள்ளன. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இந்தத் தொல்லைகள் இல்லை. சசிகலாவின் கையே அங்கு மேலோங்கி இருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகமானோர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோகமாக வெற்றி பெற்றதற்கு வேட்பாளர்கள் முக்கிய காரணமல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் செய்த மாபெரும் தவறினாலேதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றது.


சசிகலாவையும் அவருடைய உறவினர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கான உண்மையான காரணத்தை ஜெயலலிதா வெளியிடவில்லை. பெங்களூரில் நடைபெறும் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியானால் யாரை முதல்வராக்குவது, உளவுத்துறையின் அறிக்கைகள் ஜெயலலிதாவின் பார்வைக்கு நேரடியாக சமர்பிக்கப்படுவதில்லை. சசிகலா பார்வையிட்டு கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் பாதகமான அறிக்கைகள் கிடப்பில் போடப்படுகின்றன. சசிகலாவுக்கு நெருக்கமானவர்களின் தவறுகள் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பப்படுவதில்லை போன்ற காரணங்களினால் சசிகலா விரட்டப்பட்ட செய்திகள் உலா வருகின்றன.
மக்கள் எதிர்பார்க்கும் நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஜெயலலிதா தயாராக இருந்ததாகவும் சசிகலா அதற்கு தடையாக இருந்தார். அத்துடன் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியாது அதிகாரிகள் தவித்தனர். பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுபோல இது பற்றி ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தது யார் என்ற கேள்விக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சோ, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆகிய இருவரின் பெயர் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதாவின் பிரசாரங்களை வீடியோவாகத் தயாரிப்பதற்காக அன்றை ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மூலம் அறிமுகமானவர் சசிகலா. அவருடைய நிறுவனம் ஜெயலலிதா பிரபல்யமாவதற்கு உதவியது. அந்த நன்றிக் கடனுக்காக தன் அருகிலே சசிகலாவை வைத்து அழகுபார்த்தார் ஜெயலலிதா. அதிக நெருக்கமும் அளவுக்கு மீறிய அதிகாரத் துஷ்பிரயோகமும் அன்புச் சகோதரி ஜெயலலிதாவிடமிருந்து சசிகலாவைப் பிரித்துவிட்டது.
சசிகலா, சசிகலாவின் கணவர் எம். நடராஜும், நடராஜனின் தம்பி எம். ராமச்சந்திரன், சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ், சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன்கள் டிவி.மகாதேவன், தங்கமணில, சசிகலாவின் அக்காவின் மகன் டி.டி.வி. தினகரன், அவருடைய தம்பி சுதாகரன் இவரையே தனது தத்துப் பிள்ளையென ஜெயலலிதா அறிவித்தார். நடராஜனின் தம்பியின் மகன் கணக குலோதுங்கன், ராஜராஜன், சசிகலாவின் தம்பி திவாகழரன், சசிகலாவின் சித்தப்பாவின் மருமகன் ராவணர் ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஆவர்.
சசிகலாவுடனும் ஏனைய பதின்மூன்று பேருடனும் நெருங்கிய தொடர்புடையவர்களை பற்றிய அறிக்கையை தயாரிதக்கப்படுகிறது. அவர்களின் செல்வாக்கினால் அமைச்சர்களானவர்கள் நீக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜெயா ரி.வி. யிலும் சசிகலா குழுவின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. டி.வி.டி. தினகரனின் மனைவி அனுராதாதான் ஜெயா ரி.வி. யின் நிர்வாகப் பொறுப்பாளராக இருக்கிறார். சன் ரீ.வி. கலைஞர் ரீ.வி. ஆகியவற்றுக்குப் போட்டியாகாத? நிலையில் முடங்கிப் போயுள்ளது ஜெயா ரீ.வி. ஆகையினால் ஜெயா ரீ.வி. யிலும் அதிரடி மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் சில புலனாய்வுப் பத்திரிகைகள் சசிகலாவைப் பற்றிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தன. அவற்றைப் படித்திருந்தால் இப்படிப்பட்ட நடவடிக்கையை ஜெயலலிதா முன்னதாகவே செய்திருப்பார். 1991 ஆம் ஆண்டு தன் உடன் பிறவாச் சகோதரி சசிகலாவை விரட்டினார் ஜெயலலிதா. மூன்று மாதங்களில் மீண்டும் பூரண கும்பம்? வைத்து சசிகலாவை வரவேற்றார். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்பது ஜெயலலிதாவின் பொன்மொழி.

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

ச‌சிகலா பெயரை சொ‌ன்னாலே.... அ‌திரு‌ம் அ‌.‌தி.மு.க.‌வின‌ர்

WD
ச‌சிகலா உற‌வின‌ர் க‌லியபெருமா‌ள் உ‌ள்பட இர‌ண்டு பேரை இ‌ன்று க‌ட்‌‌சி‌யி‌ல் இரு‌ந்து அ‌திரடியாக ‌நீ‌க்‌கியு‌ள்ளா‌ர். அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌‌ரு‌ம், முதலமை‌ச்சருமான ஜெயல‌‌லிதா.

யாரு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்காத வகை‌யி‌ல் தனது உ‌யி‌ர்‌த்தோ‌ழியான ச‌‌சிகலா, அவரது கணவ‌ர் நடராஜ‌ன் உ‌ள்பட 14 பேரை க‌ட்‌சி‌யி‌‌ன் அடி‌ப்படை உறு‌ப்‌பின‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து அ‌ண்மை‌‌யி‌ல் ஜெயல‌லிதா ‌நீ‌க்‌கியது ‌த‌மிழக அர‌சிய‌லி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியது.

கட‌ந்த 19ஆ‌ம் தே‌தி ச‌சிகலாவுக்கு எ‌திரான தனது அ‌திரடி நடவடி‌க்கையை இ‌ன்று வரை தொட‌ர்‌ந்து வரு‌கிறா‌ர் ஜெயல‌‌லிதா. ச‌சிகலா‌வி‌ன் உற‌வின‌ர் க‌லியபெருமா‌ள், பழ‌னிவே‌ல் ஆ‌‌‌கியோரை இ‌ன்று க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்‌கியு‌ள்ள முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா, அவ‌ர்களுட‌ன் க‌ட்‌சி உறு‌‌ப்‌பின‌ர்க‌ள் யாரு‌ம் தொட‌ர்பு வை‌த்து‌க் கொ‌ள்ள கூடாது எ‌ன்று க‌‌ண்டி‌ப்பான உ‌த்தரவை ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர்.

பெ‌ங்களூரு‌‌வி‌ல் நட‌ந்து வ‌ரு‌ம் வருமான‌த்து‌க்கு அ‌திகமாக சொ‌‌த்து சே‌ர்‌த்த வழ‌க்‌கி‌ல் ஜெய‌ல‌லிதாவு‌க்கு த‌ண்டனை ‌கிடை‌ப்பது உறு‌தியானா‌ல் முதலமை‌ச்ச‌ர் பத‌வியை தனது உற‌வின‌ர் அ‌ல்லது தன‌க்கு வே‌ண்டியவ‌ர்களு‌க்கு கொடு‌த்து‌விடலா‌ம் எ‌ன்ற ‌நினை‌ப்‌பி‌ல் கா‌ய் நக‌ர்‌த்‌தி வ‌ந்த ச‌சிகலா, அவரது கணவ‌ர் நடராஜ‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் த‌ந்‌திர‌ம் ஜெயல‌லிதாவு‌க்கு தெ‌‌ரியவரவே இ‌ந்த அ‌திரடி நடவடி‌க்கையை எடு‌த்து‌ள்ளா‌ர்.

க‌ட்‌‌சி‌யி‌ல் ம‌ட்டு‌மி‌ன்‌றி ஆ‌ட்‌சி அ‌திகா‌ர‌த்‌திலு‌ம் ப‌கிர‌ங்கமாக தலை‌யி‌ட்ட ச‌சிகலா, த‌ற்போது போய‌ஸ் தோ‌ட்ட‌த்த‌ி‌ல் இரு‌ந்தே ‌விர‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். ச‌சிகலாவு‌க்கு ஆதரவாக செய‌ல்ப‌ட்டவ‌ர்க‌ள் ப‌ட்டியலை த‌ற்போது தயா‌ரி‌த்து வரு‌ம் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா, ச‌சிகலா‌வி‌ன் உற‌வின‌ர்களை முத‌லி‌ல் களையெடு‌த்து வரு‌கிறா‌ர்.

முத‌ல் க‌ட்டமாக ச‌சிகலா உ‌ள்பட 14 பேரை க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து‌ ‌நீ‌க்‌கிய ஜெயல‌லிதா, சசிகலாவினஅண்ணி இளவரசி, அவரதசம்பந்தி கலியபெருமாள், டிடிவி தினகரனினமனைவி அனுராதஆகியோரமட்டுமநீக்கப்படாமலஇருந்தனர். இந்த நிலையிலதற்போதகலியபெருமாளையுமஅ.தி.மு.க.விலஇருந்து ஜெயலலிதநீக்கியுள்ளார்.

ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா



அதிமுகவிலும் சரி, ஆட்சியிலும் சரி ஆரம்பம் முதலே சசிகலா நந்தியாக மாறி பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தபோதும் பொறுமையாக இருந்த ஜெயலலிதா, சமீப காலமாக தனது ஆட்சிக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கியதும், சீர்குலைவு நடவடிக்கைகளை முடுக்கி விட்டதாலும்தான் பொறுக்க முடியாமல் சசிகலா கும்பலை அதிமுகவை விட்டு தூக்கி விட்டதாக கூறப்படுகிறது.
1991ம் ஆண்டுக்கு முன்பு போக வேண்டும் ஜெயலலிதா, சசிகலா இடையிலான நட்பை அறிந்து கொள்ள. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்தபோது அவருக்கு சாதாரண முறையில்தான் அறிமுகமானார் சசிகலா.
ஆணாதிக்கம் மிக்க அரசியல் துறையில், உற்ற தோழியாக சசிகலா வந்ததாலும், தன்னைப் புரிந்து கொண்டு நடந்ததாலும் சசிகலாவை தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. சசிகலாவும், ஜெயலலிதாவின் மனதறிந்து அவருக்கு உற்ற தோழியாக நடந்து கொண்டார். இந்த நட்பு நாளுக்கு நாள் இறுகி இணை பிரியாத தோழிகளாக ஜெயலலிதாவும், சசிகலாவும் மாறிப் போயினர். நாளடைவில் ஜெயலலிதாவின் உதவியாளராக உருவெடுத்தார் சசிகலா. மேலும் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது அறிவுரை கூறும் அளவுக்கும் அவர் மாறினார்.
1991ம் ஆண்டுதான் சசிகலாவின் விஸ்வரூபம் வெளிப்பட்டது. ஆட்சியிலும், கட்சியிலும் சசிகலா ஒரு முக்கிய அதிகார மையமாக உருவெடுத்தார். 91 முதல் 96 வரை நடந்த முதலாவது ஜெயலலிதா ஆட்சியின்போது சசிகலாவைத் தாண்டித்தான் காற்றாக இருந்தாலும் கூட ஜெயலலிதாவை சென்றடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
சர்வ வல்லமை படைத்த அதிகார மையமாக மாறிய சசிகலா படிப்படியாக தனது குடும்பத்தினரையும் ஒவ்வொருவராக கட்சிக்குள் இழுத்து வந்தார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்காக தனது கணவர் நடராஜனைக் கூட உதறித் தள்ளத் துணிந்தார். பல ஆண்டுகளாகி விட்டது சசிகலாவும் நடராஜனும் பிரிந்து (இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்திப்பதுண்டு என்ற தகவலும் உண்டு).
ஜெயலலிதாவின் வலது கரமாகவும், இடதுகரமாகவும் மாறிப் போனதால் சசிகலா வைத்ததே சட்டம் என்ற நிலை கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் உண்டாகி விட்டது.
சசிகலாவின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அவரது அக்காள் மகன்களான சுதாகரன், திவாகரன், பாஸ்கரன் ஆகியோர் அதிமுகவில் தலை தூக்கினர். உறவினர்களான அக்காள் கணவர் விவேகானந்தன்,டாக்டர் வெங்கடேஷ், ராவணன் உள்ளிட்டோரும் அதிகார மையங்களாகினர்.
அதிமுகவில் ஏதாவது நடக்க வேண்டும் என்றால் இவர்களில் யாரையாவது ஒருவரைப் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு அதிமுகவினர் தள்ளப்பட்டனர். இந்த மன்னார்குடி வகையறாவின் ஆதிக்கத்தால், ஆளுமையால் பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு ஒதுங்கிச் சென்றனர், பலர் தூக்கியடிக்கப்பட்னர் – முத்துசாமி போல.
தற்போதைய கதைக்கு வருவோம். ஜெயலலிதாவின் 3வது ஆட்சி தொடங்கிய கடந்த 6 மாதங்களில் சசிகலாவின் ஆதிக்கமும், ஆட்டமும் கட்சிக்குள் அதிகரித்து விட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. மேலும் ஆட்சியிலும் அவர் பெருமளவில் தலையிடுகிறார் என்ற புகார்களும் கிளம்பின.
தனக்கு வேண்டியவர்களை முக்கியப் பதவிகளில் அமர்த்தினார் சசிகலா. அதேபோல அமைச்சர்கள் நியமனத்திலும் அவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. இடமாறுதல்கள் உள்ளிட்டவற்றிலும் பெரிய அளவில் விளையாடினார் சசி என்பது இன்னொரு குற்றச்சாட்டு.
இந்த குழப்பத்தால்தான் ஜெயலலிதாவின் இந்த ஆறு மாத கால ஆட்சியில் பல அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைச் செயலாளர்கள், பல அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு ஆட்சிக்கும், கட்சிக்கும் பெரும் கெட்ட பெயர் ஏற்படுத்த காரணமாகி விட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக உளவுத்துறை ஐஜியாக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் நியமனமும், இடமாற்றமும் ஒரு முக்கிய உதாரணமாக கூறப்படுகிறது. இவர் சசிகலாவுக்கு மிகவும் நெருங்கியவர். இதனால்தான் அந்தப் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவரது செயல்பாடுகள் ஜெயலலிதாவுக்குப் பிடிக்காததால் அதிரடியாக அந்தப் பதவியிலிருந்து தூக்கினார் ஜெயலலிதா. இது சசிகலாவுக்கு முதல் ஷாக் என்கிறார்கள்.
உளவுத்துறை தகவல்களை தன்னிடம் நேரடியாக கொடுக்காமல் சசிகலாவிடம் போய் பொன் மாணிக்கவேல் தொடர்ந்து கொடுத்து வந்ததாகவும், இதனால்தான் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, பொன் மாணிக்கவேலை தூக்கினார் என்றும் கூறுகிறார்கள்.
அதேபோல நடராஜனுக்கு மிகவும் நெருக்கமானவரான ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தையும் அதிரடியாக, அவருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் பொறுப்பிலிருந்து தூக்கி 2வது ஷாக்கைக் கொடுத்தார் ஜெயலலிதா.
இப்படி அடுத்தடுத்து சசிகலாவுக்கு ஆப்பு வைத்தார் ஜெயலலிதா. இதன் பிறகாவது அவர் ஆட்சியில் தலையிடுவதை நிறுத்துவார் என்பதுதான் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு.
ஆனால் ஜெயலலிதாவே எதிர்பாராத வகையில் சசிகலா தரப்பின் சதிச் செயல்கள் இருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை வைத்து ஆட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவது, பின்னர் தங்களுக்குச் சாதகமாக எம்.எல்.ஏக்களை வளைத்து கட்சியைக் கைப்பற்றுவது என்ற திட்டமும் தீட்டப்பட்டதாக ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் வழக்கம் போல ஜெயலலிதாவின் விசுவாசி ஓ.பன்னீர் செல்வம் போன்றவர்கள் பதவிக்கு வந்து விடாமல் தடுத்து நடராஜனை முதல்வராக்கும் மிகப் பெரிய திட்டமும் சசிகலா தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்திற்குப் போனதால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்தே சசிகலாவை நீக்கும் அதிரடி முடிவுக்கு அவர் வந்ததாக கூறுகிறார்கள்.
இதை விட இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.
டெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசுகிறார்கள்.
நந்தி போல சசிகலா உட்கார்ந்து கொண்டு இருந்ததால் ஜெயலலிதாவின் நிழலைக் கூட அணுக முடியாமல் இருந்த அதிமுகவினரும், தலைவர்களும், விசுவாசிகளும் சசிகலாவின் நீக்கச் செய்தியால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இனிமேலாவது முதல்வரை நேரில் பார்க்க முடியும், அதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
இருப்பினும் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
எனவே இன்றைய நீக்கம் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு!



மதுரை :
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன் திட்டமிட்டிருந்தார். மேலும், கமுதி அருகே கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவும் முடிவு செய்திருந்தார். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், ஜான் பாண்டியனை தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் பரமக்குடியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்ட தமிழக அரசு, பலியானோரின் குடும்பத்தினரு க்கு ஸீ1 லட்சம் வழங்கியது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வக்கீல் முருகன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் குரு விஜயன், சட்டக்கல்லூரி மாணவர் செல்வம், தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சங்கச் செயலாளர் செல்வகுமார் உள்பட 10 பேர் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். மேலும் வக்கீல் புகழேந்தி என்பவர், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த 11 மனுக்களையும் நீதிபதிகள் கே.என். பாஷா, என். வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர்.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பிரசாத், சங்கர சுப்பு, ரத்தினம், தாளை முத்தரசு, பிரபு ராஜதுரை, லஜபதிராய், ரஜினி, ஆர்.வெங்கடேஷன், ஷாஜி செல்லன் ஆஜராகினர். இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில்Ô பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பான புகார்கள் உட்பட அனைத்து ஆவணங்களை யும் போலீசார் 10 நாட்களுக்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரி ஒருவரை சிபிஐ இணை இயக்குநர் நியமித்து விசாரணையைத் தொடங்க வேண்டும். சிபிஐ உயர் அதிகாரி விசாரணையை மேற்பார்வையிட வேண்டும். சிபிஐ விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்பை அரசு வழங்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கவும்,
இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், நிவாரணம் கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு அரசு செலவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய தேவையில்லை. சஸ்பெண்ட் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு


மதுரை : பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன் திட்டமிட்டிருந்தார். மேலும், கமுதி அருகே கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவும் முடிவு செய்திருந்தார். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், ஜான் பாண்டியனை தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் கைது செய்தனர்.

இதைக் கண்டித்து ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் பரமக்குடியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்ட தமிழக அரசு, பலியானோரின் குடும்பத்தினரு க்கு ஸீ1 லட்சம் வழங்கியது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வக்கீல் முருகன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் குரு விஜயன், சட்டக்கல்லூரி மாணவர் செல்வம், தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சங்கச் செயலாளர் செல்வகுமார் உள்பட 10 பேர் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். மேலும் வக்கீல் புகழேந்தி என்பவர், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த 11 மனுக்களையும் நீதிபதிகள் கே.என். பாஷா, என். வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர்.

மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பிரசாத், சங்கர சுப்பு, ரத்தினம், தாளை முத்தரசு, பிரபு ராஜதுரை, லஜபதிராய், ரஜினி, ஆர்.வெங்கடேஷன், ஷாஜி செல்லன் ஆஜராகினர். இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில்Ô பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பான புகார்கள் உட்பட அனைத்து ஆவணங்களை யும் போலீசார் 10 நாட்களுக்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.

வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரி ஒருவரை சிபிஐ இணை இயக்குநர் நியமித்து விசாரணையைத் தொடங்க வேண்டும். சிபிஐ உயர் அதிகாரி விசாரணையை மேற்பார்வையிட வேண்டும். சிபிஐ விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்பை அரசு வழங்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கவும்,

இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், நிவாரணம் கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு அரசு செலவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய தேவையில்லை. சஸ்பெண்ட் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதன், 21 டிசம்பர், 2011

செப் -11 பரமக்குடி,மதுரை, இளையாங்குடி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக அணிதிரள்வோம்!

சாதீ -- வெண்மணிப் படுகொலைகளுக்கு முன்பிருந்து இரத்த வெறியுடன் தனது கோரமான ஆதிக்க வெறியுடன் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. 1957,செப்-11 அன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் படுகொலையின் அதிர்வுகள் முதுகுளத்தூர் கலவரம் என அறியப்பட்டு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தியாகி இமானுவேல் சேகரனின் 50 ஆம் ஆண்டு படுகொலை நாளைத் தொடர்ந்து தேவேந்திர சமூகத்தினர் மத்தியில் எழுச்சி உருவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் எனத் திட்டமிட்ட படுகொலை வீரம்பல் வின்சென்ட் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் செப்-10அன்று இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், மண்டலமாணிக்கம், பள்ளபச்சேரியைச் சேர்ந்த 11ஆவது படிக்கும் 16 வயது மாணவன் பழனிக்குமார் ஈவிரக்கமின்றி சாதி வெறியர்களால் கொல்லப்பட்டிருக்கிறார். சாதிய வன்மமும், ஆதிக்க வெறியும் தாழ்த்தப்பட்ட இளம் மாணவனின் உயிரைப் பலிவாங்கியுள்ளது. இது தொடரலாமா?


செப்-11, பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடம் நோக்கி ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்த பல்வேறு இயக்கங்கள், தேவேந்திர குல சமூக மக்கள் அலை அலையாக வருவது அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிந்த சங்கதி. தியாகி இமானுவேல் சேகரன் 54 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி செப் - 11 அன்று பரமக்குடி நோக்கித் தாழ்த்தப்பட்ட மக்கள் கூட்டம், கூட்டமாக அஞ்சலி செலுத்தி வந்தனர். செப் - 9, அன்று நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்ட பழனிக்குமார் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு, பரமக்குடி செல்லலாம் என நெல்லையிலிருந்து கிளம்பிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை தூத்துக்குடி மாவட்ட எல்லையான வல்ல நாட்டில் தடுத்துக் காவல்துறை கைது செய்தது. அவர் போனால் பிரச்சனை பெரிதாகி விடுமாம்! கைது செய்தால் எதிர்ப்பு உருவாகாதா? ஜான்பாண்டியன் கைதுச் செய்தி பரமக்குடிக்குப் பரவியவுடன், பரமக்குடி ஐந்துமுக்கு சந்திப்பில் மறியல் தொடங்கியது. நடக்காதா? அரசும், காவல்துறையும் இதை எதிர்பார்த்துத்தானே ஜான்பாண்டியன் அவர்களைக் கைது செய்தது. மறியலில் கூட்டம் சேரக் காத்திருந்த காவல்துறை அதிகாரிகள் தங்களது குரூரத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிலும், காவல்துறைத் தாக்குதலிலும் 6 பேர் இறந்துள்ளனர். தலையில் குண்டுக் காயத்துடன் ஒருவர் மதுரை மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டுள்ளார். மதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், இளையாங்குடி மருத்துவமனைகளில் கடுமையான காயங்களுடன் சிலநூறு பேர் சேர்க்கப்பட்டனர். மதியம் அஞ்சலிக்கு வருவதாக இருந்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல்ராசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உட்பட பல்வேறு தலைவர்களின் தலைமையில் வந்தவர்கள் வழியிலேயே தடுக்கப்பட்டுள்ளனர். இதைச் செய்வதுதான் அரசின் நோக்கம் போல. வருகிற வழியில் வண்டிகளில் வந்தவர்கள் திருப்பி விடப்பட்டுள்ளனர்.

மதுரை, சிந்தாமணி அருகில் வேனில் வந்த பாட்டம் கிராமத்தினரை பரமக்குடி செல்ல அனுமதி மறுத்த காவல்துறை, பிரச்சனைகளை உருவாக்கித் தற்காப்பு எனும் பெயரில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். துப்பாக்கியால் சுட்ட அவனியாபுரம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தானும் தாக்கப்பட்டதாக தனியார் மருத்துவமனையில் படுத்து நாடகமாடியுள்ளார். சோழவந்தான் பகுதியிலிருந்து பரமக்குடி சென்ற மண்ணாடிமங்கலம் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட இரண்டு பேர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது காளியம்மாள் எனும் பெண் போலீஸ் புகாரின் பேரில் பெண்களை மானபங்கப்படுத்தியது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது, கொலை முயற்சி, பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். இதே போன்ற பொய் வழக்குகளைத்தான் தி.மு.க அரசின் காவல்துறை தாமிரபரணிப் படுகொலைச் சம்பவத்திலும் புனைந்தது. தி.மு.க ஆட்சி, அ.தி.மு.க ஆட்சிகளில் காவல்துறையின் செயல்பாட்டில் பெரிய வித்தியாசமில்லை.

இளையாங்குடியிலும் பரமக்குடித் துப்பாக்கிச் சூட்டைக் கேள்விப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்ன என்ன சும்மாவா இருப்பார்கள்-? மறியல் செய்த மக்களைக் கலைக்க எனும் பேரில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் +2 படிக்கும் மாணவர் ஒருவருக்கு குண்டு பாய்ந்தது. பலர் காயமுற்றனர்.

ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டால் எதிர்ப்புக் கிளம்பும் என தமிழக அரசுக்கு, காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தெரியாதா? தெரிந்தே செய்துள்ளனர். என்ன அரசியல் உள்நோக்கம்? ஜான்பாண்டியன் கைது செய்யப்படுவது காவல்துறை அமைச்சகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தெரியாதா? அவரின் ஒப்புதல் இல்லாமலா கைதும், துப்பாக்கிச் சூடுகளும் நடந்தது? கலைந்து போக எச்சரிக்கையோ, கண்ணீர்ப் புகையோ, தடியடியோ எதுவுமில்லாமல் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட செயல். யாரைத் திருப்தி செய்வதற்காக இந்தக் குரூரமான கேடு கெட்ட செயலைத் தமிழக அரசின் காவல்துறை நடத்தியது? அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் திட்டமிட்டு பரமக்குடிக்கு அனுப்பப்பட்டது ஏன்? பின்னணி என்ன? துப்பாக்கிச் சூடும், விரட்டி, விரட்டித் தடியடியும் நடத்தி அச்சுறுத்திய தமிழக அரசின் காவல்துறை 1000 பேர் மீது வழக்குப் பதிவு செய்து பரமக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் பல பகுதிகளில் தனது தேடுதல் வேட்டை மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி உள்ளது. வழக்கில் சேர்க்காமல் இருக்க காவல்துறையின் வசூல் வேட்டை நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படாமல், மதுரையிலேயே தனியார் மருத்துவமனைகள் நோக்கி துப்பாக்கிச் சூட்டில், தடியடியில் பலத்த காயம்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்றத்தில் அனைவருக்கும் பொதுவாக விளங்க வேண்டிய ஒரு முதலமைச்சர்” பள்ளபச்சேரியில் முத்துராமலிங்கத் தேவரை அவமதித்து எழுதப்பட்டதுதான் இளைஞன் பழனிக்குமார் படுகொலைக்குக் காரணம் எனவே இது இனக் கலவரம் “ எனப் பகிரங்கமாகப் பேசியுள்ளது சாதி மோதலைத் துண்டுவதாக உள்ளது. காவல்துறையின் அத்து மீறிய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த இனக் கலவரமென்று சித்தரித்தது “ ஜெயலலிதாவின் பார்ப்பன மேல் சாதி வெறிக் குணத்தைக் காட்டுகிறது. மதுரை மாவட்டம், உசிலைம்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ” சிங்கங்கள் உலாவும் இடத்தில் சி-றுத்தைக்கு என்ன வேலை “ எனப் பேசியதற்கும், ஜெயலலிதாவின் சட்டமன்ற விளக்க உரைக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆறு பேரைத் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்த, சிலநூறு பேரைக் காயப்படுத்திய காவல்துறை அதிகாரிகளின் அத்து மீறலை விசாரிக்க மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையாம். எதிர்க் கட்சிகள் வேண்டுகோளுக்குப் பின்னரே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை என அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பார்வையில் பரமக்குடிச் சம்பவமும், இறந்த தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர்களும் துச்சமாகப் பார்க்கப்படுவது மேல் சாதி அதிகாரத் திமிரன்றி வேறென்ன? இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சமும், காயம்பட்டவர்களுக்கு 15,000 என நிவாரணம் அறிவித்தது என்பதும் ‘ஜெ’ யின் பார்ப்பன வக்கிர மனோபாவத்தை வெளிப்படுத்தியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி எனக் காவல்துறை தாக்குதல் நடத்துவதும், படுகொலை செய்வதும் தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகளுக்கிடையில் என்ன வித்தியாசம்? ஓரே அணுகுமுறைதான். ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி எப்போதும் சாதிய வன்மம் கொண்ட அரச பயங்கரவாதத்தால் ஆயுதம் கொண்டே அடக்கப்படும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் எதிரியின் மொழியே நமது மொழியாகும். இது நமது விருப்பமல்ல, தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம். தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் சக்தியாக எழ வேண்டிய அவசியம் உள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு இரையாகாமல் சுயமரியாதைக்காக, சமூக மாற்றத்திற்காக சாதி ஒழிந்த சமதர்மத் தமிழகம் படைக்க ஓரணியில் திரள வேண்டும்.





* ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு, தாக்குதல் நடத்திய தமிழக அரசின் காவல்துறைக்கு எதிராக அணி திரள்வோம்!

* துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்!

* பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்கள் மீது சம்மந்தமில்லாமல் போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு!

* இறந்தவர் குடும்பத்திற்கு ரூ10 இலட்சமும், காயம் பட்டவர்களுக்கு ரூ3 இலட்சமும் வழங்கு! எனத் தமிழக அரசை வலியுறுத்துவோம்!

* 21 ஆம் நூற்றாண்டில், கணினி மூலம் உலகமே விரல் நுனிக்குள் வருகிற, வளர்ந்த சூழலில் சாதிக்கு எதிரான மானுட நேய மனோபாவத்தை உயர்த்திப் பிடிப்போம்!

* காவல்துறை அட்டூழியங்களை கட்டவிழ்த்து விடும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக உழைக்கும் தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் அணி திரள்வோம்!