ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகத்துக்கு தடை


சிங்கள இனவெறியரை மிஞ்சிவிட்ட ஜெயலலிதா அரசின் ஜனநாயக விரோதப்போக்கை வன்மையாக கண்டிப்பதோடு,மீண்டெழும் பாண்டியர் வரலாறு எனும் இந்த நூலில் உள்ள தடையினை உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு அது செய்வேன் இது செய்வேன் என்று புலம்பும் தமிழக அரசு தன் சொந்த மண்ணில் ஜனநாயகத்தை குழி தோண்டிப்புதைத்துள்ளது.எழுத்தாளரின் சுதந்திரத்தைப்பறித்து தமிழர் விரோத ஜனநாயக விரோத பாசிஸ முகத்தைக்காண்பித்துக்கொண்டிருக்கிறது.
மறைந்துபோன அல்லது காட்டிக்கொடுத்து அழிக்கப்பட்ட தமிழர் ராஜ்யத்தை அந்த மண்ணின் மைந்தர்களை தனது அரிய முயற்சியினால் பல,சரித்திர அறிஞர்களின் உதவியுடன் பலமுறை நான்கு ஆராய்ந்து எத்தனையோ அறிஞர் பெருமக்களின் அங்கீகாரத்துடனும் "மீண்டெழும் பாண்டியர் வரலாறு" எனும் கிடைத்ர்க்கரிய சரித்திர நூலை செந்தில் மள்ளர் எனும் சரித்திர ஆய்வாளர் வெளிக்கொணர்ந்திருந்தார்.இந்த நூலை தமிழக அரசு பொய் காரணங்களை கூறி தடை விதித்திருப்பதோடு சிங்கள இன வெறியரைப்போல எழுத்தாளரையும் மிரட்டிவருகிறது .இதுவரை வெளியே யாருக்கும் தெரியாத பல உண்மை இந்த நூலில் சொல்லப்பட்டதே இந்த வரலாற்று நூலுக்கு தடைக்கான காரணம்.தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத ஜனநாயக பாசிச வெறியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக