ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

தேவர் தளத்தில் வெளியிடப்பட்ட ‘அம்பேத்கரும் இம்மானுவேலும்’ கட்டுரைக்கு மறுப்பு



மூலக் கட்டுரை: (அம்பேத்கரும்,இம்மானுவேலும்

எமது மறுப்பு

நண்பர்களே!
    ‘இதுதான் ஆட்டைக் கடித்து, பின்பு மாட்டைக் கடித்து அதன் பின் மனிதனைக் கடிப்பது என்பதுஇந்தக் கட்டுரை எழுதியவருக்கு பொது தளத்தில் எழுதும்போது தேவைப்படும் குறைந்த பட்ச நாகரிகம் கூட இல்லை என்று தெரிகிறது. ஒரு விசயத்தை எழுவதற்கு முன்பு எதையும் யோசிக்காமல் எழுதினால், 
=> ஒன்று அந்த செய்தி அப்பட்டமான உண்மையாக இருக்க வேண்டும். ஏனெனில், அது அனைவரும் உண்மை என உணர்ந்த நடைமுறை விசயமாக இருக்கும். அதை யோசிக்க வேண்டியது இல்லை. அப்படியே எழுதலாம்.
=> அல்லது, ஒரு பொய்கோட்டையைக் கட்டுவதற்கு எந்த அசிங்கம் வந்தாலும் பரவாயில்லை என்ற நிலையில், எந்த வித சொரணையும்  இல்லாமல் தான்தோன்றித்தனமாக எழுதுவதாக இருக்கும்.

     இந்தக் கட்டுரை (அம்பேத்கரும்,இம்மானுவேலும்இரண்டாவது நிலையைச் சார்ந்தது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இப்போது ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்த விசயத்திற்கு வருவோம். இதற்கு முன்பு தேவநேயப் பாவாணர் அவர்களை உங்கள் இனத்தார் என்று கட்டுரை எழுதினீர்கள்.  
(பார்க்க: பாவாணர் யார்?).உங்கள் அறியாமையை நினைத்து நாங்கள் சிரித்துக் கொண்டோம். அதன் பின்பு மள்ளர்-மல்லர் ஓர் ஆய்வு என்ற கட்டுரையைப் பார்த்த போதுதான் நீங்கள் பள்ளர்களின் மாட்சிமை பெற்ற உண்மை வரலாற்றைக் கண்டு, நடுங்கி கலங்குவதை தெரிந்து கொண்டோம்.(பார்க்க: மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு)  ஏனென்றால், அந்தத் தலைப்பின் கீழ் நீங்கள் வெளியிட்ட கட்டுரையைப் படித்த பிற இனத்தைச் சார்ந்த மக்கள் உங்கள் செயலை எண்ணி கேளி பேசி சிரித்திருப்பார்கள். அப்படி இருந்தது அந்தக் கட்டுரைச் செய்தி. அந்த நிலையில், நீங்கள் உண்மை தெரிந்தும், தெரியாதது போல் நடித்திருந்தாலும், உண்மையில் மள்ளன்-மல்லன் என்ற இருவரும் பள்ளரே என்பதை தெளிவாக்கி நாங்கள் பின்னூட்டம் கொடுத்தோம்.(பார்க்க: மள்ளர் மல்லர் ஆய்வு என்ற கட்டுரைக்கு மறுப்பு) நீங்கள் உண்மையிலேயே தைரியமானவர்கள் என்றால், நடுநிலையானவர்கள், ஒரு இனையதளத்தை நடத்துவதற்கு தகுதியானவர்கள் என்றால் அந்தப் பின்னூட்டங்களை வெளியிட்டு இருப்பீர்கள். ஆனால், அதற்கு உங்களுக்குத் தகுதி இல்லை என்று தெரிகிறது. ஆனால், இப்போது அந்த முட்டாள்தனத்தின் தொடர்ச்சியாக உங்களை ‘தேவேந்திரன்என்று சொல்லி அடுத்த அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறீர்கள் 
(பார்க்க: தேவேந்திரன் என்பது தஞ்சாவூர் கள்ளர்களுக்கு உள்ள பட்டம்). இந்த மாதிரி கேவலத்தனமான செயல்கள்தான் உங்கள் இனத்தின் அடையாளம் என்பதை இதன்மூலம் உலகத்திற்கு பறை சாற்றியிருக்கிறீர்கள். பள்ளன்தான் உண்மையான தேவேந்திரன் என்று உங்களுக்குத் தெரியாமல் இல்லை.(பார்க்க: 
பள்ளனே தேவேந்திரன்
பழனி செப்பேடு உணர்த்தும் தெய்வேந்திரர் வரலாறு
) தெரிந்துதான் இப்படி எழுதுகிறீர்கள் என்று எங்களுக்கும் தெரியும். இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களை நீங்கள் வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வெளியிட்டாலும், வெளியிடாவிட்டாலும் உங்களின் இந்தக் கட்டுரையைப் பார்த்து இந்த உலகமே கைகொட்டிச் சிரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை.

      உண்மையில், தேவேந்திரன் என்பவன் யார்? மருதநிலத்தின் தலைமகன். மருதநிலத்தான் யார்? மள்ளன் என்ற பள்ளன். இதை,‘வேந்தன் மேய தீம்புனல் உலகம் என்று தொல்காப்பியர் சுட்டிக் காட்டுகிறார். இதை எந்த வரலாற்று ஆசிரியரும் மறுக்க முடியாது. எனவே, தமிழ்வேந்தர் ஆட்சியில் பள்ளர்தான் வேந்தர்குலத்தார் என்பது உறுதியாகிறது. அப்போது நீங்கள் யார்? எங்கே இருந்தீர்கள்? என்று உணர்ந்து பாருங்கள்.

       நீங்கள் 18 ஆம் நூற்றாண்டில் கள்ளர்களுக்கு தேவேந்திரன் என்ற பட்டம் இருந்ததாக ஒரு முழுப்பொய்யைச் சொல்கிறீர்கள். அதற்கு முன்பே, அந்நியர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூட பள்ளன்தான் தேவேந்திரன் என்பதற்கு எவ்வளவு ஆதாரம் வேண்டும்? 
* கி.பி 1528 ஆம் ஆண்டு காலத்திய பழனிப்பட்டயம், 
* காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு, 
* கரிவலம்வந்த நல்லூர் கோயில் கல்வெட்டு, 
* காமாட்சியம்மன் கோயில் பட்டயம் 
     இன்னும் இதுபோன்று ஏராளம்..ஏராளம். இது சில மாதிரிகள்தான். அரசாங்கத்தின் சாதிப் பட்டியல் நீங்கள் பார்க்கவில்லையா? அதில் தேவேந்திரகுலத்தான் என்று தெளிவாக இருக்கும். இதன்பிறகும், நீங்கள் தேவேந்திரன் என்று சொன்னால் மன்னிக்கவும், நீங்கள் பள்ளனுக்குப் பொறந்தவராக இருக்க வேண்டும். அப்படித்தான் நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்கள்.
      உங்களுக்கு இப்படிப்பட்ட, தமிழ் மன்னர் வாரிசாக உரிமை கொண்டாடுவதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லவே இல்லை என்று சொல்ல முடியும். ஆனால், பிற்காலத்தில் அதாவது, அந்நியர் ஆட்சிகாலத்தில் புதுக்கோட்டை தொண்டைமான் கள்ளர் குலத்தவர் என்பதை மறுக்க முடியாது. எப்படி கள்ளர் குலத்தவர் புதுக்கோட்டை தொண்டைமான் ஆனார்கள்?. ஆதாவது, அதற்கு முன்பு இருந்த உண்மையான தொண்டைமானைக் கொன்றுவிட்டு, ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் தயவால் கள்ளர் தொண்டைமான் மன்னரானார். ஏனென்றால், கள்ளத்தொண்டைமானின் தங்கையை சேதுபதிக்கு இரண்டாம்தாரமாக கள்ளர் கட்டிக்கொடுத்தார்கள். இப்படித்தான் கள்ளர் பிற்காலத்தில் தொண்டைமான் மன்னரானது. இது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மை. உங்களது இனத்தைச் சார்ந்த வரலாற்றார்களே
கள்ளர் என்போர் களப்பிரரா, வடுகரா, முஸ்லீமா, குறும்பரா அல்லது இந்த மூன்றிலிருந்து வந்த கலப்பினமா? என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும்போது, நீங்கள் இதையெல்லாம் மறைத்துவிட்டு, தற்காலத்திய தமிழக அரசு உங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக, உங்களை மள்ளர், மல்லர் மற்றும் தேவேந்திரர் என்று காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்!.

     இதன்மூலம் தேவர்தளத்து நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவெனில், நீங்கள் இனிமேல் தொடர்ந்து இதுபோன்ற கட்டுரையை உங்களது எந்தத் தளத்தில் வெளியிட்டாலும், அங்கே நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களையும் நடுநிலை கொண்டு வெளியிடக் கேட்டுக்கொள்கிறோம். அப்படித் தவறும்பட்சத்தில் அதற்கான மறுப்பை இங்கே நாங்கள் பதிவு செய்வோம். அதனால் அசிங்கப்படப் போவது நீங்கள்தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக