ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்: உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை-தெ இண்டிப்பெண்டண்ட் பத்திரிகை






முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளால் உலகமே அதிர்ச்சியுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என The Independent பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு சந்தைப் பகுதியில் தொலைந்து போன சிறு குழந்தை போல் ஒரு மூலையில் அந்தச் சிறுவன் இருத்தி வைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு ஏதோ சிற்றுண்டி கொறிக்க வழங்கப்பட்டிருக்கின்றது. அவன் நிமிர்ந்து பார்க்கிறான். யாராவது தெரிந்த முகங்கள் தென்படாதா என்ற ஓர் ஏக்கம் அவன் விழிகளில்.



அந்தச் சிறுவன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புதல்வன் பாலச்சந்திரன். 12 வயதுடைய சிறுவன். புதிய ஆதாரப் புகைப்படங்கள் ஒரு நெஞ்சை உருக்கும் கதையைச் சொல்கின்றது.



இந்தச் சிறுவன் போரிலோ அல்லது குறுக்குச் சூடுகளிலோ கொல்லப்படவில்லை. சிறீலங்கா இராணுவத்தால் பிடிக்கப்பட்டுப் பதுங்கு குழியினுள் சிலமணி நேரங்கள் இராணுவக் காவலுடன் வைத்திருக்கப்பட்டு அதன் பின்னர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் மீண்டும் இவரது உடலம் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.



கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற போரின் பின்னரான கொடூரப் படுகொலைகள் பற்றிய காணொளியில் பாலச்சந்திரனின் உடலம் காட்டப்படது. ஆனால் இப்போது சிறீலங்கா இராணுவத்தினர் தமது வெற்றியின் கொண்டாட்ட விருதாக இந்தச் சிறுவனைச் சுட்டுக் கொண்டிருப்பது கண்கூடாக நிரூபணம் ஆகியுள்ளது.



இப்பொழுது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி நிரூபிக்கின்றது. இது மிகவும் இராணுவத்தினரின் விருப்பத்தின் பேரில் இராணுவத்தாலோ அல்லது அவர்களுடன் இணைந்து படுகொலைகள் புரியும் துணைக் குழுக்களாலோ மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட படுகொலையாகும். அதுவும் ஒரு சிறுவன் மீது.



கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள் ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை அராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் இரண்டு படங்கள் பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர் கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு செய்துள்ளது.



கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற காணொளித் தடயங்களும் இந்தப் படங்களையும் ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் Professor Derrick Pounder உடலத்தின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன் மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்துள்ளார்.



துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த திசையையும் குண்டு துளைத்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர் அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தள்ளார்.



மேலும் அவர் இந்தப் படங்கள் எந்த விதமான மாற்ங்களுங்கோ ஏமாற்றுகளுக்கோ உட்படாதவை என்றும் படங்கள் நூறு சதவீதம் உண்மையானவை என்றும் தெரிவித்தள்ளார். அதன் பின்னர் எடுக்கப்பட்டுள்ள காணொளியும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.



மேலும் Callum Macrae கூறுகையில் இதுவரை இலங்கை அரசுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டதாக எந்தவொரு ஆதாரமும் வழங்கப்படவில்லை என கூறினார்.



இலங்கை அரசு ஏற்கனவே கூறுகையில் போரின் போது அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் மனித உரிமை செயளாலராக பான் கீமுன் இருந்த போது அவர் அனுப்பிய குழுவானது மேற்கொண்ட ஆய்வறிக்கையில் 40,000 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவித்தது.



தற்போது வெளியிடப்பட்டுள்ள இப்புகைப்படங்களால், டேவிட் கேமரூன் வரும் நவம்பர் மாதம் பங்கு பெறுவதாக உள்ள உலகப் பொது மாநாட்டில் பங்கு கொள்வதில் பெரும் சிக்கலாக அமையும். அனால் தற்போது இந்தியா வந்துள்ள கேமரூன் இம்மாநாட்டில் பங்கு பெறுவது குறித்து இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.



ஆனாலும் சில சமூக அமைப்புகளும், வெளிநாட்டு அமைப்புகளும் இம் மாநாட்டில் பங்கு பெறக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.



இதில் பாலச்ந்திரனின் உடலத்தின் அருகில் இராணுவத்தினரின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மகிந்த இராஜபக்ச அரசு இன்னமும் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றம் பற்றியேதான் பேசிக் கொண்டிருக்கப்போகின்றது என தெ இண்டிபெண்டண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் காந்தியின் சீடர் ஜெகநாதன் உடல் காந்திகிராமத்தில் அடக்கம்




கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். இவர், திண்டுக்கல் மாவட்டம், அய்யங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். சுமார் 60 ஆண்டுகளாக பொது வாழ்வில் உள்ளவர்.
    1968-ம் ஆண்டு கீழவெண்மணியில் 44 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டு மனம் வருந்திய கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், 1968-ம் ஆண்டு முதல் நாகை, திருவாரூர் மாவட்டங்களை மையமாகக் கொண்டு பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
    இவரது முயற்சியால் மத்திய, மாநில அரசுகளின் உதவியோடு நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இதுவரை 13,500 மகளிருக்குத் தலா ஒரு ஏக்கர் நிலம் லாப்டி மூலம் வழங்கப்பட்டுள்ளது. லாப்டி மூலம் செயல்படுத்தப்படும் மண் குடிசைகளை மாற்றும் திட்டம் மூலம் இதுவரை நாகை மாவட்டத்தில் 2,500 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
    மேலும், இளைஞர் மற்றும் மகளிருக்கு தையல் தொழில், கணினிப் பயிற்சி, தச்சுத் தொழில், இயற்கை உரம் மற்றும் மிளகாய் பொடி தயாரிப்பு உள்ளிட்ட தொழில் பயிற்சிகள் அளிக்கும் பணி, ஆதரவற்ற குழந்தைகளுக்காக தங்கும் விடுதிகள் அமைத்தல், ஏழைப் பெண்களுக்குக் கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் பணி, மதுவிலக்கு பிரசாரம் உள்ளிட்ட சமூகப் பணிகளில் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஈடுபட்டுள்ளார்.
    இவரது சமூகப் பணிகளை கெüரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருது, ஜம்னாலால் பஜாஜ் விருது, பகவான் மகவீர் விருது ஆகியவற்றை வழங்கியுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகத்தின் 2008-ம் ஆண்டு ஓபஸ் விருது, சுவீடன் நாட்டின் மாற்று நோபல் பரிசு வாழ்வுரிமை விருது உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

சர்வோதய இயக்கத்தின் தலைவரும், காந்தியவாதியுமான ஜெகநாதன் மறைவுக்கு கருணாநிதி, வைகோ, ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து புதன்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதி: சர்வோதய இயக்கத்தின் தலைவரும், சிறந்த காந்தியவாதியுமான ஜெகநாதன் தனது 97-வது வயதில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். தனது துணைவியார் கிருஷ்ணம்மாளுடன் இணைந்து மக்கள் பணியாற்றிய ஜெகநாதன், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பூமிதான இயக்கத்தை செயல்படுத்தினார்.

கிருஷ்ணம்மாளின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி திமுக ஆட்சியில் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் நிலமற்ற ஏழைகளுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டபோது, அதில் கிருஷ்ணம்மாள் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
ஆழ்ந்த காந்தியவாதியான ஜெகநாதனை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும், சர்வோதய இயக்கத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்காகப் பாடுபட்ட ஜெகநாதன் 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். வினோபாபாவேவின் சீடரான அவர், நல்ல உள்ளம் கொண்ட செல்வந்தர்களிடம் இருந்து நிலங்களைப் பெற்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.

நான் எட்டு வயது மாணவனாக இருந்தபோது மகாத்மா காந்தியின் பேரன் கிருஷ்ணதாஸ் காந்தியுடன் பூமிதான பிரசாரத்துக்காக ஜெகநாதன் கலிங்கப்பட்டிக்கு வந்தார். அப்போதுதான் நான் முதன்முதலாக மேடைறிப் பேசினேன். அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்: 1968-ல் கீழ்வெண்மணியில் தலித்துகள் குடிசையில் தீ வைத்து உயிரோடு கொல்லப்பட்டபோது, அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றவர். சர்வதேச அளவிலான பரிசுக்கு இணையான ரைட் லைவ்லி ஹூட் உள்பட பல பரிசுகளைப் பெற்றவர்.

சர்வோதய இயக்கத் தலைவரான ஜெகநாதனை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும், குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மறைந்த காந்தியின் சீடர் ஜெகநாதனின் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
காந்தியின் சீடர் ஜெகநாதன் மரணம்
சர்வோதய தலைவர்களில் ஒருவரும், மகாத்மா காந்தியின் சீடரும், வினோபா, ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரின் நெருங்கிய நண்பருமான 100 வயதான ச.ஜெகநாதன் உடல்நல குறைவாக இருந்தார்.
நேற்று முன்தினம் ஜெகநாதன் உடல் நல குறைவால் திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கஸ்தூரிபா மருத்துவமனையில் இறந்தார். அவரது உடல் காந்திகிராம பல்கலைக் கழகத்தின் அருகே உள்ள காந்திகிராம அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி அஞ்சலி
ச.ஜெகநாதன் உடலுக்கு தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ.,, நாகபட்டிணம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் விஜயன், நிலக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்மாள், முன்னாள் அமைச்சர் கக்கனின் தம்பி முன்னோடி, சர்வோதய தலைவர் கே.எம்.நடராஜன், ஈரோடு பசுமை இயக்க நிறுவனர் டாக்டர் ஜீவானந்தம்.
காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் நாராயணசாமி, காந்திகிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் கவுசல்யா தேவி, செயலாளர் சிவக்குமார் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காந்தியவாதிகள், சர்வோதய சங்க பணியாளர்கள் ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
வைகோ
மாலை 4 மணிக்கு ச.ஜெகநாதனின் உடல் அடக்கம் செய்வதற்கான இறுதி சடங்குகள் நடைபெற்றன. இதில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு ஜெகநாதனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் ஊழியரகம் எதிரே உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடலுக்கு ச.ஜெகநாதனின் மகன் டாக்டர் பூமிகுமார் ஈம சடங்குகள் செய்தார்.
ஆறுதல்
இதன் பின்னர் மறைந்த ஜெகநாதனின் மனைவி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், மகன் டாக்டர் பூமிகுமார், மகள் சத்யா ஆகியோருக்கு வைகோ ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து ஊழியரகத்தில் ஜெகநாதனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
மறைந்த ஜெகநாதனுக்கு மனைவி கிருஷ்ணம்மாள், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை காந்தி கிராமத்தில் நடக்கிறது. ஜெகநாதன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘வினோபாஜியின் சீடராக திகழ்ந்த ஜெகநாதன், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பூமிதான இயக்கத்தில் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சென்று நல்ல உள்ளம் கொண்ட செல்வந்தர்களிடம் நிலங்களை பெற்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். மார்டின் லூதர் கிங் தமிழகத்துக்கு வந்தபோது, ஜெகநாதன் வீட்டுக்கு சென்று பெருமைப்படுத்தினார்’ என குறிப்பிட்டுள்ளார்.

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வலியுறுத்தி - புதிய தமிழகம்





தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:

விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சமுதாய மக்களின் அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவர்கள் கவுரவமான முறையில் நடத்தப்பட வேண்டும். இதுவே மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளாக கூறப்பட்டாலும் நடைமுறையில் செயலுக்கு வருவதில்லை.
தமிழ் சமுதாயத்தின் மூத்த குடிமக்கள் தற்போதும் "ன்' விகுதி வைத்து ஒருமையில் அழைக்கப்படுகின்றனர். பட்டியலின பிரிவில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படக்கூடிய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதை அரசு நிறைவேற்றவில்லை.
பட்டியலின துறைக்கு சமூக நீதித்துறை அல்லது பட்டியலினத்துறை என பெயரிடுவது, உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் நடக்கவுள்ளது.

முதற்கட்டமாக 20 முதல் 24ம் தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும். 20ம் தேதி திருச்சி, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், அரியலூர், 21ம் தேதி மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கடலூர், 22ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, நாகப்பட்டணம், விழுப்புரம், திருவாரூர், 23ம் தேதி ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், 24ம் தேதி சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடக்கும். இப்போராட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து வேண்டும்.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

போலீஸ் துறையால் ஏற்படுத்தப்பட்ட சித்திரவதை-மள்ளர்நாடு



நேற்று மதுரையில் நடந்த "போலிஸ் அராஜகத்துக்கு" எதிரான பொது நீதி விசாரணை குழுமம் -விசாரணை நடத்தியது. அவ் விசாரணையில் மள்ளர்நாடு சார்பாக தேவேந்திரர்களுக்கு போலீஸ் துறையால் ஏற்படுத்தப்பட்ட சாவுகள், கை கால் உடைப்பு சம்பவங்கள், பெண்கள் சித்திரவதை போன்றவற்றை முறையிட்டது (குறிப்பாக:பரமக்குடி துப்பாக்கிசூடு, புதுபட்டி பெண்கள் குழந்தைகள் சித்திரவதை, தூத்துக்குடி ராமர் போலீஸ் நிலையத்தில் கொலை, நெல்லை புதுக்குளம் இளைன்கர்கள் கை கால் உடைப்பு போன்ற பல்வேறு அராஜகங்கள் முறையிடப்பட்டன ....

Share this article :

திங்கள், 18 பிப்ரவரி, 2013

புதிய தமிழகம் கட்சி - மும்முனை போராட்டம்



புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் -தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி:-
விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கக்கூடிய சமுதாயங்களின் எழுச்சிக்கு பொருளாதார சலுகைகள் அளித்தால் மட்டும் போதாது. அச்சமுதாய மக்களுடைய அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவர்கள் கவுரவமான முறையில் நடத்தப்பட வேண்டும். இதுவே மத்திய, மாநில அரசின் கொள்கைகளாக சொல்லப்பட்டாலும் நடைமுறையில் செயலுக்கு வருவதில்லை.
தமிழ் சமுதாயத்தின் மூத்த குடிமக்கள் இன்னும் ன்விகிதி வைத்தே ஒருமையில் அழைக்கப்படுகிறார்கள். இந்த தொடரும் சமூக இழிவு நிலையே அம்மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. பட்டியலினப் பிரிவில் உள்ள பல்வேறு பெயர்களில் அழைக்கப்படக்கூடிய மக்களை தேவேந்திரகுல வேளாளர்என அழைக்க அரசானை பிறப்பிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அதை அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை.
அதே போன்று இடஒதுக்கீட்டில் பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டை ஒரே ஒரு பிரிவினருக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கப்படுவதால் தமிழகத்தில் உள்ள 70 சமுதாய மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இடஒதுக்கீடுகள் வழங்க இந்திய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கு ஆளான மக்களை அண்ணல் அம்பேத்கார் அவர்கள் அட்டவனைப் பிரிவினர் என வகைப்படுத்தினார். ஆனால் அதை தமிழ்நாடு அரசு ஒரு சாதியின் துறையாக மாற்றிவிட்டது.
எனவே பட்டியலின துறைக்கு  ‘சமூக நீதித்துறை’ அல்லது  ‘பட்டியலினத்துறை’ என்றே பெயரிடவும், உள்இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்யவும் தேவேந்திரகுல வேளாளார்என அழைக்க அரசானை பிறப்பிக்கவும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மும்முனை போராட்டம் நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக வரும் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை 11 மணி முதல் 1 மணி வரை  மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள்  நடைபெறும்.
20ம் தேதி : திருச்சி, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், அரியலூர்
21ம் தேதி : மதுரை, விருதுநகர்,கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி   கடலூர்
22ம்தேதி : துத்துக்குடி, திருநெல்வேலி,திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விழுப்புரம், திருவாரூர்
23ம் தேதி : இராமநாதபுரம், சேலம்,நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி வேலூர்
24ம் தேதி : சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை, கன்னியாகுமரி
ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.