ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 30 மார்ச், 2011

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு 10 தொகுதிகளில் போட்டி; நெல்லை வேட்பாளர் பசுபதிபாண்டியன்

வருகிற சட்டசபை தேர்தலில் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.




நெல்லை தொகுதியில் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் போட்டியிடு கிறார். தேர்தல் பணிகளில் ஈடு படுவது குறித்து நிர்வாகி களுடனான ஆலோசனை கூட்டம் பாளை சகுந்தலா ஓட்டலில் நடக்கிறது.



இந்த கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களும் அறிமுகப் படுத்தப்படுகிறார்கள்.

2 தொகுதிகளில் ஜான் பாண்டியன் போட்டி




தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் முதுகுளத்தூர், நிலக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஜான்பாண்டியன் பாளையங்கோட்டையில் நேற்று மாலை கூறியதாவது:-



இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், சமூக சமத்துவ பறை, வாணிப செட்டியார் பேரவை, வ.உ.சி. பேரவை, அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு ஆகிய 6 கட்சிகள் இணைந்து இந்திய ஜனநாயக முன்னணி என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கூட்டணிக்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டணி வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயக முன்னணி கூட்டணியில், எங்கள் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.



நாங்கள் 8 பொதுத்தொகுதிகளிலும், 8 தனித்தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். பொதுத்தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் முடிவு அமையும். முதுகுளத்தூர் (பொதுத்தொகுதி), நிலக்கோட்டை (தனித்தொகுதி), ஆகிய 2 தொகுதிகளில் நான் போட்டியிடுகிறேன். மேலும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவிக்கிறேன்.



ஸ்ரீவைகுண்டம்- சாந்திதேவி, போடி நாயக்கனூர்- முகமது ஷாபி, உடுமலைப்பேட்டை- கண்ணன், ராஜபாளையம்- கருப்பசாமி, சூளூர்- அலெக்ஸ் பாண்டியன், சிங்காநல்லூர்- கலைச்செல்வி, அருப்புக்கோட்டை- கலைச்செல்வன், பெரியகுளம்- நல்லுசாமி, பரமக்குடி- சந்தோஷ்குமார், சங்கரன்கோவில்- ராஜேந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர்- கண்ணன், துறையூர்- பி.சம்பத்குமார், அவினாசி- ரங்கசாமி, சோழவந்தான்- ஏ.ஜவகர். இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.



ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி




அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-



அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறோம். நிலக்கோட்டையில் மாவட்ட தலைவர் ஆ.ராமசாமி போட்டியிடுவார். ஒட்டப்பிடாரத்தில் நான் போட்டியிடுகிறேன். நாளை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன். தொடர்ந்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன். கூட்டணி கட்சிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்வது குறித்து கூட்டணி தலைமை தான் அறிவிக்க வேண்டும். எங்கள் கூட்டணி சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றியை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.



அனைத்து கிராமத்திற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் - டாக்டர். கிருஷ்ணசாமி























ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி குறிஞ்சிநகர், பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.



வாக்குகள் சேகரித்து டாக்டர்.கிருஷ்ணசாமி பேசுகையில், "தூத்துக்குடி மாநகராட்சி, சங்கரப்பேரி, மாப்பிள்ளையூரணி, தாளமுத்து நகர், சிலுவைப்பட்டி பகுதிகளில் மக்கள் குடிநீர் பிரச்சனையாலும், மின்வெட்டு பிரச்சனையாலும் அவதிப்பட்டு வருகின்றனர். என்னை வெற்றி பெற செய்தால் ஆறு மாதத்திற்குள் அனைத்து கிராமத்திற்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி வகை செய்வேன். பொதுக் கழிப்பிடம், தனி நபர் கழிப்பிடம் அனைத்து கிராம, நகர மக்களுக்கும் கிடைக்க செய்வேன். சாலை வசதி, போக்குவரத்து வசதி மட்டுமின்றி அனைத்து அடிப்படை வசதிகளையும் சட்டசபையில் போராடி பெற்றுத் தருவேன். அரசு திட்டங்கள் அனைத்தும் நேரிடையாக கிடைத்திட, லஞசம், லாவண்யமற்ற முறையில் மக்கள் பயன் பெற பாடுபடுவேன். வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் வகையில் மாசில்லாத தொழில் நிறுவனங்களை தென் தமிழகத்தில் அமைத்திட குரல் கொடுப்பேன்" என்றார்.





மேலும், "தி.மு.க. அரசில் கிலோ அரிசி ஒரு ரூபாய் ஆனால் குடிநீர் விலை 3 ரூபாய், 5 ரூபாய். பருப்பு 100 ரூபாய், எண்ணெய் விலை 100 ரூபாய், உப்பு விலை பத்து ரூபாய் இந்த நிலையில் மக்களை பணம் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கி விடலாம் என தி.மு.க. வினர் வருகின்றனர். தாமிரபரணி, வைகை, பாலாறு என ஆற்று மணலை கொள்ளையடித்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தை வைத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என நினைக்கின்றனர். மக்கள் வாக்குகளை விற்று தங்கள் உரிமைகளை இழந்து விடக்கூடாது. தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்று கூறியுள்ளார்.





ஆனால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அம்மையார் அவர்கள் ஏழைகளே இருக்க கூடாது என திட்டம் தீட்டியுள்ளார். மீனையும் கொடுத்து, மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கவும் உள்ள திட்டம்தான் கறவை மாடு, ஆடு வழங்கும் திட்டம். இதனால் தானாகவே மக்கள் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது. எனவே எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்" என்று டாக்டர்.கிருஷ்ணசாமி பேசினார்.



அ.இ.அ.தி.மு.க., சமத்துவ மக்கள் கட்சி, தே.மு.தி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., மூவேந்தர் முன்னேற்ற கழகம், பார்வர்ட் பிளாக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.

டாக்டர். கிருஷ்ணசாமி பிரச்சாரம்






அப்பாவி மக்கள் இழந்த நிலங்களை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுப்பேன் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பிரச்சாரத்தின்போது தெரிவித்துள்ளார்.





தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான நிலங்கள் மோசடியாக விற்கப்பட்டு வருகின்றது. ஆளும் தி.மு.க. பிரமுகர்களின் அரசியல் செல்வாக்கினால் போலி பட்டாக்கள் தயாரித்து வெளி மாநில பிரமுகர்களுக்கும், பெரிய தொழிலதிபர்களுக்கும் நிலங்கள் விற்கப்பட்டு வருகின்றது.



பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் கிடையாது. காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தால், இது சிவில் வழக்கு விசாரித்துதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி வழக்கு பதிவு செய்வதே கிடையாது. ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாநத்தம் கிராமத்தில் சுமார் நூறு ஏக்கர் நிலங்களை இழந்த ஐம்பத்திற்கு மேற்பட்ட சிறு விவசாயிகள் மற்றும் பெண்கள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற வேட்பாளரான புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்து மனு அளித்தனர்.



சில்லாநத்தம் மட்டுமின்றி ஓட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெற்றுள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நில மோசடிக்கு முடிவு கட்டுவேன் எனவும், அப்பாவி மக்கள் இழந்த நிலங்களை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுப்பேன் எனவும் டாக்டர்.கிருஷ்ணசாமி உறுதியளித்துள்ளார்.

டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம்





ஓட்டப்பிடாரம் தொகுதி, அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, இன்று மாலை தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். அப்பொழுது, அதிமுக முன்னாள் செயலாளர் விபிஆர் சுரேஷ், தற்போதைய ஒன்றிய செயலாளர் சண்முகவேல் ஆகியோர் உடனிருந்தனர்.





இன்று அவர், அத்திமரப்பட்டியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை டாக்டர் கிருஷ்ணசாமி தொடங்கினார். அப்போது, அவர் பேசியதாவது : நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் எனக்கு தெரியும். அத்திமரப்பட்டி கிராமம் 3 போகம் விளையும் பூமி. நான் சட்டமன்றம் சென்றால் இதற்காக குரல் கொடுப்பேன். விவசாயிகளை நான் பாதுகாப்பேன்.



ஓட்டப்பிடாரம் தொகுதியில் குடிநீர் சாலை வசதிகளுக்காக, பாடுபடுவேன். நான் இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, எதற்கும் 5 பைசா கூட வாங்கியது கிடையாது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானாலும் சரி, சாத்தான்குளத்தில் டாடா ஆக்கிரமிப்பு ஆனாலும் சரி நான் குரல் கொடுத்தேன். இது நண்பர் சரத்குமாருக்கு தெரியும். என்மீது முழு நம்பிக்கையுடன் எனக்கு நீங்கள் வாக்கு அளிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.



இதைத் தொடர்ந்து, அவர் அத்திமரப்பட்டி, குலையன்கரிசல், சேர்வைகாரன்மடம், கட்டாலங்குளம், முடிவைதானேந்தல், வர்த்தகரெட்டிபட்டி, திம்மராஜபுரம் ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்.

சனி, 26 மார்ச், 2011

நெல்லை தொகுதியில் பசுபதி பாண்டியன் போட்டி

அகில இந்திய தேவேந்திர குல கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நெல்லை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.இவர் நேற்று மாலை நெல்லை கோட்டாட்சியர் ராஜபிரபாகரனிடம் மனுதாக்கல் செய்தார்.



நெல்லை தொகுதியில் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் போட்டியிடு கிறார்


அவரது மனுவை முன்மொழிந்த 10 நபர்களில் ஒருவர் பாளை தொகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று காலை மீண்டும் கோட்டாட்சியரிடம், பசுபதி பாண்டியன் மனுதாக்கல் செய்தார். அவருடன் மாநகர செயலாளர் வண்ணை முருகன்,தென்மண்டல அமைப்பாளர் பொன்ராஜேந்திரன் ஆகியோர் உடன் வந்தனர்.





அதே போல் நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏஎல்எஸ் லட்சுமணனுக்கு மாற்று வேட்பாளராக மாநகர துணை செயலாளரும்,நெல்லை பகுதி செயலாளருமான உலகநாதன் இன்று மனுதாக்கல் செய்தார். இதே போல் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் மதனுக்கு மாற்று வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் லட்சுமணன் மனுதாக்கல் செய்தார்.

johnpandian


ஓட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர்.கிருஷ்ணசாமி பிரசாரம்









ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஓட்டு சேகரித்தார்.



ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதியதமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் க.கிருஷ்ணசாமி நேற்று புதூர்பாண்டியாபுரம் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். புதூர்பாண்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.



பிரசாரத்துக்கு மோகன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், அ.தி.மு.க. தொகுதி செயலாளர் புகழும்பெருமாள், மாநில அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி.பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வேலாயுதபுரம், சில்லாநத்தம், புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.

திங்கள், 21 மார்ச், 2011

முதுகுளத்தூரில் ஜான்பாண்டியன் போட்டி

முதுகுளத்தூர்:தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன், முதுகுளத்தூரில் கூட்டணிக் கட்சி ஆதரவுடன் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.அவர் கூறியதாவது:சட்டசபை தேர்தலில் மூன்றாவது அணியாக யாதவ மகா சபை, எங்களது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி ஆகியோரது கட்சிகள் இணைந்து, தேர்தலை சந்திக்கிறோம்.இந்த மூன்றாவது கூட்டணி கட்சி சார்பில், தமிழகத்தில், 13 இடங்களிலும், நான் முதுகுளத்தூரிலும் போட்டியிடுகிறேன். மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள், வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.

திங்கள், 14 மார்ச், 2011

மதுரையில் வீரன் சுந்தரலிங்கம் சிலை

மதுரையில் வீரன் சுந்தரலிங்கம் சிலை: உயர் நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ்



மதுரையில் குறிப்பிட்ட பகுதியில் வீரன் சுந்தரலிங்கம் சிலை அமைக்க, என்.ஓ.சி., வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.



மதுரை மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-



நெல்லை மாவட்டத்தில் பிறந்தவர் வீரன் சுந்தரலிங்கம். ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டத்தில், கொல்லப்பட்டார். வீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாள், அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும், கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கத்துக்கு, மதுரையில் சிலை வைக்க கோரி கலெக்டரிம் மனு கொடுத்தோம். மதுரை மாவட்ட நீதிமன்றம் மற்றும் எம்.ஜி.ஆர்., சிலைக்கு நடுவில் உள்ள, ரவுண்டானாவில் சிலை அமைக்க இடம் தேர்வு செய்தோம். இதற்கு மாநகர போலீஸ் கமிசனர் என்.ஓ.சி., வழங்கினால், சிலை அமைக்க ஒப்புதல் வழங்குவதாக, கலெக்டர் தெரிவித்தார். எங்கள் சங்கத்தின் கோரிக்கையை மதுரை போலீஸ் கமிசனர் நிராகரித்துள்ளார். எனவே, சிலை அமைப்பது தொடர்பாக என்.ஓ.சி., வழங்குமாறு, மதுரை போலீஸ் கமிசனருக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். மனுவுக்கு பதிலளிக்கும் படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தவிட்டுள்ளார்.



புதன், 9 மார்ச், 2011

அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு

மதுரை : பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டை 18ல் இருந்து 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மதுரையில் நடந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஜான்பாண்டியன், புத்தபிட்சு சுமேதா, நிர்வாகிகள் சரவணபாண்டியன், வழிவிடுமுருகன், பகத்சிங் உட்பட பலர் பங்கேற்றனர். நேற்று மாலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரிங்ரோட்டில் உள்ள மாநாட்டு பகுதிக்கு சென்றனர்.






பின்னர் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தேவேந்திர குலவேளாளர்களின் உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குலவேளாளர் என உடனடியாக அறிவித்து ஆணை வெளியிட வேண்டும். பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தலித் என அழைக்காமல், பட்டியலின மக்கள் அல்லது அந்தந்த குறிப்பிட்ட ஜாதியின் பெயரால் அழைக்க வேண்டும். இம்மானுவேல் சேகரன் தபால் தலை வெளியீட்டை அரசு விழாவாக நடத்தாததை கண்டிப்பது, பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீட்டில் தரப்படும் 18 சதவீதத்தை 25 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். தேவேந்திர குலவேளாளர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகைகள் தினமலர், ஆனந்தவிகடனுக்கு நன்றி தெரிவிப்பது, 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள், விவசாய கூலிகளுக்கு மாதம் 2500 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், விவசாய பட்ஜெட் தாக்கல் செய்து, அதில் விவசாயத்திற்கு 50 சதவீதம் முழுமையாக பயன்படும் வகையில் நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தாமிரபரணி - மறக்க முடியுமா

?


http://www.youtube.com/watch?v=pgA2XA26W6o&feature=related





http://www.youtube.com/watch?v=DnwvBRnxwFk&feature=related







சிந்திக்க-1



மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டத்தை முன் எடுத்துச் சென்ற த.ம.கா, புதிய தமிழகம் போராட்டம் துப்பாக்கி சூட்டிலும், லத்தி அடியாலும், வன்முறையாலும் காவல்துறையினரால் எல்லை மீறி நடத்தப் பட்டு அதற்கொரு நியாயமும் காட்டப் பட்டது.

உயிர் இழந்த மள்ளர்களைக் கொண்டு அரசியல் நடத்த எல்லோரும் வெட்கம் கேட்டு திரிகின்றனர்.

காரணமான காவல்துறை ஏவல் நாய்கள் என்ன ஆனார்கள்- கருணாநிதியும் என்ன ஆனார்?



சிந்திக்க-2



ஜான் பாண்டியன் சென்னை எழும்பூர் தொகுதியில் வெற்றிபெறும் நிலையில் இருந்த பொழுது, சூழ்ச்சி செய்து 85 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வைத்த பெருமை கருணாநிதியை சேரும் அல்லவா?



சிந்திக்க-3

மேலே உள்ள வீடியோ காட்சிகளை பார்த்தால் இதற்க்கு எப்படி பழி தீர்க்கப் போகின்றீர்கள்?

ராமதாஸ் - ஜெகத் ரட்சகன் பிரிக்கப் பட்டு பா.ம.க துண்டாடப் பட்டது.

தேவேந்திரர் பிரிக்கப் பட்டு கிருஷ்ண சாமியா- ஜான்பாண்டியனா என்று சிண்டு முடிந்து .....என்னய்யா வேடிக்கை!

செவ்வாய், 8 மார்ச், 2011

கீழ்வெண்மணி-வண்கொடுமையின் உச்சம்





.

1968 டிசம்பர் 25

கிறிஸ்துமஸ் பண்டிகை

ஏசுநாதர் பிறந்த நாள் விழா







உலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.



ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை.



தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டது தான் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட காரணம்.



விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச் சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



இந்த சூழ்நிலையில் தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை நடந்தது.



25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத்தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து கட்டை அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பின்பு பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள்.



அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடி விட்டனர். தப்பித்து ஓட முடியாத தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள்.



ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன.



இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.



இத்தனை கொடுமையையும் செய்த அக்கிரமக்காரர்கள் அதன் பின் இதனை விவசாயத் தொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இதற்கு உதவிகரமாக சில பத்திரிகைகள் இட்டுக் கட்டி செய்திகள் வெளியிட்டன. “விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய்யைக் கூறினர். நிலபிரபுக்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பொய்யைச் செய்தி ஆக்கினர்.



ஆனால் போலீஸ் ஐஜியோ கீவளுர் வட்டாரத்தில் வைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42 இருப்பதாகவும், 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர் திருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11 பேர்.



மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும் பொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.



வெண்மணியில் நடைபெற்ற கோரக் கொடுமையை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரீகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.



அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.



மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து விட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு



“ Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene. -‘Hindu’



“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.

‘இந்து பத்திரிகை’



44 ஏழை உயிர்களின் மீது இதர மக்களுக்கு இரக்க குணம் ஏற்படாத நிலையில்- நீதிமன்றங்களிலும் - ஏழை மக்களுக்கு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காத போது - நிலப்பிரபுக்களும், பிற்போக்காளர்களும், சாதி வெறியர்களும் - சரடு போடப்படாத திமிர்க் காளைகளாக நாட்டில் இன்னமும் திரிந்து வருகிறார்கள்.





விடுதலை விடுதலை விடுதலை

பறையருக்கும் இங்கு தீயர்

புலையருக்கும் விடுதலை பரவரோடு

குறவருக்கும் மறவருக்கும் விடுதலை.





என்ற பாரதி விடுதலைக் கனவு கண்டார். அக் கனவுகள் இன்னும் நனவாகவில்லை. பாரதியின் கனவை நனவாக்கக் கங்கணம் கட்டியாக வேண்டும்.



தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் - இதரப் பகுதியினரை விட சாதி அமைப்பில் கொடிய ஓடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்ள். அவர்களின் உரிமையை நிலை நாட்டுவது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாகும்.



கிராமங்களின் அடித்தட்டில் வாழும் விவசாயத் தொழிலாளர்களிடையே - சாதி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒன்றுபட்ட இயக்கமாக திரட்ட வேண்டும். வலியோர் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து, எளியோர்களுக்குப் பாதுகாப்பாகவும் மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.



வலியோர் தம் ஆதிக்கமும், வன்முறையும் எந்த வழியில் வந்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும், மக்களை திரட்டவும் வேண்டும். அது உலகை மேலாண்மை செய்யத் துடிக்கும் அமெரிக்காவை எதிர்த்து என்றாலும் சரி. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கொடுமையை எதிர்த்து என்றாலும் சரி. நாம் எதிர்க்க வேண்டும்.





வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்



1. சுந்தரம் (45)

2. சரோஜா(12)

3. மாதாம்பாள்(25)

4. தங்கையன் (5)

5. பாப்பா (35)

6. சந்திரா (12)

7. ஆசைத் தம்பி (10)

8. வாசுகி (3)

9. சின்னப்பிள்ளை (28)

10. கருணாநிதி(12)

11. வாசுகி (5)

12. குஞ்சம்பாள் (35)

13. பூமயில் (16)

14. கருப்பாயி (35)

15. ராஞ்சியம்மாள் (16)

16. தாமோதரன் (1)

17. ஜெயம் (10)

18. கனகம்மாள் (25)

19. ராஜேந்திரன் (7)

20. சுப்பன் (70)

21. குப்பம்மாள் (35)

22. பாக்கியம் (35)

23. ஜோதி (10)

24. ரத்தினம் (35)

25. குருசாமி (15)

26. நடராசன் (5)

27. வீரம்மாள் (25)

28. பட்டு (46)

29. சண்முகம் (13)

30. முருகன் (40)

31. ஆச்சியம்மாள் (30)

32. நடராஜன் (10)

33. ஜெயம் (6)

34. செல்வி (3)

35. கருப்பாயி (50)

36. சேது (26)

37. நடராசன் (6)

38. அஞ்சலை (45)

39. ஆண்டாள் (20)

40. சீனிவாசன் (40)

41. காவிரி (50)

42. வேதவள்ளி (10)

43. குணசேகரன் (1)

44. ராணி (4)

கட்டபொம்மனின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்கம்





பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கெவிணகிரி. இங்கு ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர்தான் சுந்தரலிங்கம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவனது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினார். விரைவில் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார்.





சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.



கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தான். அந்த சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது சுந்தரலிங்கத்தின் வாளுக்கு பல வெள்ளைச் சிப்பாய்கள் மாண்டனர்.



இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.



1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனான். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது.





சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள்.





அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.



தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலேயே சுந்தரலிங்கத்தின் வீரம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது. அதனினும் கொடுமை, அந்த மாவீரனது நினைவாக விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் அரசு பேருந்துகளுக்கு ‘வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம்’ என்று கலைஞர் கருணாநிதி பெயரிட்டபோது, அதைப் பொறுக்க மாட்டாமல் ஆதிக்க சாதியினர் அந்தப் பேருந்துகளை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து தீயிட்டுக் கொளுத்தியதும், பெரும் சாதிக்கலவரத்தை உண்டாக்கியதும் ,தமிழக வரலாற்றின் அவமானகரமான கருப்புப் பக்கங்கள்.





கீழ்வெண்மணி – மேலவளவு படிப்பினைகள்






வர்க்கப் போராட்டம் இந்தியாவைப் பொருத்தவரை, சாதியப் போராட்டமாகவே உள்ளது. 1968 இல் தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு நடத்தப்பட்ட போராட்டம், ஆண்டைகளின் சாதியத்தையும் மேலாதிக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கியது. சாதிய அமைப்பின் அடித்தட்டிலுள்ள தலித்துகள் தங்களை எதிர்த்ததை செரித்துக் கொள்ள இயலாத, மேல்சாதியென கர்வம் கொண்ட ஆண்டைகள், இரக்கமற்ற முறையில் 25.12.1968 அன்று நடைபெற்ற கலவரத்தில் உயிர் தப்பிக்க, ஒரு சின்னஞ்சிறு குடிசையில் ஒடுங்கிய 44 தலித்துகளை தீயிட்டு எரித்துக் கொன்றனர்.

இவ்விரக்கமற்ற படுகொலையில் முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண (நாயுடு)வும் பிறரும் 1970 இல் குற்றவாளிகள் என நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ண (முதலியார்) தீர்ப்புரைத்தபோதும், “கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை” என்று கூறி, 1975இல் வழக்கிலிருந்து விடுதலை செய்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகராஜன். “ஏழைச் சொல் அம்பலம் ஏறாது” என்ற சொல்வழக்கு எவ்வளவு உண்மையானது என்பதை அனைவரும் உணர்ந்த தருணம் அது. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அப்போதைய அரசு மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை. கால வெள்ளத்தின் ஓட்டத்திலும் நீதி மனம் கொண்டவர்களுக்கு, அது ஓர் ஆறாத வடுவாக என்றும் நெஞ்சில் நிலைப்பெற்றிருக்கிறது.



நீறு பூத்த நெருப்பாக இருந்த தலித்துகளின் விடுதலை உணர்வு, 1989 இல் ‘பட்டியல் சாதியினர் மற்றும பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம்' இயற்றப்பட்ட பின்னணியிலும், அதன் பின்னர் 1990 இல் தொடங்கிய மாமனிதர் அம்பேத்கரின் நூற்றாண்டு கொண்டாட்டங்களிலும் வலுவடைந்தது. 1992 இல் கொண்டு வரப்பட்ட பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் தொடர்பான 73 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமும், அதை நடைமுறைப்படுத்த இயற்றப்பட்ட மாநிலப் பஞ்சாயத்து சட்டங்களும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தின.



தமிழகத்தில் 1994இல் இயற்றப்பட்ட தமிழ் நாடு ஊராட்சிகள் சட்டப்படியான ஊராட்சி அமைப்புகளின் தேர்தல், 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. குறிப்பிட்ட அளவிலான ஊராட்சி அமைப்புகளில் தலைவர் பதவி, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வகையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ள மேலவளவு ஊராட்சித் தலைவர் பதவி, பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது நாள்வரை தலைவர் பதவியை அனுபவித்து வந்த அம்பலக்காரர் சமூகத்தினர் இந்த ஒதுக்கீட்டை ஏற்க மறுத்தனர். தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டபோது,





இரண்டு முறை அம்பலக்கார சமூகத்தினர் கலவரம் ஏற்படுத்தி தேர்தல் நடைபெறவிடாமல் தடுத்தனர். இதில் ஒருமுறை வாக்குப் பெட்டியையே தூக்கிச் சென்றுவிட்டனர். மூன்றாவது முறையாக நடைபெற்ற தேர்தலில் தலித் மக்களைப் பங்கேற்கச் சொல்லி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு உறுதியளிப்புகளுடன் வேண்டியதன் பேரில் போட்டியிட்ட முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



முந்தைய தேர்தல் கலவரத்தில் ஆதிக்கச் சாதியினரால் தீ வைத்து பாழ்படுத்தப்பட்ட தலித் மக்களின் குடிசை வீடுகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, 30.06.1997 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு மேலவளவு நோக்கி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த முருகேசன், துணைத் தலைவர் மூக்கன், முருகேசனின் தம்பி ராஜா உட்பட 6 பேர் மேலவளவுக்கு அருகே நெருங்கும்போது, பேருந்தை வழிமறித்த 40க்கும் மேற்பட்டோர் அடங்கிய அம்பலக்காரர்களின் வன்முறைக் கும்பலால் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டனர்.





முருகேசனின் தலை தனியே துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. “தலை இருந்தால்தானே தலைவனாக இருக்க முடியும்; தலைவனாக வரும் எந்த தலித்தின் தலையும் தப்பாது” என்பதுதான் கொலையாளிகளின் செய்தியாக இருந்தது.



இப்படுகொலைக்குக் காரணமானவர்கள் என 40 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு முன்பும், வழக்கு விசாரணையின்போதும், அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டபோதும், அம்மேல் முறையீடுகளின் மீதான விசாரணையின்போதும் இவ்வழக்கை வலுவிழக்கச் செய்ய ஆதிக்க சாதியினர் கையாண்ட சூழ்ச்சிகள் பலப்பல. அவர்களின் பொருளாதார, ‘சமூக' பலம் இச்சூழ்ச்சிகளுக்கு துணை புரிந்தது.



நீதித்துறையும் இச்சூழ்ச்சிகளுக்குத் தப்பவில்லை. இச்சூழ்ச்சிகளையெல்லாம் காலவரிசைப்படி தொகுத்து விளக்கி வழக்குரைஞர் குழு ‘நீதியைத் தேடும் மேலவளவு வழக்கு' என்ற தலைப்பில் வெளியிட்ட துண்டறிக்கை, தலித் முரசில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டது.



வழக்கு விசாரணையின் முடிவில் 17 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 23 நபர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தும் சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றம் 26 சூலை 2001 அன்று தீர்ப்பளித்தது. விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட 17 நபர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, சென்ன உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்தனர்.





வழக்குச் சம்பவத்தில் காயமடைந்த தலித் மக்களின் சார்பில் 23 நபர்களின் விடுலையை எதிர்த்தும், அனைத்துக் குற்றவாளிகள் மீதும் சார்த்தப்பட்ட ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்படியான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை' என்ற விசாரணை நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்தும் குற்றவியல் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.



இவற்றை ஒருங்கே விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி. சதாசிவம் (தற்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதி) மற்றும் என். பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய ஆயம் 19.04.2009 அன்று விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.



வழக்கில் விசாரணை செய்யப்பட்ட சாட்சிகளின் சாட்சியங்களின் அடிப்படையில், இப்படுகொலை சாதியப் பகைமையின் பின்னணியில்தான் நிகழ்ந்துள்ளது என்பதை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட போதிலும், விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை தண்டிக்காமல் விடுவித்தது. இது குறித்து அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்யாததாலும், சம்பவம் நிகழ்ந்து முழுமையாக 9 ஆண்டுகள் கடந்துவிட்ட அந்நிலையில் இவ்வழக்கை மீண்டும் விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட விரும்பவில்லை என்று கூறி உயர் நீதிமன்றம், காயமடைந்தோர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது.



தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 17 குற்றவாளிகளும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர் 22.10.2009 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வி.எஸ். சிர்புர்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற ஆயம், உயர் நீதிமன்றம் உறுதி செய்த விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து, குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.



இவ்வழக்கில், சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் வரிசை எண்ணில் முரண்பாடு இருப்பதால், முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தை முன்நிலைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசுத் தரப்பு முன்னிலைப்படுத்தத் தவறிவிட்டதால், வழக்கின் முதல் தகவல் அறிக்கை பொய்யாகத் தயாரிக்கப்பட்டதாகவும் எனவே, வழக்கின் அடிப்படையே அய்யத்திற்குரியதாக உள்ளதாகவும் தண்டிக்கப்பட்டோர் சார்பில் வாதிடப்பட்டது.



முன்னெப்போதுமில்லாத வகையில் நடைபெற்ற படுகொலை என்ற அடிப்படையிலும், இச்சம்பவம் அப்பகுதியில் ஏற்படுத்திய குழப்பச் சூழ்நிலையையும், இப்படுகொலை ஏற்படுத்திய ஒட்டுமொத்த அதிர்ச்சியையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, முதல் தகவல் அறிக்கைப் புத்தகம் முன்னிலைப்படுத்தப்படாத ஒரே காரணத்திற்காக இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ஏற்கக் கூடாது என்று வாதம் சரியல்ல; ஏற்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் இவ்வாதத்தை நிராகரித்துள்ளது.



மேலும், முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாத சூழ்நிலை மற்றும் காரணங்களை விளக்கி, காவல் துறை உயர் அலுவலர் ஆணையுறுதிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதையும் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தை உள்நோக்கத்துடன் மறைத்து வைத்திருக்கவும் வாய்ப்புள்ளபடியால் இத்தகைய வாதத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.



மேலும், குற்ற சம்பவம் நடைபெற்றது குறித்து வருவாய்த் துறை அலுவலர்களான மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் வட்டாட்சியர், அரசுக்கு அனுப்பியிருந்த அறிக்கைகளில் சில குற்றவாளிகளின் பெயர்கள் இடம் பெறாததால், அவர்கள் பின்னர் பொய்யாக வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.



வருவாய்த்துறை அலுவலர்கள் புலன் விசாரணை அதிகாரியுடன் இணைந்து செயல்பட்டு அந்தப் புலன் விசாரணையின் ஒரு பகுதியாக அந்த அறிக்கையை கருத முடியாது என்று கூறி, இவ்வாதத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.



கீழ்வெண்மணி வழக்கிலிருந்து மேலவளவு வழக்கு வரையிலான நீதிக்கான பயணம் நீண்ட நெடியதாகவும், பல்வேறு எதிர்ப்புகளையும் சவால்களையும் துரோகங்களையும் சந்தித்தாக அமைந்துள்ளது.



கீழ்வெண்மணி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சித் தோழர்கள் திறம்பட செயல்பட்டபோதிலும், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அப்போதைய சூழலில் உச்ச நீதிமன்றத்திற்கு அவ்வழக்கு மேலெடுத்துச் செல்லப்படவில்லை. ஆனால், மேலவளவு வழக்கில் விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகளை வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளிலிருந்து விடுவித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டன.





அவை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இம்மனு உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஆர். வெங்கட்ரமணியின் அலுவலகம் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிற்சில காரணங்களினால் அம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தனியாக இனி மேற்கொள்ளப்பட உள்ளது.



அதேபோல், மேலவளவு வழக்கில், தொடக்கக் கூட்டம் முதலே, வழக்குரைஞர் பொ. ரத்தினத்தின் ஒருங்கிணைப்பில் சமூக அக்கறையுள்ள வழக்குரைஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், இயக்கத் தோழர்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட மேலவளவு பகுதி மக்கள் என அனைவரது ஒத்துழைப்பும் பங்களிப்பும் வழக்கை இந்த அளவில் முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆளுங்கட்சி மாற்றங்களுக்கிடையேயும்கூட அரசுத் தரப்பு இவ்வழக்கில் போதிய குறைந்தபட்ச முனைப்பைக்கூட காட்டவில்லை.



உச்ச நீதிமன்றத்தில் மட்டும், அரசுத் தரப்பில் முன்னிலையான சென்னை உயர் நீதிமன்றத் நீதிபதியாகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்று, இப்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றும் வி. கனகராஜ் அவர்களை நியமித்தது பெரும் நல்வாய்ப்பாக அமைந்ததைக் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அவரது சமூக அக்கறை உணர்வும் இவ்வழக்கில் பெருமளவுக்குத் துணை புரிந்துள்ளது. இந்த சட்டப் போராட்டத்தில் பங்களித்த அனைவரும் போற்றுதலுக்கும் பாராட்டுக்குமுரியவர்கள் என்பதோடு, மேலவளவு வழக்கின் முடிவு இனிவரக்கூடிய காலங்களில் வன்கொடுமை வழக்குகளுக்கான போராட்டத்தின் தொடக்கமே என்பதை உணர்ந்து சமூக, மனித உரிமை, தலித் உரிமை ஆர்வலர்களும் செயல்பாட்டாளர்களும் செயல்பட உறுதி ஏற்பதே மேலவளவு தியாகிகளுக்குச் செய்யும் உண்மையான வீரவணக்கமாக அமையும்!



மேலவளவு வழக்கில் பங்களித்தோர்



மேலவளவு வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டோர் சார்பாக நடத்த, அவர்களது கோரிக்கைப்படி நியமிக்கப்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த மூத்த குற்றவியல் வழக்குரைஞர் பி. திருமலைராஜன், சிறப்பு அரசு குற்றத் துறை வழக்குரைஞராகவும், அவருக்கு உறுதுணையாக இன்னொரு மூத்த குற்றவியல் வழக்குரைஞரான ப.பா. மோகன் அவர்களும் வழக்கு விசாரணையைத் திறம்பட நடத்தினர். வழக்கின் சாட்சிகளுக்கு வழிகாட்டியும் ஊக்குவித்தும் வழக்கை வலுவடையச் செய்த வழக்குரைஞர்கள் கு.ஞா. பகத்சிங் மற்றும் ரா. அழகுமணி அவர்களுடன் சென்னகரம்பட்டி பெருமாள், மேலூர் தேவனாண்டி ஆகியோரும் சாட்சிகளுக்கு துணிவூட்டினர்.





வழக்கு விசாரணை சேலத்தில் நடைபெற்றபோது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஊக்குவித்தவர், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டோர் சார்பாக கட்டணமின்றி முன்னிலையாகி வாதாடியவர், மூத்த குற்றவியல் வழக்குரைஞர் வி. கோபிநாத். வழக்கு விபரங்களில் அவருக்கு உதவியவர்களில் முக்கியமானவர்கள் வழக்குரைஞர் டாக்டர் வி. சுரேஷ் மற்றும் வி. கோபிநாத் அவர்களின் இளம் வழக்குரைஞர் ஆர். ஜான் சத்தியன். இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.



சனி, 5 மார்ச், 2011

தேவேந்திர இன மக்களுக்கு மரியாதை கொடுத்தால் கூட்டணி!’’-ஜான்பாண்டியன்










 















எட்டாண்டு சிறை வாசத்திற்குப் பிறகு மீண்டும் தேவேந்திர இன மக்களை ஒன்று திரட்டப் புறப்பட்டிருக்கிறார் ஜான்பாண்டியன். அவருடைய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரையில் பிப்ரவரி 27&ம் தேதி விழிப்புணர்வு மாநாடு நடந்தது.



அ.தி.மு.க.வை ஆதரிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமியை தனிமைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை அஜெண்டாவோடு அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம், தியாகி இமானுவேல் பேரவை, மள்ளர் இலக்கிய கழகம், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் என பல்வேறு அமைப்புகளும் ஜான்பாண்டியனின் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.



மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் இருந்து மதியம் 2 மணியளவில் பேரணியை ஜான்பாண்டியனின் மனைவியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளருமான பிரிசில்லா பாண்டியன் துவக்கி வைத்தார். மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு மேடை ஏறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் ஜான்பாண்டியன்.



'அவர் போகும் இடமெல்லாம் கலவரம் வெடிக்கும்' என்று உளவுத்துறை எச்சரித்தபடியே லாடனேந்தல், மதுரை கோமதிபுரம் ஆகிய இடங்களில் பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.



மாநாட்டில் தேவேந்திர குல வேளாளர் என அரசு ஆணை வெளியிட வேண்டும், தியாகி இமானுவேல் சேகரனுக்கு மத்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை வெளியீட்டை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



ஜான்பாண்டியனின் அண்ணன் வன்னிய குடும்பன் பேசும்போது, ''மதுரை இதற்கு முன்பு 'மள்ளர் மாநகர்' என்றுதான் இருந்தது. மதுரை மீனாட்சியும் மள்ளி(?)தான்...'' என்று தன் பங்குக்கு சூட்டை கிளப்பினார்.



தியாகி இமானுவேல் பேரவை தலைவர் சந்திரபோஸ் பேசும்போது, ''கோபாலபுரமும் போயஸ் கார்டனும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இங்கே அரசியல் அங்கீகாரத்திற்காக ஒன்றுகூடி இருக்கிறோம். திராவிடக் கட்சிகள் நம் வாக்குகளை திருடுகிறார்கள். தென்தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி தேவேந்திர குல மக்கள் தான். ஆகையால், ஒரு சீட்டு ரெண்டு சீட்டுக்காக நாம் போகாமல் மந்திரிசபையில் ஆதி திராவிட நலத்துறை என்றுதான் இல்லாமல் பொதுப்பணித் துறை வீட்டு வசதித் துறை போன்ற துறைகளையும் நம்முடைய சமூக எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்க வேண்டும்'' என்றார்.



இறுதியாக இரவு 11.30 மணிக்கு மைக் பிடித்த ஜான்பாண்டியன், ''உங்கள் எண்ணப்படியே கூட்டணி அமையும். ஒரு சில அரசியல் சூழ்ச்சிகளால் செய்யாத குற்றத்திற்காக எட்டு வருடம் சிறை தண்டனை அனுபவித்தேன். நம் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இங்கே இருக்கிற தமிழன் தினம் தினம் செத்துக்கிட்டு இருக்கான். இதைப் பத்தி கவலைப்படாம ஈழத் தமிழனைப் பத்தி சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று திருமாவை ஒரு பிடிபிடித்தபோது, ''நம்மளும் இதே மாநாட்டில் ஈழத் தமிழின ஒழிப்பைக் கண்டிச்சு தீர்மானம் நிறைவேத்திருக்கோம்ணே' என்று ஓரத்தில் ஓர் முனகல் சத்தம் கேட்டது.



தொடர்ந்து பேசிய ஜான்பாண்டியன், ''நமக்கு கொடுக்கும் மரியாதையை கொடுத்தால் கூட்டணி உண்டு'' என தி.மு.க.வை ஒரு அழுத்து அழுத்தி முடித்தார்.







இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-



தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஜனார்த்தனன் தலைமையிலான கமிசன் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.



தேவேந்திர குலத்தினரை ஆதிதிராவிடர்கள் என்று கூறாமல் பட்டியலின மக்கள் என்று அழைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு தேவேந்திர குல மக்கள்தான் அதிக அளவில் நிலத்தினை வழங்கியுள்ளனர். எனவே விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை சூட்டுவதுடன், அவரது நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.



பட்டியலின மக்களுக்கு அனைத்து நிலை பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் தனியார் துறையிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஐந்தாண்டு திட்டத்தில் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இதனை இந்த மாநாடு கண்டிக்கிறது.



இந்தியா-இலங்கை இடையிலான சர்வதேச எல்லைக்கோடு பிரச்சினை காரணமாக இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். மேலும் கச்சத்தீவினை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.



சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மாத வருமானத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆய்வு கமிசனை அமைக்க வேண்டும்.



60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்து 500 ஓய்வூதியம் வழங்குவதுடன், விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.



பட்டியல் இன மக்களின் 18 சதவீத இடஒதுக்கீட்டினை இன்றைய மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.



இயற்கை வளங்களை பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். விவசாயிகளின் துன்பத்தை போக்கும் வகையில் நதிநீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும்.



மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



முன்னதாக தொண்டர்களின் பேரணி நடந்தது. பேரணியை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பார்வையிட்டார்.








புதன், 2 மார்ச், 2011

இமானுவேல் சேகரனாரின் தபால்தலை வெளியீட்டை மறைத்த கருணாநிதியின் கூட்டம்!




இமானுவேல் சேகரனாரின் தபால்தலை வெளியீட்டை மறைத்த கருணாநிதியின் கூட்டம்!
[image: 600] <http://thevendrar.in/wp-content/uploads/2011/02/sathian1.jpg>நினைவுத்
தபால்தலை அல்லது ஞாபகார்த்த தபால்தலை(Commemorative stamp) என்பது ஏதாவதொரு
இடத்தை நிகழ்வை அல்லது 'ரு நபரை கௌரவிப்பதற்காக வெளியிடப்படும் தபால்தலை
ஆகும். உலகின் பெரும்பாலான தபால் சேவை நிறுவனங்கள் 'வ்வொரு ஆண்டும் இவ்வாறான
பல ஞாபகார்த்த தபால்தலைகளை வெளியிடுகின்றன. இவ்வாறான தபால் தலைகளின் முதல் நாள்
வெளியீடு, கௌரவிக்கப்படுகின்ற விடயத்துடன் தொடர்புடைய இடங்களில் 'ரு சிறிய
விழாவாகவும் நடைபெறுவதுண்டு. இந்த முதல் நாள் வெளியீட்டின் போது இதற்கெனச்
சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட கடித உறையில் இத் தபால்தலை 'ட்டப்பட்டு
குறிப்பிட்ட நாளுக்குரிய நாள் முத்திரையும் பதிக்கப்பட்டு முதல்நாள் உறையாக
FDC- First Day Cover விற்கப்படும்.
இதைப்போல் தான் இந்தியாவில் சுதந்திரம் அடைந்தபின் 2200க்கும் மேற்பட்ட
ஞாபகார்த்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் 'வ்வொரு தபால்தலை
வெளியிடப்படும்போதும், குறிப்பாக தியாகிகளுடைய அல்லது தலைவர்களுடைய தபால் தலை
வெளியிடும் போது, அவர்களுடைய சம்பந்தப்பட்ட ஊரிலோ அல்லது மாநிலத்திலோ,
அவர்களின் பிறந்த நாளிலோ அல்லது நினைவு நாளிலோ பெரிய விழா எடுத்து மத்திய மாநில
அமைச்சர்கள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்கள் முன்னிலையிலேயே இந்த தபால் தலை
வெளியிடப்படும். அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது தியாகிகளின்
குடும்பத்தினரை அழைத்து கௌரவிப்பார்கள். ஆனால் 'ன்றரை கோடி தேவேந்திரர்களின்
மதிப்புமிக்க தலைவராக கருதப்படும் தியாகி இமானுவேல் சேகரனார் தபால் தலையை மேலே
சொன்ன எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் நேரடியாக விற்பனைக்கு கொண்டு
சென்றுள்ளனர். இது தியாகி இமானுவேல் சேகரனாருக்கு செய்த மிகபெரிய அவமரியாதை.
[image: 640]<http://thevendrar.in/wp-content/uploads/2011/02/imanuel-sekaran-stamp...>தற்போது
முன்னெப்போதுமில்லாத அதிகளவு மத்திய அமைச்சர்களை கொண்டிருக்கிற திமுக மற்றும்
காங்கிரசின் தேவேந்திரர் விரோத போக்கையே இது காட்டுகிறது. காங்கிரசும் இந்த
கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.
இதைவிட கொடுமை பல்லாயிரக் கணக்கான தபால் தலைகளை வெளியிட்ட நாள், அந்த தபால்
தலையின் புகைப்படம், அதன் விவரம்(Broucher) இவை மூன்றையும் ஆண்டு வாரியாக
வரிசைப்படுத்தி வைத்திருக்கின்ற http://www.indiapost.gov.in/ என்ற அரசு
தபால்துறை இணையதளத்தில் கூட இந்த தபால்தலை வெளியிடப்பட்ட செய்தியை
மறைத்திருக்கிறார்கள். ஆனால் http://stampsofindia.com/ போன்ற தபால்தலை
சேகரிப்பாளர் சேவை இணையதளங்களில் இதைப்பற்றிய முழு விவரங்கள்
கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு FDC என்று சொல்லப்படுகின்ற முதல்நாள் உறை,
அதாவது தபால் துறையே தியாகி இமானுவேல் சேகரனார் படம் போட்ட 'ரு தபால்
உறையில், இமானுவேல் தபால் தலை 'ட்டி, அதிலே அரசு தபால் நிலைய முத்திரையும்
இட்டு விற்பனை செய்துள்ளனர். அந்த கவர் படங்கள் கூட தனியார் இணையதளங்களில்
உள்ளது.
[image: 861]<http://thevendrar.in/wp-content/uploads/2011/02/immanuel-stamp1.jpg>மற்றும்
'வ்வொரு தபால் தலை வெளியிடப்படும் பொழுதும் அதன் இணைப்பாக ரூபாய் 2க்கு
வெளியிடப்படும் பிரௌச்சர் என்று சொல்லக்கூடிய அந்த தபால்தலையைப் பற்றிய விளக்க
கையேடும் நேரடியாக விற்பனைக்கு வந்துள்ளது. இதனுடைய புகைப்படமும் தனியார்
இணையதளங்களில் காணக் கிடைக்கின்றன.
[image: 811]<http://thevendrar.in/wp-content/uploads/2011/02/immanuel-sekaran-broc...>அப்படியானால்
திட்டமிட்டு தியாகி இமானுவேல் சேகரனாருக்கு வெளியிடப்பட்ட தபால் தலையை மறைத்த
தமிழ்நாட்டு அரசியல் தலைவர் யார்?
இந்த தபால் தலை வெளியிடப்பட்ட போது, அத்துறையின் அமைச்சர் கலைஞர் பாணியில்
சொன்னால் 'ரு தலித். ஆனால் அவரும் சேர்ந்து கலைஞரின் ஆலோசனைப்படி,
ப.சிதம்பரத்தின் வேண்டுகோளின்படி மற்றும் ஆதிக்க சாதி எம்.பி.க்கள்,
எம்.எல்.ஏ.க்களின் வேண்டுகோளின் படி, திருமாவளவனின் வேண்டுகோளின்படியும் இந்த
சதித்திட்டம் நிறைவேறியுள்ளது. தேவேந்திரர்களின் வரலாறுகளை தொடர்ந்து மறுத்து
வரும் கலைஞரும் அவரது கூட்டமும் மீண்டும் 'ரு வரலாற்று தவறு செய்திருக்கிறது.
இமானுவேல் சேகரனாரின் தபால் தலை வெளியிடப்பட வேண்டிய காலக்கட்டத்தில்
தமிழ்நாட்டில் தேவேந்திரர்கள் கலைஞருக்கு எதிராக 'ன்றுதிரண்டார்கள் என்ற
காரணத்திற்காகவே இது நடந்திருக்கக் கூடும்.

தேர்தல் கூட்டணி யாருடன்?நெல்லையில் ஜான்பாண்டியன் பேட்டி



திருநெல்வேலி:மதுரையில் பிப்ரவரி 27ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மாநாடு நடக்கிறது.
இதுகுறித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் அரசியல் அதிகாரம் கிடைக்கவும், வாழ்க்கை தரம் மேம்படவும் முழுமூச்சாக செயல்படுவேன். பிரிந்து கிடக்கும் தேவேந்திர குல அமைப்புகளையும், தலைவர்களையும் ஒரே அணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பசுபதி பாண்டியன் மற்றும் சில தலைவர்களிடம் பேச்சு நடத்தும்.வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மாநாடு நடக்கிறது.


இதில் அனைத்து அமைப்புகளின் தலைவர்களையும் அழைக்க உள்ளோம். எங்களது முன்னோர்கள் 1805ம் ஆண்டு பச்சை, சிவப்பு கொடியை அறிமுகப்படுத்தினர். இந்த கொடியை அரசியல் கொடியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் நேரத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம். தேர்தலில் கூட்டணியும் உண்டு. போட்டியும் உண்டு. அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது குறித்து நான் கருத்துசொல்ல விரும்பவில்லை. ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ஊழல் செய்தவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் அவர் தண்டிக்கப்படவேண்டும். ஜாதியின் பெயரை சொல்லி தப்பிக்க கூடாது. இவ்வாறு ஜான்பாண்டியன் பேசினார்.

சென்னை: பசுபதி பாண்டியன் கைது



முதல்வர் வீட்டு முன்பு சாகும் வரை உண்ணாவிரதமிருக்க போவதாக அறிவித்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, அந்த பெயரில் தனிப்பட்டியல் உருவாக்க வேண்டுமென தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன், முதல்வர் கருணாநிதி வீட்டு முன் காலவரையற்ற உண்ணாவிரதமிருக்க போவதாக அறிவித்தார். தொடர்ந்து, பசுபதி பாண்டியன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கிலிருந்து முதல்வர் வீடு நோக்கி செல்ல முற்பட்டவர்களை, போலீசார் கைதுசெய்தனர்.

அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு


தளபதி ஜான்பாண்டியன் nov 30


செவ்வாய், 1 மார்ச், 2011

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு


 ஜான்பாண்டியன்


.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்பட்ட அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு மதுரை, விரகனூர் ரிங் ரோட்டில் நடந்தது. மதுரை மாவட்ட செயலாளர் சரவணபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் பிரிசில்லா பாண்டியன் வரவேற்று பேசினார். மாநாட்டில் இந்திய பவுத்தசபை தேசிய செயலாளர் புத்தபிக்கு டி.சுமேதா, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி பேராசிரியர் பிரபா.கல்விமணி, தென்னிந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் கண்ணையன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். பின்னர் கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மாநாடு குறித்து விளக்கி பேசினார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஜனார்த்தனன் தலைமையிலான கமிசன் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
தேவேந்திர குலத்தினரை ஆதிதிராவிடர்கள் என்று கூறாமல் பட்டியலின மக்கள் என்று அழைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு தேவேந்திர குல மக்கள்தான் அதிக அளவில் நிலத்தினை வழங்கியுள்ளனர். எனவே விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை சூட்டுவதுடன், அவரது நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
பட்டியலின மக்களுக்கு அனைத்து நிலை பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் தனியார் துறையிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஐந்தாண்டு திட்டத்தில் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இதனை இந்த மாநாடு கண்டிக்கிறது.
இந்தியா-இலங்கை இடையிலான சர்வதேச எல்லைக்கோடு பிரச்சினை காரணமாக இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். மேலும் கச்சத்தீவினை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.
சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மாத வருமானத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆய்வு கமிசனை அமைக்க வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்து 500 ஓய்வூதியம் வழங்குவதுடன், விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.
பட்டியல் இன மக்களின் 18 சதவீத இடஒதுக்கீட்டினை இன்றைய மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
இயற்கை வளங்களை பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். விவசாயிகளின் துன்பத்தை போக்கும் வகையில் நதிநீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக தொண்டர்களின் பேரணி நடந்தது. பேரணியை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பார்வையிட்டார்