ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

தியாகி இம்மனுவேல்சேகரனின் நினைவு நாளைஅரசு விழாவாக நடத்த வேண்டும்:

தியாகி இம்மனுவேல்சேகரனின் நினைவு நாளைஅரசு
விழாவாக நடத்த வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை..வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இமானுவேல் சேகரனின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போதுதான் இமானுவேல் சேகரனுக்கு தபால் தலை வெளியிடப்பட்டது. தேவேந்திர குல மக்களின் நலனுக்காக பாடுபடும் இயக்கமாக காங்கிரஸ் கட்சி உள்ளது என்றார்.
அஞ்சலி செலுத்திவிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது: 2011-இல் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அதற்காக இதுவரை காவல்துறைமீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்கவில்லை என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்: இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அதை அறிவிக்க வேண்டும்.

தேவேந்திரகுல மக்களின் புண்ணிய பூமியில் பல்வேறு அரசியல் கட்சியினர் வீர வணக்கம் .

தேவேந்திரகுல மக்களின் புண்ணிய பூமியில் பல்வேறு அரசியல் கட்சியினர் வீர வணக்கம் ...பரமக்குடி, பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் சார்பில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, டாக்டர் சுந்தர்ராஜ் மற்றும் அதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரின் 58-வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நினைவிடம் முழுவதும் மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று காலை அவரின் சொந்த ஊரான செல்லூரை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல, இமானுவேல் சேகரனின் குடும்பத்தினர் நினைவிடத்திற்கு வந்திருந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளின் சார்பில் அஞ்சலி செலுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேரம் ஒதுக்கப்பட்டு அஞ்சலி செலுத்தினர்.
இதன்படி முதன்முதலாக அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, டாக்டர் சுந்தர்ராஜ், அன்வர்ராஜா, எம்.பி. ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் திரளாக சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட செயலாளர் தர்மர், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பரமக்குடிமுனியசாமி, ராமநாதபுரம் ஜி.முனியசாமி, திருவாடானை ஆணிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலுச்சாமி,போகலூர் யூனியன் தலைவர் நாகநாதன், பரமக்குடி நகரசபை தலைவர் கீர்த்திகா முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, தி.மு.க. சார்பில் மாநில துணை செயலாளர் துரைச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, தமிழரசி, மாவட்ட செயலாளர் திவாகர், முன்னாள் எம்.பி. பவானிராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில தலைவர் இளங்கோவனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், த.மா.கா சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகவேல்ராஜன், ராம்பிரபு, ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திரராமவன்னி, ரெங்கநாதன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் வைகோ கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாhர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தலைவர் ஜான்பாண்டியன், பா.ம.க. சார்பில் மாநில பொது செயலாளர் வடிவேல்ராவணன், தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர். டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D .M .L .A ., தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுதவிர அந்தந்த பகுதிகளில் இமானுவேல் சேகரன் திருஉருவப்படத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு பொங்கல் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங், ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன், டி.ஐ.ஜி. ஆனந்தகுமார்சோமானி ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ராமநாதபுரம் மயில்வாகனன் உள்ளிட்ட 9 போலீஸ் சூப்பிரண்டுகளும், 7 உதவி போலீஸ் சூப்பிரண்டுகளும், 20 துணை போலீஸ் சூப்பிரண்டுகளும் பாதுகாப்பு பணிகளை திறம்பட மேற்கொண்டனர். ஆளில்லா விமானம் மற்றம் 360 டிகிரி கோணத்தில் நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் சக்திவாய்ந்த கேமரா பொருத்தப்பட்ட வானில் பறக்கும் பலூன் போன்றவற்றின் மூலம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் மாவட்டம் கொண்டுவரப்பட்டு அமைதியாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு

..தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் டாக்டர் .அய்யா அவர்களின் எழுச்சி உ ரை...20 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இவ்விழா இன்று உலக அளவில் பேசப்படுகிறது. இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அல்லது நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என 20 வருடங்களாக கோரி வருகிறோம். சட்டப்பேரவையில் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை.
2010 இல் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசியபோது, பிரிந்து கிடக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே இனமாக அறிவிக்க வேண்டும். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினோம்.
இந்த 3 கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்ததால் கூட்டணி வைத்தோம். ஆனால் இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு :.......தொல்காப்பியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களை ஐந்து வகைகளாகப் பிரித்தார்கள். அதனுடைய அடிப்படையில் தான் மக்களையும் பார்த்தார்கள். குறிஞ்சி என்று அழைக்கப்படக்கூடிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மலைவாழ் மக்கள். முல்லை என்று அழைக்கப்படக்கூடிய மலையினுடைய அடிவாரத்திலே வாழ்ந்த மக்கள் இடையர்கள். ஆறுகள், ஆறுகளுடைய படுகைகள், எங்கே நீர்ப்பகுதி இருக்கிறதோ அங்கே வாழ்ந்தவர்கள் மருதநில மக்கள், அவர்கள் தான் தேவேந்திரகுல வேளாளர்கள், அவர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்.
இந்த அரசு இந்த தமிழ் மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டுமென்று சொன்னால் நீங்கள் தமிழர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டுமென்று சொன்னால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு சமமான அங்கீகாரம் கொடுக்காமல் நீங்கள் தமிழகம் என்று சொல்லிக்கொள்வதிலோ தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதிலோ அல்லது திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதிலோ அர்த்தமே கிடையாது என்பதை இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன்.
எனவே இந்த அரசு இன்னும் எட்டு மாத காலம் இருக்கிறது, வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பிறந்த தினம் வரப்போகிறது, அதற்குள்ளாக நிச்சயமாக இந்த அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று நான் கருதுகிறேன். இல்லையென்றாலும் புதிய தமிழகம் அதைப் போராடிப் பெறும் என்பதையும் இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன். புதிய தமிழகத்திற்கு போராட்டம் என்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் போராடாமல் கொடுக்க வேண்டியதுதான் அரசுக்கு அழகு என்பதையும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
நீங்கள் கிலோ கணக்கிலே எதோ தங்கமெல்லாம் கொடுக்கிறீர்கள். ஆனால் நாங்கள் இப்போது கேட்பது ஒரு சிறிய அடையாளம் மட்டும் தான். நாங்கள் வேறொன்றும் புதிதாகக் கேட்கவில்லை, தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற ஒரு சிறிய அடையாளம், தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுதல் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இவை மூன்று தான் நாம் கேட்கக் கூடிய மிக முக்கியமான கோரிக்கைகள்.
எனவே இந்த மூன்று கோரிக்கைகளையும் இன்றைய அரசு எஞ்சி இருக்கக்கூடிய காலகட்டங்களில் நிறைவேற்றித் தரும், இல்லையென்று சொன்னால் நிறைவேற்றித் தரக்கூடிய அரசை உருவாக்கித் தரக்கூடிய சக்தி புதிய தமிழகத்திற்கு உண்டு என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

'' தெய்வ திருமகனார் தியாகி இமானுவேல் சேகரனார் '' அவர்களின் குரு பூஜை சீரும் சிறப்புமாக நடை பெற்று முடிந்தது.

'' தெய்வ திருமகனார் தியாகி இமானுவேல் சேகரனார் '' அவர்களின் குரு பூஜை சீரும் சிறப்புமாக நடை பெற்று முடிந்தது.
.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறபித்த தேவேந்திர குல சிங்களுக்கு & நம் சமூக தலைவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக எந்த ஒரு வன்முறை சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது ... காவல் துறைக்கும் வாழ்த்துக்கள் .. நிகழ்சிகளை ஒருக்கிணைத்து , தலைவர்களை வரவேற்று , சிறப்பான ஏற்பாடுகளை செய்த "தேவேந்திரர் பண்பாட்டு கழக " நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்
.
முதல் முதலில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும் , காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் அவர்களுக்கும் மற்றும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் . திருமாவளவன் அவர்களுக்கும் அனைத்து தேவேந்திர குல மக்கள் சார்பாக நன்றி...!!!!
.
எப்பவும் போல
.
அதிமுகவில் வாய்பேசாத சுந்தராஜ், செல்லூர் ராஜ்.கலந்து கொண்டார் ... அக் ..30 அதிமுகவை தோற்றுவித்த தலைவர் தேவர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதால் அம்மையார் வரவில்லை..
.
திமுகவில் ஊனமுற்ற தங்கவேலன், தமிழரசி.(ஸ்டாலின் அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
தேமுதிகவில் புதியதாக எம்.எல்.ஏ சுபா. (விஜயகாந்த் அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
பி.ஜே.பியில்.சௌந்தராஜன் ( தமிழிசை அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
நாம் தமிழர் : வரவில்லை ( காரணம் கொம்பன் படம் மற்றும் அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
கம்யுனிஸ்ட் : வரவில்லை ( காரணம் நாம் தலித் இல்லாததால் மற்றும் அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
பா.ம.க. : வரவில்லை ( காரணம் மதுரை விமான நிலையம் கண்டன போஸ்டர் )
.
தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வந்தார் ... அதிமுக அணியில் இருப்பதால் எதுவும் பேசவில்லை ....அதைவிட கொடுமை தமாக , பாஜக போன்ற கட்சிகள் அதன் SC அணி தலைவர்களை அனுப்பி வைத்தது .. அந்த அடிமைகள் அந்த கட்சிகளின் SC துறை சார்பாக கலந்து கொண்டது ... இறுதியாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் ..டாக்டர் . க . கிருஷ்ணசாமி .. M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் பல்லாயிரகணக்கான தொண்டர்கள் படையுடன் வீர வணக்கம் செலுத்தினார் .. பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி தேவேந்திர குல மக்களுடைய கோரிக்கைகளையும், அய்யா இம்மானுவேல் சேகரனுக்கு புகழாரம் சூட்டினார் .வீர வணக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உ றவுகளுக்கும் நன்றி ..!!!

செப் .11... மாவீரர் மண்ணில் தேவேந்திர குல மக்களின் மாற்றங்கள் ...!!!!!...

செப் .11... மாவீரர் மண்ணில் தேவேந்திர குல மக்களின் மாற்றங்கள் ...!!!!!... எந்த ஒரு வன்முறை சம்பவத்திற்கும் இடம் தராமல் அமைதியாக .வீர வணக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள் .. "தேவேந்திரர் பண்பாட்டு கழகம் " ஏற்பாடு செய்த சீருடை அணிந்த தொண்டர்கள் அலைகடல் என வந்த கூட்டத்தை கட்டுபடுத்தினர் ... காவல் துறை வெறும் பார்வையாளர்களாக இருந்தனர் ... கட்டுப்பாடு , சுய ஒழுக்கம் , அமைதியான முறையில் கோரிக்கை முழக்கங்கள் , தலைவர்களின் சிறப்பான வழிகாட்டல்கள் ,தேவேந்திரர் சமுகத்தின் நடவடிக்கைகளை அனைத்து தமிழ் சமூகமும் பாராட்டித்தான் ஆக வேண்டும் ... நேர்மையான காவல்துறை அதிகாரிகள் இப்படிப்பட்ட மக்களையா 2011ல் சுட்டு கொன்றோம். என்று நினைக் கிறார்கள் .... அன்று காலை முதல் மாலை வரை காவல்துறைக்கு வேலையே இல்லை .. இது ஒன்று போதாதா அரசு விழாவாக அறிவிக்க ...பல்வேறு அமைப்பினர் வரவேற்பு பதாகைகள் வைத்து இருந்தனர் .. அதில் பெரும்பாலும் "தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை ".. மதுரை விமான
நிலையத்திற்கு "இம்மானுவேல் சேகரன் பெயர் ".. தியகியாரின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் நிறைவை தருகின்றன .... இறுதியாக பல்வேறு தடைகளை தாண்டி வீர வணக்கம் செலுத்திய குரலற்றவர்களின் குரல் .. டாக்டர் . க .கிருஷ்ணசாமி .. M .D .M .L .A ., அவர்கள் நம் மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றும் வகையில் நிறைவுரை ஆற்றினார்

16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் .

16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் . டாக்டர் .க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் விவாதம் .டாக்டர் கிருஷ்ணசாமி:- பட்டியல் இனத்தில் 6 உட்பிரிவுகள் உள்ளன. அந்த பிரிவினரை ஒரே பிரிவினராக தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க உத்தரவிட வேண்டும்.
அமைச்சர் ந.சுப்பிரமணியன்:- இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் கலியபெருமாள் என்பவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அதுபற்றி இப்போது பேசமுடியாது.
டாக்டர் கிருஷ்ணசாமி:- தியாகி இம்மானுவேல் சேகரனின் பிறந்ததினம், மறைந்த நாள் ஆகியவற்றை அரசு விழாவாக கடைபிடிக்க வேண்டும். அவரைப் பற்றி இந்த அவையில் அண்ணா, “இம்மானுவேல் சேகரனை ஒரு வீரனாக கருத வேண்டும். அவரை நாட்டு சரித்திரத்தில் குறிப்பிட வேண்டும்” என்று பேசியிருக்கிறார். மதுரை விமான நிலையத்துக்கு இம்மானுவேல் சேகரனின் பெயரை வைக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்றஉ ரை முழு தொகுப்பு .

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்றஉ ரை முழு தொகுப்பு ..... "திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும்" - பேரறிஞர் அண்ணா.
நேற்று (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி!
“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.
அதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்.
ஆனால் குறிக்கிட்டுப் பேசிய அமைச்சர் ‘ஏதோ வழக்கு இருக்கிறது’ என்று தவறுதலாக சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்திலே பலர் வழக்கு தொடுத்திருக்கிறதற்கெல்லாம் ‘இதுபோன்ற பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என்று ஆறு பெயர்களில் அழைக்கப்படக்கூடியவர்களை ஏன் ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்று தான் நீதிமன்றங்கள் கேட்டிருக்கின்றனவே தவிர வேறு எதுவும் நீதிமன்றங்கள் சொல்லவில்லை.
மேலும் 1957-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரத்தின்போது தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட பின்பு அக்டோபர் 30-ஆம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியபொழுது, ‘திரு.இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையிலேயே அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல. தமிழ்நட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காக பாடுபட்டு தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக்கப்பட வேண்டியது. திரு.முத்துராமலிங்கத் தேவர் மறவர்களுக்கு தலைவராக இருந்தார்’ என்று கூறியிருக்கிறார்.
அப்படியெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதில் எந்தவிதமான தவறுமில்லை; அவர் தகுதியானவர், என்ற அடிப்படையிலே நான் பேசினேன். அதேபோல இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற மூன்று முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.
மேலும் இன்று காலையிலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் அரசினுடைய தனித் தீர்மானம், அதாவது, ஈழ மக்களுக்கு எதிராக 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரின்போது நடந்த போர் விதிமுறை மீறல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து “ International Independent Investigation” என்று அழைக்கப்படும் சர்வதேச சுதந்திரமான விசாரணை தான் நடத்தப்பட வேண்டுமே தவிர, அந்த விதிமுறைகள் குறித்து இலங்கை அரசே விசாரிக்கலாம் என்ற அமெரிக்காவினுடைய மாறுபட்ட நிலைபாட்டை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது.
இந்திய அரசு ஐ.நா.வில் சர்வதேச சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்த வேண்டும் என்று சட்டமன்றத்திலே இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாங்கள் ஆதரித்துப் பேசினோம். அதற்கு சான்றுகளாக இப்பொழுது சேனல் 4 என்ற ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் துப்பாக்கிச்சூடுகள், அதேபோல “No Fire Zone” என்று அழைக்கப்படக்கூடிய துப்பாக்கிச்சூடுகள் எங்கெங்கெல்லாம் நடத்தப்படக்கூடாதோ அங்கெல்லாம் அதாவது மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட நடத்தப்படக்கூடாத இடங்களிலெல்லாம் நடத்தப்பட்டிருக்கின்றன என்ற ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல ஈழ விடுதலைப் போரில் மிகப்பெரிய தியாகம் செய்திருக்கக்கூடிய பிரபாகரன் அவர்களுடைய புதல்வர் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பாட்டார் என்ற ஆதாரத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. எனவே இப்படிப்பட்ட பல போர் விதிமுறை மீறல்கள் எல்லாம் இப்பொது மெல்ல மெல்ல வெளியே வந்துகொண்டிருக்கின்றன. எனவே இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும், ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று சொன்னால் சர்வதேச அளவிலான நேர்மையான, நியாயமான, சுதந்திரமான விசாரணை வேண்டுமென்பதை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

தேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ..!!!!

 தேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ..!!!! (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி!
“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.
அதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்..

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி:

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?..செப். 17–ராமநாதபுரம்,.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த ஒவ்வொருவருக்கும் தனித் தனியே நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதன்படி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. [மதியம் 2.00 மணி }.அவர் அந்த நேரத்தில் வராமல் சற்று தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து காட்டுபரமக்குடி கிராம நிர்வாக அலுவலர் தீர்த்த ரத்தினேஸ்வரன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் விசாரணை நடத்தி டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?..

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?.....பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்தாமல், தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தியதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது பரமக்குடி போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
இமானுவேல்சேகரன் நினைவு தினமான செப்.11-ஆம் தேதி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அஞ்சலி செலுத்தும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பகல் 1.30 மணி முதல் 2 மணி வரை என நேரம் ஒதுக்கப்பட்டிருந்தும் மாலையில் தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் நினைவிடத்தின் முன்பாகவே கூட்டம் நடத்தி அதில் ஒலிபெருக்கியிலும் பேசினார். ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் காலதாமதமாக வந்தமைக்காகவும், விதிமுறைகளை மீறியதற்காகவும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் மீது பரமக்குடி நகர் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

காலச்சுவடுகள் .......இந்திய முதல் குடிமகன் பிரணாப் அவர்களை சந்தித்து வாழ்த்து கூறிய முதல் தமிழக அரசியல் கட்சி தலைவர் ... டாக்டர் . க . கிருஷ்ணசாமி .. M.D .M .L .A ., அவர்கள் ..

தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும் ......!!!!...தேவேந்திரர் சமுக பிரிவில் வாதிரியார்கள் ..!!!!!..


..... தமிழகத்தின் மூவேந்தர் மரபைத் தோற்றுவித்து, மருத நிலத்தில் நெல் வேளாண்மையை உண்டு செய்து, மள்ளர், களமர், தேவேந்திர குல வேளாளர், காலாடி, கடையர், பலகனார், பணிக்கனார், குடும்பனார், பண்ணாடி, வயல்காரர், வாதிரியார்… என்று பல்வேறு பெயர்களில் வாழ்ந்து வரும் தமிழகத்தின் மூத்த குடி தேவேந்திர குல சமுகமாகும் ..தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிகளின நெருக்கடிக்கு ஆளாகி ஒடுக்கப்பட்ட மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களின் ஒரு பிரிவினரே இன்று தங்களை தனிச் சாதியினர் என்று சொல்லிக்கொள்ளும் வாதிரியார் இனத்தவர்...நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் ஆதிக்க சாதியினரின் பண்பாட்டு ஒடுக்குதலுக்கு ஆளான தேவேந்திரர்கள் தமது மருதநில வேளாண் மரபை விட்டு விடாது போராடி இன்றும் வேளாண் மக்களாக வாழ்ந்து வருகின்றனா;. ஆனால் இங்கே ஒரு வியப்பான, விந்தையான சமூக மாற்றம் இயல்பாக நடந்தேறியிருக்கிறது. வேளாண் தொழில் செய்த மள்ளர்களில் ஒரு பிரிவினர் நெசவு செய்தனர். அவர்களே இன்று வாதிரியார் என்று அழைத்து கொள்கின்றனர்.. தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் உள்ளடக்கி பரமன்குறிச்சியை மையமாகக் கொண்டு சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழும் மொத்த மக்கள் தொகை சுமார் 25000 பேர் மட்டுமே ஆவர்.... தமிழகத்தின் மக்கள் தொகையில் ஒரு கோடிக்கு மேல் வாழும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளரின் ஒரு பிரிவினர் தங்களை அந்நியப்படுத்தி சிறுபான்மையாக காணாமல் போய் விடுவரோ என்ற கருணையுடன் கூடிய தொலைநோக்கு பார்வையும் எமக்கு உ ண்டு... தமிழகத்தில் பெரிதும் பரவி வாழும் ஒன்றரை கோடி தேவேந்திர குல வேளாளாகளும் பல்வேறு குலப்பட்டங்களையும் பிரிவுகளையும் கொண்டு விளங்குவர் ஆவர். இதில் தென் மாவட்டங்களில் வாதிரியார் எனும் பட்டத்துடன் வாழும் சமுதாயத்தினர் தேவேந்திர குல வேளாளரில் ஒரு பிரிவினரே ஆவர்..வாதிரியார் தேவேந்திர குலத்தவரே என்பதற்கான ஆதாரங்கள்..... “பரமன்குறிச்சி பள்ளர்கள் நெசவுத்தொழில் செய்து வந்தார்கள். வெள்ளையரது வியாபாரச் சுரண்டலினால் இவர்களது தொழில் நசிந்தது. இவர்களில் சிலர் வெள்ளையரால் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதனால் அதிருப்தியுற்றிருந்த பள்ளரையும் ஊமைத்துரை வெள்ளையர் எதிர்ப்பணியில் சேர்த்துக் கொண்டான்”.. (வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் -பக்-14).... “வெள்ளையர் எதிர்ப்பு போரில் சாதி ரீதியில் பள்ளர்கள் கணிசமாக இருந்தார்கள். இவர்களைத் தன் பக்கம் குறிப்பாக பரமன்குறிச்சி பள்ளர்களை தமது போராட்டத்தில் பயன்படுத்திக் கொண்டான் ஊமைத்துரை” (கதைப்பாடல்களும சமூகமும் – பக்-70)...திரு.வே.கோபாலகிருஷ்ணன் சட்டமன்ற பேச்சு
4.5.95 அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற ஒறுப்பினர் திரு,வே.கோபால கிருஷ்ணன் ஆதிதிராவிட நலத்துறை மானியக் கோரிக்கையின் மீது பேசியபோது பின்வருமாறு பதிவு செய்திருக்கின்;றார். “தமிழகத்தில் 1 கோடி மக்கள் தொகை கொண்ட தேவேந்திர குல வேளாளர் பள்ளர், குடும்பன் பண்ணாடி, காலாடி, வாதிரியான், பட்டக்காரர் தேவேந்திர குலத்தான் என்று பல்வெறு பெயர்களில் அரசு பதிவு இதழ்களில் குறிப்பிட்டுள்ளது. இப்பிரிவு அனைத்தையும் ஒரே பிரிவாக “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்கப்பட வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்” (மள்ளர் மலர் – ஜூன் 1995- பக்22) இப்பதிவு தேவேந்திரர்களில் ஒரு பிரிவு வாதிரியார் என்பதையே காட்டுவதாகும். வாதிரியாருக்கென திருச்செந்தூரில் மடம் ஒன்று பாழடைந்த நிலையில் இன்றும் இருப்பதும், அது தேவேந்திர குலத்தாருக்கான மடத்தோடு ஒட்டி அமைந்துள்ளது – இவர்களது தேவேந்திர குல வேளாளருக்குமான பண்பாட்டு உறவையும சாதியத் தொடர்பையும வெளிக்காட்டும் சரித்திரச் சான்றாகும். 1976-க்கு முன்னர் இவர்கள் பள்ளர் என்றே வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வசதிக்காகத் தங்களை இனங்காட்டியது தேவேந்திரருக்கும் வாதிரியார்களுக்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை வலியுறுத்துவதாகும். வாதிரியார் தெரு “பள்ளக்குடி” என அழைக்கப்படுவது மேலும் இத்தொடர்பை வலு சேர்க்கிறது.
நெசவுத்தொழிலை ஏற்றுள்ள வாதிரியார் சமூகம் பண்பாடு பழக்க வழக்கங்கள் என்பதோடு பள்ளர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டு வாழ்வது அனைத்திலுமே தேவேந்திரரோடு தொடர்புடைய சமூகமாக விளங்குவதால் இவர்களைத் தேவேந்திரர்களின் ஒரு உட்பிரிவாகவே நான் கருதுகிறேன் .... தற்போது தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை கோரி வலிமையான போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் வாதிரியார்கள் தங்களையும் இணைத்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

வாதிரியார்... தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் ஒரு பிரிவே ..!!!!........

...1956 ஆம் ஆண்டு அரசு வெளியட்ட தாழ்த்தபட்டோர் (பட்டியல் சாதி) பட்டியலில் பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் சாதி சேலம் , கோவை மாவட்டகளில் மட்டும் உள்ளதாக குறிப்பிடபட்டிருந்தது.
வரலாறு தெரிந்த சான்றோர்களான நம் முன்னோர்கள் வாதிரியார் பள்ளரின் உட்பிரிவு என்பதையும் ,
வாதிரியார் நெல்லை ராமநாதபுரம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் அரசுக்கு மனு செய்தனர்.
அரசும் மனுவை ஏற்று ஆய்வு செய்து கோரிக்கை உண்மை என்பதை ஏற்று பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் மாநிலம் முழுமையும் தாழ்த்தபட்டோர் என்று 1957 ஆம் ஆண்டு ஆணையிட்டனர்.
ஆனால் இந்த உண்மையை மறைத்து வாதிரியார் சாதி தாழ்த்தபட்டோர் பட்டியலில் 1976 இல் தான் சேர்க்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக ( நம்மை ..... நினைத்து ) இன்று வரை ஏதோ உள்நோக்கத்துடன் சிலர் கூறி வருகிறார்கள்
இவர்களை வரலாறு மன்னிக்க கூடாது

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்கம் ...... நன்றி .. தமிழக அரசியல் வார இதழ் {02.09.2015}.

.....வீரன் சுந்தரலிங்கம் ....தேவேந்திரகுல வேளாளர்கள் தங்கள் குல வீரத்தின் அடையாளமாக கருதும் 18வது நூற்றாண்டு தளபதி ..வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு கட்டத்தில் தளபதியாக இருந்து கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு எதிரான கட்டபொம்மனின் போராட்டத்தில் பங்கு வகித்தார் .தூத்துக்குடி மாவட்டத்தின் கவனகிரி கிராமத்தில் பிறந்த சுந்தரலிங்கம் மள்ளர் இனத்தைசேர்ந்தவர் ..சேர /சோழ / பாண்டியர் காலத்தில் மள்ளர் என்று அழைக்கப்பட்ட இனம்தான் பின்னால் பள்ளர் என்று மருவியது என்கிறார்கள் . தேம்பாவணி பாடிய வீரமாமுனிவரும் , பேரூர் புராணம் எழுதிய கச்சியப்ப முனிவரும் மள்ளர் ..பள்ளர் என்ற இரு பதங்களையும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் . பிற்கால திராவிட எழுத்தாளர்கள்.. குறிஞ்சி , முல்லை ., மருதம் , நெய்தல் , பாலை என்ற ஐவகை தமிழ் நிலங்களில் முறையே குறவர் , இடையர் ,மள்ளர் ,{உ ழவர் } பரதர் என்ற இனத்தவர்கள் வாழ்ந்து முறையே வேட்டை , ஆதிறை மேய்தல் , உ ழவு ,மீன்பிடிப்பு ,தொழில்களை செய்து வந்தனர் என்பது சங்க இலக்கியங்கள் தொட்டு பதிவான தகவல் . இதில் சொல்லப்படும் உ ழவர்கள் மள்ளர்களைக் குறிக்கும் என்று ஒரு கருத்தும் , சேர /சோழ /பாண்டியர்களே மள்ளர்கள்தான், ஆரம்ப காலத்தில் அரசு குலத்தவராக இருந்த மள்ளர்கள் பிற்காலத்தில் வடுக , சாளுக்கிய , நாயக்கர் படையெடுப்புகளினால் உ ழவு தொழிலை தழுவினார்கள் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன ..மள்ளர்கள் தமிழர் / திராவிடர் நாகரீகத்தில் குடும்பம் என்ற சமுதாய கட்டமைப்பை ஏற்படுத்தினர் . அதனால் அவர்கள் குடும்பனார் என்றும் அழைக்கப்பட்டனர் . மள்ளர்களின் கொண்டாட்டம்தான் சோழ மன்னர்கள் கொண்டாடிய இந்திரவிழா என்றும் , இன்று நாற்று நடும் விழாவை இந்திரவிழாவாக கொண்டாடுகிறார்கள் எனப்படுகிறது .சோழ மன்னன் நெடுமுடிகிள்ளி இந்திரவிழா கொண்டாடமல் விட்டதால்தான் பூம்புகார் கடற்கோளினால் அழிந்தது என்று நம்புகிறார்கள் . இந்த மள்ளர் இனத்தை சேர்ந்த சுந்தரலிங்க குடும்பனாரின் முழு பிறப்பு விவரங்கள் தெரியவில்லை என்றாலும் தென் தமிழகத்தில் இன்னும் புழக்கத்தில் இருக்கும் நாட்டுப்புற பாடல்களில் இருந்து வீரன் சுந்தரலிங்கத்தின் வீர வரலாற்றை தெரிந்து கொள்ள முடிகிறது . கவனகிரி கிராமம் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி அருகில் உ ள்ளது .சுந்தரலிங்கம் தனது இளமை காலத்திலேயே சடுகுடு , சதுரங்கம் என்று அந்த பகுதியில் பிரபலமான விளையாட்டு வீரனாக இருந்ததாக தெரிகிறது .

மள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்கம் ...... நன்றி

மள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்கம் ...... நன்றி .. தமிழக அரசியல் வார இதழ் {02.09.2015}......வீரன் சுந்தரலிங்கம் .......சுந்தரலிங்கத்தின் வீரத்தையும் , தைரியத்தையும் நேரில் கண்ட கட்டபொம்மன் தனது படையில் சேர்த்துக் கொண்டார் .. பின்னாளில் கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவரானார் ... இது நடந்தது 1775...80 கால கட்டத்தில் இருக்கும் . பின்னால் கிழக்கிந்திய கம்பெனி படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டு தாக்கிய போது , சுந்தரலிங்கம் தன் மாமன் மகளை ஆட்டு மந்தையை ஓட்டிச் செல்ல செய்து , ஆடுகளுக்கிடையே ஒளிந்து வெள்ளையர்களின் வெடிகிடங்கை நோக்கி சென்றார் .. ஆங்கிலேய வீரன் ஒருவன் குரல் எழுப்ப , நிலைமை மீறிவிட்டது என்பதை புரிந்து கொண்ட சுந்தரலிங்கம் ஒரு தீப்பந்தத்தை கொளுத்திக்கொண்டு வெடிகிடங்கின் மேல் குதித்துவிட்டார் . அவருடன் அவரது முறைப்பெண் வடிவும் குதிக்க , வேடிக்கிடங்கு வெடித்து சிதறியது . இது நடந்தது 1796 அல்லது 1799 ஆக இருக்கலாம் .இந்திய சுகந்திர போராட்ட சரித்திரத்தில் 18ம் நூற்றாண்டிலேயே "மனித வெடிகுண்டு "... தற்கொலைப்படை என்ற பெருமையை வீரன் சுந்தரலிங்கம் / வடிவு ஆகியோரை சாரும் ... இதே பெருமையை 1780ல் வேலுநாச்சியாரின் பெண் தளபதி குயிலியும் பெறுகிறார்கள் .. வீரன் சுந்தரலிங்கம் இன்றளவும் தேவேந்திர குல வேளாளர்களின் பெருமையாக கருதப்படுபவர் . சுகந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய சுந்தரலிங்கத்தின் வீரமும் , தியாகமும் நிச்சயம் அவரது இனம் தாண்டி , அவரது பெருமை மனித குல வரலாற்றில் ஒரு அடையாச் சின்னமாக விளங்கும் .

ஆகஸ்ட்31_தேவேந்திரகுல_மக்களின்_தன்னெழுச்சி _நாள்!

ஆகஸ்ட்31_தேவேந்திரகுல_மக்களின்_தன்னெழுச்சி _நாள்!
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் .. டாக்டர் . க கிருஷ்ணசாமி .. அவர்கள் தலைமையில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் ..தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளத்தில் 1995 ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி காவல் துறையினரால் தேவேந்திரகுல மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
கொடியங்குளம் கிராமத்திற்க்கு டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியாக நிவாரணம் கிடைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.அதன் காரணமாக அவர்களுக்கு நிவாரணம் கிடைத்தது.
சாதிய வன்முறைகளுக்கு சரியான பதிலடி எதிரியின் போர் உத்திகளையே நாமும் கையாள வேண்டும் என்ற டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வழிகாட்டுதலால் தென் தமிழகத்தில் ‘தாக்கினால் திருப்பித் தாக்குவோம்’ புதிய உத்தி பின்பற்றப்பட்டது.
அச்சமயத்தில் தென் தமிழகத்தில் பெரும் பாலான கிராமங்களில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு திரட்டினார்.சுற்றுப் பயணத்தின் இருந்த எழுச்சி, பலரது கவனம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பக்கம் திரும்பியது.
இந்த கொடியங்குளம் கலவரத்திற்க்கு பிறகு தான் தென்தமிழகத்தில் உள்ள தேவேந்திரகுல மக்கள் தன்னெழுச்சியாக எழுந்து போராட துவங்கினார்கள்.

ஆகஸ்ட்31 தேவேந்திரகுல மக்களின் தன்னெழுச்சி நாள் !!!!!

ஆகஸ்ட்31 தேவேந்திரகுல மக்களின் தன்னெழுச்சி நாள் !!!!!
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் .. டாக்டர் . க கிருஷ்ணசாமி .. அவர்கள் தலைமையில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் 1995, ஆகஸ்ட் 31-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம், கொடியங்குளம் எனும் குக்கிராமத்தில் தமிழக காவல்துறையினர் குற்றவாளியைப் பிடிக்கப் போகிறோம் என்று கூறி ஒட்டுமொத்த கிராமத்தையே சூறையாடிய கொடிய சம்பவம் நிகழ்ந்த கொடியங்குளம் கறுப்பு தினம் இன்று. கடந்த ஒராண்டு காலமாக வட தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதி ஆதிக்கத்தின் தொடக்கப் புள்ளியான 2012 நவம்பர் 7 அன்று நிகழ்ந்த தருமபுரி கலவரத்துக்கான விடை, விடுதலை கொடியங்குளத்தில் தான் இருக்கிறது. உண்மையில் இந்தக் ‘கொடியங்குளம் கலவரத்தில் தான்’ தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் சமூக வன்முறைக்கு எதிராக தலைவணங்காத உறுதியினைக் காண்பித்தார்கள். அதுவரையில் சமூக நல்லிணக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதி ஒடுக்குமுறைகளை கடைப்பிடித்து வந்த ஆதிக்க சாதியினர் 1995-க்குப் பிறகு சமூக உரிமையை, சம நீதியை ஏற்றுக்கொள்ள தொடங்கினர்.
1995, ஆகஸ்ட் 31--இல் குற்றவாளியை பிடிக்கப்போகிறோம் என்று கூறி தமிழக காவல்துறையினர் கொடியங்குளம் கிராமத்தில் புகுந்தனர். ஆனால் சென்றது காவல்துறையினர் அல்ல, காவல்துறையினர் போன்று வேடமிட்ட காட்டுமிராண்டிகள் என்பது பின்புதான் தெரிய வந்தது. கிராமத்திற்குள் புகுந்தவர்கள் குற்றவாளிகளை தேடுவதை விட்டுவிட்டு வீடுகளில் புகுந்து கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர். வீடுகளில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. பணமும், நகைகளும் களவாடப்பட்டன. பின்புதான் தெரிந்தது அந்த காவல்துறையினர் அனைவரும் கள்ளர்கள் என்று. சூறையாடப்பட்ட கிராமத்திற்கு நீதிகேட்டு அன்றைய தேவேந்திரர்குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தனது போராட்டத்தை ஆரம்பித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பதிக்கப்பட்ட கிராமத்தை பார்வையிட அன்றைய முதல்வர் நேரில் வந்த போது ஒட்டுமொத்த கிராமமே முதல்வர் சந்திப்பை புறக்கணித்தது. அவர் கொண்டு வந்த நிவாரண நிதியையும் அம்மக்கள் திருப்பினர். அவர்கள் தன்மானம் மிக்கவர்கள் என்பதை நிரூபித்தார்கள். மாறாக தென் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களையும், நிவாரண நிதியையும் வண்டி வண்டியாக அனுப்பி வைத்தனர். இதற்குமேல் நிவாரண பொருட்கள் வேண்டாம் என்று கூறி, வந்த நிவாரண பொருட்களை பக்கத்து கிராமங்களுக்கும் பகிர்ந்து கொடுத்த வரலாறு கொடியங்குளத்தில் தான் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சுயமரியாதையோடு வாழ்கிறோம் என்பதை நிரூபித்துக் காட்டினர். தேவேந்திரர்குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தது. ஆதிக்க சாதியினரின் சாதி ஆதிக்க கொட்டம் அடக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் தலைநிமிர்வு உண்டானது. ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாக புதிய தமிழகம் எனும் அரசியல் கட்சி உருவானது. 1995 முதல் 2000 முதல் தேவேந்திரகுல மக்கள் முன்னெடுத்த சமூக சமநீதிக்கான போராட்டத்தில் பல உயிர்கள் களபலியாயின. அவர்களின் உயிர் தியாகத்தால் தான் இன்று தென்தமிழகம் யாருக்கும் தலைவணங்காமல் தலைநிமிர்ந்து நிற்கிறது. கொடியங்குளம் கறுப்பு தினமான இன்று சமூக சம உரிமைப் போராட்டத்தில் களப்பலியான தியாகி பிலிப் அந்தோணி, தியாகி ஆலந்தா சண்முகம் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் நமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் .... புதிய தமிழகம் கட்சித் தலைவர். டாக்டர் .க .கிருஷ்ணசாமி M .D .,M .L .A .,அவர்கள் ..

கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் .... புதிய தமிழகம் கட்சித் தலைவர். டாக்டர் .க .கிருஷ்ணசாமி M .D .,M .L .A .,அவர்கள் ..
கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வு மையம் தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 5.5 கோடி வாக்காளர் கள் இருக்கும்போது, வெறும் 3 ஆயிரம் பேரிடம் மட்டும் கருத்துக் கணிப்பு நடத்துவது யதார்த்தத்துக்கு புறம்பானதாக உள்ளது. எனவே, இது ஒட்டுமொத்த வாக்காளர்களின் கருத்துகளை பிரதிபலிக்காது.
தமிழகத்தில் இருக்கும் மதங்கள், சாதிகள் மற்றும் பிராந்திய கட்சிகளின் செல்வாக்குகள் இதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் எண்ணங்களை பதிவு செய்வதைவிட, ஆய்வு மேற்கொள்பவர்களின் கருத்துகளை மக்கள் மனதில் திணிப்பதுபோல இக்கருத்துக் கணிப்பு முடிவுகள் உள்ளன.

டாக்டர் . க . கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் தேவேந்திரர்களின் போர் பிரகடனம் தேவேந்திர குல மக்களுக்கு விடுதலை களம் அமைத்து கொடுத்தது கொடியங்குளம் - அதுவே ஆகஸ்ட்31..


புராதன கால பொதுவுடைமை
சமுதாயத்திற்கு பிறகு குடும்பம், தனிச் சொத்து அரசுகள் உருவாகின. ஆண்டான் அடிமை, ஜமீன் முறைகள் எதேச்சதிகார அரசு, குடியரசு, முடியரசு, பாட்டாளி வர்க்க
சோசலிச அரசு, பாசிஸ்ட்ட அரசு என பல வகை அரசுகள் தோன்றின. இவற்றில் குடியரசே பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசு அமைப்பாக
இருக்கிறது. மக்களுக்காக மக்களே மக்களால் உருவாக்கப்பட்ட அரசு குடியரசு ஆகும். பாட்டாளி வர்க்க சோசியலிஸ அரசு மற்றும் குடியரசு தவிர அரசு
இயந்திரம் பெரும்பாலான மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறை கருவியாக இருந்து வந்திருகிறது.
விதி விலக்குகளாக முடியரசு குடியரசை போல செயல்படலாம். சர்வாதிகாரி கூட ஜனநாயக
வாதியாக செயல்படலாம் அதை உலகம் ஏற்றுக்கொள்ளும் ஆனால் ஒரு ஜனநாயக
குடியரசு சர்வாதிகார பாசிஸ அரசைப் போல செயல்படுவதை அந்நாட்டு மக்கள்
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் எத்தனை பிளவுகளாக இருந்தாலும் அரசு
இயந்திரம் எச்சார்பற்றதாக நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே நியதி ஆகும். அண்மையில் ஈராக், லிபியா, சிரியா, துனிசியா, எகிப்து, ஏமன் போன்ற
நாடுகளில் அதிபர்கள் அந்நாட்டில் உள்ள ஒரு குழுவுக்கு ஆதரவாக இன்னொரு குழுவை அடக்கி ஒடுக்கிட அரசு இயந்திரத்தை பயன்படுத்தியவர்களின் ஆட்சி
அதிகாரம் பறிக்கப்பட்டது மட்டுமல்ல அவர்களை மக்களே கண்முன்னே கண்டித்த சம்பவங்களையும் உலகறியும்.
1991 முதல் 1996 வரையிலும் தமிழகத்தினுடைய
இன்று முதல்வராக இருக்கக் கூடிய ஜெயலலிதா அவர்கள் தான் அன்றும் முதல்வர். 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி தேவேந்திர குல சமுதாயத்தை சார்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் , முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களால்
தாக்கப்பட்டது தொடர்ந்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ள வடநத்தம் பட்டி மற்றும் வீரசிகாமணியைச் சார்ந்த இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி ஜூலை 27-ந் தேதி முதல் ஒரே நேரத்தில் தென் தமிழகம் முழுமைக்கும் தேவேந்திர குல வேளாளர்களை கொச்சைப்படுத்தியும், சிறுமைப்படுத்தியும் எண்ணற்ற போஸ்ட்டர்கள்
ஒட்டப்பட்டன. தேவேந்திர மக்களை கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஓட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அரசு ஆதரவோடு ஒவ்வொரு மாவட்டமாக பந்த்கள் நடைபெற்றது. தென் தமிழகம் முழுமைக்கும் பல்வேறு இடங்களில் முக்குலத்தோர் தேவேந்திர குல வேளாளர் மோதல்கள் உருவாகின. நெல்லையில் ஜங்சனை சார்ந்த ராமர், லட்சுமணர் என்ற தேவேந்திரர்கள் படு கொலைக்கு ஆளானார்கள். துத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் பேருந்துகளில் தனியாக பயணம் செய்த ஆண்,பெண் இருபாலரும் தாக்குதலுக்கு ஆளானார்கள். தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் அருகே உள்ள ஆலந்தா என்ற கிராமத்தைச் சார்ந்த பலவேசம் மற்றும் துணைவியார் இருவரும் பட்டப்பகலிலே கொலை செய்யப்பட்டார்கள். தேவேந்திர மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டது. அவர்களுடைய வாழ்வாதாரம் சீர்குலைந்தது. அவருடைய நிலம் மற்றும் புலங்களில் முக்குலத்தோரின் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு அழியாட்டம் செய்யப்பட்டன. எஞ்சியவைகளை விட்டு வைக்காமல் கூட்டம் கூட்டமாக வந்து கொள்ளையடித்து சென்றனர். மணியாட்சி சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட
கிராம மக்கள் வாழ்வா?சாவா? என்ற நிலைக்கு
தள்ளப்பட்டார்கள்.
கொடியங்குளத்தை சுற்றி உள்ள 80-க்கும் மேற்பட்ட தேவேந்திர குல ஊர் நாட்டாமைகளின் கூட்டம் நடைபெற்றது. அடுத்து இரண்டாவது நாளில் பெண்கள் போல மாறு வேடம் அணிந்த ஒரு கூலிப்படை மீண்டும் ஆலந்தாவிற்குள் நுழைந்தது. எச்சரிக்கையோடு இருந்த தேவேந்திரர்கள் கொலைகார கூலி கும்பலை 5 கிலோமீட்டருக்கு மேலாக விரட்டினார்கள். மூன்று பேர் தப்பி ஓடி விட்டனர். மரணம் அடைந்த மூன்று பேரினுடைய வீட்டுக்கு துக்கம் விசாரிக்க அன்று மாவட்ட ஆட்சியர் பன்னீர் செல்வம் சென்றார். இந்த சம்பவம் நடந்த நாள் ஆகஸ்ட் -30.
BLOOD IS THICKER THAN WATER- இரத்தம் தண்ணீரைவிட கெட்டியானது என்று சொல்வார்களே அது போலதான்
பன்னீர் செல்வம் இரத்தம் துடித்தது. ஏறக்குறைய ஒருமாத காலத்திற்கு மேலாக தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிராக நடைபெற்ற எந்த தாக்குதலுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் அந்த மூன்று மறவர்களின் 
மரணம் மட்டும் அவர்களுக்கு நெஞ்சை உறுத்தி விட்டது. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி நான்கு ஐந்து மாவட்ட ஒட்டுமொத்த காவல்துறை கொடியங்குளத்தில் குவிக்கப்பட்டது. சென்னையை மையமாக வைத்து இயங்கிய அழகு செக்யுரிட்டி எனும் தனியார் நிர்வன அடியாட்களும் வரவழைக்கப்பட்டார்கள். காவல் துறையிடத்திலே லத்தியும், துப்பாக்கியும் தான் இருக்கும் என்பதையே பெரும்பாலான மக்கள் அறிவர். ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி நவீன ஆயுதங்கள் உட்பட்ட கோடாரி, வேல்கம்பு, அரிவாள்கடப்பாறை போன்ற கற்கால ஆயுதங்களுடன் கொடியங்குளம் சுற்றி வளைக்கப்பட்டது. வீட்டில் உள்ள ஆண்களும், பெண்களும் அடியாட்களாக வந்த செக்யுரிட்டி ஆட்களாலும் அடியாட்களைப் போல மாறிய காவலர்களாலும் விரட்டியடிக்கப்பட்டனர். வீடு வீடாக சென்று அவர்கள் சேமித்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் நிர்மூலமாக்கினர். 10-15 ஆண்டுகள்
அரேபிய நாடுகளுக்கு சென்று அல்லும் பகலும் பாடுபட்டு வாங்கிய தங்களுடைய ஆசைப் பொருட்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கினார். டிவி, ரேடியோக்கள், பேன், மிக்சி, கிரைண்டர் டேப்ரெக்கார்டுகள், இருசக்ர வாகனங்கள், பண்டபாத்திரங்கள் அனைத்தும் அந்த
இடத்தில்தூள்தூளாகின. பீரோக்களும், கட்டில்களும் கோடாரியால் துண்டாக்கப்பட்டன. வீடுகளின்
கதவுகள், ஜன்னல்கள் அத்தனையும் நொறுக்கிப் போடப்பட்டன. அவர்கள் மொசைக் தளங்களைக் கூட விட்டு வைக்க வில்லை. அரசு தபால் மற்றும் ரேசன் கடைகளையும் சூறையாடினர். ஆசையாக வளர்த்த ஆடு, மாடு, நாய்களையும் சுட்டுப் பொசுக்கினர் . வீட்டில் வைத்திருந்த சொற்ப தொகைகளையும், துணி மணிகளையும் விட்டு வைக்க வில்லை. உச்சக் கட்டமாக பொதுக் கிணற்றில் பெட்ரோலையும் ஊற்றினார். எதிர்த்தவர்கள் கை கால்கள் உடைக்கப்பட்டன. இளம்பெண்களின் என்று கூட பார்கவில்லை. மக்களை கட்டிக் காக்க வேண்டிய அரசு மக்களின் சொத்துக்களை சூறையாடியது. சட்டப்படி நடக்க வேண்டிய உயர் அதிகாரிகளே சட்டத்தை காலில் போட்டு உதைத்தார்கள்.
தேவேந்திர குல மக்கள் மீதான தங்களுடைய நீண்ட நெடுநாளைய வன்மத்தை காவல் துறையின் மூலம் தீர்த்து கொண்டார்கள். கொடியங்குலத்தின் மீது நடத்திய தாக்குதல் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மகிழ்விப்பதற்காகவும் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகவும் இன்னொரு பிரிவினரின் மீது ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதமே அதுவாகும். கொடியங்குளம் சம்பவம் நடந்த அடுத்த நாளே முதன் முதலாக அந்த கிராமத்திற்குள் அடியெடுத்து வைத்தது நாம் தான்.
நீதி மன்றம் சென்று நீதியை நிலைநாட்டினோம் 
மக்கள் மன்றம் சென்று மக்களை தட்டி எழுப்பினோம். வெகுண்டெழுந்த தேவேந்திரர்கள் அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியை அகற்றிக் காட்டினார்கள். 
அரச பயங்கர வாதம் அம்பலப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் நடப்பது என்ன ..?..

திருவாடனை கோவில் வழிபாட்டிற்கான குதிரை எடுப்புவிழாவில் நான்கு தேவேந்திரர்களை பலிகொடுத்தோம் மதம் மாறியும் அவலங்கள் தொடர்கின்றன ..இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் நடப்பது என்ன ..?.... வஞ்சகம் , சூழ்ச்சியின் மூலம் ஓரு தேவேந்திரர் எரிப்பு ..... கொடியங்குளத்தில் காட்டிகொடுத்த பாதிரியார் கும்பல் மீண்டும் திருவாடனையிலா ..?.. திருவாடனை தாலுகாவிற்குட்பட்ட, ஓரியூர் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் கனிசமாக வாழ்ந்துவருகிறார்கள். இக்கிராமத்தல் கடந்த 29 ம் புனித அருளாளந்தர் ஆலத்தில் அரோக்கிய அண்ணையின் பிறப்பு விழா கொடியேற்றத்துடன் தொடங்கபட்டுள்ளது.
இவ்விழாவில் இந்த முறை சபை பாதிரியார் , மற்ற ஆதிக்க சாதியினருடன் சேர்ந்துகொண்டு தேவேந்திர குல வேளாளர்களுக்கு மண்டகபடி உரிமையை தர மறுத்துள்ளான். இதனால் வெகுண்டெழுந்த நம் இரத்த உறவுகள் பாதிரியார் மற்றும் ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக ஒருங்கணைந்தனர். இதனால் காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டது. சூழ்ச்சி செய்த பாதிரியார் , பேச்சுவார்த்தைக்காக தேவேந்திரர் பிரதிநிதியை ஆலயத்திற்குள் அழைத்துள்ளான். பேச்சுவார்த்தைக்கு சென்ற . சார்லஸ் தேவேந்திரர் பாதிரியாரின் கட்டளைக்கு இணங்க மறுக்கவே, ஆதிக்க சாதி வெறியர்கள் மற்றும் காவல்துறை துணைகொண்டு பாதிரியார், சார்லஸ் தேவேந்தரனை தீயிற்கு இறையாக்கி உள்ளான்.
தற்பொழுது நம் இனச்சொந்தங்களுடன் , எனது ஆருயிர் நணபர் லெனின் அவர்கள், நீதி கிடைக்கும் வரை சார்லஸ் தேவேந்திரனின் உடலை வாங்கமாட்டோம் என போராட்டகளத்தில் உள்ளார். அதேவேலையில் தகல் அறிந்து ஓரியூர் வரும் நம் இனச்சொந்தங்களை தடுத்துவருகிறது காவல்துறை. சாதி ஆதிக்கத்திற்கு மீண்டும் ஓர் உயிர்பலி கொடுத்துள்ளது நம் சமூகம்.
குறிப்பு : பாதிரயார் உடையார் இனத்தைச் சார்ந்தவன்.
இதர சாதி கிருத்திவர் மற்றும் முஸ்லீம்களை, கிறித்துவ மற்றும் முஸ்லீம்களாக பார்க்கும் இதே சமூகம்! தேவேந்திர இன கிறித்துவ, முஸ்லீம்களை மட்டும் தேவேந்திரனாகவே பார்க்கிறது. இதை நாம் புரிந்துகொண்டு மதம் கடந்து தேவேந்திரர்களாய் ஒன்றிணைவோம்.
இத்தருணத்தில் சார்லஸ் தேவேந்திரணுக்கு வீரவணக்க வணக்கத்தை செலுத்துவதுடன் பத்திரிக்கைதுறையை வண்மையாக கண்டிக்க வேண்டும். ஆம்! நடந்த உண்மை சம்பவத்தை மறைத்து தவறான செய்திகளை வெளியிட்டுவருகறது தினத்தந்தி போன்ற முன்னனி பத்திரிக்கைகள். ஆம்! காவல்துறை உதவி கொண்டு சார்லஸ் தேவேந்திரர் ஆதிக்கச்சாதியினரால் தீயிட்டு கொழுத்தப்பட்டார். ஆனால் பத்திரிக்கைகளில் சார்லஸ் தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார் என செய்தி பரப்பி வருகிறார்கள். இது போன்ற நயவஞ்சக செயலுக்கு துணைநிற்கும் தினதந்தி போன்ற முன்னனி பத்திரிக்கைகள் தேவேந்திரர்களிடம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்! அன்று தெரியும் ஆதிக்க சாதி மற்றும் ஆளும் வர்க்கங்களுக்கு ஜால்ரா அடிக்கும் இந்த பத்திரிகை, ஊடகத்துறைகளுக்கு இந்த தேவேந்திர குல வேளாளர்கள் யார் என்று!...