ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

பாண்டியர்கள் -- நிலை நாட்டும் நீதி மன்ற தீர்ப்பு


பள்ளர்களே பாண்டியர்கள் -- நிலை நாட்டும் நீதி மன்ற தீர்ப்பு
========================================================
"செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் இடையே தொடர் சாதிய மோதலையோட்டு 1920 கலீல் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உருயதேன்ரும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளக் கூடாதென்றும் மறவர்கள் சார்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட வளரார்று ஆவணங்கள், நிலா ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று 'பள்ளர்கள் தான் பாண்டியர்கள்' என்று கொல்லம் நீதி மன்றம் தீர்ப்பு தந்துள்ளது."

Quilon District Court Judegement, Travancore State.
நாவலாசிரியர் பூமணி (நேர்காணல்)

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

மருதம் தொலைகாட்சி துவங்கப்பட்டது


தமிழினத்தின் தலைக்குடியாகிய மள்ளரினமே…
வாழ்த்துக்கள்…

தமிழ்நாடு தேவேந்திர குல வேளார் சங்கத்தலைவரும், அகில இந்திய தமிழக முன்னேற்றக் கழக நிறுவனத்தலைவருமான ஐயா பேராசிரியர். குருசாமி சித்தர் அவர்களால் 09.09.2012 அன்று கோயம்புத்தூர், தமிழ்ப் பண்பாட்டு சமூக ஆய்வு மன்ற அரங்கில், "மருதம் தொலைக்காட்சி"யின் முன்னோட்ட நிகழ்வாக இணைய தள ஒளிபரப்புச் சேவை துவக்கி வைக்கப்பட்டது.
மள்ளர் கலை இலக்கியப் பேரவையின் தலைவர் திரு.பொன்னையா, அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சமூக அறிஞர் பெருமக்கள் பெருந்திரளான அறிஞர்கள் கலந்து கொண்டார்கள். திருவாளர்கள் சண்முகனார், அய்யனார், ரசிதாசன், ராஜேந்திரன், தங்கவேலு மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். "மருதம் தொலைக்காட்சி" இணைய தள சேவையினை துவக்கி வைத்த மருதம் தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநர் ஐயா பேராசிரியர். குருசாமி சித்தர் பேசுகையில், 
"மருதநிலப் பண்பாடு 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. தமிழகத்திலும், இந்தியாவிலும் மற்றும் உலகமெங்கிலும் வாழுகின்ற மூவேந்தர் மரபான தேவேந்திர குல வேளாளர்கள் எனும்'மள்ளர்கள்' இந்த மருதம் தொலைக்காட்சியின் இணையதள சேவையினைப் பயன்படுத்திக் கொண்டு தம் வரலாறுகளையும், மரபையும் மீட்டெடுத்து தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு முயலவேண்டும். உலக நெல் நாகரிகத்தின் மூத்த குடியினரான மள்ளர்கள் தங்களது மாண்புகள் பற்றித் தெரிந்து கொள்வதோடு, சமகால தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டு வாழ்வில் உயர்வடைய வேண்டும். 
இலவசங்களுக்காக நமது அடையாளத்தை இழந்து விடக் கூடாது. நம்மை ஆதி திராவிடர்கள் என்று அழைப்பது முரண். நாம் தமிழினத்தின் மூத்த குடியினர். தமிழர்கள் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாகப் பேணிக் காத்து வந்த பண்பாட்டின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

1990-களிலிருந்து நாம் வெளியிட்ட 'மள்ளர் மலர்' எனும் சமூக ஆய்வு இதழின் அனுபவம் நிச்சயம் நமக்குக் கைகொடுக்கும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை சீரும், சிறப்புமாக ஆட்சி செய்து வந்த வேந்தர் குலத்தவர் இன்று ஆட்சியை இழந்து அடையாளமற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள். இது குறித்து 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நூல்கள் வெளி வந்தும், பல்வேறு சமூக அறிஞர் பெருமக்கள் ஆய்வு முடிவுகளைத் தெரிவித்திருந்தும் நமது மக்கள் வரலாற்றில் இன்னும் தெளிவு பெற இயலவில்லை.  இந்த நிலை மாற வேண்டும். 'மருதம் தொலைக்காட்சி' தன்னுடைய அயராத சேவையின் மூலமாக நமது சமூகத்தின் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பணியாற்றும்" என்று குறிப்பிட்டார். 
இந்நிறுவனம் ஒளிபரப்பைத் துவங்குவதற்காக உலக அளவில் ஊடக தொழில்நுட்ப சேவை வழங்கும் குழுமங்களின் சேவை ஒப்பந்தத்தை மருதம் தொலைக்காட்சிப் பெற்றுள்ளது. இது தமிழர்களின் பண்பாட்டை மீட்கும். இந்நிறுவனம் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களைப் போன்று பொழுது போக்கு, செய்தித் தொகுப்பு, நேரலை, அரசியல், சமூகம், மெய்யியல், வேளாண்மை, மரபு, கல்வி, மருத்துவம், வணிகம், தொழில், இலக்கியம், பன்னாட்டு நிகழ்வு, விளையாட்டு, பன்னாட்டுத் தமிழர்கள் செய்தி என பன்முகத் தளத்தில் செயலாற்றும்.  இது உலகத் தமிழர்களுக்கான ஒப்பற்ற தொலைக்காட்சியாக மாறும். 
உலகம் முழுவதும் பரவி நிற்கின்ற மள்ளர் சமூகத்துப் பெருமக்கள் அனைவரும் இணைந்து நின்று செயலாற்றி நமது வரலாற்றை, பண்பாட்டை மீட்டெடுக்கக் கூடிய தருணம் வந்திருக்கிறது என்று நம்புகிறோம்.

பசும்பொன் உ.முத்துராமலிங்கம் - சிதையும் புனைவுகள்.


தமிழகத்தில், எழுதப்பட்ட வரலாறாலாக இருந்தாலும், வாய்மொழி வரலாறாக இருந்தாலும், கலைகளின் வாயிலாக காட்டப்பட்ட வரலாறாக இருந்தாலும் அனைத்துமே ஆண்ட பரம்பரையின் வரலாறுகளாக, அரசர்களின் வரலாறுகளாக, ஆண்டைகளின் வரலாறுகளாக, ஆதிக்க ஜாதிகளின் வரலாறுகளாகத்தான் இருந்து வருகின்றன.
muthuramalinga_thevar_400அப்படிப் புனையப்பட்ட வரலாறுகளில் ஒன்றுதான் பசும்பொன் உ.முத்துராமலிங்கம் (தேவர்) என்பவரின் வரலாறு ஆகும்.தென் மாவட்டங்களில் மாத்திரம் அல்ல, முக்குலத்தோர் என்று சொல்லப்படுகிறவர்கள் குழுவாக அல்லது கூட்டமாக வாழ்கிற இடங்களில் மாத்திரம் அல்ல, தமிழகத்தின் தலைநகராய் விளங்கும் சென்னைப் பெருநகரின் மய்யத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத்தின் சிலை உட்பட அவரது நினைவாக நிறுவப்பட்ட அனைத்து சிலைகளின் பீடங்களிலும் பொன்மொழி போல் ஒரு வாசகம் தவறாமல் இடம் பெற்றிருக்கும். அது இதுதான்:   ''தேசமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்''
மேற்காணும் வாசகத்தில் உள்ள இரண்டு சொற்களுக்குமே சொல்விற்பன்னர்கள் பல படப் பொருள் கூறுவர். அப்படிக் கூறுபவர்களில் பெரும்பாலோர் இவ்விரு சொற்களுமே பெருமையும், பெரும் பொருள் பொதிந்தவை என்றுமே கூறுவர்.
'தேசம்' என்கிறபோது, அது வெற்று வரைபடமோ அல்லது அவ்வரைபடம் விரிக்கும் நிலத்தின் வரையறையோ அல்ல! மாறாக, அவ்வரைபடம் வரையறுக்கும் நிலத்தில் வாழும் பல்வேறு இனக்குழு சார்ந்த மக்களையே அது குறிக்கும். இந்த இந்தியா என்கிற தேசம் விசித்திரமானது. இதில் பல்வேறு மொழி பேசுகிற, வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். இந்த வேறுபாடுகளை கடந்தவர்கள்தான் இதனை ஒரு தேசமாகக் கருத முடியும்-கண்ணைப்போல் காத்திடவும் முடியும். 120 கோடிக்கும் மேலான மக்கள் தொகைக்கொண்ட இத்தேசத்தில் அப்படி ஒருவரை கண்டறிவதென்பது கடற்கரை மணலில் விழுந்த கடுகைத் தேடுவது போல் தான் இருக்க முடியும்.
'தேசமும் , தெய்வீகமும் எனது இரு கண்கள்' என்று கூறிய திரு முத்துராமலிங்கம் அதனை அப்படியே கடைபிடித்தவர் தானா என்றால், அச்சொற்களின் உண்மைப் பொருளையும் - அதனை கூறிய திரு.உ.மு.தேவரின் நடவடிக்கைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் ஒற்றுமை என்பதை சிறிதளவேனும் காண இயலாது. அதிலும் குறிப்பாக இவர் தான் வசிக்கும் பகுதியில் வாழ்ந்த மக்களையே, சமமான மனிதர்களாகக் கருதும் மன இயல்பில்லாதவர்.
'அரிஜனங்கள் எனப்படுவோர் ஆண்டவனின் குழந்தைகள்' என்றார் மகாத்மா(!) காந்தி. 'ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம்' என்றனர் ஆன்மிகத் துறையினர். இதனை அறவே வெறுத்தவர் திரு முத்துராமலிங்கம். எனவே, தேசம் என்கிற சொல்லும், தெய்வீகம் என்கிற சொல்லும் இவரது அகராதியில் வெவ்வேறு பொருள் பொதிந்தவை ஆகின்றன. இதனை இவர் 'கண்ணாக'க் கருதினார் என்பதை இயற்கை அறிவு கொண்டோர் எவரும் ஏற்க இயலாது.
இவையன்றி இவரைக் குறித்துக் கட்டமைக்கப்பட்ட கதைகளும் அப்படித்தான்.
1. திரு.உ.மு.தேவர் பாண்டிய மன்னர் பரம்பரையில் வந்தவர்.
2. திரு.உ.மு.தேவர் தனது நிலங்களை தலித்துகளுக்கு பகிர்ந்தளித்தார்.
3. திரு.உ.மு.தேவர் இஸ்லாமியத் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர்.
இப்படியெல்லாம் இவரைக் குறித்தான பிரம்மிப்பூட்டும் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டது. இவர் தன்னலமற்ற தியாகியாகவும், சுயசாதி விருப்பமற்ற சமத்துவ விரும்பியாகவும், நாட்டுப்பற்றில் ஈடு இணையற்ற வீரராகவும், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தின் தலைவர்களுக்கெல்லாம் தலைவராகவும், நினைத்தால் எதையும் ஆக்கவும், அழிக்கவும் வல்ல சர்வ சக்தி படைத்தவராகவும் அவரை நம்பியக் கூட்டத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
எனினும், நடுவுநிலை பிறழாமல் சிந்திக்கக் கூடியவர்கள் எவருமே திரு.உ.முத்துராமலிங்கம் குறித்தான இத்தகைய புனைவுகளை ஏற்க மறுக்கின்றனர். அத்துடன் இவை அத்தனையும் புனைவுகள் தாம் என்பதை தரவுகளோடு நிறுவியும் உள்ளனர். அவற்றை நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.
புனைவு ஒன்று: உ.மு.தேவர் பாண்டிய மன்னர் வழிமுறையில் வந்தவர்
திரு.முத்துராமலிங்கம் 30.10.1908ஆம் ஆண்டில் உக்கிரபாண்டி-இந்திராணி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 'பசும்பொன்' கிராமத்தில் பிறந்து, 1938ல் சப்-மாஜிஸ்திரேட்டாக இருந்த பிரதம நாயகம் என்பவரை இவரது ஆட்கள் கொலை செய்து விட, அச்சூழலில் மதுரைக்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் 29.10.1962ல் மதுரை திருமங்கலம் பகுதியில் இறந்து விடுகிறார். 'பசும்பொன்' கிராமத்தின் பழம் பெயர் 'தவசிகுறிச்சி' எனவும் பிற்காலத்தில் உடையான் பசுபதியின் நினைவாக 'பசும்பொன்' என்று அழைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு புனையப்பட்ட 'மன்னர் பரம்பரை' கதையை பசும்பொன்னிற்கு பக்கத்தில் இருக்கும் 'முஷ்டக்குறிச்சி'யைச் சேர்ந்தவரும், 'முக்குலத்தோர்' பிரிவில் பிறந்தவருமான பத்திரிக்கையாளர் திரு.தினகரன் பின்வருமாறு மறுக்கிறார்:
'தெலுங்கு தேசமான ஹைதராபாத் நகரத்துக்கு அருகில் நெல்லிமாரலா, நௌபதாதுசி என்னும் கிராமங்களையொட்டி 'கிழுவநாடு' என்று ஒன்று இருந்தது. அங்கிருப்பவர்கள் 'தேவ' என்னும் பட்டம் உடையவர்கள். அய்யனார் தெய்வத்தை வணங்குகிறவர்கள். அய்யனை (குல தெய்வமாக) கொண்ட கூட்டத்தினர். (கூட்டத்திற்கு கோட்டை என்றும் பொருள் உண்டு) இவர்களே 'கொண்டையன் கோட்டை' மறவர்களின் முன்னோர்களாய் இருக்க வேண்டும் எனவும், ஆந்திரப் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து ஆப்பநாட்டுப் பகுதியில் குடியேறினர் என்றும் கூறுகின்றார்.'
(தமிழகத்தின் தலைவர்களை வந்தேறிகள் என வாய்க்கூசாமல் பேசிவரும் பெங்களூர் குணாவின் புதிய மாணாக்கர் 'தம்பி' சீமான் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.)
புனைவு இரண்டு : உ.மு.தேவர் தனது நிலங்களை தலித் மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்.
'உ.முத்துராமலிங்கத்தை பரம்பரைப் பணக்காரர் எனச் சொல்லும் அவரது பற்றாளர்கள் உ.முத்துராமலிங்கம் தனது நிலங்களை தலித்துகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார் என்பதைச் சற்று உரக்கவே கூவுகின்றார்கள். உ.முத்துராமலிங்கம் தனது இறப்புக்கு முன்னர் 1960ல் தனது பங்களா இருக்கும் புளிச்சிகுளம் கிராமத்தில் 32 1/2 கிராம நிலங்களை 17 பாகங்களாகப் பிரித்திருக்கிறார். ஒரு பாகத்தை தனக்கு வைத்துவிட்டு, 16 பாகங்களை தனக்கு நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருந்த 16 பேருக்கு எழுதி வைத்தார். அவர்களுள் பசும்பொன்னைச் சேர்ந்த இரண்டு தலித்துகளும் அடங்குவர்.
உ.முத்துராமலிங்கத்தின் இறப்புக்குப் பின்னர், ''திரு.உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு தர்மபரி பால ஸ்தாபனம்'' என்னும் பெயரில் நிறுவப்பட்ட அறக்கட்டளைக்கு, வடிவேலம்மாள், ஜானகி அம்மாள், ராமச்சந்திரன், அட்டெண்டர் முத்துசெல்வம் ஆகியோர் தவிர்த்த 12 பேர் தமது பங்குகள் அனைத்தையும் அப்படியே தந்து விட்டதாக ஏ.ஆர்.பெருமாள் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.
நிலங்களைத் திரும்பத் தர மறுத்த நால்வரும் மறவர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு புறமிருக்க வடிவேலம்மாள், ஜானகியம்மாள் இருவரும் உ.முத்துராமலிங்கத்தின் உறவுக்காரர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.
தலித்துகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டது போன்று மீண்டும் அம்மக்கள் உ.முத்துராமலிங்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கே திருப்பி கொடுத்து விட, அவரது சொத்துகளை இன்று வரை 'கோல்மால்' மூலமாக அபகரித்து, அனுபவித்து வரும் மறவர்களின் சதிச்செயல்கள் வெளித் தெரியாமல் இருப்பதற்காகவே தலித்துகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டதான பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகிறது.
ஆக, அவரது சொத்துகள் 17 பாகங்களாகப் பிரிக்கப்பட்டதும், அதில் இரண்டு பாகங்கள் அவரிடம் நெடுங்காலம் உழைத்த காரணத்தினாலோ அல்லது அவருக்கு உண்மையாக இருந்த காரணத்தினாலோ இரண்டு தலித்துகளுக்குக் கொடுக்கப்பட்டதும் உண்மை. ஆனால், சிறிது காலத்திலேயே அந்த நிலங்கள் திரும்பப் பறிக்கப்பட்டு விட்டது. கொடுத்ததையே பெருமையாகச் சொல்பவர்கள், அவரது அறக்கட்டளைக்கு திரும்ப வாங்கிக் கொண்டதை சொல்வதில்லை.
புனைவு மூன்று : உ.மு.தேவர் இஸ்லாமியத் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர்
1. 'உ.முத்துராமலிங்கத்தின் அரசியல் நுழைவு 1933 ஜூன் 23ல் இருந்து துவங்குகிறது. 'சாயல் குடி'யில் 'விவேகானந்தா வாசக சாலை'யின் முதலாவது ஆண்டு விழாவில் உ.முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பேசியதுதான் அவரது அரசியல் பிரவேசத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறது. விவேகானந்தா வாசக சாலையில் பேசும்போது உ.முத்துராமலிங்கம் அபிராமபுரத்தின் இந்து மகா சபைத் தலைவர். அபிராமம் முஸ்லிம்களுக்கு எதிராக 1932, 1935, 1938 ஆகிய ஆண்டுகளில் கலவரம் புரிந்ததை அவரே ஒப்புக் கொண்டதாக பத்திரிக்கையாளர் தினகரன் எழுதுகிறார்.
2. தமிழகத்தில் ஜாதி சண்டையை மூட்டி விடுவதற்கு முன்பே மதச் சண்டையை மூட்டி விட்டு முன்னோட்டம் பார்த்த மதவாதியாக உ.முத்துராமலிங்கம் அரசியலுக்குள் நுழைகிறார். முத்துராமலிங்கத்தின் ஜாதி அடிப்படைவாதத்திற்கு 1937முதல் 1957 வரையிலான செயல்பாடுகள் தரவுகளாக இருப்பதைப் போன்று, மத அடிப்படை வாதத்திற்கு 1932ல் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து 1957 செப்டம்பர் 16 வடக்கன் குளத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைவரை நீண்டு கிடக்கிறது.
3. சட்டமன்ற விவாதத்தின்போது முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.மதுரை ஆர்.சிதம்பர பாரதி என்கின்ற உறுப்பினர் ஒரு செய்தியினை பதிவு செய்கிறார். ''சென்ற வருஷம் ஆர்.எஸ்.எஸ் தலைவரான ஸ்ரீ கோல்வால்கரை (இவர் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேவின் கோஷ்டி) மதுரைக்கு அழைத்து வந்து அவருக்கு ஸ்ரீ மு.தேவர் ஒரு பணப்பையை பரிசளிக்க ஏற்பாடு செய்தார். அச்சமயம் அவர் பேசியபோது, 'மகாத்மா காந்தி ஹரிஜனங்களை ஆதரிப்பதனால் இந்து மதத்திற்கே அவர் எதிரி என்றும், இதனால்தான் ஸ்ரீகோல்வால்கருக்கு பணமுடிப்பை அளிப்பதாகவும்'' கூறினாராம்.
(இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம்தான் 1925ல் இருந்து இன்று வரை சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக பல்வேறு கலவரங்கள் உருவாகக் காரணமாக இருந்து வருகிறது.)
4.1937 தேர்தலில் போட்டியிட காங்கிரசு கட்சி அவருக்கு வாய்ப்பளித்தது. இராமாநாதபுரம் சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட்ட தேவர் வெற்றி பெறுகிறார். 1937 தேர்தல் வெற்றி உ.முத்துராமலிங்கம் அவர்களை தலைகால் தெரியாமல் ஆக்கியதால், தேர்தலில் தனக்கு ஓட்டளிக்காத தலித்துகள், இசுலாமியர்கள், நாடார்கள் மீது பலாத்காரத்தை தூண்டிவிட்டார்... 1939ல் அபிராமத்தில் உள்ள முஸ்லிம் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலையில் இருக்கும்போது கண்மாயை வெட்டி தண்ணீரை வெளியேற்றியும் இருக்கிறார்.
5. 1957ல் தேர்தல் தினமாகிய ஜூலை 1ஆம் தேதியன்று தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக முஸ்லிம் கோஷா பெண்கள் வண்டிகளில் வந்துகொண்டிருந்தார்கள். அந்த வண்டிகளை நடுத்தெருவில் மறித்து நிறுத்தி, ஓட்டுப்போடும் இடங்களுக்கு போகக்கூடாது என்று தடுத்தார்கள். அச்சமயத்தில் காங்கிரஸ் ஊழியர்களான தலைமலைச்சாமி என்பவரும், சோணமுத்து என்பவரும் வேறு கிராமத்திலிருந்து அங்கே வந்தார்கள். ஓட்டர்களை மறித்து நிறுத்தி வைத்திருப்பதை அவர்கள் கண்டதும், அதை ஆட்சேபித்தார்கள். அதனால் அங்கிருந்த மறவர் கூட்டம் அவர்களை படுகாயம் அடையும்படி அடித்தார்கள். அதன் பிறகு கடைசிவரையில் அபிராமத்திலும், நத்தத்திலும் இருந்த கோஷா பெண்கள் ஓட்டு கொடுக்க முடியாமலேயே போக நேரிட்டது.
6. 'உ.முத்துராமலிங்கத்தின் பிறப்புச் செய்தியை குழப்பச் செய்தியுடன் வெளிஉலகுக்கு தெரியப்படுத்திய அவரது வரலாற்றாசிரியர்கள் உ.முத்துராமலிங்கம் 'இஸ்லாமியத் தாயின் மார்பில் பால் குடித்து வளர்ந்தார்' என்பதையும் கூறி வருகின்றனர். 1960ல் முத்துராமலிங்கத்தின் வரலாற்றை சுருக்கமாக எழுதிய சசிவர்ணம் ''இவர் பிறந்த ஆறாம் மாதம், வணக்கத்திற்குரிய இவரது தாயார் இந்திராணி அம்மையார் காலமாகி விட்டார்கள். அதுமுதல் இவரது பாட்டியார் இராணி அம்மையார்தான் இவரை வளர்த்து வந்தார்கள் (தேவர் ஜெயந்தி விஷேட சுவடி/11) என்பதாக பதிவு செய்கிறார்.
இவரை ஒட்டியே 1993ல் முத்துராமலிங்கத்தின் முழு வரலாற்றையும் எழுதிய ஏ.ஆர்.பெருமாளும் 'இஸ்லாமியப் பால் குடியை' வன்மையாக மறுத்து எழுதுவார். ஆனாலும் உ.முத்துராமலிங்கத்தின் 'இசுலாமிய பால் குடியை' வலிந்து பரப்பி வருகின்றனர்.
மேற்காணும் செய்திகளே திரு.உ.முத்துராமலிங்கத்தின் இந்து வெறி உணர்ச்சிக்கு சான்றாகும். இதனை மறைத்து அவரை ஒரு தேசியத் தலைவராக்கும் முயற்சியாகத்தான் 'இஸ்லாமியப் பால் குடி'' என்கிற கதை கட்டமைக்கப்பட்டது. இதனை அவரது வரலாற்றை எழுதியவர்களே மறுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- அறிவுக்குயில்

மாமள்ளர் இராசராச சோழ தேவேந்திரர்

என் சொந்தங்களுக்கு வணக்கம்... பிரகதீஸ்வரர் பெரிய கோயிலை கட்டி, தஞ்சை தரணியை ஆண்ட நம் கொள்ளுப்பாட்டன் மாமள்ளர் இராசராச சோழ தேவேந்திரர் அவர்களின் 1027 வது சதய (பிறந்தநாள்) விழா... 25.10.2012 வியாழக்கிழமை... அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அன்புடன் அழைப்பது..., மற்றும் சோழமண்டல தேவேந்திரகுல வேளாளர் மக்கள்....

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் sep 11

தேவேந்திரகுல வம்சம்

வீரவணக்கம்...

வணக்கம்... எம் குலத்தார்களுக்கு...

தண்ணீர் லாரிகள் மீது தடையாணை: அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் வட்டத்தில் நிலத்தடி நீர் விற்பனை செய்வதை தடை செய்து வெளியிடப்பட்ட ஆர்டிஓ.,தடையாணையை அமல்படுத்தக் கோரி நேற்று ஓட்டப்பிடாரம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓட்டப்பிடாரம் பகுதியில் தொழிற்சாலைகளுக்கு லாரிகளில் நிலத்தடி நீர் எடுக்க கோவில்பட்டி ஆர்டிஓ.,தடையாணை பிறப்பித்தார்.
ஆனால் தொடர்ந்து நிலத்தடிநீர் லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும், தொழிற்சாலைகளுக்கு நிலத்தடி நீர் கொண்டு செல்வதை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று ஓட்டப்பிடாரம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசினார். ஓட்டப்பிடாரம் யூனியனுக்குட்பட்ட பஞ்.,தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை எம்எல்ஏ.,ராமசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

ஓட்டப்பிடாரத்தில் ஸ்டேட் பாங்க் விரைவில் துவக்கம் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தகவல்

ஓட்டப்பிடாரம், : ஓட்டப்பிடாரத்தில் பாரத ஸ்டேட் பாங்க் விரைவில் துவக்கப்பட உள்ளதாக கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓட்டப்பிடாரத்தில் இது வரை எந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையும் துவக்கப்படவில்லை. வட்டார வளர்ச்சி அலுவல கம், தாலுகா அலுவலகம், பதிவு துறை, பள்ளிகல்வி, பொதுப்பணித்துறை உள் ளிட்ட எத்தனையோ அலுவலகங்கள் இருந்தும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர் கள், சத்துணவு பணியாளர் கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு இருந் தும் வங்கி இல்லாதது குறை யாகவே இருந்து வந்தது.
ஆசிரியர்கள் தேசிய வங்கி இல்லாத காரணத் தால் தமிழகத்திலேயே ஓட்டப்பிடாரத்தில் மட்டுமே இசிஎஸ் மூலம் சம்பளம் பெற முடியாத நிலை உள் ளது. வியாபாரிகளும், விவசாயிகளும் சாதாரண செல் லான் எடுக்க கூட அங்கிருந்து 20 கி.மீ அப்பால் செல்ல வேண்டிய துள்ளது. கடந்த 15 மாத காலமாக பாரத ஸ்டேட் பாங்கின் நெல்லை, சென்னை, மும் பை கிளை அதிகாரிகளிடம் நான் வலியுறுத்தியதன் பேரில், இப் போது ஓட்டப்பிடாரத்தில் ஸ்டேட் வங்கி கிளை துவக்க அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் வங்கி செயல்பட துவங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சிலை சேதம்: கும்பகோணம் அருகே பரபரப்பு




கும்பகோணம் அருகே உள்ளது சோழபுரம். சோழபுரம் கடைவீதியில் அம்பேத்கர் மற்றும் பெரியார் முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 15.09.2012 அன்று நள்ளிரவில் அம்பேத்கர் சிலையின் தலை பகுதி சேதம் அடைந்துள்ளது. இச்செய-ல் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், திமுக உள்ளிட்ட கட்சிகள் பந்தநல்லூர், திருப்பனந்தாள், சோழபுரம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய பகுதிகளில் கடைகளை அடைக்கச்சொல்லி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

அ.தி.மு.க.,வினர் அஞ்சலி

பரமக்குடி:பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், அ.தி.மு.க., சார்பில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, டாக்டர் சுந்தரராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, நகர் செயலாளர் ஜமால், எம்.ஜி,.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட பலர் உடன் வந்தனர்.தி.மு.க., -பா.ம.க., -பா.ஜ.,- ம.தி.மு.க., -காங்.,-புதிய தமிழகம்- விடுதலை சிறுத்தைகள்-தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்-, நாம் தமிழர் இயக்கம், லோக் ஜனசக்தி-, பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.நேற்று காலை முதல் இரவு வரை பரமக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.பிற்பகலிலிருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

இமானுவேல்சேகரன் நினைவு தினம் 2,500 போலீசார் மதுரையில் பாதுகாப்பு


 தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினத்தை  முன்னிட்டு மதுரை நகர், புறநகர் பகுதிகளில் 2500 போலீசார் பல த்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ம் தேதியான இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்  பரமக்குடியில் அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இமானுவே ல்சேகரன் நினைவு தினம் பரமக்குடியில் அனுசரிக்கப்பட்ட போது  பயங்கர கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தை அடக்க து ப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
எனவே இவ்வாண்டு இமானுவேல்சேகரன் நினைவு தின நாளில்  கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும்,  செப்.19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று மதுரை நகர் மற்றும்  புறநகரில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்  மதுரை வந்த சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஜார்ஜ், அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். அப்போது மதுரை, ராமநாதபுரம்  உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் போலீஸ் பாதுகாப்பை  பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மதுரை நகர், புறநகரில் நேற்று முதல் பலத்த பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 ஆயிரத்து  500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். புறநகரில் 24  இடங்களில் சோதனை அறை அமைக்கப்பட்டுள்ளன. அந்த  இடங்களில் மைக், கேமரா அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மதுரை  வழியாக தென் மாவட்டங்களுக்கு வந்து, செல்லும் வாகனங்களின்  எண்கள் கண்காணிக்கப்படுகின்றன. இதே போல், நகர், புறநகர்  பகுதிகளில் உள்ள சிலைகள் முன்பும் போலீசார் பெருமளவில் கு விக்கப்பட்டுள்ளனர்.

இமானுவேல்சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில், 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

இமானுவேல்சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில், 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின குருபூஜை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

கோவையில் இருந்து வந்த 100 பேர் கொண்ட மத்திய அதிவிரைவு படையினர் இம்முறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 23 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நினைவு இடத்திற்கு வரும் வகையில் 25 மாற்று வழித்தட மையங்கள் அமைக்கப்படுகிறது. முக்கிய இடங்களில் நவீன சுழல் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுகிறது. அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அவசர மருத்துவ வசதிக்காக 20 ஆம்புலன்சுகள், 5 மருத்துவக்குழுக்கள் மற்றும் 14 தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்படும். மேலும் 15 விபத்து மீட்பு வாகனங்களும் பரமக்குடி நகர் பகுதியை சுற்றிலும் நிறுத்தப்படும். நாளை பள்ளி, கல்லூரிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.

இமானுவேல்சேகரன் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

செல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் செல்லூர் கிராம மக்கள் காலை 7 மணிக்கும், அ.தி.மு.க. சார்பில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் சுந்தரராஜன் காலை 7.30 மணிக்கும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி எம்.பி. ரித்தீஷ், தி.மு.க. அம்பேத்கார் வக்ககீல் பிரிவு கந்தசாமி ஆகியோருக்கு காலை 8 மணிக்கும்,

தேவேந்திர இளைஞர் பேரவை அழகர்சாமி பாண்டியன் காலை 8.30-க்கும், தியாகி இமானுவேல் பேரவை நிறுவனர் சந்திரபோஸ் 8.45-க்கும் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ. (தி.மு.க.) காலை 9 மணிக்கும், திராவிடர் விடுதலைக்கழகம் குளத்தூர் மணி காலை. 9.30 மணிக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சம்பத் காலை 9.45-க்கும், ஆதித்தமிழர் பேரவை அதியமான் காலை 10.15-க்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் காலை 10.30-க்கும், நாம் தமிழர் கட்சி சீமான் காலை 11 மணிக்கும், மக்கள் விடுதலை கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் காலை 11.15-க்கும், தேவேந்திரரர் அறக்கட்டளை வக்கீல் சந்திரன் காலை 11.30-க்கும், புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி பகல் 12 மணிக்கும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜி.கே.மணி பகல் 12.30-க்கும், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம்பிரபு பகல் 12.45-க்கும், பி.ஜே.பி. சார்பில் மாநில பொதுச்செயலாளர் சுப.நாகராஜன் பகல் 1 மணிக்கும், மள்ளர் இலக்கிய கழகம் அண்ணாமலை பகல் 1.30-க்கும், தமிழ்ப்புலிகள் நாகை திருவள்ளுவன் பகல் 1.45-க்கும், தியாகி இமானுவேல் பேரவை எம்.ஊர்க்காவலன் தேசிங்குராஜா பகல் 2 மணிக்கும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜான்பாண்டியன் பகல் 2.30-க்கும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சவுந்திரராஜன் மாலை 3 மணிக்கும், ம.தி.மு.க. சார்பில் கணேசமூர்த்தி மாலை 3.15-க்கும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொருளாளர் ஜீவன்குமார் மாலை 3.30-க்கும், தமிழர் தேசிய கூட்டமைப்பு பழ.நெடுமாறன் மாலை 3.45-க்கும், வீரதேவேந்திரர் பேரவை சார்பில் பி.எம்.பாண்டியன் மாலை 4 மணிக்கும், மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் சார்பில் துரை அரசன் மாலை 4.15-க்கும், மருதம் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்ராமு மாலை 4.30-க்கும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வியாழன், 13 செப்டம்பர், 2012

இமானுவேல்சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில், 5 ஆயிரம் போலீசார் குவிப்பு




இமானுவேல்சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில், 5 ஆயிரம் போலீசார் குவிப்பு


தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின குருபூஜை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

கோவையில் இருந்து வந்த 100 பேர் கொண்ட மத்திய அதிவிரைவு படையினர் இம்முறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 23 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நினைவு இடத்திற்கு வரும் வகையில் 25 மாற்று வழித்தட மையங்கள் அமைக்கப்படுகிறது. முக்கிய இடங்களில் நவீன சுழல் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுகிறது. அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அவசர மருத்துவ வசதிக்காக 20 ஆம்புலன்சுகள், 5 மருத்துவக்குழுக்கள் மற்றும் 14 தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்படும். மேலும் 15 விபத்து மீட்பு வாகனங்களும் பரமக்குடி நகர் பகுதியை சுற்றிலும் நிறுத்தப்படும். நாளை பள்ளி, கல்லூரிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.

இமானுவேல்சேகரன் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

செல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் செல்லூர் கிராம மக்கள் காலை 7 மணிக்கும், அ.தி.மு.க. சார்பில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் சுந்தரராஜன் காலை 7.30 மணிக்கும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி எம்.பி. ரித்தீஷ், தி.மு.க. அம்பேத்கார் வக்ககீல் பிரிவு கந்தசாமி ஆகியோருக்கு காலை 8 மணிக்கும்,

தேவேந்திர இளைஞர் பேரவை அழகர்சாமி பாண்டியன் காலை 8.30-க்கும், தியாகி இமானுவேல் பேரவை நிறுவனர் சந்திரபோஸ் 8.45-க்கும் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ. (தி.மு.க.) காலை 9 மணிக்கும், திராவிடர் விடுதலைக்கழகம் குளத்தூர் மணி காலை. 9.30 மணிக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சம்பத் காலை 9.45-க்கும், ஆதித்தமிழர் பேரவை அதியமான் காலை 10.15-க்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் காலை 10.30-க்கும், நாம் தமிழர் கட்சி சீமான் காலை 11 மணிக்கும், மக்கள் விடுதலை கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் காலை 11.15-க்கும், தேவேந்திரரர் அறக்கட்டளை வக்கீல் சந்திரன் காலை 11.30-க்கும், புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி பகல் 12 மணிக்கும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜி.கே.மணி பகல் 12.30-க்கும், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம்பிரபு பகல் 12.45-க்கும், பி.ஜே.பி. சார்பில் மாநில பொதுச்செயலாளர் சுப.நாகராஜன் பகல் 1 மணிக்கும், மள்ளர் இலக்கிய கழகம் அண்ணாமலை பகல் 1.30-க்கும், தமிழ்ப்புலிகள் நாகை திருவள்ளுவன் பகல் 1.45-க்கும், தியாகி இமானுவேல் பேரவை எம்.ஊர்க்காவலன் தேசிங்குராஜா பகல் 2 மணிக்கும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜான்பாண்டியன் பகல் 2.30-க்கும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சவுந்திரராஜன் மாலை 3 மணிக்கும், ம.தி.மு.க. சார்பில் கணேசமூர்த்தி மாலை 3.15-க்கும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொருளாளர் ஜீவன்குமார் மாலை 3.30-க்கும், தமிழர் தேசிய கூட்டமைப்பு பழ.நெடுமாறன் மாலை 3.45-க்கும், வீரதேவேந்திரர் பேரவை சார்பில் பி.எம்.பாண்டியன் மாலை 4 மணிக்கும், மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் சார்பில் துரை அரசன் மாலை 4.15-க்கும், மருதம் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்ராமு மாலை 4.30-க்கும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பேரணி

 திருநெல்வேலி, செப். 8:÷இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வீரவணக்க பேரணி நடத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.  ÷இதுகுறித்து சனிக்கிழமை திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இம்மாதம் 11-ம் தேதி பரமக்குடியில் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வீரவணக்கப் பேரணி நடத்தப்படும். பார்த்தீபனூர் விலக்கில் இருந்து பரமக்குடி வரை இப்பேரணி நடத்தப்படுகிறது.÷நினைவு நாள் நிகழ்ச்சியில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ்பஸ்வான் எம்.பி. பங்கேற்கிறார். இதில் தேவேந்திர குல மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். ÷இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.  ÷சிவகாசி வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றார் அவர்.

பரமக்குடியில் செப்.11 இமானுவேல் சேகரன் நினைவு நாள்...


பரமக்குடியில் செப்.11 இமானுவேல் சேகரன் நினைவு நாள்...


செப்டம்பர் 11- 'மாவீரன் இம்மானுவேல் சேகரன்' 55ஆவது நினைவு நாள்

இராமநாதபுரம்,முதுகுளத்தூர் வட்டம், 'செல்லூர்' கிராமத்தைச் சேர்ந்த வேத நாயகம்(எ)சேது வாத்தியார்-ஞானசௌந்தரி இணையருக்கு 1924, அக்டோபர் திங்கள் 9ஆம் நாள் இம்மானுவேல் பிறந்தார். தன்னுடைய 18வது வயதில் 'வெள்ளையனே வெளியேறு'இயக்கத்தில் பங்கெடுத்து மூன்று மாத சிறை தண்டனை அடைந்தார். 'இதம்பாடல்' கிராமத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியரான அமிர்தம் கிரேஸ் என்பவரை மணந்த இவருக்கு மேரி வசந்த ராணி (வயது-11),பாபின் விஜய ராணி (வயது-9), சுந்தரி பிரபாராணி (வயது-5),ஜான்சி ராணி (வயது-2) என நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன.1945ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்த இவர் பின்னர் 'ஹவில்தார்' மேஜராக உயர்ந்தார்.
தோழர் இம்மானுவேல் அவர்கள் இராமநாதபுரம் ஜில்லா-தாழ்த்தப்பட்டோர் லீக் அங்கத்தினராகவும்,முதுகுளத்தூர் தாலுக்கா தாழ்த்தப்பட்டோர் லீக் காரியதரிசியுமாகவும் இருந்து அரிஜன மக்களிடையே கிராமம் கிராம மாகச் சென்று சங்கங்கள் அமைத்தும்,மாநாடுகள் நடத்தியும்,அரிஜன மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார்.இராமநாதபுரம் ஜில்லாவில் அவர் அரிஜன மக்களின் தலைவராகவும் விளங்கினார்.அரிஜன மக்களின் வளர்ச்சிக்கும்,ஒற்றுமைக்கும் தோழர் இம்மானுவேல்தான் காரணம் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும்.
ஹரிஜனங்கள் மறவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதிலும்,ஹரிஜனங்களுக்கு அதிகமாக உதவி செய்து வரும் காங்கிரஸை ஆதரிக்க வேண்டுமென்பதிலும்,...ஸ்ரீ இமானுவேல் முக்கியமானத்தலைவராக இருந்தார்.
ஸ்ரீமுத்துராமலிங்கத் தேவர் மறவர் வகுப்பில்,முதுகுளத்தூர் பகுதியில் மிகுந்த செல்வாக்குள்ளவர் என்பது மறுக்க முடியாத விஷயம்.அந்த மறவர் வகுப்பார்களும் முத்துராமலிங்கத் தேவரிடம் மிகுந்த பக்தியுள்ளவர்கள்.அவருடைய உத்தரவுக்கு கீழ்படிந்து உயிரை விடுவதற்குக் கூட அவர்கள் தயாராய் இருப்பவர்கள்.
முதுகுளத்தூர் பகுதியில் தேவர்கள்,சேர்வைக்காரர்கள் ஆகிய முக்குலத்தைச் சேர்ந்தவர்கள்,ஜனத்தொகையில் 45 சதவீதம் இருக்கிறார்கள்.அதற்கு அடுத்ததாக உள்ள ஹரிஜன சமூகம் 20 சதவீதம் ஜனத்தொகை கொண்டது.  ஹரிஜனங்களும்,சக்கிலியர்களும்,வண்ணார்களும் தொன்றுதொட்டே உயர் ஜாதிகாரர்களுக்கு அடிமைகளாக இருந்து வருகிறார்கள்.பூரணமாக கட்டுப்பட்டு இருக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள்.இந்தப் பகுதியிலுள்ள தலைவர்கள் எல்லோருமே,தேவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான்.
இந்தப் பகுதியில் தேவர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு படிப்பு அதிகமாக கிடையாது.நிலத்திலிருந்து வரும் வரும்படியும் போதுமானபடியாக இருப்பதில்லை.என்றாலும் ஜாதிக்கட்டுப்பாடு அவர்களுக்குள் அதிகமாய் உண்டு.
ஹரிஜனங்கள் வர வர அதிகமாக படித்து வருகிறார்கள்.பலர் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து பின்பு,இந்த நாட்டின் சுதந்திரக் குடிகள் என்ற முறையில் தங்களுடைய உரிமைகள் என்ன என்பதை அறிந்து கொண்டார்கள்....
முன் காலத்தில் இருந்தபடி,ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர்கள் மேல் வகுப்பார்களைப் பார்த்தால்,அவர்கள் உடம்பிலே மேலே போட்டிருக்கிற துணியை எடுத்துவிட வேண்டுமென்றும்,கால்களில் செருப்புகள் இல்லாமல் நடக்க வேண்டுமென்றும் உள்ள பழக்கமானது,முதுகுளத்தூர் பகுதியில் இன்னமும் இருந்து வருகிறது.
கல்வியிலும்,அறிவிலும் விருத்தி அடைந்து வருகிற ஹரிஜன வகுப்பார், இம்மாதிரி காரியங்களைச் செய்வதற்கு இந்தக்காலத்தில் சம்மதிக்கமாட்டார்கள் என்பது தெளிவான விஷயம்.ஆகவே அங்கங்கே இந்தப் பழைய அநாகரீக முறைகளை ஹரிஜனங்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள்.ஆனால் தேவர்கள் இதை விடவில்லை. தகராறுக்குக் காரணமே இந்த விஷயந்தான்.  இதிலிருந்துதான் மற்ற காரியங்கள் தோன்றுகின்றன....
ஸ்ரீமுத்துராமலிங்கத் தேவர் அரசியலில் காங்கிரசுக்கு எதிரானவர். ஆகவே அந்தப் பகுதியில் தேர்தல்கள் வரும்போது,காங்கிரசுக்கு விரோத மாக உள்ளவர்களையே அவர் ஆதரிக்க விரும்புவது இயற்கை...
ஆனால்,ஹரிஜனங்கள் தங்களுக்கு காங்கிரசினால் ஏற்பட்டுள்ள நன்மையைக் கருதி,காங்கிரசையே ஆதரிக்க விரும்பினார்கள்.அதன் மூலம் தங்கள் மீது வெகுகாலமாக இருந்துவந்த மறவர்களின் ஆதிக்கத்தையும் ஒழிக்க விரும்பினார்கள்.ஆகவே, இந்த வருஷ ஆரம்பத்தில் நடந்த பொதுத்தேர்தலில்,ஹரிஜனங்கள் பெரும்பாலும் காங்கிரசுக்கே ஓட்டுக்கொடுத்தார்கள்.  இதனால் தேவர் வகுப்பார்கள் கோபம் கொண்டார்கள்.
இதன் பலனாக ஹரிஜனங்கள் உபயோகித்து வந்த கிணறுகளில் ஆபாசமான பொருள்களைப் போட்டு,ஹரிஜனங்களுக்கு கஷ்டம் விளைத்தார்கள்.பல ஹரிஜனங்களை அடித்தார்கள்.ஹரிஜனப் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள்.  பல ஊர்களில் ஹரிஜனங்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன.
முதுகுளத்தூர் பகுதியில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டதும்,சர்க்கார் அதிகாரிகள் தேவர் வகுப்பைச் தலைவர்களை அழைத்து எச்சரிக்கை செய்தார்கள்.  இருப்பினும் ஹரிஜனங்களை அடக்கியாள வேண்டுமென்ற ஆசையை அவர்களால் குறைக்க முடியவில்லை.
இராமநாதபுரம் ஜில்லா ஹரிஜன மக்கள் மறவர்களால் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்து,மதுரை-ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி எம்.ஜி.ஹோம்ஸ் முன்னிலையில் மாவட்டக் கலெக்டர் வி.ஆர்.பணிக்கர் அவர்கள் 10.09.1957 மாலை முதுகுளத்தூர் தாலுகா ஆபீஸில் சமாதானக் கமிட்டி என்ற பெயரால் கூட்டம் நடத்தினார்கள்.
மேற்படி கூட்டத்திற்கு ஹரிஜனங்களின் பிரதிநிதிகளாக திருவாளர்கள் வி.இம்மானுவேல் சேகரன் அவர்களும்,வீராம்பல்  ஜெ.வேதமாணிக்கம் அவர்களும்,பேரையூர் பெருமாள் பீட்டரும்,ஆலத்துங்குடி கம்பரும்,சாத்தையா என்பவரும் - மறவர்கள் பிரதிநிதிகளாக (ஜாதி இந்துக்கள்)திருவாளர்கள் உ.முத்துராமலிங்கத்தேவர் எம்.பி அவர்களும்,டி.எல்.சசிவர்ணத்தேவர் எம்.எல்.ஏ அவர்களும்,ஆப்பனூர் அர்ச்சுனத்தேவர் அவர்களும்,சித்திரங்குடி சுப்பிரமணியத் தேவரும்,முத்து துரைச்சாமித்தேவரும்,இளஞ்சம்பூர் கருப்பையாத் தேவரும் ஆஜரானார்கள்.இதரப் பொதுஜனங்களின் சார்பில் திருவாளர்கள் வி.எம்.எஸ். வேலுச்சாமி அவர்களும்,அருணகிரி அவர்களும்,சுப்பையா அவர்களும், சீனிவாச அய்யங்கார் அவர்களும் விஜயம் செய்திருந்தார்கள்.
காலை ஒன்பது மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் முத்துராமலிங்கத் தேவரின் தாமதமான வருகையால் பத்து மணிக்குத் தொடங்கியது.மாவட்டத்தில் அமைதி உண்டாவதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் கேட்டு மாவட்ட கலெக்டர் பேசிய பின் மறவர்கள் சார்பில் முத்துராமலிங்கமும் நாடார்கள் சார்பில் வேலுச்சாமியும்,தேவேந்திரர்கள் சார்பில் இம்மானுவேல் சேகரனும் பேசினார்கள்.  ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போக,இறுதியில் 'பொதுக்கூட்டம் நடத்தி மக்களை சமாதானப் படுத்தலாம்' என்று தேவர் சொல்ல 'மக்களின் கோபம் தணியாத நிலையில் அது பயனிக்காது'என்றும் 'வேண்டுமானால் அமைதியை வலியுறுத்தி அனைவரும் கையெழுத்திட்ட துண்டுபிரசுரத்தை அச்சிட்டு வழங்கலாம்' என்றும் பெருமாள் பீட்டர் கூறினார்.
'தேவேந்திரர்களுக்குப் படிக்கத் தெரியாததால் துண்டுப் பிரசுரம் வழங்கிப் பயனில்லை' என உ.மு.தேவர் சொல்ல, 'மறவர்களை விட தேவேந்திரர்கள் அதிகம் பேர் படித்தவர்கள் என்பது கணக்கெடுத்துப் பார்த்தால் தெரியும்.'- என்றார் இம்மானுவேல்.
பின்னர்,'மறவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் தேவேந்திரர்கள் திரும்பப் பெற்றாலன்றித் தான் சமாதானத்துக்கு வரமுடியாது' என்று தேவர் ஆங்கிலத்தில் கூறினார்.அதைக் கேட்ட இம்மானுவேல், 'அப்படியானால் மறவர்கள் தேவேந்திரர்களின்
மீது போட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று அவர்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்' என ஆங்கிலத்திலேயே அவருக்கு பதிலளித்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த உ.மு.தேவர் 'பள்ளப்பயலே'என்றும் மற்ற வார்த்தைகளையும் சொல்லி 'உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.
ஆட்சித்தலைவர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்த பிறகு ஒரு வழியாக துண்டுப்பிரசுரம் வெளியிடுவது என முடிவானது.மக்களிடம் அமைதியை வலியுறுத்தும் கூட்டு வேண்டுகோளில் அனைவரையும் கையெழுத்திடுமாறு கலெக்டர் சொல்ல 'இம்மானுவேல் சேகரன் தனக்கு சமமான தலைவர் இல்லை' என்று கூறி உ.மு.தேவர் கையெழுத்துப் போட மறுத்து விட்டார்.'தேவேந்திரர்களின் சார்பில் இம்மானுவேல் சேகரனும், மறவர்களின் சார்பில் நீங்களும் கையெழுத்துப் போட வேண்டும்' என்று கலெக்டர் நிர்பந்தித்ததின் பேரில் உ.மு.தேவர் வேண்டுகோளில் கையெழுத்திட்டார்.  கூட்டம் முடிந்து வெளியே வந்த உ.மு.தேவர் தமது ஆதரவாளர்களைப் பார்த்து 'என்னை எதிர்த்துப் பேசும் அளவுக்கு ஒரு பள்ளப் பயலை வளர்த்து விட்டிருக்கிறீர்களே, நீங்களும் மறவர்களா ? என்று ஆவேசப் பட்டிருக்கிறார்.
அடுத்த நாள் (11.09.1957) மாலை எமனேசுவரம் பகுதியில் நடைபெற்ற பாரதியார் நினைவு நாள் விழாவில் இம்மானுவேல் சேகரன் பங்கேற்று பேசுகிறார். அவ்விழாவில் பேசியபோது ''காக்கை குருவி எங்கள் சாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெலாம் நாமின்றி வேறில்லை-நோக்க நோக்கக் களியாட்டம்' எனும் பாரதியின் கவிதை வரிகளைப் பாடி முடிக்கிறார்.   கூட்டம் முடிந்து இரவு 8.30 மணிக்கு வீட்டுக்கு வந்து இரவு உணவு முடித்துக்கொண்டு, நாள் முழுவதும் தனக்கு துணையாய் இருந்த நண்பர் கிருஷ்ணமூர்த்தியை வழியனுப்ப கிளம்பிய திரு இம்மானுவேலிடம், அவரது மனைவி அமிர்தம் கிரேஸ், 'எதற்கும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்' என்று சொல்கிறார்.
அதற்கு இம்மானுவேல் சேகரன்,''நான் ஒருவன் இறந்து போனால் பரவாயில்லை. எனது சமூக முன்னேற்றத்திற்காக நான்ஒருவன் இறந்து போனால்,என் சமூகத்தைச் சேர்ந்த நூறு பேர் உயிரைவிட  வருவார்கள்.என் சமூக முன்னேற்றம்தான் உயிரை விடப் பெரியது'' என்று பதிலளித்து விட்டு வீட்டுக்கு அருகே இருந்த சாலைக்கு வருகிறார்.  வந்து நண்பரை வழியனுப்பி விட்டு பெட்டிக்கடைக்கு அருகில் நின்று தமது சகநண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கிறார்.
இரவு 9.30 மணி.திடீரென சாலையில் இருந்த விளக்குகள் அணைந்தன.  முதுகுளத்தூரில் இருந்த வந்த பேருந்திலிருந்து இறங்கிய ஒரு கூட்டம் பயங்கர ஆயுதங்களோடு தேவேந்திரர் நிற்கும் இடத்திற்க்கு பின்புறமாக வருகிறது. வந்து  பேசிக்கொண்டிருந்த அவரைத் தாக்கி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது.  முத்துராமலிங்கத் தேவரின் தூண்டுதல் பேரில் இக்கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது.  எனவே,முதல் எதிரியாக முத்துராமலிங்கத் தேவரும்,அவருடன் மேலும் பதினொரு நபர்களும்  குற்றவாளிகளாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி,அப்போரில் தன்னையே களப்பலியாய் தந்த மாவீரர் இம்மானுவேல் சேகரன் அவர்கள் உயிர் நீத்த இந்நாளில் அவரை நினைவு கூறுவது என்பது சடங்கோ,சம்பிரதாயமோ அல்ல. 'ஒடுக்கப்பட்டோரின் உயர்வு' என்பதே அம்மாமனிதரின் நோக்கம்.அதனை நோக்கி முன்னேறுவோம். நாமும் நம் வருங்காலத் தலைமுறையும்கல்வியிலும்,பொருளாதாரத்திலும் மேம்பட்டு நின்று, ''நான் யாருக்கும் அடிமையில்லை ; எனக்கடிமை எவருமில்லை''என்கின்ற சமத்துவ வாழ்வைப் படைக்க உறுதி ஏற்போம் !
வாழ்க ! மாவீரன் இம்மானுவேல் சேகரன்; வெல்க ! அவரது கொள்கை.
(நன்றி:இதழாளர் டி.எஸ்.சொக்கலிங்கம்- இதழாளர் தினகரன்- திரு,அ.ஜெகநாதன்- திரு,தமிழவேள்- திரு,கா.இளம்பரிதி)

கமுதி அருகே மோதல்: ஊராட்சி முன்னாள் தலைவர் பெண்கள் உள்பட 31 பேர் மீது வழக்கு


கமுதி, செப். 12: செவ்வாய்க்கிழமை கமுதி அருகே நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு நாளன்று நடைபெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பாக, ஊராட்சி முன்னாள் தலைவர் மற்றும் பெண்கள் உள்பட 31 பேர் மீது, போலீஸôர் தனித்தனியே 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
பெருமாள் குடும்பன்பட்டி, ஆசூர், முஷ்டக்குறிச்சி ஆகிய ஊர்களைச் சேர்ந்த தலீத் சமூகத்தினர், இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, முஷ்டக்குறிச்சியிலிருந்து வாகனங்களில் பரமக்குடிக்கு புறப்பட்டனர். முன்னதாக இவர்கள், முஷ்டக்குறிச்சியில் கோஷமிட்டபடி நடந்து சென்றதற்கு வேறொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் கற்களை மாறி மாறி வீசித் தாக்கிக் கொண்டனர். இதில், இரு தரப்பிலும் வெள்ளையம்மாள் மற்றும் பெண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொள்ளாச்சி-ஆனைமலை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் 2 போலீஸôர் காயம் அடைந்தனர். இது குறித்து, கமுதி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் அளித்த புகாரின்பேரில், முஷ்டக்குறிச்சி முத்துராமலிங்கம் மனைவி வெள்ளையம்மாள் (42), கந்தவேல் உள்பட பெயர் குறிப்பிட்ட 10 பேர் மற்றும் பலர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, பெருமாள் குடும்பன்பட்டி கண்ணுச்சாமி மகன் பொன்னுச்சாமி (29) அளித்த புகாரில், முஷ்டக்குறிச்சி வெள்ளையம்மாள் உள்பட பெயர் குறிபிடப்பட்ட 10 பேர் மற்றும் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, வெள்ளையம்மாள் கொடுத்த புகாரில், பெருமாள் குடும்பன்பட்டியைச் சேர்ந்த ஊராட்சி முன்னாள் தலைவர் பெருமாள், நாகராஜன் உள்பட பெயர் குறிப்பிடப்பட்ட 11 பேர் மற்றும் பலர் மீது தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் அப்துல்லா, கோபிநாத், பிரேம் ஆனந்த் ஆகியோர் அடங்கிய தனி போலீஸ் படையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார் உத்தரவில், ஏ.எஸ்.பி. அபிநவ் குமார் நியமித்துள்ளார். இதையடுத்து, குற்றவாளிகளைத் துரிதமாகக் கைது செய்ய, தனி போலீஸ் படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இமானுவேல் சேகரனின் நினைவு நாள் ...


முகவை மள்ளர்கள் தேவேந்திரர்கள்.

 

இமானுவேல் சேகரனின் நினைவு நாள் ...


இமானுவேல் சேகரனின் நினைவு நாள் ...


இமானுவேல் சேகரன் நினைவு நாள்: .


இமானுவேல் சேகரன் நினைவு நாள்: .

ள்ளர்கள் தேவேந்திரர்கள் பகிர்ந்துள்ளார்.

இமானுவேல் சேகரன் நினைவு நாள்


இமானுவேல் சேகரன் நினைவு நாள்


இமானுவேல் சேகரன் நினைவு நாள்



இமானுவேல் சேகரன் நினைவு நாள்


இமானுவேல் சேகரன் நினைவு நாள்


மரணத்தை வென்ற போராளி இம்மானுவேல் அய்யாவின் 55 வது நினைவேந்தல்


இமானுவேல் சேகரன் நினைவு நாள்


இம்மானுவேல் சேகரனாரின் 55வது குருபூஜை.....


இமானுவேல் சேகரன் நினைவு நாள்: ஜெயலலிதா சொன்னதை செய்ய வேண்டும்-பாஸ்வான்

மதுரை: அரசு துறைகளில் பதவி உயர்வின்போது தலித்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், அரசு துறைகளில் பதவி உயர்வின்போது தலித்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவைக் கொண்டு வர பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.
சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ள தலித் மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது மிகவும் அவசியம். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அளிப்பதற்கு மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் போது, சமூக நீதி என்ற அடிப்படையில் அனைத்து தலித் தலைவர்களும் ஆதரவு அளித்தனர். அதேப்போல, இந்த தலித் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆட்சிக்கு வருவதற்கு முன், இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பதாகக் கூறியிருந்தார். அதை அவர் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இமானுவேல் சேகரன் நினைவு நாள்


இமானுவேல் சேகரன் நினைவு நாள்


பரமக்குடி நோக்கி மதுரை காமராசர் பல்கலைக்கழக தேவேந்திரகுல மாணவர்கள்............ —


இமானுவேல் சேகரன் நினைவு நாள்


சோழமண்டல மள்ளர் வாய்காரர் வம்சம்


இமானுவேல் சேகரன் நினைவு நாள்


இமானுவேல் சேகரன் நினைவு நாள் ...



பரமக்குடியில் செப்.11 இமானுவேல் சேகரன் நினைவு நாள்...


இமானுவேல் சேகரன் நினைவு நாள்: மதுரை மாவட்டத்தில் 2,500 போலீசார் குவிப்பு-10 இடங்களில் சோதனை சாவடிகள்

 
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. கடந்த ஆண்டு போல் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க இந்தாண்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழக ஏ.டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) ஜார்ஜ் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளார்.
 
மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா காவல்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.  
 
இதையடுத்து மதுரை மாவட்டத்தில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிமாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக பரமக்குடி செல்லும் வாகனங்களை கண் காணிக்கும் வகையில் 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
 
திண்டுக்கல் சாலை, விரகனூர், சுற்றுச்சாலை சந்திப்பு, பசுமலை, அவனியாபுரம், உத்தங்குடி உள்பட அனைத்து இடங்களிலும் மதுரைக்குள் நுழையும் சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் அதிரடி படையினர் சிறப்பு காவல்படை போலீசார் வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 
ஒவ்வொரு சோதனை சாவடியிலும் தலா ஒரு டி.எஸ்.பி. தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வீடியோ மற்றும் கண்காணிப்பு கேமிரா வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.  
 
மதுரை புறநகர் பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு தற்போது கூடுதலாக்கப்பட்டு கண்காணிப்பும் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது என காவல்துறை அதிகாரிகள் கூறினர். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் வெளியூர் வாகனங்களை அனுமதிக்காமல் வேறு வழியில் அனுப்பிடவும் கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
மேலும் மாநகர போலீசாருடன் ஆயுதப்படை, சிறப்பு காவல்படை போலீசார் என 800க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறினர்

பரமக்குடியில் செப்.11 இமானுவேல் சேகரன் நினைவு நாள்: பாதுகாப்பு ஏற்பாடு : ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் ஆய்வு






 பரமக்குடி, செப். 3: பரமக்குடியில் செப்டம்பர் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது. அன்று அஞ்சலி செலுத்த வருவோர், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏ.டி.ஜி.பி. எஸ்.ஜார்ஜ் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.  பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செப்.11-ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  கடந்த ஆண்டு அவரது நினைவு நாளின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  பரமக்குடி பகுதியில் பதற்றமான பகுதிகள், அஞ்சலி செலுத்த வருவோருக்கான வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், நினைவிடம் செல்லும் வழிகள் குறித்து ஏ.டி.ஜி.பி. எஸ்.ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார்.  பின்பு ஆர்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம், பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பு, இமானுவேல் சேகரன் நினைவிடம், நினைவிடத்திலிருந்து அஞ்சலி செலுத்தியோர் வெளியே செல்ல ரூ 2.60 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  ஐந்துமுனை சந்திப்பில் பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்து கேட்டார். பின்பு முதுகுளத்தூர் சாலையில் பொன்னையாபுரம், பாலன் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வழித்தடங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார்.  அப்போது ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணி, டி.ஐ.ஜி. வரதராஜன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

இமானுவேல் சேகரன் நினைவு நாள் பாதுகாப்பு வளையத்தில் பரமக்குடி




பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (செப்.11) இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி  தினத்தையொட்டி குருபூஜை நடக்கிறது. அரசியல் கட்சி உள்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி  செலுத்த உள்ளனர். அஞ்சலி செலுத்த வசதியாக கட்சி வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் 11ல் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை 5 முனை பகுதியில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை  அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் இறந்தனர்.
இம்முறை அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கவும்,  பாதுகாப்பை அதிகரிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். 

டிஐஜி ராமசுப்பிரமணியன் தலைமையில் மதுரை, கோவை, சேலம் உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில்  இருந்து 15க்கும் அதிகமான எஸ்பிக்கள் பரமக்குடி வந்துள்ளனர். பரமக்குடி 5 முனை சாலை, ஆர்ச் பகுதி,  பஸ் ஸ்டாண்ட், இமானுவேல் நினைவிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி  நிகழ்ச்சிகள் கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவிதங்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  பரமக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு நாள் பரமக்குடியில் பலத்த பாதுகாப்பு




பரமக்குடி : கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 பேர் பலியானதையொட்டி, இமானுவேல் சேகரன் நினைவு தினமான இன்று பரமக்குடியில் பாதுகாப்புக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி குருபூஜை நடக்கிறது. அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் நினைவு அஞ்சலி செலுத்த உள்ளனர். இதற்காக கட்சி வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 11ல் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை 5 முனை பகுதியில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர். இம்முறை அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் போலீசார் விரிவான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பரமக்குடியில் மெற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து மதுரையில் ஏடிஜிபி ஜார்ஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து டிஐஜி ராமசுப்பிரமணியன் தலைமையில் மதுரை, கோவை, சேலம் உள்பட  முக்கிய நகரங்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட எஸ்பிக்கள் பரமக்குடி வந்துள்ளனர். 10 ஆயிரம் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நினைவிடம் உட்பட 3 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி  கண்காணிக்கப்படுகிறது. பள்ளி, கல்லு£ரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட் டுள்ளது.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள்


செப்.11 இமானுவேல் சேகரன் நினைவு நாள்: அனுமதி அட்டை பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை






 ராமநாதபுரம், செப். 7: பரமக்குடியில் வரும் 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கட்டாயமான முறையில் அனுமதி அட்டை பெற வேண்டும் எனவும், அதனைப் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வட்டாரப் போக்குவரத்து  அதிகாரி கார்த்தலிங்கன் தெரிவித்துள்ளார்.  ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வாடகைக் கார் மற்றும் சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, வட்டாரப் போக்குவரத்து அதிகாரி கார்த்தலிங்கன் தலைமை வகித்துப் பேசியதாவது:  இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு வருவோர் எந்த ஊரிலிருந்து புறப்பட்டாலும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளரின் ஒப்புதல் பெற்றும், அவர்கள் வழங்கும் அனுமதி அட்டையை வாகனங்களின் முன்னும், பின்னும் உள்ள கண்ணாடிகளில் ஒட்டியிருக்க வேண்டும். அவ்வாறு ஒட்டிய பின்னரே வாகனங்கள் எதுவும் இயக்கப்பட வேண்டும்.  காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை தவிர, மாற்றுப்பாதையில் கண்டிப்பாக செல்ல அனுமதியில்லை. மீறிச் செல்லும் வாகனங்கள் மீதும், அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.  ஊர்வலத்தில் பங்கேற்கும் வாகனங்கள் அனைத்தும் மூடப்பட்டதாக இருக்க வேண்டும். லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் வருவதற்கு அனுமதியில்லை. வாகனங்களின் மேற்கூரைகளில் அமர்ந்து கொண்டும், ஜன்னல் மற்றும் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும் வந்தால், அந்த வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  வாகனங்களில் மற்றவர்கள் புண்படும்படியான வாசகங்களை ஒட்டிக் கொண்டு வரக்கூடாது. குடிபோதையிலும், செல்போனில் பேசிக் கொண்டும் வாகனங்களை ஓட்டக்கூடாது. வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். காவல்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள மாவட்டத்தின்  7 சோதனைச் சாவடிகளிலும், போலீஸôரோடு இணைந்து இயக்கஊர்தி ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டு பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு அதிகாரியாக எஸ். கண்ணன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார். வாகன ஓட்டுநர்கள் புகார்கள் எதையும் பதிவு செய்வதாக இருந்தால், அவரது 94873-10103 செல்போன் எண்ணிலோ அல்லது அந்தந்த சோதனைச் சாவடிகளில் பணியில் உள்ள இயக்கஊர்தி ஆய்வாளர்களிடமோ புகார்களைப் பதிவு செய்யலாம், எனவும் அவர் தெரிவித்தார்.

இமானுவேல் சேகரன் நினைவு நாள்


இமானுவேல் சேகரன் நினைவு நாள்


இமானுவேல் சேகரன் நினைவு நாள்


இமானுவேல் சேகரன் நினைவு நாள்



இமானுவேல் சேகரன் நினைவு நாள்


இமானுவேல் சேகரன் நினைவு நாள்