ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

தியாகி இம்மனுவேல்சேகரனின் நினைவு நாளைஅரசு விழாவாக நடத்த வேண்டும்:

தியாகி இம்மனுவேல்சேகரனின் நினைவு நாளைஅரசு
விழாவாக நடத்த வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை..வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இமானுவேல் சேகரனின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போதுதான் இமானுவேல் சேகரனுக்கு தபால் தலை வெளியிடப்பட்டது. தேவேந்திர குல மக்களின் நலனுக்காக பாடுபடும் இயக்கமாக காங்கிரஸ் கட்சி உள்ளது என்றார்.
அஞ்சலி செலுத்திவிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது: 2011-இல் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அதற்காக இதுவரை காவல்துறைமீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்கவில்லை என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்: இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அதை அறிவிக்க வேண்டும்.

தேவேந்திரகுல மக்களின் புண்ணிய பூமியில் பல்வேறு அரசியல் கட்சியினர் வீர வணக்கம் .

தேவேந்திரகுல மக்களின் புண்ணிய பூமியில் பல்வேறு அரசியல் கட்சியினர் வீர வணக்கம் ...பரமக்குடி, பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் சார்பில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, டாக்டர் சுந்தர்ராஜ் மற்றும் அதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரின் 58-வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நினைவிடம் முழுவதும் மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று காலை அவரின் சொந்த ஊரான செல்லூரை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல, இமானுவேல் சேகரனின் குடும்பத்தினர் நினைவிடத்திற்கு வந்திருந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளின் சார்பில் அஞ்சலி செலுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேரம் ஒதுக்கப்பட்டு அஞ்சலி செலுத்தினர்.
இதன்படி முதன்முதலாக அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, டாக்டர் சுந்தர்ராஜ், அன்வர்ராஜா, எம்.பி. ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் திரளாக சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட செயலாளர் தர்மர், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பரமக்குடிமுனியசாமி, ராமநாதபுரம் ஜி.முனியசாமி, திருவாடானை ஆணிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலுச்சாமி,போகலூர் யூனியன் தலைவர் நாகநாதன், பரமக்குடி நகரசபை தலைவர் கீர்த்திகா முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, தி.மு.க. சார்பில் மாநில துணை செயலாளர் துரைச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, தமிழரசி, மாவட்ட செயலாளர் திவாகர், முன்னாள் எம்.பி. பவானிராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில தலைவர் இளங்கோவனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், த.மா.கா சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகவேல்ராஜன், ராம்பிரபு, ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திரராமவன்னி, ரெங்கநாதன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் வைகோ கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாhர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தலைவர் ஜான்பாண்டியன், பா.ம.க. சார்பில் மாநில பொது செயலாளர் வடிவேல்ராவணன், தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர். டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D .M .L .A ., தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுதவிர அந்தந்த பகுதிகளில் இமானுவேல் சேகரன் திருஉருவப்படத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு பொங்கல் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங், ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன், டி.ஐ.ஜி. ஆனந்தகுமார்சோமானி ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ராமநாதபுரம் மயில்வாகனன் உள்ளிட்ட 9 போலீஸ் சூப்பிரண்டுகளும், 7 உதவி போலீஸ் சூப்பிரண்டுகளும், 20 துணை போலீஸ் சூப்பிரண்டுகளும் பாதுகாப்பு பணிகளை திறம்பட மேற்கொண்டனர். ஆளில்லா விமானம் மற்றம் 360 டிகிரி கோணத்தில் நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் சக்திவாய்ந்த கேமரா பொருத்தப்பட்ட வானில் பறக்கும் பலூன் போன்றவற்றின் மூலம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் மாவட்டம் கொண்டுவரப்பட்டு அமைதியாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு

..தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் டாக்டர் .அய்யா அவர்களின் எழுச்சி உ ரை...20 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இவ்விழா இன்று உலக அளவில் பேசப்படுகிறது. இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அல்லது நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என 20 வருடங்களாக கோரி வருகிறோம். சட்டப்பேரவையில் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை.
2010 இல் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசியபோது, பிரிந்து கிடக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே இனமாக அறிவிக்க வேண்டும். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினோம்.
இந்த 3 கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்ததால் கூட்டணி வைத்தோம். ஆனால் இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு :.......தொல்காப்பியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களை ஐந்து வகைகளாகப் பிரித்தார்கள். அதனுடைய அடிப்படையில் தான் மக்களையும் பார்த்தார்கள். குறிஞ்சி என்று அழைக்கப்படக்கூடிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மலைவாழ் மக்கள். முல்லை என்று அழைக்கப்படக்கூடிய மலையினுடைய அடிவாரத்திலே வாழ்ந்த மக்கள் இடையர்கள். ஆறுகள், ஆறுகளுடைய படுகைகள், எங்கே நீர்ப்பகுதி இருக்கிறதோ அங்கே வாழ்ந்தவர்கள் மருதநில மக்கள், அவர்கள் தான் தேவேந்திரகுல வேளாளர்கள், அவர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்.
இந்த அரசு இந்த தமிழ் மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டுமென்று சொன்னால் நீங்கள் தமிழர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டுமென்று சொன்னால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு சமமான அங்கீகாரம் கொடுக்காமல் நீங்கள் தமிழகம் என்று சொல்லிக்கொள்வதிலோ தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதிலோ அல்லது திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதிலோ அர்த்தமே கிடையாது என்பதை இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன்.
எனவே இந்த அரசு இன்னும் எட்டு மாத காலம் இருக்கிறது, வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பிறந்த தினம் வரப்போகிறது, அதற்குள்ளாக நிச்சயமாக இந்த அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று நான் கருதுகிறேன். இல்லையென்றாலும் புதிய தமிழகம் அதைப் போராடிப் பெறும் என்பதையும் இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன். புதிய தமிழகத்திற்கு போராட்டம் என்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் போராடாமல் கொடுக்க வேண்டியதுதான் அரசுக்கு அழகு என்பதையும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
நீங்கள் கிலோ கணக்கிலே எதோ தங்கமெல்லாம் கொடுக்கிறீர்கள். ஆனால் நாங்கள் இப்போது கேட்பது ஒரு சிறிய அடையாளம் மட்டும் தான். நாங்கள் வேறொன்றும் புதிதாகக் கேட்கவில்லை, தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற ஒரு சிறிய அடையாளம், தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுதல் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இவை மூன்று தான் நாம் கேட்கக் கூடிய மிக முக்கியமான கோரிக்கைகள்.
எனவே இந்த மூன்று கோரிக்கைகளையும் இன்றைய அரசு எஞ்சி இருக்கக்கூடிய காலகட்டங்களில் நிறைவேற்றித் தரும், இல்லையென்று சொன்னால் நிறைவேற்றித் தரக்கூடிய அரசை உருவாக்கித் தரக்கூடிய சக்தி புதிய தமிழகத்திற்கு உண்டு என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

'' தெய்வ திருமகனார் தியாகி இமானுவேல் சேகரனார் '' அவர்களின் குரு பூஜை சீரும் சிறப்புமாக நடை பெற்று முடிந்தது.

'' தெய்வ திருமகனார் தியாகி இமானுவேல் சேகரனார் '' அவர்களின் குரு பூஜை சீரும் சிறப்புமாக நடை பெற்று முடிந்தது.
.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறபித்த தேவேந்திர குல சிங்களுக்கு & நம் சமூக தலைவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக எந்த ஒரு வன்முறை சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது ... காவல் துறைக்கும் வாழ்த்துக்கள் .. நிகழ்சிகளை ஒருக்கிணைத்து , தலைவர்களை வரவேற்று , சிறப்பான ஏற்பாடுகளை செய்த "தேவேந்திரர் பண்பாட்டு கழக " நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்
.
முதல் முதலில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும் , காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் அவர்களுக்கும் மற்றும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் . திருமாவளவன் அவர்களுக்கும் அனைத்து தேவேந்திர குல மக்கள் சார்பாக நன்றி...!!!!
.
எப்பவும் போல
.
அதிமுகவில் வாய்பேசாத சுந்தராஜ், செல்லூர் ராஜ்.கலந்து கொண்டார் ... அக் ..30 அதிமுகவை தோற்றுவித்த தலைவர் தேவர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதால் அம்மையார் வரவில்லை..
.
திமுகவில் ஊனமுற்ற தங்கவேலன், தமிழரசி.(ஸ்டாலின் அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
தேமுதிகவில் புதியதாக எம்.எல்.ஏ சுபா. (விஜயகாந்த் அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
பி.ஜே.பியில்.சௌந்தராஜன் ( தமிழிசை அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
நாம் தமிழர் : வரவில்லை ( காரணம் கொம்பன் படம் மற்றும் அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
கம்யுனிஸ்ட் : வரவில்லை ( காரணம் நாம் தலித் இல்லாததால் மற்றும் அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
பா.ம.க. : வரவில்லை ( காரணம் மதுரை விமான நிலையம் கண்டன போஸ்டர் )
.
தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வந்தார் ... அதிமுக அணியில் இருப்பதால் எதுவும் பேசவில்லை ....அதைவிட கொடுமை தமாக , பாஜக போன்ற கட்சிகள் அதன் SC அணி தலைவர்களை அனுப்பி வைத்தது .. அந்த அடிமைகள் அந்த கட்சிகளின் SC துறை சார்பாக கலந்து கொண்டது ... இறுதியாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் ..டாக்டர் . க . கிருஷ்ணசாமி .. M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் பல்லாயிரகணக்கான தொண்டர்கள் படையுடன் வீர வணக்கம் செலுத்தினார் .. பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி தேவேந்திர குல மக்களுடைய கோரிக்கைகளையும், அய்யா இம்மானுவேல் சேகரனுக்கு புகழாரம் சூட்டினார் .வீர வணக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உ றவுகளுக்கும் நன்றி ..!!!

செப் .11... மாவீரர் மண்ணில் தேவேந்திர குல மக்களின் மாற்றங்கள் ...!!!!!...

செப் .11... மாவீரர் மண்ணில் தேவேந்திர குல மக்களின் மாற்றங்கள் ...!!!!!... எந்த ஒரு வன்முறை சம்பவத்திற்கும் இடம் தராமல் அமைதியாக .வீர வணக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள் .. "தேவேந்திரர் பண்பாட்டு கழகம் " ஏற்பாடு செய்த சீருடை அணிந்த தொண்டர்கள் அலைகடல் என வந்த கூட்டத்தை கட்டுபடுத்தினர் ... காவல் துறை வெறும் பார்வையாளர்களாக இருந்தனர் ... கட்டுப்பாடு , சுய ஒழுக்கம் , அமைதியான முறையில் கோரிக்கை முழக்கங்கள் , தலைவர்களின் சிறப்பான வழிகாட்டல்கள் ,தேவேந்திரர் சமுகத்தின் நடவடிக்கைகளை அனைத்து தமிழ் சமூகமும் பாராட்டித்தான் ஆக வேண்டும் ... நேர்மையான காவல்துறை அதிகாரிகள் இப்படிப்பட்ட மக்களையா 2011ல் சுட்டு கொன்றோம். என்று நினைக் கிறார்கள் .... அன்று காலை முதல் மாலை வரை காவல்துறைக்கு வேலையே இல்லை .. இது ஒன்று போதாதா அரசு விழாவாக அறிவிக்க ...பல்வேறு அமைப்பினர் வரவேற்பு பதாகைகள் வைத்து இருந்தனர் .. அதில் பெரும்பாலும் "தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை ".. மதுரை விமான
நிலையத்திற்கு "இம்மானுவேல் சேகரன் பெயர் ".. தியகியாரின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் நிறைவை தருகின்றன .... இறுதியாக பல்வேறு தடைகளை தாண்டி வீர வணக்கம் செலுத்திய குரலற்றவர்களின் குரல் .. டாக்டர் . க .கிருஷ்ணசாமி .. M .D .M .L .A ., அவர்கள் நம் மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றும் வகையில் நிறைவுரை ஆற்றினார்

16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் .

16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் . டாக்டர் .க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் விவாதம் .டாக்டர் கிருஷ்ணசாமி:- பட்டியல் இனத்தில் 6 உட்பிரிவுகள் உள்ளன. அந்த பிரிவினரை ஒரே பிரிவினராக தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க உத்தரவிட வேண்டும்.
அமைச்சர் ந.சுப்பிரமணியன்:- இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் கலியபெருமாள் என்பவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அதுபற்றி இப்போது பேசமுடியாது.
டாக்டர் கிருஷ்ணசாமி:- தியாகி இம்மானுவேல் சேகரனின் பிறந்ததினம், மறைந்த நாள் ஆகியவற்றை அரசு விழாவாக கடைபிடிக்க வேண்டும். அவரைப் பற்றி இந்த அவையில் அண்ணா, “இம்மானுவேல் சேகரனை ஒரு வீரனாக கருத வேண்டும். அவரை நாட்டு சரித்திரத்தில் குறிப்பிட வேண்டும்” என்று பேசியிருக்கிறார். மதுரை விமான நிலையத்துக்கு இம்மானுவேல் சேகரனின் பெயரை வைக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்றஉ ரை முழு தொகுப்பு .

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்றஉ ரை முழு தொகுப்பு ..... "திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும்" - பேரறிஞர் அண்ணா.
நேற்று (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி!
“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.
அதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்.
ஆனால் குறிக்கிட்டுப் பேசிய அமைச்சர் ‘ஏதோ வழக்கு இருக்கிறது’ என்று தவறுதலாக சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்திலே பலர் வழக்கு தொடுத்திருக்கிறதற்கெல்லாம் ‘இதுபோன்ற பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என்று ஆறு பெயர்களில் அழைக்கப்படக்கூடியவர்களை ஏன் ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்று தான் நீதிமன்றங்கள் கேட்டிருக்கின்றனவே தவிர வேறு எதுவும் நீதிமன்றங்கள் சொல்லவில்லை.
மேலும் 1957-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரத்தின்போது தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட பின்பு அக்டோபர் 30-ஆம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியபொழுது, ‘திரு.இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையிலேயே அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல. தமிழ்நட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காக பாடுபட்டு தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக்கப்பட வேண்டியது. திரு.முத்துராமலிங்கத் தேவர் மறவர்களுக்கு தலைவராக இருந்தார்’ என்று கூறியிருக்கிறார்.
அப்படியெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதில் எந்தவிதமான தவறுமில்லை; அவர் தகுதியானவர், என்ற அடிப்படையிலே நான் பேசினேன். அதேபோல இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற மூன்று முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.
மேலும் இன்று காலையிலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் அரசினுடைய தனித் தீர்மானம், அதாவது, ஈழ மக்களுக்கு எதிராக 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரின்போது நடந்த போர் விதிமுறை மீறல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து “ International Independent Investigation” என்று அழைக்கப்படும் சர்வதேச சுதந்திரமான விசாரணை தான் நடத்தப்பட வேண்டுமே தவிர, அந்த விதிமுறைகள் குறித்து இலங்கை அரசே விசாரிக்கலாம் என்ற அமெரிக்காவினுடைய மாறுபட்ட நிலைபாட்டை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது.
இந்திய அரசு ஐ.நா.வில் சர்வதேச சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்த வேண்டும் என்று சட்டமன்றத்திலே இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாங்கள் ஆதரித்துப் பேசினோம். அதற்கு சான்றுகளாக இப்பொழுது சேனல் 4 என்ற ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் துப்பாக்கிச்சூடுகள், அதேபோல “No Fire Zone” என்று அழைக்கப்படக்கூடிய துப்பாக்கிச்சூடுகள் எங்கெங்கெல்லாம் நடத்தப்படக்கூடாதோ அங்கெல்லாம் அதாவது மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட நடத்தப்படக்கூடாத இடங்களிலெல்லாம் நடத்தப்பட்டிருக்கின்றன என்ற ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல ஈழ விடுதலைப் போரில் மிகப்பெரிய தியாகம் செய்திருக்கக்கூடிய பிரபாகரன் அவர்களுடைய புதல்வர் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பாட்டார் என்ற ஆதாரத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. எனவே இப்படிப்பட்ட பல போர் விதிமுறை மீறல்கள் எல்லாம் இப்பொது மெல்ல மெல்ல வெளியே வந்துகொண்டிருக்கின்றன. எனவே இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும், ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று சொன்னால் சர்வதேச அளவிலான நேர்மையான, நியாயமான, சுதந்திரமான விசாரணை வேண்டுமென்பதை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

தேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ..!!!!

 தேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ..!!!! (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி!
“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.
அதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்..

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி:

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?..செப். 17–ராமநாதபுரம்,.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த ஒவ்வொருவருக்கும் தனித் தனியே நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதன்படி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. [மதியம் 2.00 மணி }.அவர் அந்த நேரத்தில் வராமல் சற்று தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து காட்டுபரமக்குடி கிராம நிர்வாக அலுவலர் தீர்த்த ரத்தினேஸ்வரன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் விசாரணை நடத்தி டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?..

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?.....பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்தாமல், தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தியதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது பரமக்குடி போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
இமானுவேல்சேகரன் நினைவு தினமான செப்.11-ஆம் தேதி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அஞ்சலி செலுத்தும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பகல் 1.30 மணி முதல் 2 மணி வரை என நேரம் ஒதுக்கப்பட்டிருந்தும் மாலையில் தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் நினைவிடத்தின் முன்பாகவே கூட்டம் நடத்தி அதில் ஒலிபெருக்கியிலும் பேசினார். ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் காலதாமதமாக வந்தமைக்காகவும், விதிமுறைகளை மீறியதற்காகவும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் மீது பரமக்குடி நகர் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

காலச்சுவடுகள் .......இந்திய முதல் குடிமகன் பிரணாப் அவர்களை சந்தித்து வாழ்த்து கூறிய முதல் தமிழக அரசியல் கட்சி தலைவர் ... டாக்டர் . க . கிருஷ்ணசாமி .. M.D .M .L .A ., அவர்கள் ..

தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும் ......!!!!...தேவேந்திரர் சமுக பிரிவில் வாதிரியார்கள் ..!!!!!..


..... தமிழகத்தின் மூவேந்தர் மரபைத் தோற்றுவித்து, மருத நிலத்தில் நெல் வேளாண்மையை உண்டு செய்து, மள்ளர், களமர், தேவேந்திர குல வேளாளர், காலாடி, கடையர், பலகனார், பணிக்கனார், குடும்பனார், பண்ணாடி, வயல்காரர், வாதிரியார்… என்று பல்வேறு பெயர்களில் வாழ்ந்து வரும் தமிழகத்தின் மூத்த குடி தேவேந்திர குல சமுகமாகும் ..தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிகளின நெருக்கடிக்கு ஆளாகி ஒடுக்கப்பட்ட மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களின் ஒரு பிரிவினரே இன்று தங்களை தனிச் சாதியினர் என்று சொல்லிக்கொள்ளும் வாதிரியார் இனத்தவர்...நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் ஆதிக்க சாதியினரின் பண்பாட்டு ஒடுக்குதலுக்கு ஆளான தேவேந்திரர்கள் தமது மருதநில வேளாண் மரபை விட்டு விடாது போராடி இன்றும் வேளாண் மக்களாக வாழ்ந்து வருகின்றனா;. ஆனால் இங்கே ஒரு வியப்பான, விந்தையான சமூக மாற்றம் இயல்பாக நடந்தேறியிருக்கிறது. வேளாண் தொழில் செய்த மள்ளர்களில் ஒரு பிரிவினர் நெசவு செய்தனர். அவர்களே இன்று வாதிரியார் என்று அழைத்து கொள்கின்றனர்.. தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் உள்ளடக்கி பரமன்குறிச்சியை மையமாகக் கொண்டு சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழும் மொத்த மக்கள் தொகை சுமார் 25000 பேர் மட்டுமே ஆவர்.... தமிழகத்தின் மக்கள் தொகையில் ஒரு கோடிக்கு மேல் வாழும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளரின் ஒரு பிரிவினர் தங்களை அந்நியப்படுத்தி சிறுபான்மையாக காணாமல் போய் விடுவரோ என்ற கருணையுடன் கூடிய தொலைநோக்கு பார்வையும் எமக்கு உ ண்டு... தமிழகத்தில் பெரிதும் பரவி வாழும் ஒன்றரை கோடி தேவேந்திர குல வேளாளாகளும் பல்வேறு குலப்பட்டங்களையும் பிரிவுகளையும் கொண்டு விளங்குவர் ஆவர். இதில் தென் மாவட்டங்களில் வாதிரியார் எனும் பட்டத்துடன் வாழும் சமுதாயத்தினர் தேவேந்திர குல வேளாளரில் ஒரு பிரிவினரே ஆவர்..வாதிரியார் தேவேந்திர குலத்தவரே என்பதற்கான ஆதாரங்கள்..... “பரமன்குறிச்சி பள்ளர்கள் நெசவுத்தொழில் செய்து வந்தார்கள். வெள்ளையரது வியாபாரச் சுரண்டலினால் இவர்களது தொழில் நசிந்தது. இவர்களில் சிலர் வெள்ளையரால் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதனால் அதிருப்தியுற்றிருந்த பள்ளரையும் ஊமைத்துரை வெள்ளையர் எதிர்ப்பணியில் சேர்த்துக் கொண்டான்”.. (வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் -பக்-14).... “வெள்ளையர் எதிர்ப்பு போரில் சாதி ரீதியில் பள்ளர்கள் கணிசமாக இருந்தார்கள். இவர்களைத் தன் பக்கம் குறிப்பாக பரமன்குறிச்சி பள்ளர்களை தமது போராட்டத்தில் பயன்படுத்திக் கொண்டான் ஊமைத்துரை” (கதைப்பாடல்களும சமூகமும் – பக்-70)...திரு.வே.கோபாலகிருஷ்ணன் சட்டமன்ற பேச்சு
4.5.95 அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற ஒறுப்பினர் திரு,வே.கோபால கிருஷ்ணன் ஆதிதிராவிட நலத்துறை மானியக் கோரிக்கையின் மீது பேசியபோது பின்வருமாறு பதிவு செய்திருக்கின்;றார். “தமிழகத்தில் 1 கோடி மக்கள் தொகை கொண்ட தேவேந்திர குல வேளாளர் பள்ளர், குடும்பன் பண்ணாடி, காலாடி, வாதிரியான், பட்டக்காரர் தேவேந்திர குலத்தான் என்று பல்வெறு பெயர்களில் அரசு பதிவு இதழ்களில் குறிப்பிட்டுள்ளது. இப்பிரிவு அனைத்தையும் ஒரே பிரிவாக “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்கப்பட வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்” (மள்ளர் மலர் – ஜூன் 1995- பக்22) இப்பதிவு தேவேந்திரர்களில் ஒரு பிரிவு வாதிரியார் என்பதையே காட்டுவதாகும். வாதிரியாருக்கென திருச்செந்தூரில் மடம் ஒன்று பாழடைந்த நிலையில் இன்றும் இருப்பதும், அது தேவேந்திர குலத்தாருக்கான மடத்தோடு ஒட்டி அமைந்துள்ளது – இவர்களது தேவேந்திர குல வேளாளருக்குமான பண்பாட்டு உறவையும சாதியத் தொடர்பையும வெளிக்காட்டும் சரித்திரச் சான்றாகும். 1976-க்கு முன்னர் இவர்கள் பள்ளர் என்றே வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வசதிக்காகத் தங்களை இனங்காட்டியது தேவேந்திரருக்கும் வாதிரியார்களுக்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை வலியுறுத்துவதாகும். வாதிரியார் தெரு “பள்ளக்குடி” என அழைக்கப்படுவது மேலும் இத்தொடர்பை வலு சேர்க்கிறது.
நெசவுத்தொழிலை ஏற்றுள்ள வாதிரியார் சமூகம் பண்பாடு பழக்க வழக்கங்கள் என்பதோடு பள்ளர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டு வாழ்வது அனைத்திலுமே தேவேந்திரரோடு தொடர்புடைய சமூகமாக விளங்குவதால் இவர்களைத் தேவேந்திரர்களின் ஒரு உட்பிரிவாகவே நான் கருதுகிறேன் .... தற்போது தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை கோரி வலிமையான போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் வாதிரியார்கள் தங்களையும் இணைத்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

வாதிரியார்... தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் ஒரு பிரிவே ..!!!!........

...1956 ஆம் ஆண்டு அரசு வெளியட்ட தாழ்த்தபட்டோர் (பட்டியல் சாதி) பட்டியலில் பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் சாதி சேலம் , கோவை மாவட்டகளில் மட்டும் உள்ளதாக குறிப்பிடபட்டிருந்தது.
வரலாறு தெரிந்த சான்றோர்களான நம் முன்னோர்கள் வாதிரியார் பள்ளரின் உட்பிரிவு என்பதையும் ,
வாதிரியார் நெல்லை ராமநாதபுரம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் அரசுக்கு மனு செய்தனர்.
அரசும் மனுவை ஏற்று ஆய்வு செய்து கோரிக்கை உண்மை என்பதை ஏற்று பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் மாநிலம் முழுமையும் தாழ்த்தபட்டோர் என்று 1957 ஆம் ஆண்டு ஆணையிட்டனர்.
ஆனால் இந்த உண்மையை மறைத்து வாதிரியார் சாதி தாழ்த்தபட்டோர் பட்டியலில் 1976 இல் தான் சேர்க்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக ( நம்மை ..... நினைத்து ) இன்று வரை ஏதோ உள்நோக்கத்துடன் சிலர் கூறி வருகிறார்கள்
இவர்களை வரலாறு மன்னிக்க கூடாது

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்கம் ...... நன்றி .. தமிழக அரசியல் வார இதழ் {02.09.2015}.

.....வீரன் சுந்தரலிங்கம் ....தேவேந்திரகுல வேளாளர்கள் தங்கள் குல வீரத்தின் அடையாளமாக கருதும் 18வது நூற்றாண்டு தளபதி ..வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு கட்டத்தில் தளபதியாக இருந்து கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு எதிரான கட்டபொம்மனின் போராட்டத்தில் பங்கு வகித்தார் .தூத்துக்குடி மாவட்டத்தின் கவனகிரி கிராமத்தில் பிறந்த சுந்தரலிங்கம் மள்ளர் இனத்தைசேர்ந்தவர் ..சேர /சோழ / பாண்டியர் காலத்தில் மள்ளர் என்று அழைக்கப்பட்ட இனம்தான் பின்னால் பள்ளர் என்று மருவியது என்கிறார்கள் . தேம்பாவணி பாடிய வீரமாமுனிவரும் , பேரூர் புராணம் எழுதிய கச்சியப்ப முனிவரும் மள்ளர் ..பள்ளர் என்ற இரு பதங்களையும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் . பிற்கால திராவிட எழுத்தாளர்கள்.. குறிஞ்சி , முல்லை ., மருதம் , நெய்தல் , பாலை என்ற ஐவகை தமிழ் நிலங்களில் முறையே குறவர் , இடையர் ,மள்ளர் ,{உ ழவர் } பரதர் என்ற இனத்தவர்கள் வாழ்ந்து முறையே வேட்டை , ஆதிறை மேய்தல் , உ ழவு ,மீன்பிடிப்பு ,தொழில்களை செய்து வந்தனர் என்பது சங்க இலக்கியங்கள் தொட்டு பதிவான தகவல் . இதில் சொல்லப்படும் உ ழவர்கள் மள்ளர்களைக் குறிக்கும் என்று ஒரு கருத்தும் , சேர /சோழ /பாண்டியர்களே மள்ளர்கள்தான், ஆரம்ப காலத்தில் அரசு குலத்தவராக இருந்த மள்ளர்கள் பிற்காலத்தில் வடுக , சாளுக்கிய , நாயக்கர் படையெடுப்புகளினால் உ ழவு தொழிலை தழுவினார்கள் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன ..மள்ளர்கள் தமிழர் / திராவிடர் நாகரீகத்தில் குடும்பம் என்ற சமுதாய கட்டமைப்பை ஏற்படுத்தினர் . அதனால் அவர்கள் குடும்பனார் என்றும் அழைக்கப்பட்டனர் . மள்ளர்களின் கொண்டாட்டம்தான் சோழ மன்னர்கள் கொண்டாடிய இந்திரவிழா என்றும் , இன்று நாற்று நடும் விழாவை இந்திரவிழாவாக கொண்டாடுகிறார்கள் எனப்படுகிறது .சோழ மன்னன் நெடுமுடிகிள்ளி இந்திரவிழா கொண்டாடமல் விட்டதால்தான் பூம்புகார் கடற்கோளினால் அழிந்தது என்று நம்புகிறார்கள் . இந்த மள்ளர் இனத்தை சேர்ந்த சுந்தரலிங்க குடும்பனாரின் முழு பிறப்பு விவரங்கள் தெரியவில்லை என்றாலும் தென் தமிழகத்தில் இன்னும் புழக்கத்தில் இருக்கும் நாட்டுப்புற பாடல்களில் இருந்து வீரன் சுந்தரலிங்கத்தின் வீர வரலாற்றை தெரிந்து கொள்ள முடிகிறது . கவனகிரி கிராமம் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி அருகில் உ ள்ளது .சுந்தரலிங்கம் தனது இளமை காலத்திலேயே சடுகுடு , சதுரங்கம் என்று அந்த பகுதியில் பிரபலமான விளையாட்டு வீரனாக இருந்ததாக தெரிகிறது .

மள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்கம் ...... நன்றி

மள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்கம் ...... நன்றி .. தமிழக அரசியல் வார இதழ் {02.09.2015}......வீரன் சுந்தரலிங்கம் .......சுந்தரலிங்கத்தின் வீரத்தையும் , தைரியத்தையும் நேரில் கண்ட கட்டபொம்மன் தனது படையில் சேர்த்துக் கொண்டார் .. பின்னாளில் கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவரானார் ... இது நடந்தது 1775...80 கால கட்டத்தில் இருக்கும் . பின்னால் கிழக்கிந்திய கம்பெனி படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டு தாக்கிய போது , சுந்தரலிங்கம் தன் மாமன் மகளை ஆட்டு மந்தையை ஓட்டிச் செல்ல செய்து , ஆடுகளுக்கிடையே ஒளிந்து வெள்ளையர்களின் வெடிகிடங்கை நோக்கி சென்றார் .. ஆங்கிலேய வீரன் ஒருவன் குரல் எழுப்ப , நிலைமை மீறிவிட்டது என்பதை புரிந்து கொண்ட சுந்தரலிங்கம் ஒரு தீப்பந்தத்தை கொளுத்திக்கொண்டு வெடிகிடங்கின் மேல் குதித்துவிட்டார் . அவருடன் அவரது முறைப்பெண் வடிவும் குதிக்க , வேடிக்கிடங்கு வெடித்து சிதறியது . இது நடந்தது 1796 அல்லது 1799 ஆக இருக்கலாம் .இந்திய சுகந்திர போராட்ட சரித்திரத்தில் 18ம் நூற்றாண்டிலேயே "மனித வெடிகுண்டு "... தற்கொலைப்படை என்ற பெருமையை வீரன் சுந்தரலிங்கம் / வடிவு ஆகியோரை சாரும் ... இதே பெருமையை 1780ல் வேலுநாச்சியாரின் பெண் தளபதி குயிலியும் பெறுகிறார்கள் .. வீரன் சுந்தரலிங்கம் இன்றளவும் தேவேந்திர குல வேளாளர்களின் பெருமையாக கருதப்படுபவர் . சுகந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய சுந்தரலிங்கத்தின் வீரமும் , தியாகமும் நிச்சயம் அவரது இனம் தாண்டி , அவரது பெருமை மனித குல வரலாற்றில் ஒரு அடையாச் சின்னமாக விளங்கும் .

ஆகஸ்ட்31_தேவேந்திரகுல_மக்களின்_தன்னெழுச்சி _நாள்!

ஆகஸ்ட்31_தேவேந்திரகுல_மக்களின்_தன்னெழுச்சி _நாள்!
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் .. டாக்டர் . க கிருஷ்ணசாமி .. அவர்கள் தலைமையில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் ..தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளத்தில் 1995 ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி காவல் துறையினரால் தேவேந்திரகுல மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
கொடியங்குளம் கிராமத்திற்க்கு டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியாக நிவாரணம் கிடைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.அதன் காரணமாக அவர்களுக்கு நிவாரணம் கிடைத்தது.
சாதிய வன்முறைகளுக்கு சரியான பதிலடி எதிரியின் போர் உத்திகளையே நாமும் கையாள வேண்டும் என்ற டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வழிகாட்டுதலால் தென் தமிழகத்தில் ‘தாக்கினால் திருப்பித் தாக்குவோம்’ புதிய உத்தி பின்பற்றப்பட்டது.
அச்சமயத்தில் தென் தமிழகத்தில் பெரும் பாலான கிராமங்களில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு திரட்டினார்.சுற்றுப் பயணத்தின் இருந்த எழுச்சி, பலரது கவனம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பக்கம் திரும்பியது.
இந்த கொடியங்குளம் கலவரத்திற்க்கு பிறகு தான் தென்தமிழகத்தில் உள்ள தேவேந்திரகுல மக்கள் தன்னெழுச்சியாக எழுந்து போராட துவங்கினார்கள்.

ஆகஸ்ட்31 தேவேந்திரகுல மக்களின் தன்னெழுச்சி நாள் !!!!!

ஆகஸ்ட்31 தேவேந்திரகுல மக்களின் தன்னெழுச்சி நாள் !!!!!
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் .. டாக்டர் . க கிருஷ்ணசாமி .. அவர்கள் தலைமையில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் 1995, ஆகஸ்ட் 31-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம், கொடியங்குளம் எனும் குக்கிராமத்தில் தமிழக காவல்துறையினர் குற்றவாளியைப் பிடிக்கப் போகிறோம் என்று கூறி ஒட்டுமொத்த கிராமத்தையே சூறையாடிய கொடிய சம்பவம் நிகழ்ந்த கொடியங்குளம் கறுப்பு தினம் இன்று. கடந்த ஒராண்டு காலமாக வட தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதி ஆதிக்கத்தின் தொடக்கப் புள்ளியான 2012 நவம்பர் 7 அன்று நிகழ்ந்த தருமபுரி கலவரத்துக்கான விடை, விடுதலை கொடியங்குளத்தில் தான் இருக்கிறது. உண்மையில் இந்தக் ‘கொடியங்குளம் கலவரத்தில் தான்’ தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் சமூக வன்முறைக்கு எதிராக தலைவணங்காத உறுதியினைக் காண்பித்தார்கள். அதுவரையில் சமூக நல்லிணக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதி ஒடுக்குமுறைகளை கடைப்பிடித்து வந்த ஆதிக்க சாதியினர் 1995-க்குப் பிறகு சமூக உரிமையை, சம நீதியை ஏற்றுக்கொள்ள தொடங்கினர்.
1995, ஆகஸ்ட் 31--இல் குற்றவாளியை பிடிக்கப்போகிறோம் என்று கூறி தமிழக காவல்துறையினர் கொடியங்குளம் கிராமத்தில் புகுந்தனர். ஆனால் சென்றது காவல்துறையினர் அல்ல, காவல்துறையினர் போன்று வேடமிட்ட காட்டுமிராண்டிகள் என்பது பின்புதான் தெரிய வந்தது. கிராமத்திற்குள் புகுந்தவர்கள் குற்றவாளிகளை தேடுவதை விட்டுவிட்டு வீடுகளில் புகுந்து கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர். வீடுகளில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. பணமும், நகைகளும் களவாடப்பட்டன. பின்புதான் தெரிந்தது அந்த காவல்துறையினர் அனைவரும் கள்ளர்கள் என்று. சூறையாடப்பட்ட கிராமத்திற்கு நீதிகேட்டு அன்றைய தேவேந்திரர்குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தனது போராட்டத்தை ஆரம்பித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பதிக்கப்பட்ட கிராமத்தை பார்வையிட அன்றைய முதல்வர் நேரில் வந்த போது ஒட்டுமொத்த கிராமமே முதல்வர் சந்திப்பை புறக்கணித்தது. அவர் கொண்டு வந்த நிவாரண நிதியையும் அம்மக்கள் திருப்பினர். அவர்கள் தன்மானம் மிக்கவர்கள் என்பதை நிரூபித்தார்கள். மாறாக தென் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களையும், நிவாரண நிதியையும் வண்டி வண்டியாக அனுப்பி வைத்தனர். இதற்குமேல் நிவாரண பொருட்கள் வேண்டாம் என்று கூறி, வந்த நிவாரண பொருட்களை பக்கத்து கிராமங்களுக்கும் பகிர்ந்து கொடுத்த வரலாறு கொடியங்குளத்தில் தான் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சுயமரியாதையோடு வாழ்கிறோம் என்பதை நிரூபித்துக் காட்டினர். தேவேந்திரர்குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தது. ஆதிக்க சாதியினரின் சாதி ஆதிக்க கொட்டம் அடக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் தலைநிமிர்வு உண்டானது. ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாக புதிய தமிழகம் எனும் அரசியல் கட்சி உருவானது. 1995 முதல் 2000 முதல் தேவேந்திரகுல மக்கள் முன்னெடுத்த சமூக சமநீதிக்கான போராட்டத்தில் பல உயிர்கள் களபலியாயின. அவர்களின் உயிர் தியாகத்தால் தான் இன்று தென்தமிழகம் யாருக்கும் தலைவணங்காமல் தலைநிமிர்ந்து நிற்கிறது. கொடியங்குளம் கறுப்பு தினமான இன்று சமூக சம உரிமைப் போராட்டத்தில் களப்பலியான தியாகி பிலிப் அந்தோணி, தியாகி ஆலந்தா சண்முகம் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் நமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் .... புதிய தமிழகம் கட்சித் தலைவர். டாக்டர் .க .கிருஷ்ணசாமி M .D .,M .L .A .,அவர்கள் ..

கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் .... புதிய தமிழகம் கட்சித் தலைவர். டாக்டர் .க .கிருஷ்ணசாமி M .D .,M .L .A .,அவர்கள் ..
கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வு மையம் தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 5.5 கோடி வாக்காளர் கள் இருக்கும்போது, வெறும் 3 ஆயிரம் பேரிடம் மட்டும் கருத்துக் கணிப்பு நடத்துவது யதார்த்தத்துக்கு புறம்பானதாக உள்ளது. எனவே, இது ஒட்டுமொத்த வாக்காளர்களின் கருத்துகளை பிரதிபலிக்காது.
தமிழகத்தில் இருக்கும் மதங்கள், சாதிகள் மற்றும் பிராந்திய கட்சிகளின் செல்வாக்குகள் இதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் எண்ணங்களை பதிவு செய்வதைவிட, ஆய்வு மேற்கொள்பவர்களின் கருத்துகளை மக்கள் மனதில் திணிப்பதுபோல இக்கருத்துக் கணிப்பு முடிவுகள் உள்ளன.

டாக்டர் . க . கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் தேவேந்திரர்களின் போர் பிரகடனம் தேவேந்திர குல மக்களுக்கு விடுதலை களம் அமைத்து கொடுத்தது கொடியங்குளம் - அதுவே ஆகஸ்ட்31..


புராதன கால பொதுவுடைமை
சமுதாயத்திற்கு பிறகு குடும்பம், தனிச் சொத்து அரசுகள் உருவாகின. ஆண்டான் அடிமை, ஜமீன் முறைகள் எதேச்சதிகார அரசு, குடியரசு, முடியரசு, பாட்டாளி வர்க்க
சோசலிச அரசு, பாசிஸ்ட்ட அரசு என பல வகை அரசுகள் தோன்றின. இவற்றில் குடியரசே பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசு அமைப்பாக
இருக்கிறது. மக்களுக்காக மக்களே மக்களால் உருவாக்கப்பட்ட அரசு குடியரசு ஆகும். பாட்டாளி வர்க்க சோசியலிஸ அரசு மற்றும் குடியரசு தவிர அரசு
இயந்திரம் பெரும்பாலான மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறை கருவியாக இருந்து வந்திருகிறது.
விதி விலக்குகளாக முடியரசு குடியரசை போல செயல்படலாம். சர்வாதிகாரி கூட ஜனநாயக
வாதியாக செயல்படலாம் அதை உலகம் ஏற்றுக்கொள்ளும் ஆனால் ஒரு ஜனநாயக
குடியரசு சர்வாதிகார பாசிஸ அரசைப் போல செயல்படுவதை அந்நாட்டு மக்கள்
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் எத்தனை பிளவுகளாக இருந்தாலும் அரசு
இயந்திரம் எச்சார்பற்றதாக நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே நியதி ஆகும். அண்மையில் ஈராக், லிபியா, சிரியா, துனிசியா, எகிப்து, ஏமன் போன்ற
நாடுகளில் அதிபர்கள் அந்நாட்டில் உள்ள ஒரு குழுவுக்கு ஆதரவாக இன்னொரு குழுவை அடக்கி ஒடுக்கிட அரசு இயந்திரத்தை பயன்படுத்தியவர்களின் ஆட்சி
அதிகாரம் பறிக்கப்பட்டது மட்டுமல்ல அவர்களை மக்களே கண்முன்னே கண்டித்த சம்பவங்களையும் உலகறியும்.
1991 முதல் 1996 வரையிலும் தமிழகத்தினுடைய
இன்று முதல்வராக இருக்கக் கூடிய ஜெயலலிதா அவர்கள் தான் அன்றும் முதல்வர். 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி தேவேந்திர குல சமுதாயத்தை சார்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் , முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களால்
தாக்கப்பட்டது தொடர்ந்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ள வடநத்தம் பட்டி மற்றும் வீரசிகாமணியைச் சார்ந்த இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி ஜூலை 27-ந் தேதி முதல் ஒரே நேரத்தில் தென் தமிழகம் முழுமைக்கும் தேவேந்திர குல வேளாளர்களை கொச்சைப்படுத்தியும், சிறுமைப்படுத்தியும் எண்ணற்ற போஸ்ட்டர்கள்
ஒட்டப்பட்டன. தேவேந்திர மக்களை கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஓட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அரசு ஆதரவோடு ஒவ்வொரு மாவட்டமாக பந்த்கள் நடைபெற்றது. தென் தமிழகம் முழுமைக்கும் பல்வேறு இடங்களில் முக்குலத்தோர் தேவேந்திர குல வேளாளர் மோதல்கள் உருவாகின. நெல்லையில் ஜங்சனை சார்ந்த ராமர், லட்சுமணர் என்ற தேவேந்திரர்கள் படு கொலைக்கு ஆளானார்கள். துத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் பேருந்துகளில் தனியாக பயணம் செய்த ஆண்,பெண் இருபாலரும் தாக்குதலுக்கு ஆளானார்கள். தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் அருகே உள்ள ஆலந்தா என்ற கிராமத்தைச் சார்ந்த பலவேசம் மற்றும் துணைவியார் இருவரும் பட்டப்பகலிலே கொலை செய்யப்பட்டார்கள். தேவேந்திர மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டது. அவர்களுடைய வாழ்வாதாரம் சீர்குலைந்தது. அவருடைய நிலம் மற்றும் புலங்களில் முக்குலத்தோரின் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு அழியாட்டம் செய்யப்பட்டன. எஞ்சியவைகளை விட்டு வைக்காமல் கூட்டம் கூட்டமாக வந்து கொள்ளையடித்து சென்றனர். மணியாட்சி சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட
கிராம மக்கள் வாழ்வா?சாவா? என்ற நிலைக்கு
தள்ளப்பட்டார்கள்.
கொடியங்குளத்தை சுற்றி உள்ள 80-க்கும் மேற்பட்ட தேவேந்திர குல ஊர் நாட்டாமைகளின் கூட்டம் நடைபெற்றது. அடுத்து இரண்டாவது நாளில் பெண்கள் போல மாறு வேடம் அணிந்த ஒரு கூலிப்படை மீண்டும் ஆலந்தாவிற்குள் நுழைந்தது. எச்சரிக்கையோடு இருந்த தேவேந்திரர்கள் கொலைகார கூலி கும்பலை 5 கிலோமீட்டருக்கு மேலாக விரட்டினார்கள். மூன்று பேர் தப்பி ஓடி விட்டனர். மரணம் அடைந்த மூன்று பேரினுடைய வீட்டுக்கு துக்கம் விசாரிக்க அன்று மாவட்ட ஆட்சியர் பன்னீர் செல்வம் சென்றார். இந்த சம்பவம் நடந்த நாள் ஆகஸ்ட் -30.
BLOOD IS THICKER THAN WATER- இரத்தம் தண்ணீரைவிட கெட்டியானது என்று சொல்வார்களே அது போலதான்
பன்னீர் செல்வம் இரத்தம் துடித்தது. ஏறக்குறைய ஒருமாத காலத்திற்கு மேலாக தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிராக நடைபெற்ற எந்த தாக்குதலுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் அந்த மூன்று மறவர்களின் 
மரணம் மட்டும் அவர்களுக்கு நெஞ்சை உறுத்தி விட்டது. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி நான்கு ஐந்து மாவட்ட ஒட்டுமொத்த காவல்துறை கொடியங்குளத்தில் குவிக்கப்பட்டது. சென்னையை மையமாக வைத்து இயங்கிய அழகு செக்யுரிட்டி எனும் தனியார் நிர்வன அடியாட்களும் வரவழைக்கப்பட்டார்கள். காவல் துறையிடத்திலே லத்தியும், துப்பாக்கியும் தான் இருக்கும் என்பதையே பெரும்பாலான மக்கள் அறிவர். ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி நவீன ஆயுதங்கள் உட்பட்ட கோடாரி, வேல்கம்பு, அரிவாள்கடப்பாறை போன்ற கற்கால ஆயுதங்களுடன் கொடியங்குளம் சுற்றி வளைக்கப்பட்டது. வீட்டில் உள்ள ஆண்களும், பெண்களும் அடியாட்களாக வந்த செக்யுரிட்டி ஆட்களாலும் அடியாட்களைப் போல மாறிய காவலர்களாலும் விரட்டியடிக்கப்பட்டனர். வீடு வீடாக சென்று அவர்கள் சேமித்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் நிர்மூலமாக்கினர். 10-15 ஆண்டுகள்
அரேபிய நாடுகளுக்கு சென்று அல்லும் பகலும் பாடுபட்டு வாங்கிய தங்களுடைய ஆசைப் பொருட்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கினார். டிவி, ரேடியோக்கள், பேன், மிக்சி, கிரைண்டர் டேப்ரெக்கார்டுகள், இருசக்ர வாகனங்கள், பண்டபாத்திரங்கள் அனைத்தும் அந்த
இடத்தில்தூள்தூளாகின. பீரோக்களும், கட்டில்களும் கோடாரியால் துண்டாக்கப்பட்டன. வீடுகளின்
கதவுகள், ஜன்னல்கள் அத்தனையும் நொறுக்கிப் போடப்பட்டன. அவர்கள் மொசைக் தளங்களைக் கூட விட்டு வைக்க வில்லை. அரசு தபால் மற்றும் ரேசன் கடைகளையும் சூறையாடினர். ஆசையாக வளர்த்த ஆடு, மாடு, நாய்களையும் சுட்டுப் பொசுக்கினர் . வீட்டில் வைத்திருந்த சொற்ப தொகைகளையும், துணி மணிகளையும் விட்டு வைக்க வில்லை. உச்சக் கட்டமாக பொதுக் கிணற்றில் பெட்ரோலையும் ஊற்றினார். எதிர்த்தவர்கள் கை கால்கள் உடைக்கப்பட்டன. இளம்பெண்களின் என்று கூட பார்கவில்லை. மக்களை கட்டிக் காக்க வேண்டிய அரசு மக்களின் சொத்துக்களை சூறையாடியது. சட்டப்படி நடக்க வேண்டிய உயர் அதிகாரிகளே சட்டத்தை காலில் போட்டு உதைத்தார்கள்.
தேவேந்திர குல மக்கள் மீதான தங்களுடைய நீண்ட நெடுநாளைய வன்மத்தை காவல் துறையின் மூலம் தீர்த்து கொண்டார்கள். கொடியங்குலத்தின் மீது நடத்திய தாக்குதல் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மகிழ்விப்பதற்காகவும் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகவும் இன்னொரு பிரிவினரின் மீது ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதமே அதுவாகும். கொடியங்குளம் சம்பவம் நடந்த அடுத்த நாளே முதன் முதலாக அந்த கிராமத்திற்குள் அடியெடுத்து வைத்தது நாம் தான்.
நீதி மன்றம் சென்று நீதியை நிலைநாட்டினோம் 
மக்கள் மன்றம் சென்று மக்களை தட்டி எழுப்பினோம். வெகுண்டெழுந்த தேவேந்திரர்கள் அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியை அகற்றிக் காட்டினார்கள். 
அரச பயங்கர வாதம் அம்பலப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் நடப்பது என்ன ..?..

திருவாடனை கோவில் வழிபாட்டிற்கான குதிரை எடுப்புவிழாவில் நான்கு தேவேந்திரர்களை பலிகொடுத்தோம் மதம் மாறியும் அவலங்கள் தொடர்கின்றன ..இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் நடப்பது என்ன ..?.... வஞ்சகம் , சூழ்ச்சியின் மூலம் ஓரு தேவேந்திரர் எரிப்பு ..... கொடியங்குளத்தில் காட்டிகொடுத்த பாதிரியார் கும்பல் மீண்டும் திருவாடனையிலா ..?.. திருவாடனை தாலுகாவிற்குட்பட்ட, ஓரியூர் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் கனிசமாக வாழ்ந்துவருகிறார்கள். இக்கிராமத்தல் கடந்த 29 ம் புனித அருளாளந்தர் ஆலத்தில் அரோக்கிய அண்ணையின் பிறப்பு விழா கொடியேற்றத்துடன் தொடங்கபட்டுள்ளது.
இவ்விழாவில் இந்த முறை சபை பாதிரியார் , மற்ற ஆதிக்க சாதியினருடன் சேர்ந்துகொண்டு தேவேந்திர குல வேளாளர்களுக்கு மண்டகபடி உரிமையை தர மறுத்துள்ளான். இதனால் வெகுண்டெழுந்த நம் இரத்த உறவுகள் பாதிரியார் மற்றும் ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக ஒருங்கணைந்தனர். இதனால் காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டது. சூழ்ச்சி செய்த பாதிரியார் , பேச்சுவார்த்தைக்காக தேவேந்திரர் பிரதிநிதியை ஆலயத்திற்குள் அழைத்துள்ளான். பேச்சுவார்த்தைக்கு சென்ற . சார்லஸ் தேவேந்திரர் பாதிரியாரின் கட்டளைக்கு இணங்க மறுக்கவே, ஆதிக்க சாதி வெறியர்கள் மற்றும் காவல்துறை துணைகொண்டு பாதிரியார், சார்லஸ் தேவேந்தரனை தீயிற்கு இறையாக்கி உள்ளான்.
தற்பொழுது நம் இனச்சொந்தங்களுடன் , எனது ஆருயிர் நணபர் லெனின் அவர்கள், நீதி கிடைக்கும் வரை சார்லஸ் தேவேந்திரனின் உடலை வாங்கமாட்டோம் என போராட்டகளத்தில் உள்ளார். அதேவேலையில் தகல் அறிந்து ஓரியூர் வரும் நம் இனச்சொந்தங்களை தடுத்துவருகிறது காவல்துறை. சாதி ஆதிக்கத்திற்கு மீண்டும் ஓர் உயிர்பலி கொடுத்துள்ளது நம் சமூகம்.
குறிப்பு : பாதிரயார் உடையார் இனத்தைச் சார்ந்தவன்.
இதர சாதி கிருத்திவர் மற்றும் முஸ்லீம்களை, கிறித்துவ மற்றும் முஸ்லீம்களாக பார்க்கும் இதே சமூகம்! தேவேந்திர இன கிறித்துவ, முஸ்லீம்களை மட்டும் தேவேந்திரனாகவே பார்க்கிறது. இதை நாம் புரிந்துகொண்டு மதம் கடந்து தேவேந்திரர்களாய் ஒன்றிணைவோம்.
இத்தருணத்தில் சார்லஸ் தேவேந்திரணுக்கு வீரவணக்க வணக்கத்தை செலுத்துவதுடன் பத்திரிக்கைதுறையை வண்மையாக கண்டிக்க வேண்டும். ஆம்! நடந்த உண்மை சம்பவத்தை மறைத்து தவறான செய்திகளை வெளியிட்டுவருகறது தினத்தந்தி போன்ற முன்னனி பத்திரிக்கைகள். ஆம்! காவல்துறை உதவி கொண்டு சார்லஸ் தேவேந்திரர் ஆதிக்கச்சாதியினரால் தீயிட்டு கொழுத்தப்பட்டார். ஆனால் பத்திரிக்கைகளில் சார்லஸ் தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார் என செய்தி பரப்பி வருகிறார்கள். இது போன்ற நயவஞ்சக செயலுக்கு துணைநிற்கும் தினதந்தி போன்ற முன்னனி பத்திரிக்கைகள் தேவேந்திரர்களிடம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்! அன்று தெரியும் ஆதிக்க சாதி மற்றும் ஆளும் வர்க்கங்களுக்கு ஜால்ரா அடிக்கும் இந்த பத்திரிகை, ஊடகத்துறைகளுக்கு இந்த தேவேந்திர குல வேளாளர்கள் யார் என்று!...

புதன், 26 ஆகஸ்ட், 2015

ராமதாசின் வாலை ஒட்ட நறுக்குவோம்!... டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A .,




தென் தமிழகம் அடிக்கடி சாதிய மோதல்களுக்கு இலக்காகி அமைதி இழந்திருந்ததை நாடறியும். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மதுரையை மையமாகக் கொண்ட தென் மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தேறின. அதில் தேவேந்திரகுல வேளாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் சிலைமான் என்ற இடத்தில் இரு சமுதாயங்களிடையே மோதல்; திருமங்கலம் குராயூரில் அடிக்கடி மோதல் மற்றும் கொலைகள்; உசிலம்பட்டி பகுதியில் மோதல்; நெல்லை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் பட்டியலின மக்கள் படுகொலை என தொடர்கதையாயின.
1957-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தென் தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு அதனால் தென் தமிழகமே கலவர பூமியானது. மேலும் 1997-ஆம் ஆண்டு விருதுநகரை மையமாக வைத்து வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக்கழகம் உருவாக்கப்பட்டபோது முக்குலத்தோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோர்க்கும் எண்ணற்ற மோதல்கள் ஏற்பட்டு உயிர்சேதமும் பெருத்த பொருட்சேதமும் ஏற்பட்டது. அப்பொழுதே தேவேந்திரகுல மக்கள் மதுரை விமான நிலையத்திற்கும், இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் தியாகி இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பலமாக எழுப்பினர்.
சுந்தரலிங்கம் பெயரை நீக்வேண்டும் என்பதற்காகவே அம்பேத்கர், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களில் இயங்கிவந்த போக்குவரத்துக்கழகங்களும் மாவட்டப் பெயர்களும் நீக்கப்பட்டன. தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேருந்துகள், கல்விநிலையங்கள், மாவட்டங்கள், அரசுக் கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு எதிர்காலத்தில் எந்தவொரு தலைவரின் பெயரையும் சூட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின்படியே கடந்த 18 வருடங்களாக எந்தவொரு தலைவரின் பெயரும் எதற்கும் சூட்டப்படாமல் இருந்தது. இதனால் தென் தமிழகத்தில் ஓரளவுக்கு அமைதி நிலவிவருகிறது .
அரசியல் காரணங்களுக்காக மீண்டும் தென் தமிழகத்தில் சிலர் சாதித் ‘தீ ’ மூட்ட முயற்சி செய்கின்றனர். மதுரை விமான நிலையத்துக்குக்கும் ஓடுபாதைக்கும் 1932, 1935, 1942, 1950, 1999 ஆகிய ஆண்டுகளில் தங்களது நிலங்களைக் கொடுத்தவர்கள் அதற்கு அருகேயுள்ள சின்ன உடைப்பு கிராமத்து தேவேந்திரகுல வேளாளர்கள் ஆவர். எனவே மதுரை விமான நிலையத்துக்கு பெயர் வைக்க வேண்டுமாயின் அதற்கு நிலங்களைக் கொடுத்த தேவேந்திரகுல மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரையே சூட்டவேண்டும்.
தென் தமிழகத்தில் நிலவும் சமூக சூழ்நிலைகளை நன்கு அறிந்திருந்தும் ஏதும் அறியாதவர் போல மீண்டும் முக்குலத்தோருக்கும் தேவேந்திர குல வேளாளருக்கும் மோதலை உருவாக்கி சிந்தும் இரத்ததின் மூலம் அரசியல் லாபம் தேட துடிக்கும் வகையிலேயே ராமதாஸ் சம்பந்தமே இல்லாமல் மதுரை விமான நிலைய பிரச்சினையை கிளப்புகிறார் .
வடமாவட்டங்களில் கெளரவக் கொலைகளை நிகழ்த்தி, ஆதி திராவிடர்களுக்கு (பறையர்கள்) எதிராக அணிதிரட்டியத்தை போல தென் தமிழகத்திலும் தேவேந்திர குல வேளாளருக்கு (பள்ளர்கள்) எதிராக முக்குலத்தோரை அணிதிரட்ட எண்ணுகிறார். அவருடைய முயற்சி எள்ளளவும் வெற்றி பெறாது. தென் தமிழக தேவேந்திரகுல மக்கள் ராமதாஸின் நயவஞ்சகத்தை நன்கு புரிந்தே அவரை ஏற்கனவே ஒதுக்கித் தள்ளினர். எனவே அவரது இந்த முயற்சியும் பலிக்காது. பா.ம.க.-வின் நரித்தனத்தை தென் தமிழகத்தில் காட்ட முற்பட்டால் அதன் வால் ஒட்ட நறுக்கப்படும் என்பதை புதிய தமிழகம் எச்சரிக்கிறது.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

மாண்புமிகு முதல்வரின் சுகந்திரதின உ ரையில் சுகந்திர போராட்டவீரர் மாவீரன் சுந்தரலிங்கம் தேவேந்திரர் புறக்கணிப்பு ...?..

......இன்று காலை சென்னையில் நடைபெற்ற சுகந்திரதின உ ரையில் மாண்புமிகு தமிழக முதல்வர் , சுகந்திர போராட்ட வீரர் மாவீரர் சுந்தரலிங்க குடும்பனார் அவர்களின் பெயரை திட் டமிட்டு , புறக்கணிப்பு செய்துள்ளார் .. சுகந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் அனைத்து பெயர்களையும் கூறிய முதல்வர் அவரது ..உ ரையில் கட்டபொம்மன் , புலித்தேவன் , வா ..உ .. சி , முத்துராமலிங்கம் , தீரன் சின்னமலை என்று வரிசைபடுத்திய முதல்வர் மாவீரன் , சுந்தலிங்ககுடும்பனார் மட்டும் எப்படி மறந்து போனார்... ...கடந்த திமுக ஆட்சியில் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினரும் , புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் .. க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார் அவர்களுக்கு அரசு விழாவும் , கவர்னகிரியில் மணி மண்டபமும் , அவரின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வுதியமும் வழங்கப்பட்டன .. அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு விழா நடத்தப்படவில்லை , சுந்தரலிங்கம் வாரிசுகள் அவர்களின் குல தெய்வ வழிபாட்டிக்கும் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது ...இப்படி திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிப்பு செய்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன் ..... இந்த ஆட்சியின் சாதனைகள் 144 தடை உத்தரவுகளும், செயல்படாத 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்களும்தான்.. மற்றபடி தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா ..?

இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் .. க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் பரபரப்பு பேட்டி.....

இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் .. க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் பரபரப்பு பேட்டி ...தேவேந்திர குல வேளாளர் என்ற எங்கள் அடையாளம் மீட்கப்பட வேண்டும் .. தமிழகத்தில் நிலத்தின் அடிப்படையில் தான் சமூகங்கள் இருந்தன .. நாங்கள் மருத நில மக்கள் ... நாயக்கர் ஆட்சியின் வருகையால் தான் மிகபெரிய பின்னடைவை தேவேந்திரர் சமுகம் சந்தித்தது ... எம் மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன ... நிலமற்ற விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர் ... எம் மக்களின் சமுக , பண்பாட்டை சிதைக்கும் வகையில் பாளையப்பட்டுகள் உ ருவாக்கப்பட்டன..... .....................நாயக்கர்களுக்கு துணை நின்ற சமுதாயங்கள் தேவேந்திர குல மக்கள் மீது எட்டு வகையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன ... அந்த வடுகர்கள் எப்படி நாயக்கர் ஆனார்கள் ..?..... .........கள்ளர் , மறவர் , அகமுடையர் எப்படி தேவர் ஆனார்கள் ..?... தீண்டாமையால் அதிக அளவு பதிப்புக்கு உ ள்ளான சாணார் சமுகம் எப்படி நாடார் ஆனார்கள் ..?...ஆங்கிலேயர்கள் பட்டியல் இனத்தில் சாணார்களை சேர்த்தபோது லண்டன் வரை சென்று பட்டியல் மாற்றத்தை வலியுறுத்தினார்கள் , அதில் வெற்றியும் பெற்றனர் .. ஆனால் தேவேந்திர குல சமுகத்திற்கு வலிமையான தலைமை இல்லாத காரணத்தினால் எங்களின் விருப்பத்திற்க்கு மாறாக பட்டியல் இனத்தில் சேர்த்தனர் ...எல்லாரும் தங்களை ஆண்ட பரம்பரையினர் என்று கூறுகின்றனர் ... தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம் , யாரையும் அடக்கி , ஆண்டதாக வரலாறு இல்லை ..

இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் .. க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் பரபரப்பு பேட்டி.....

 பட்டியல் வெளியேற்றம் இன்று எம் மக்களால் பெரிதும் விவாதிக்கப்படுகிறது ... அதை நான் வரவேற்கிறேன் .... தனி தொகுதி உ ரிமைகள் பறி போனாலும் எங்களுக்கு கவலை இல்லை ... அண்ணல் அம்பேத்கார் அவர்களின் முயற்சியில் பூனா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு , இரட்டை உ றுப்பினர் தொகுதிகள் நடைமுறையில் இருந்தால் எம் மக்களின் கோரிக்கைகள் எப்போதோ நிறைவேற்றப்பட்டு இருக்கும் ... காந்தியின் உ ண்ணாவிரதத்தால் இவ்வுரிமை பறிபோனது ... தற்போது நடைமுறையில் இருக்கும் தனி தொகுதிகளால் எந்த நன்மையையும் கிடையாது ... அவர்கள் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், ஆதிக்க சக்திகளின் கைகூலிகள் அவ்வளவுதான் .....சாதி ஒழிய வேண்டுமானால் இந்து மதம் ஒழிய வேண்டும் .. அதன் வர்ணாசிரம தத்துவம் ஒழிய வேண்டும்... இது தற்போது நடைமுறை சாத்தியம் இல்லை .... இந்து மத தத்துவம் தனக்கு கீழ் ஒரு சாதி இருக்க வேண்டும் என்கிறது ... குறிப்பாக சாதிய படிநிலைகளை விட தாழ்த்தப்பட்ட மக்கள் மீதுதான் அனைத்து இந்துக்களின் பார்வையும் உ ள்ளது.... SC மக்கள் என்று சொல்லுவதை எம்மக்கள் விரும்பவில்லை ... பிற்பட்ட பிரிவுகள்தான் அனைவரும் .... சமுக , பொருளாதார அளவுகோல் தான் முக்கியம் ... அதில் தேவேந்திர குல சமுகத்திற்கு உ ரிய பிரதிநிதித்துவம் பெறுவோம் ... பட்டியல் சாதிகளில் 76 பிரிவுகள் உ ள்ளது .. ஒவ்வொரு சமூகமும் தனித்த வரலாறு , பண்பாடு கொண்டவை .... மற்ற பிரிவினர் சாதி மறுப்பு திருமணம் செய்கிறார்களா ..?... ஏன் பட்டியல் சமுகத்தில் மட்டும் எதிர்பார்கிறீர்கள் ..?..... மற்ற பிரிவினரும் இடஒதுக்கீட்டு உ ரிமையை அவர்களும் பெறுகின்றனர் ... ஆனால் அவர்கள் பிற்பட்ட வகுப்பினர் , நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியா ..?.... இந்த அளவுகோல் மாற்றப்பட வேண்டும் ... சமூகங்களை சமூகமாக பார்க்க வேண்டும் .. சாதியாக அல்ல ..

. மள்ளர் சமுகம் மண்ணுக்கேற்ற மார்சியத்தை படைக்கும்

வரலாற்று பெருமையும், பண்பாட்டு சிறப்பும் கொண்ட மள்ளர்கள் மீது கடந்த ஒரு நூற்றாண்டாக அரிசனன்,ஆதி திராவிடன்,தாழ்த்தப் பட்டவன், தலித் என்ற இழிவுப் பெயர்களை வலியத் திணிக்கும் போக்கினை திராவிட கட்சிகளும், அதன் ஆட்சியாளர்களுமே செய்து வருகின்றனர். தற்போது எமது சமுகத்தின் முக்கியமான கோரிக்கை ' " தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை " தான் ... வெண்ணைத் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போல, தேவேந்திரகுல மக்கள் தங்களது அடையாளத்தை மீட்கும் இவ்வேலையில் தீக்கதிர் போன்ற பத்திரிக்கைகள் பெயர் மாறினால் மாற்றம் வருமா ..?.. என்பது போன்ற ஆராய்சிகள் தேவையில்லை என்று கருதுகிறேன் .. அப்படி விவாதிப்பதாக இருந்தால் வாருங்கள் விவாதிப்போம் .. தீண்டாமை கொடுமைக்கு ஆளான சாணார் சமுகம் நாடார் ஆக மாறியது எப்படி ..?.... அவர்களுக்கு சமுக அங்கீகாரம், அரசியல் அங்கீகாரம் கிடைத்து இருக்கிறதே ..?..... சக்கிலியர் , மாதாரிகள் " அருந்ததியர் " ஆனதும் 3% உள் இட ஒதுக்கீடு பலனை அனுபவிப்பதும் கம்யுனிஸ்டுகளுக்கு தெரியாதா ..?.... மீண்டும் சொல்கிறேன் தோழமையோடு நீங்கள் வர்க்க ஆராய்ச்சி செய்யுங்கள் ... எங்கள் சமுக விடுதலையில் யாருடைய ஆதரவும் , எதிர்ப்பும் தேவையில்லை .... மள்ளர் சமுகம் மண்ணுக்கேற்ற மார்சியத்தை படைக்கும் 

. சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளார் ... ..பூமணி

.பூமணி ....தேவேந்திரகுல வேளாளர் என்று சொல்லப்படும் பள்ளர் [அல்லது மள்ளர்] சமூகத்தைச் சேர்ந்தவர். தேவேந்திரர்கள் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் என்பதனால் பூமணியை தலித் எழுத்தாளர் என்பது வழக்கம். ஆனால் இவ்வகை அடையாளங்களை முழுக்க நிராகரிக்கக்கூடியவராகவே எப்போதும் பூமணி இருந்திருக்கிறார். ”தலித் என்ற வார்த்தை எனக்கு அன்னியமானது. அந்த வார்த்தைக்கு ஒடுக்கப்பட்டவன் என்ற அர்த்தம் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எந்தச்சாதியில்தான் ஒடுக்கப்பட்டவன் இல்லை? எல்லாச்சாதியிலும் ஒடுக்குகிறவனும் ஒடுக்கப்பட்டவனும் உண்டு. ஆனால் அந்த வார்த்தை குறிப்பிட்ட சில சாதிகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவதற்காக முன்வைக்கப்படுகிறது. இதில் ஓர் அசிங்கமான உள்நோக்கம் உண்டு
அன்றைக்கு சூத்திரனுக்குக் கீழே வைக்கப்பட்டிருந்தவன் பின்னர் ஒரு புண்ணியவானின் கருணையால் அரிசனன் ஆனான்,அப்புறம் பட்டியல்சாதிக்காரன், தாழ்த்தப்பட்டவன், ஆதி திராவிடன் என்று மாறினான். இன்று தலித் கூட்டில் அடைத்திருக்கிறார்கள்,.....எங்கள் சமுக அடையாளம் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் என்பதே ...... சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளார் ... ..பூமணி .

பட்டியல் சாதிகளிலிருந்து விலகினால் மதிப்பு, மரியாதை வந்து விடுமா? இழிவு நீங்கிடுமா ? ...கம்யு னிஸ்டுகளுக்கு தோழர் ரகுபதி பாண்டியனின் பதில் ..

. .
பட்டியல் சாதிகளில் (SC) சேர்க்கப்படுவதற்க்கு முன் மள்ளர்களுக்கு மதிப்பு மரியாதையும் இருக்கத்தானே செய்தது. ஆசாரி, பூசாரிஉஉள்ளிட்ட பல சாதியினரும், பல்வேறு சாதிகளைச் சார்ந்த களத்து வேலை செய்தவர்களும், காவல் வேலை செய்தவர்களும் மள்ளர்களின் வீடுகளில் சாப்பிட்டு விட்டுத்தானே வேலை செய்தார்கள்.
அந்த நிலை எப்போது மாறியது?
பட்டியல் சாதிகளில் மள்ளர்கள் சேர்க்கப்பட்டபோதுதானே! " சர்க்காரே பள்ளர்களை கீழ்ச்சாதி என்று சொல்லிவிட்டது " எனக்கூறி மள்ளர்களின் வீடுகளில் சாப்பிட்டுக் கொண்டு வேலை செய்து வந்த. சாதிகளெல்லாம் மள்ளர்களை விட்டு விலகிச் சென்றனர்.
இது தானே 1935 - இல் நடந்தது. அப்படியானால் அந்த பட்டியல் சாதிகளிலிருந்து வெளியேறும் போது மள்ளர்களுக்கு மீண்டும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெருவதில் என்ன தடை இருக்க முடியும். அதில் என்ன சந்தேகம் ?
மள்ளர்களின் சுயத்தை அழித்து மள்ளர்களை அரிசனனாக, ஆதி திராவிடனாக, தாழ்த்தப்பட்டவனாக, தலித்தாக காட்டி வருவது பட்டியல் சாதிகள் (SC) என்னும் ஆளவந்தார்களின் புதிய வர்ணாசிரமம் கோட்பாடாகும்.
ஆக பட்டியல் சாதிகளிலிருந்து வெளியேறும்போதுதான் மள்ளர்கள் தங்களின் அடையாளத்தைப் பெற முடியும். சுய அடையாளத்தை பெற்றால்தான் சுய மரியாதையையும், சுய ஆட்சியையும் பெற முடியும்.
முன்னேற்றம் என்பது ஒரு சிலர் அரசு வேலைக்குச் செல்வதல்ல. எத்தனையோ வேறு பல அம்சங்கள் உள்ளன. அந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் தடையாயிருப்பது இந்தப் பட்டியல் சாதி அடையாளம் தான். ஆகவே, பட்டியல் சாதிகளிலிருந்து வெளியேறினால் உறுதியாக முன்னேற முடியும்.

பாஜக ஆதரவாளர் திருமதி பானுகோம்ஸ் அவர்களின் மதிப்பீடு ..?

 ..தென் தமிழகத்தில் மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் சமுகத்தின் போராட்டம் என்பது தீண்டாமை யோடு தொடர்புடையது அல்ல ... அவர்கள் தங்களின் வரலாற்று , பண்பாடு , சமுக வாழ்வியல்க்கான போராட்டம் .. அவர்கள் மீது திணிக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்பதையே விரும்புகின்றனர் .. அவர்களின் விருப்பத்திற்கு எதிராக பட்டியல் சமுகத்தில் தேவேந்திரர் சமுகத்தை இணைத்ததால் வந்த வரலாற்று பிழை .. மற்றபடி உ ணவளிக்கும் சமுகம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டார்கள் என்று கேள்வி எழுப்ப கடமைப்பட்டுள்ளேன் .. அவர்களின் கோரிக்கைகள் முழுமையாக பரிசிலிக்க வேண்டும் என்பதை மத்திய , மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களின் கருத்து 

இடதுசாரி ஆதரவு நாளேடு தீக்கதிர்க்கு சவால் ..?... என்னோடு விவாதிக்க தயாரா ..?....

.........................................இடது சாரி தத்துவத்தை எப்படி நடைமுறைபடுத்த வேண்டும் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் வாருங்கள் விவாதிப்போம் ... அதை விடுத்தது எம் மக்களின் 60, ஆண்டுகால போராட்டத்தை கொச்சை படுத்தும் விதத்தில் தீக்கதிர் என்ற பத்திரிக்கையில் தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்த வேண்டாம் .. இந்தியாவில் சாதிகள்தான் வர்கங்களாக உ ள்ளது .. இந்த அடிப்படை அறிவு கூட தங்களுக்கு இல்லையா ..?.. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தெளிவாக வரையறுத்துள்ளார்கள் ... இருந்தும் கூட தொழிலாளி வர்கத்தின் விடுதலைக்காக 8 மணி நேர வேலை , தொழிற்சங்கம் போன்ற எண்ணற்ற கொள்கைகளை நடைமுறைபடுத்திய மார்சியவாதி அண்ணல் அவர்களை சாதி வட்டத்தில் அடைத்தார்கள் தானே கம்யுனிஸ்டுகள் .. எங்களுக்கு நீங்கள் எதிரிகள் அல்ல . சமுக எதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் ..நாங்கள் பிறவி கம்யுனிஸ்டுகள் எந்த தத்துவம் எங்களை விடுதலை செய்யும் என்பதை நாங்கள் அறிவோம் .. தேவையில்லாமல் நீங்கள் தலையிட வேண்டாம் என்பதே எமது கருத்து .. மற்றபடி தேவேந்திரர்கள் விடயத்தில் நீங்கள் தேவையில்லா மல் நீங்கள் தலையிடுவீர்கள் என்றால் அதற்க்கான கொள்கை பலமும், இடதுசாரிகளின் சாதி அரசியலும் தேவேந்திர மக்களுக்கு இழைத்த துரோகமும் தொடர்ந்து வெளியிடப்படும் 

தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம்!! இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்களின் பேட்டி:

தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம்!!
இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர்
டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்களின் பேட்டி:
மதுரையில் அமிட்ஷா அவர்கள் கலந்துகொண்ட "தேவேந்திரகுல வேளாளர்" அரசு ஆணைக்கான மாநாட்டை வரவேற்கிறேன். கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தின் இரண்டு பிரதான திராவிட கட்சிகள் இந்த கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில் இந்த கோரிக்கையை முன்னெடுத்த அமிட்ஷா அவர்களை பாராட்டுகிறேன். 
மற்றபடி அவர்களின் நோக்கம் எப்படி இருந்தால் என்ன? தேவேந்திர குல மக்கள் புதிய தமிழகம் கட்சியால் அரசியல்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவ்வளவு எளிதில் யாரும் ஏமாற்றிவிட முடியாது.
தேவேந்திர குல வேளாளர் என்ற எங்கள் அடையாளம் மீட்கப்பட வேண்டும். தமிழகத்தில் நிலத்தின் அடிப்படையில் தான் சமூகங்கள் இருந்தன. நாங்கள் மருத நில மக்கள். நாயக்கர் ஆட்சியின் வருகையால் தான் மிகப்பெரிய பின்னடைவை தேவேந்திரர் சமுகம் சந்தித்தது. எம் மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன நிலமற்ற விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர். எம் மக்களின் சமுக, பண்பாட்டை சிதைக்கும் வகையில் பாளையப்பட்டுகள் உருவாக்கப்பட்டன.
நாயக்கர்களுக்கு துணை நின்ற சமுதாயங்கள் தேவேந்திர குல மக்கள் மீது எட்டு வகையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.
அந்த வடுகர்கள் எப்படி நாயக்கர் ஆனார்கள்? கள்ளன் மறவன் எப்படி தேவர் ஆனார்கள் தீண்டாமையால் அதிக அளவு பதிப்புக்கு உள்ளான சாணார் சமுகம் எப்படி நாடார் ஆனார்கள்? ஆங்கிலேயர்கள் பட்டியல் இனத்தில் சாணார்களை சேர்த்தபோது லண்டன் வரை சென்று பட்டியல் மாற்றத்தை வலியுறுத்தினார்கள், அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் தேவேந்திர குல சமுகத்திற்கு அன்று வலிமையான தலைமை இல்லாத காரணத்தினால் எங்களின் விருப்பத்திற்க்கு மாறாக பட்டியல் இனத்தில் சேர்த்தனர். எல்லாரும் தங்களை ஆண்ட பரம்பரையினர் என்று கூறுகின்றனர். தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம், யாரையும் அடக்கி, ஆண்டதாக வரலாறு இல்லை .

பட்டியல் வகுப்பினர் {SC } பட்டியலில் ஒரு சமுதாயத்தை சேர்ப்பதற்கான காரணங்கள் ..

..
1: மாட்டு இறைச்சி உண்பவர்கள்
2: தீண்டத்தகாதவர்களாக ஆலைய நுழைவு உரிமை அற்றவர்கள்
3: பசுவை தெய்வமாக வணங்காதவர்கள்..
4. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்..
5. வறுமையில் உழன்றுகொண்டு SC பட்டியலில் இருப்பவர்கள்..
6.இறந்தவர்களை புதைப்பதை தொழிலாக கொண்டவர்கள்
மேற்கண்ட வரைமுறைகள் தேவேந்திரர் சமுகத்திற்கு பொருந்துமா ..?
1. விவசாயத்தை குலதொழிலாக கொண்டு மாடுகளை உழவு எந்திரமாக பயன்படுத்தும் தேவேந்திரர்கள் ஒரு போதும் மாட்டிறைச்சியை உண்பதில்லை...
2. தமிழகத்தில் அதி முக்கிய கோவில்களின் முக்கியஸ்தர்களே தேவேந்திரர்கள் தான். ஆலைய நுழைவு போராட்டம் நடத்தப்பட்டது பறையர், சானார், சக்கிலியர் போன்ற இன்னும் சில மக்களுக்காக. தேவேந்திரர்களுகாக அல்ல...
3. தேவேந்திரர்கள் பசுவை தெய்வமாக வணங்குபவர்கள்....
4. பூமி பூஜை முதல் திதி வரையுள்ள அனைத்து தேவேந்திரர்களின் சுப/கெட்ட நிகழ்வுகளிலும் பிராமணர்களை தேவேந்திரர்களின் வீடுகளிலும் பூஜைகளிலும் பார்க்கலாம்
5. இன்றைய தேவேந்திரர்களின் பொருளாதார நிலை பல சாதி இந்துக்களின் நிலையைவிட பன்மடங்கு உயர்நிலையிலையே இருக்கிறது அது போக தேவேந்திரர்களின் உட்பிரிவுகளான மூப்பர் (BC 65) , காலாடி (BC 35) (DNC 28), பண்ணாடி (MBC 16) இல் இருக்கிறார்கள எனவே பட்டியல் இனத்தில் இருப்பதனால் மட்டுமே தேவேந்திரர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவில் இருக்கிறார்கள் என்றால் எம் உட்பிரிவுகள் எல்லா பிரிவுகளிலும் இருக்கும் போதே தெரியவில்லையா தேவேந்திரர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்ல என்று...?.... எங்களுடைய ஆதரவு இல்லாமல் பட்டியல் இனத்தில் சேர்த்ததே ஒரு மோசடி ..... பள்ளர் , குடும்பர் , காலாடி , பண்ணாடி , மூப்பர் ., தேவேந்திர குலத்தான் ஆகிய பிரிவுகளை இணைத்து " தேவேந்திர குல வேளாளர் "... என அரசு ஆணை வெளியிட இந்த அரசுக்கு என்ன தயக்கம் ..?...

"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பற்றிய வரலாற்று பொக்கிசங்கள்"..

....1930 கிழக்கு ராமநாதபுரத்தில் மறவர் சாதியார் கூடி பறையர் சக்கிலியருக்கு விதித்த சமூகக் கட்டுப்பாடுகளை தேவேந்திரருக்கும் புகுத்த முனைந்த போதுதான் பெருங்கலகம் துவங்கியது.
நாயக்கர் ஆட்சியையும் அவருக்குத் துணையாகவும் விசுவாசியாகவும் இருந்த கள்ளர்களை எதிர்த்து 1529 முதலே இவர்கள் போராடி வருகிறார்கள், கடந்த 470 ஆண்டுகளாக நடந்து வரும் இம்மோதலில், இரு சாதியிலும் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம்.
1881, 1891 ஆகிய இரு குடிக் கணக்கெடுப்பிலும் தேவேந்திர குல வேளாளர்களை வேளாண்குடிச் சமூகம் (Agricultural Class) என்று பொது சமூகக் கணக்கில்தான் சேர்த்துள்ளார்கள். 1901ம் ஆண்டு குடிக் கணக்கெடுப்பிலிருந்து தான் 'பள்ளன்’ என்ற ஒரு தனிச் சாதிக்கணக்கு ஆவணங்களில் உள்ளது.
நாயக்கராட்சிக்குப் பின் வரி வசூல் உரிமையிலும், கிராம ஆதிக்கத்திலும் இருந்த சமீன்தார்களை எதிர்த்து இவர்கள் நடத்திய போர் ஒரு தனி வரலாறாகும். தமிழ் நாட்டு கிராமீயப் பாடல்களில் இவ்வரலாறு பொதிந்து கிடக்கிறது. செல்லாயிபுரம் தமிழ்ச்செல்வன் எழுதிய ஒரு கட்டுரையில் தேவேந்திரருக்கும் போடி, தேவாரம் ஆகிய இரு சமீன்களுக்கும் தொடர் பகை இருந்ததாகவும் இதனடிப்படையில் எழுந்த மோதல்களில் இச்சமூகத்தார் இரு சமீன்களையும் தாக்கிப் பலரைக் கொன்றதாகவும், அரண்மனைக்குச் சொந்தமான பல கட்டங்களை இடித்துத் தகர்த்ததாகவும் இம்மோதலில் ஏராளமான தேவேந்திரரும் சமீன் படை வீரர்களும் மடிந்ததாக உள்ள செய்தியைக் கொடுத்துள்ளார். இதே போல் நெல்லை மாவட்டத்திலும் நடந்துள்ளது. தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் முழுவதை அலசி ஆராய்ந்தால் இதுபோல் மேலும் பல செய்திகளைக் கண்டுபிடிக்க முடியும்,
பள்ளன் என்ற பெயர் சதி செய்து திணிக்கப்பட்ட பிறகும், தேவேந்திரகுலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, ஆகிய குல உயர்வுப் பெயர்களில் தங்கள் சாதிப் பெயரை லட்சக் கணக்கானோர் பதிவு செய்துள்ளார்கள். 1971 குடிக் கணக்கெடுப்பில் 13 லட்சம் பேர் பள்ளன் எனற பெயரிலும், மற்ற குலப் பட்டப் பெயர்களில் 8 லட்சம் மக்களும் பதிவு செய்துள்ளார்கள். இப்பெயர்கள் எல்லாம் இப்பொழுதும் எஸ்.சி. அட்டவணையில் உள்ளன.
1938 ல் காந்தி அரிசன சேவா சங்கம் ஆரம்பித்தார், இச்சங்கம் மூலம் ஆரம்பிக்கப்பட்ட மதுரை சேவாலயம் மாணவர் விடுதியைத் திறக்க வந்த ராசாசியை எதிர்த்துப் போரிட்டது தேக்கம்பட்டி அஞ்சா நெஞ்சன் பாலசுந்தரராசு மட்டுமே. அட்டவணைச் சாதிக் குழந்தைகளை அடிமை வழிக்குப் பக்குவப்படுத்தும் இம்முயற்சியைத் தமிழ்நாட்டில் எதிர்த்த ஒரே தலைவர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசாகும்,

"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பற்றிய வரலாற்று பொக்கிசங்கள்"....

.....1939 ல், மதுரை மீனாட்சி கோயிலில் நடந்த அரிசன ஆலயப் பிரவேசத்தில் பறையர், நரடார் ஆகிய இரு சாதியார் மட்டுமே கலந்தார்கள். தேவேந்திரர் கலந்துகொள்ளவில்லை. அதற்கு ஆதரவு தருமாறு பாலசுந்தரராசைக் கூப்பிட வந்த வைத்தியநாத அய்யருக்கும் பாலசுந்தரராசுக்கும் மதுரை மங்கம்மாள் சத்திரம் அறை எண். 7 - ல் பெரிய வாக்குவாதம் நடந்துள்ளது, (அரிசன ஆலயப் பிரவேசத்தில் கலந்து கொண்டவர்கள், 1, தும்பைப்பட்டி கக்கன், 2. உசிலம்பட்டி முத்து 3. மதிச்சியம் சின்னையா, 4, ஆலம்பட்டி முருகானந்தம், 5.விராட்டிபத்து ஆவலிங்கம், 6. விருதுநகர் சண்முக நாடார். இதில் 5. பேர் பறையர், ஒருவர் நாடார்.)
1947 -ல், ஏ,பி. ராமசாமி செட்டியார் காலத்தில் கூர்மையா கமிட்டி என்ற ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் நோக்கம் அரிசன மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் ஒரு கோடியை எப்படிச் செலவு செய்வது என ஆய்வு செய்து அறிக்கை தருவதாகும். இக்குழு பள்ளர்களுக்கு இப் பணத்திலிருந்து எதுவும் செலவு செய்ய வேண்டியதில்லை. அவர்கள் நல்லநிலையில் உள்ளார்கள் என்ற கருத்தை வெளியிட்டது, அதாவது, இவர்கள் தீண்டாமை அனுபவிக்கும் மக்கள் அல்ல என்ற கருத்தை வெளியிட்டது, .
கூர்மையா கமிட்டியில் மொத்தம் 27 பேர் இருந்தார்கள். இவர்களில் தேவேந்திரர் ஒருவரும் இல்லை. அக்காலக் கட்டத்தில் தேவேந்திர குல வேளாளரில் அஞ்சாநெஞ்சன் பாலசுந்தரராசு ஆயக்குடி எசு.சி பாலகிருட்ணன், திட்டை சுப்ரமணியன், தொண்டு வீராச்சாமி, ஆர். எசு. ஆறுமுகம், பெருமாள் பீட்டர் வீரம்பல் வேதமாணிக்கம், சொக்கலிங்கம், சிவக்கொழுந்து, டி. ட்டி. ராசன், ஜி.ஏ. ஞானசுப்பிரமணியன், மேலக்கால் வீரபத்திரன் ஆகியோர் முக்கியமானவர்களாக இருந்தார்கள். இவர்களில், தேக்கம்பட்டித் தலைவரைத் தவிர, மற்றவர் காங்கிரசுக்காரர்கள் ஆனால், யாருமே கூர்மையா கமிட்டியில் சேர்க்கப்படவில்லை.
இதற்குக் காரணம் இவர்கள் எல்லோரும் சரிகை வல்லவெட்டு அணிவார்கள். இது சமீன்தார், தோரணையாகும்.
எனவே யாரையும் சேர்க்கவில்லை. பொது வாழ்க்கைத் தலைவர்களை விட்டு, விட்டு அரசு அதிகாரிகளை எடுத்துக் கொண்டாலும் கூர்மையா கமிட்டி அமைக்கப்பட்ட போது தேவேந்திரர் சமூகத்தைச் சேர்ந்த 48 கெசடட் அதிகாரிகளாக இருந்தார்கள் என்று தெரிகிறது. இவர்களில் யாரையாவது கமிட்டியில் சேர்த்திருக்கலாம், ஆனால் சேர்க்கவில்லை.
ஆக, இந்தியாவில் பல மாநிலங்களின் எஸ்.சி, எஸ்.டி, பட்டியலை ஆய்வு செய்தால் நாட்டின் பூர்வ குடிகள், மண்ணின் மைந்தர்கள், ஆரியக் கலாச்சாரத்தோடு கலக்காதவர், ஆரிய இனவழி அதர்மக் கொள்கைகளை எதிர்த்துப் போரிட்டவர், இப்படிப்பட்ட சாதி - சமூகங்களையெல்லாம் இப்பட்டியலில் சேர்த்திருப்பதைக் காணலாம்.
அதே சமயம் ஆரிய பார்ப்பன இனவழியை நிலைநாட்ட அவர்களுக்குத் துணையாகவும், அடியாட்களாகவும் இருந்த சாதிகள் எல்லாம், அவர்கள் எத்தனை துறைகளில் எவ்வளவு மோசமாக இருந்தாலும், இப்பட்டியலில் இல்லாமல் இருப்பதையும் காணலாம்.-

சங்கராபுரம் கலவரம் ....புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு................டாக்டர் கிருஷ்ணசாமி M .D.M .L .A .,

''சங்கராபுரம் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி, புதிய
தமிழகம் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்,'' என, கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D.M .L .A ., அவர்கள் .கூறினார்.கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் நடந்த தேர் திருவிழாவின்போது, ஆதி
திராவிடர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கியவர்கள் மீது, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில், துரை ஈஸ்வரன் கொலையில் தொடர்புடையவர்களை ஒரு வாரத்துக்குள் கைது செய்யாவிடில், புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
'பாகுபலி' படத்தில் பகடை எனும் சமுதாயத்தினருக்கு எதிரான சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதை நீக்க, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்னும், 48 மணி நேரத்துக்குள் வசனங்களை நீக்காவிடில், போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்

தேவேந்திரகுல வேளாளரும் ‘எஸ்.சி.’ பட்டியலும் ஓர் வரலாற்றுக் கண்ணோட்டம் – பேராசிரியர் பெ. தங்கராஜ், MA. M.phil...(Pandyan Mallar அண்ணனுக்கு நன்றி )


மள்ளர்கள் (தேவேந்திரர்கள்) எஸ்.சி. பட்டியலிலிருந்து விலகுதல்
எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் படிக்க முடியாது, வேலைக்குப் போகமுடியாது என்கிற ஒரு வாதம் வைக்கப்படுகிறது. மேலும் சில வாதங்கள் வருகின்றன. இதையொட்டி வருகிற வாதங்களைக் கீழ்கண்டபடி தொகுக்கலாம்.
1. எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் படிக்க முடியாது, சலுகை என்ன ஆவது?.
2. எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் வேலைக்குப் போக முடியாது, ஒதுக்கீடு என்ன ஆவது?
3. இது, ஏற்கனவே படித்து வேலை வாய்ப்புப் பெற்றவர்களின் வாதம். இனிவரும் தலைமுறை என்ன ஆவது?
4. யாரைக் கேட்டு – எந்த அடிப்படையில் தேவேந்திரரை எஸ்.சி. அட்டவணையில் சேர்த்தார்கள்? எனக் கேட்பவர்கள், யாரைக் கேட்டு – எந்த ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கச் சொல்கிறார்கள்?.
5. எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் மதிப்பு மரியாதை வந்து விடுமா?. எஸ்.சி. பட்டியலை ஏன் இழிவாகக் கருத வேண்டும்.
6. ஏன் ஒற்றுமையைக் குலைக்க வேண்டும்.
1.முதல் வாதத்தை எடுத்துக் கொண்டால்
பட்டியலிலிருந்து விலகினால் படிக்க முடியாது என்பது தவறு. எஸ்.சி. பட்டியல் வந்தது 1935 ல் தான். அதற்குமுன் இவர்களில் யாரும் படிக்கவில்லையா?, அரசு, தனியார் பள்ளிகளில் இவர்களில் பலர் படித்தார்கள். கிறித்துவ மிசனரிகள் ஆரபித்த பள்ளிகளில் பலர் படித்தார்கள். மதப் பரப்பல் நோக்கமாக இருந்தாலும், படிக்க வாய்ப்புத் தரப்பட்டது. பல சாதிக்காரர்கள் படிக்காமல் இருந்த காலத்திலேயே இவர்கள் படிப்பில் நாட்டம் காட்டினார்கள்.
அடுத்து, படிப்பு என்பது, ஆர்வம் ஈடுபாடு காரணமாக வரவேண்டும். ஒதிக்கீடு மூலம் வர முடியாது. உதாரணமாக கள்ளர் சமூகத்தைத் திருத்துவதற்காக அரசு கள்ளர் சீரமைப்பு ஏற்படுத்தியது. மதுரை மாவட்டத்தில், இதற்காக ஒரு தனி துணை மாவட்ட ஆட்சியர் உள்ளார். ஆனால் கள்ளர்கள், சரிவர இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அப்பள்ளிகளில் இன்று வேறு சமூகக் குழந்தைகளே அதிகம் படிக்கிறார்கள். தேவேந்திரர் கல்வி அளவைவிட சுமார் 15 விழுக்காடு குறைவாயுள்ளது என்று முக்குலத்து சமூகத் தலைவர்களே கூறுகிறார்கள். இத்திட்டம் அறவே தோல்வியடைந்து விட்டது. இத்துறை சார்ந்த பணியாளர்களையோ அல்லது இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரையோ கேட்டால் இது பற்றிய விபரங்களைக் கூறுவார்கள். இதற்குக் காரணம் என்ன?. அரசுத் திட்டங்கள் – சலுகைகள் இருந்தும் அச்சமூகத்தார் படிப்பில் இன்னும் கவனம் செலுத்தவில்லை. திட்டம் உள்ளது, ஆனால் சமூகத்தார் நாட்டம் இல்லை. மேலும் கல்வி மண்டலத்திற்கே வராத பல சாதிகள் தமிழ்நாட்டில் உள்ளன.
இதே போல் நரிக்குறவர்களைப் படிக்க வைக்க அரசு எத்தனையோ திட்டங்கள் தீட்டிச் செயலில் இறங்கியது. இவர்களுக்காக மதுரை, மேலூர், நத்தம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட மாணவர் விடுதிகளை மூடிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.
இன்னொரு முக்கிய செய்தியைக் கவனிக்க வேண்டும். அரசுக் கணக்கு அறிக்கைகளின்படி யாராவது பள்ளியில் சேர விரும்பினால் ‘இடமில்லை’ என்று மறுக்கும் நிலை தமிழ்நாட்டில் உள்ளதா? இல்லையே! இதற்கு மாறாக இடை நிறுத்தம் (Drop out) இருப்பதைப் பற்றித்தான் குறிப்பு உள்ளது. 10, 12,ம் வகுப்பிலும், அதற்கடுத்து கல்லூரியில் சேரும் போதும் இது போன்ற இடை நிறுத்தம் அதிக அளவில் உள்ளதாகவும், இது 10 முதல் 15 விழுக்காடு வரை உள்ளதாகவும் குறிப்புகள் காட்டுகின்றன. இது நாம் அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்த காலங்களில் இதை நன்கு அறிவோம். எப்படியெனில், பல கல்லூரிகளில் சேர்க்கை முடிந்து விட்டது, இடமில்லை என்று கூறுவார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும், தமிழக கல்லூரிக் கல்வியில் 7, 8, 9 விழுக்காடு இடங்கள் காலியாகவே இருந்தன. இப்பொழுதும் அப்படிதான். இந்த புள்ளி விபரங்களை வெளிப்படுத்தினால் சேர்க்கை சமயம் நன்குடை பெற முடியாது. பணம் பறிக்க முடியாது எனக் கருதி வெளியிடுவது கிடையாது. அப்படியிருக்கும் போது படிக்க முடியாது என்று எப்படி கூறமுடியாது.
அடுத்து, எஸ்.சி. பட்டியலில் இல்லாத இந்து நாடார், கள்ளர், மறவர், வன்னியர், இசுலாமியர், மீனவர், முத்தரையர், கைவினைஞர்(விசுவகர்மா), வண்ணார், அம்பட்டர்(நாவிதர்) ஆகியோர் பழங்காலத்திலும் சரி இப்பொழுதும் சரி, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் தேவேந்திரர் அளவிலிருந்து குறைவாகவே உள்ளார்கள். ஆனால் இவர்கள் எஸ்.சி. அட்டவணையில் சேர்க்கவில்லை. எஸ்.சி பட்டியல் உருவானது கல்வியில் பிற்போக்காக இருந்தவருக்குக் கல்வி தருவதற்காக என்றால் இவர்களையல்லவா முதலில் சேர்த்திருக்க வேண்டும்! இதிலிருந்து தெரியவில்லையா எஸ்.சி பட்டியல் உருவானதின் நோக்கம் அதுவல்லவென்று.
இனி, கல்வி உதவிப் பணத்தைக் கூறுவார்கள், இது எல்லோருக்கும் உள்ளது. 28 முற்பட்ட சாதிகள் தவிர எல்லோருக்கும் சாதிகள் தவிர எல்லோருக்கும் உள்ளது. விடுதிகள் எல்லோருக்கும் உண்டு. பயணச் சலுகை எல்லோருக்கும் உண்டு. கற்கைக் கட்டண விலக்கு சிலருக்கு முழுவதும், சிலருக்கு பாதியும் உண்டு. எனவே இதெல்லாம் அனுபவிப்பது எஸ்.சி அட்டவணைச் சாதியார் மட்டும்தான் என்று கூறுவது சரியல்ல. மாணவர் சலுகைகள் அனைத்துச் சாதிகளுக்கும் உள்ளன.
2. அடுத்து, வேலை வாய்ப்பு பற்றிக் கூறுகிறார்கள்.
எஸ்.சி. அட்டவணையிலிருந்து விலகினால் வேலைக்குப் போக முடியாது என வாதிடுவது சரியல்ல. 1980 முதல் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் நிலை அல்லது இருந்த நிலை, மற்ற பட்டியல் சாதிகளைவிட எஸ்.சி. பட்டியல் சாதியார் மத்தியில்தான் கூடுதலாக இருந்த்து. இதற்குக் காரணம், மற்றவர்களுக்குத் தனியார் துறை வாய்ப்புகள் உள்ளன. எஸ்.சி. அட்டவணை சாதியாருக்கு அது அறவே அல்ல.
அரசு வேலை என்ற சில எழும்புத் துண்டுகளைக் காட்டி இவர்கள் அரிசன், தாழ்த்தப்பட்டவன், தலித் என்று ஒதுக்கி வைக்கவும் அழுத்தி வைக்கவும் தான் இப்படியல் பயன்படுகிறது. தனியார்துறை வேலை வாய்ப்பையும், அரசுத்துறை வேலை வாய்ப்பையும் ஆய்வு செய்தால் இந்த உண்மையைக் கண்டுபிடிக்கலாம். சரி, அரசுப் பணி வராமல் இருந்த காலத்தில் இவர்கள் எல்லாம் செத்து விட்டார்களா? எத்தனை பேர் அரசுப் பணிக்கு வருகிறார்கள்? ஊருக்கு 4, 5 பேர் வருகிறார்கள். இவர்களை வைத்தா சமூக முன்னேற்ற எழுச்சியைக் கணக்கிடுவது?. சரி அரசு பணியைக் கணக்கில் எடுத்தால்கூட தேவேந்திரர் இன்று ஏராளமானோர் அரசுப் பணிக்கு வந்துவிட்டார்கள். இந்து நாடார், கள்ளர், மறவர், வன்னியர், இசுலாமியர், மீனவர், முத்தரையர், கைவினைஞர்(விசுவகர்மா), வண்ணார், அம்பட்டர் ( நாவிதர் ) இவர்களைவிட எண்ணிக்கையிலும், விழுக்காட்டுக் கணக்கிலும் அதிகம் வந்துவிட்டார்கள். ஆனால் இதுவே மற்றவரின் காழ்ப்புணர்வுக்குக் காரணமாயுள்ளது. எஸ்.சி. அட்டவணையில் இருந்து கொண்டு இவ்வளவுபேர் வந்து விட்டார்களே! என்று வயிற்றெரிச்சல் படுகிறார்கள். இக்காழ்ப்புணர்வில் எல்லோருமே இவருக்கு எதிராகக் களத்தில் இறங்குகிறார்கள். எஸ்.சி. பட்டியலில் இல்லாவிட்டால் இந்த அளவுக்குக் காழ்ப்புணர்வு ஏற்படாது.
( தொடரும் ) .(Pandyan Mallar அண்ணனுக்கு நன்றி )