ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

தேவேந்திரர்மறுமலர்ச்சி ஒரு நாள் பயிலரங்கம்

தேவேந்திரர்மறுமலர்ச்சி பேரவை யின்ஒரு நாள் பயிலரங்கம்


இடம். எடையூர்

திருத்துறைப்பூண்டி

படியுங்கள்! சுவையுங்கள்!!

படியுங்கள்! சுவையுங்கள்!!புதிய தமிழகம்வார இதழ்கள்

சனி, 25 டிசம்பர், 2010

கீழ வெண்மனி தியாகிகளுக்கு டாக்டர்.கிருஷ்ணசாமி அவ்ர்கள் தலைமையில் அஞ்சலி

நாகை:-1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தஞ்சை மண்ணாம் கீழ வெண்மணியில் நடந்த துயர சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது.





உழைத்த உழைப்பிற்க்கு அரைப்பிடி நெல் கூடுதலாக கேட்டதற்காக முதியோர், பெண்கள், குழந்தைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் 44 பேர் ஒரே குடிசையில் அடைத்து கொளுத்தப்பட்ட துயர சம்பவம் நடந்த நாள் அது.





தியாகம் புரிந்தவர்கள் விவசாய தொழிலாளர்கள் எனினும் அவர்கள் அனைவரும் வீரம் செறிந்த வேளாண் குடிமக்கள் என்ற சமூக அடையாளம் அறவே மறைக்கப்பட்டுவிட்டது.





அம்மக்களின் அளப்பரிய தியாகத்தை போற்றும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் கீழவெண்மணி கிராமத்தில் அவர்கள் நினைவிடத்தில் இன்று (டிசம்பர் 25) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

டிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம் -டாக்டர்.க.கிருஷ்ணசாமி வேண்டுகோள்

புதிய தமிழகம் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-





இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் சமுதாய பொருளாதார ஏற்ற தாழ்வுகள் நீக்கப்படவில்லை. பிறந்த நாட்டில் மூன்று செண்ட் வீட்டு மனையோ, ஒரு ஏக்கர் நிலமோ கூட சொந்தமாக இல்லாமல் இன்னமும் வறிய நிலையில் வாழ்வோர் எண்ணற்றோர்.





இந்த நிலை போக்க எத்தனையோ போராட்டங்கள் நடந்தி இருப்பினும். 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தஞ்சை மண்ணாம் கீழ வெண்மணியில் நடந்த துயர சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது.





உழைத்த உழைப்பிற்க்கு அரைப்பிடி நெல் கூடுதலாக கேட்டதற்காக முதியோர், பெண்கள், குழந்தைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் 44 பேர் ஒரே குடிசையில் அடைத்து கொளுத்தப்பட்ட துயர சம்பவம் நடந்த நாள் அது.





தியாகம் புரிந்தவர்கள் விவசாய தொழிலாளர்கள் எனினும் அவர்கள் அனைவரும் வீரம் செறிந்த வேளாண் குடிமக்கள் என்ற சமூக அடையாளம் அறவே மறைக்கப்பட்டுவிட்டது.





அம்மக்களின் அளப்பரிய தியாகத்தை போற்றும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக எனது தலைமையில் கீழவெண்மணி கிராமத்தில் அவர்கள் நினைவிடத்தில் டிசம்பர் 25ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் அஞ்சலி நடைபெறும். அதேபோல அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதிய தமிழகம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சார்பாக நினைவஞ்சலி நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

வியாழன், 23 டிசம்பர், 2010

ராசபக்சே தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார்: டாக்டர் கிருஷ்ணசாமி

ராசபக்சே தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார்: டாக்டர் கிருஷ்ணசாமி




புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-



சுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஈழத்தமிழ் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தனி ஈழத்திற்கான தமிழ் மக்களின் போராட்டத்தை ஈவு இரக்கமற்ற வகையில் ராசபக்சே இராணுவ நடவடிக்கையின் மூலமாக ஒடுக்கி வருகிறார். 2008 -09ம் ஆண்டுகளில் தமிழ் மக்களின் மீதான தாக்குதலின் போது, போர் முடிவுற்ற பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்படும் என்று ராசபக்சே அறிவித்திருந்தார். தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டி இந்திய அரசும், தமிழக முதலமைச்சரும் இதே கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.



போர் முடிந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெறும் வேளையில் அரசியல் தீர்வுக்கான எந்த முயற்சியையும் ராசபக்சே எடுக்கவில்லை. மாறாக எந்த தமிழ் இலட்சியத்திற்காக தமிழ் மக்கள் லட்சக்கணக்கான பேர் தங்கள் இன்னுயிரை ஈந்தார்களோ, அந்த இலட்சியத்தை தவிடு பொடியாக்கும் வகையில் ராசபக்சே இப்பொழுது தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார். சிங்கள மொழிக்கும், சிங்களவர்களுக்கும் நிகரான அந்தஸ்து என்ற நிலையிலிருந்து முற்றிலுமாக மாறி இப்பொழுது சிங்கள மொழியை மட்டுமே முன்னிலைப்படுத்தி தமிழ் மொழியினுடைய எல்லா விதமான அடையாளங்களையும் அழிக்கும் வகையில் இப்பொழுது சிங்கள மொழி மட்டுமே தேசிய கீத மொழியாக அறிவித்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.



உடனடியாக ஈழத்தில் தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தையும், இன்னும் சொல்லப் போனால் இரு மொழிக்குண்டான சம அந்தஸ்தை கொடுக்கத் தவறும் பட்சத்தில் மீண்டும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறேன். அதே நேரம், சிங்கள இனவெறிக் கும்பலின் கைகளில் சிக்கியுள்ள இலங்கைத் தீவில், தமிழீழம் மலர்வது ஒன்றே, தமிழ் மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட ஒரே தீர்வு என்பதை ராசபக்சேவின் நடவடிக்கை நிரூபித்துள்ளது என்பதை இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் 3.5 லட்சம் பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் 3.5 லட்சம் பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி




தமிழகத்தில் 3.5 லட்சம் பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.



தமிழக மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பாக மதுரை தமிழ்நாடு ஓட்டலில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-



தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு 19 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இது நடைமுறையில் இல்லை. இதனால் தமிழகத்தில் உள்ள 110-க்கும் அதிகமான அரசுத் துறைகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பின்னடைவு பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இவற்றை உடனே அரசு நிரப்ப வேண்டும். மேலும் ஏ, பி, சி, என்ற 3 உயர்நிலைகளில் பின்னடைவு பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. எஸ்சி, எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நாம் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.



2006-ம் தேர்தலில் போது தி.மு.க.வினர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டு காலம் முடியபோகிறது. இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதற்கிடையே இந்த பட்டியல் பிரிவில் 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி, எஸ்சி, எஸ்டியினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.



சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் காலி பணியிடங்களை நிரம்பும் போது எஸ்சி, எஸ்டிக்கான ஒதுக்கீட்டு இடங்களில் உள் ஒதுக்கீடு அடிப்படையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது சட்ட விரோதம். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெள்ளை அறிக்கை வேந்தருக்கு பாராட்டு விழா!

தமிழக மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பாக மதுரை தமிழ்நாடு ஓட்டலில் 18-12-2010 அன்று இடஒதுக்கீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை பெற்றுத் தந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். சுங்கத்துறை ராசாராம் தலைமை தாங்கினார். நாகூர்கனி அனைவரையும் வரவேற்றார். விழா ஒருங்கிணைப்பாளர் சா.சத்தியசெல்வன் கருத்துக்களை வழங்கினார். சென்னை அய்யர், கடையநல்லூர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மதுரம் உள்பட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து அரசு ஊழியர்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். மேலும் கட்சித் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கில் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் வருகின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர குல மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.



தி.மு.க.வை கடுமையாக சாடிய டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் தி.மு.க. அரசினால் தேவேந்திர குல வேளாளர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு பழிவாங்கப்படுகின்றனர் என்று விரிவாக எடுத்துரைத்தார். சுதந்திர போராட்ட மாவீரர் மற்றும் உலகின் முதல் தற்கொலைப் படை வீரர் சுந்தரலிங்க தேவேந்திரரை மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி ஆதிதிராவிடர் என்று கொச்சைப்படுத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் வருகின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை மண்ணைக் கவ்வச் செய்ய தேவேந்திரர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், அதற்கு அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன், கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

புதன், 15 டிசம்பர், 2010

இனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களை சந்திபேன்-சேலத்தில் ஜான்பாண்டியன் பேட்டி

இனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களை சந்திபேன்-சேலத்தில் ஜான்பாண்டியன் பேட்டி






தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் இன்று காலை சேலம் மத்திய ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார். பின்னர் அவர் திரளான தொண்டர்களுடன் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஜான்பாண்டியன் இன்று விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை ஆவார் என்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என திரளானோர் இன்று அதிகாலை சேலம் மத்திய சிறை முன்பு திரண்டனர்.



நெல்லை, தூத்துக்குடி, கோவை , மதுரை, ராமநாதபுரம், தேனி, கடலூர், உள்பட பல ஊர்களில் இருந்தும் தொண்டர்கள் கார், வேன்களில் வந்து அவரை வரவேற்க காத்து இருந்தனர். ஜான்பாண்டியன் விடுதலை ஆனதைத் தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணி வித்தும் வரவேற்றனர்.



இதனால் சேலம்- ஏற்காடு ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.சேலத்தில் இருந்து அஸ்தம்பட்டி, கோரிமேடு, அடிவாரம் செல்லும் பஸ்களும், அடிவாரத்தில் இருந்து வந்த பஸ்களும் கன்னங்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டன.



இதையொட்டி சேலம் போலீஸ் கமிஷனரும், ஐ.ஜியுமான சுனில் குமார்சிங் உத்தரவின் பேரில் ஜெயில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இதன் பின்னர் அவர் கூறியதாவது:-



8ஆண்டுகளுக்கு பின்னர் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ளேன். சில அரசியல் நிர்ப்பந்தத்தால் நான் பழி வாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.



இனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களையும், பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் மேம்பாட்டிற்கு உழைப்பேன். அனைவரையும் ஒன்றிணைத்து பணியாற்றுவேன்.



தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது? தனித்து போட்டியிடுவதா? என கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் அறிவிப்பேன்

நாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம்! சிறை மீண்ட ஜான் பாண்டியன் நெத்தியடி!

நாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம்! சிறை மீண்ட ஜான் பாண்டியன் நெத்தியடி!

தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை, கோவை விவேக் கொலை வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்துள்ளது. எட்டு வருட சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை!







சிறை வாசலைவிட்டு வெளியே வந்த தன் கணவருக்கு இனிப்பை ஊட்டி சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார் பிரிஸில்லா பாண்டியன். அதன் பின், தொண்டர்கள் காரில் அணிவகுக்க, வழியெங்கும் ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுக்க, மனைவியோடு காரில் நெல்லைக்குப் புறப்பட்டார் ஜான் பாண்டியன். ஜூ.வி-க்காக அவர் அளித்த பிரத்தியேகப் பேட்டி இது...







''எட்டு வருட சிறை வாழ்க்கை எப்படி இருந்தது?''



''என்னதான் இருந்தாலும், சிறைதானே. சிறைக்குள் பலர் இருந்தாலும், அவங்களை நண்பர்கள்னு எப்படி ஏத்துக்க முடியும்? சிறையில் இருந்தப்ப, கைதிகள் பலரிடமும் பேசி இருக்கேன். 75 சதவிகிதம் பேர் பொய் வழக்குகள் போடப்பட்டு, செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவிக்கிறவங்கதான். இதோ... சுப்ரீம் கோர்ட், இப்போ என் மீது தப்பு இல்லைன்னு சொல்லி விடுதலை செஞ்சிருக்கு. அப்போ இந்த எட்டு வருஷம் நான் அனுபவிச்ச தண்டனைக்கு யார் பொறுப்பு? உள்ளே இருந்த காலத்தில் முடங்கிப்போன எனது உழைப்புக்கு யார் பொறுப்பு? இந்தக் கால விரயத்துக்கு யார் பொறுப்பு? சும்மா தண்டனை தருவது மட்டும்தான் சட்டத்தின் வேலையா? இதற்கும் சட்டம்தான் பதில் சொல் லணும்!



ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம். ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது உண்மையானால்... நித்தமும் தண்டிக்கப்படும் நிரபராதிகளுக்கு என்ன பரிகாரம்? இந்தக் கேள்விகளோடதான் சிறையில் இருந்து வந்திருக்கேன்.''



''உங்க பார்வையில் தி.மு.க. அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்குது?''



''தி.மு.க. அரசின் செயல்பாடுகள் அத்தனையும் நான் ஜெயிலுக்குள் இருந்து பேப்பர்லதான் படிச்சிட்டு இருந்தேன். அதை மட்டும்வெச்சு, ஒரு முடிவுக்கு வந்துட முடியாது. இப்போதானே வெளியே வந்திருக்கேன். இனிதான் நாட்டுல என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும். அதுக்குப் பிறகு கச்சேரியை வெச்சுக்கிறேன்!''



''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்... ஆ.ராசா ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப் படறார்னு சிலர் கொதிக்கிறாங்க... நீங்க என்ன சொல்றீங்க?''



''தலித் என்கிற வார்த்தையே முதல்ல எனக்குப் பிடிக்காது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு மட்டும்தான் கண்டவனும் ஒரு பேரை வெச்சுக்கிட்டு இருக்கான். நாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம்!



எங்களைப்போன்ற தாழ்த்தப்பட்ட மக்களை எல்லா ஆட்சியிலுமே பழிவாங்கத்தான் செய்றாங்க. இப்போ ராசாவை மட்டும் பழிவாங்குறாங்கன்னு எப்படி சொல்ல முடியும்? பிரச்னைன்னு வரும்போதுதான், இப்படி இனத்தோட பேரைச் சொல்லி அனுதாபம் தேடிக்கப் பார்ப்பது தப்பு. அரசியல் அதிகாரத்தில் இருக்கிறவங்க செய்யும் சூழ்ச்சியில், தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வர்றாங்க என்பது மட்டும்தான் உண்மை.''



''ஜெயலலிதா யாரோட கூட்டணி வெச்சுக்கிறது சரியா இருக்கும்னு நினைக்கிறீங்க?''



''ஜெயலலிதாவோ, கருணாநிதியோ... யாருடன் கூட்டணி என்பது அவங்களோட விருப்பம். இனிமே, நான் என்ன பண்ணப்போறேன்கிறதை என் மக்களைக் கேட்டுத்தான் முடிவு செய்வேன்.''



''உங்க எதிர்காலத் திட்டம் என்ன..?''



''என்னோட மக்களுக்கு எதுவும் செய்ய முடியாம, இப்படிப் பொய் வழக்குப் போட்டு ஜெயில்ல தள்ளிட் டாங்களேங்கற வருத்தம் மட்டும்தான் இதுவரைக்கும் எனக்கு இருந்தது. இந்த ஒரு விஷயத்தைத்தான் நான் யோசிச்சுட்டு இருந்தேன். அதைத் தாண்டி வேறு எதையும் சிந்திக்கவே இல்ல. இன்னிக்கு நான் வெளி யில வர்றேன்னு தெரிஞ்சதும், எட்டு வருஷமா தலைவர் இல்லாமத் தவிச்ச என் தேவேந்திர குல மக்கள் துடிச்சு எழுந்து இருக்காங்க. அவங்க பட்ட வேதனைக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியவங்க, சொல்லியே ஆகணும்!



தலித் என்ற பேரைச் சொல்லி, தமிழ்நாட்டு மக்களை நிறையப் பேரு இப்போ ஏமாத்திட்டு இருக்காங்க. நான் வெளியில வந்ததைப் பார்த்து, அவங்க மிரண்டு போயிருக்காங்க. தமிழகம் முழுக்க மாவட்டவாரியாப் போய் மக்களைச் சந்தித்து, அவங்க மனசுல இருக்கிறதைக் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். ஆனா ஒண்ணு மட்டும் உறுதி... என்னோட அரசியல் பணி முன்பைவிட இன்னும் வேகமாத் தொடரும்.



இன்னும் உங்ககிட்டப் பேச வேண்டியது நிறைய இருக்கு. அதுக்குக் காலமும் நேரமும் கூடிய சீக்கிரமே வரும். மக்களை ஏமாத்தும் அத்தனை பேரோட முகத்திரைகளையும் அப்போ கிழிப்பான் இந்த ஜான் பாண்டியன்!''



நெல்லையை நோக்கிச் சீறுது கார்!




செவ்வாய், 7 டிசம்பர், 2010

தேவேந்திர குலத்தின் போர் வாள் தளபதி ஜான்பாண்டியன்

தேவேந்திர குலத்தின் போர் வாள் தளபதி ஜான்பாண்டியன் விடுதலையானார்!


தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் இன்று காலை சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆனார். பின்னர் அவர் திரளான தொண்டர்களுடன் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் கூறுகையில், 8 ஆண்டுகளுக்கு பின்னர் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ளேன். சில அரசியல் நிர்ப்பந்தத்தால் நான் பழி வாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். இனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களையும், பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் மேம்பாட்டிற்கு உழைப்பேன். அனைவரையும் ஒன்றிணைத்து பணியாற்றுவேன். தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது? தனித்து போட்டியிடுவதா? என கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் அறிவிப்பேன் என்றார்.
.

தேவேந்திர குல மக்களை ஒன்றிணைப்பேன்: ஜான்பாண்டியன்

தேவேந்திர குல மக்களை ஒன்றிணைப்பேன்: ஜான்பாண்டியன்



கொலை வழக்கில் தண்டனை ரத்தானதைத் தொடர்ந்து ஜான்பாண்டியன் சேலம் மத்திய சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனார். அவரை வரவேற்க தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் தேவேந்திர குல பொதுமக்கள் திரண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவரும், தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்க தலைவருமான ஜான்பாண்டியன், கோவையைச் சேர்ந்த நிதிநிறுவன அதிபர் விவேக் என்கிற விவேகானந்தன் என்பவர் கடந்த 17.8.1993 அன்று படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கோவை ஆர்.எஸ்.புரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான்பாண்டியன் உள்பட 9 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதில் முதல் குற்றவாளியான மில் அதிபர் வெங்கட்ராமன் கோவை மத்திய சிறையில் கடந்த ஆண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே போல உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் போதே பாளையங்கோட்டை சிறையில் இருந்த பிரின்ஸ்குமார் என்பவர் இறந்து விட்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 3-ந் தேதி தீர்ப்பு கூறியது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஜான்பாண்டியன் உள்பட 5 பேரை விடுதலை செய்தும், பவுன்ராஜ், குமார் என்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் தீர்ப்பு கூறியது.
ஜான்பாண்டியன் சேலம் மத்திய சிறையில் இருந்தார். அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உத்தரவு சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு கருப்பண்ணணுக்கு நேற்று வந்தது. இதையடுத்து ஜான்பாண்டியன் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டார். ஜான் பாண்டியன் விடுதலை ஆகும் தகவல் அறிந்து உறவினர்கள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானவர்கள் நேற்று அதிகாலை முதலே சேலம் மத்திய சிறை முன்பு குவிய தொடங்கினார்கள். நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் சிறை முன்பு திரண்டார்கள். இதனால் அந்த பகுதி போக்குவரத்து ஸ்தம்பித்து பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக ஏற்காடு ரோடு வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. வாகனங்கள் அனைத்தும் கன்னங்குறிச்சி ரோடு வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. சேலம் மாநகர போலீஸ் கமிசனர் சுனில் குமார் சிங் உத்தரவுப்படி, ஏராளமான போலீசார் மத்திய சிறை முன்பு நிறுத்தப்பட்டார்கள். அதே போல சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜான் நிக்கல்சன் தலைமையில் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சரியாக காலை 10.30 மணிக்கு ஜான்பாண்டியன் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது சிறை வாசல் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகத்தில் கோசமிட்டனர். அதே போல பட்டாசுகள் வெடித்தும், மாலைகளையும் பூவையும் தூவி அவரை வரவேற்றார்கள். ஜான் பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர் காரில் ஏறி சேலம் தொங்கும் பூங்கா அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சென்றார். அங்கு அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
8 ஆண்டுகளுக்கு பிறகு நான் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ளேன். சில அரசியல் நிர்பந்தங்களால் நான் பழி வாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இனி வரும் காலங்களில் எனது அரசியல் பணி சிறப்பாக இருக்கும். இங்கிருந்து நான் நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கு சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளேன். நெல்லை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கால் வைக்க உள்ளேன். இனி மாவட்டந்தோறும் கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களையும், பொது மக்களையும் சந்தித்து அவர்களின் மேம்பாட்டிற்காக உழைப்பேன். அனைவரையும் ஒன்றிணைத்து பணியாற்றுவேன். இன்று நான் விடுதலையானால் தேவேந்திர குலத்தினர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து என்னை வரவேற்க திரண்டு உள்ளனர்.
இனி எனது அரசியல் பணி தெளிவாக இருக்கும். முதலில், தேவேந்திர குல மக்களை ஒன்றிணைப்பேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. மக்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் எனது முடிவு இருக்கும். நான் சிறையில் இருந்த காலங்களில் என்னை பார்க்க ஏராளமானவர்கள் வந்தார்கள். நான் இல்லாமல் என் சொந்தங்கள் தவித்து போனார்கள். இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார். இதைத்தொடர்ந்து தொண்டர்கள் படை சூழ பயணத்தை தொடங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சனி, 4 டிசம்பர், 2010

கோவை கொலை வழக்கில் தளபதி ஜான்பாண்டியன் விடுதலை

கோவையில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தேவேந்திர குல வேளாளர்களின் முக்கிய தலைவர் தளபதி ஜான் பாண்டியனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 1993ம் ஆண்டு கோவையில் நடந்த கொலை தொடர்பாக மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தளபதி ஜான்பாண்டியன் கடந்த 2003ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து ஜான்பாண்டியன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீபுர்கார், ஸ்ரீயாத் ஜோசப் கொண்ட அமர்வு தளபதி ஜான் பாண்டியன் உள்பட 5 பேரை விடுவித்து உத்தரவிட்டது.