ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 31 டிசம்பர், 2011

மலைக்க வைக்கும் மன்னார்குடி ஜாதகம்!



சிகலா குடும்பத்தின் முழுநீள ஜாதகம் இது! இப்போது அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பெயர் சிவப்பு நிறத்தில் உள்ளது. மொத்தம் 16 பேர் நீக்கப்பட்டுள்ளார்கள். இதில் 'மிடாஸ்' மோகன் மட்டுமே சசிகலா குடும்பத்துக்கு வெளியே உள்ள ஒரே நபர். சசிகலா, திவாகரன் மற்றும் சகோதர, சகோதரிகளான சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி ஆகியோரது வாரிசுகளில் சிலரும், எம்.நடராஜனின் சகோதரர்கள் இருவரும்தான் இப்போது விலக்கப்பட்டுள்ளார்கள். அடுத்து வரும் பக்கங்களில் ஒவ்வொருவரைப் பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன....
செல்லப்பிள்ளை தினகரன்!
டி.டி.வி. என அ.தி.மு.க-வினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர் தினகரன். சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன். சசிகலா மூலமாக கார்டனுக்குள் நுழைந்து, 'அம்மா’வின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக வலம் வந்தார். தேர்தல் சுற்றுப்பயணக் காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாவல் பணிகளை மும்முரமாகக் கவனித்துக் கொள்வதற்காக தோட்டத்துக்குள் அழைத்து வரப்பட்டார். பிறந்த ஊரான திருத்துறைப்பூண்டியையும் அப்பா விவேகானந்தன் பெயரையும் இணைத்து, டி.டி.வி.தினகரன் என மாறினார். மாமன் மகள் அனுராதாவை, ஜெயலலிதாவின் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 14 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய குளம் தொகுதி வேட்பாளர் யார் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க... தினகரனைக் களமிறக்கினார் ஜெய லலிதா. 'அம்மா வீட்டு வேட்பாளர்’ என்பதால், தேனி மாவட்டக் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது, தென்மாவட்ட நிர்வாகிகள் பலரும் இவருக்காக ஓடியாடி வேலை செய்து அமோக வெற்றியைத் தேடித் தந்தனர். அடுத்தடுத்து, இவருக்கு ஏறுமுகம்தான். கட்சியில் மாநிலப் பொருளாளர் பதவி தேடி வந்தது. பெரியகுளம் எம்.பி-யாக இருந்த போது, தனது தொகுதி மக்களுக்கு கேட்டதை எல்லாம் கொடுக்க... தேனி மாவட்டத்தினர், 'மக்கள் செல்வன்’ என பட்டத்தைச் சூட்டினார்கள்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அறிவிக்கப்படாத அதிகார மையமாக தினகரன் மாறினார். 'அடுத்த வாரிசு’ என்றும் இவரைச் சொன்னார்கள். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் இடி. 40 தொகுதி களையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்ற... தினகரனும் தோல்வியைத் தழுவினார். தினகரனின் அரசியல் பயணத்தில் வேகம் குறைந்தது.
இவர் குறித்துப் பேசும் கட்சியினர், ''நாடாளுமன்ற வேட்பாளராக தினகரன் பெரியகுளத்தில் காலடி வைத்தபோது, கட்சியில் சீனியரான ஓ.பன்னீர் செல்வத்தின் அடக்கத்தில் ஐக்கியமான தினகரன், அவரது தம்பி வீட்டில் குடியேறினார். ஓ.பி.எஸ்-சிடம் பணிவையும் தாண்டிய நம்பகத்தன்மையை உணர்ந்தவர், ஓ.பி.எஸ்-சை அம்மாவிடம் தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தினார். இதுவே ஒ.பி.எஸ்-சை முதல்வர் நாற்காலி வரை கொண்டு சென்றது. தினகரன் தேனிக்கு வரும் போதெல்லாம் சாரதியாக இருந்த தேனி முன்னாள் எம்.எல்.ஏ-வான ஆர்.டி.கணேசன், தினகரனின் செயலாளராக இருந்த போடி முன்னாள் எம்.எல்.ஏ-வான ராமதாஸ், ஆண்டிபட்டி முன்னாள் ஒன்றியச் செயலாளர் லோகிராஜன் ஆகியோர் தினகரனால் வளர்ந்தவர்களில் முக்கியமானவர்கள்'' என்கிறார்கள்.
''ஒன்றுபட்ட மதுரை மாவட்டச் செயலாளர் சேடபட்டி முத்தையா, ஆண்டிபட்டி முத்துவெங்கட்ராமன், தற்போதைய போடி நகர்மன்றத் தலைவர் பழனிராஜ், முன்னாள் தேனி நகரச் செயலாளர் ராமராஜ், ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் பால்பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ-க்களான போடி பன்னீர்செல்வம், தேனி ஜெயராமன், பெரியகுளம் டாக்டர் சலீம், கோபாலகிருஷ்ணன், பெரியவீரன், கம்பம் சுப்புராயர், முன்னாள் எம்.பி. ராமசாமி, ஆர்.டி கோபால் ஆகியோர் தினகரனை எதிர்த்ததால் வீழ்ந்தவர்கள்'' என்றும் சொல்கிறார்கள். தினகரனால் அடையாளம் காணப் பட்ட ஒ.பி.எஸ்-க்கு பின்னர் தினகரன் வகித்த பொருளாளர் பதவி கிடைத்ததும் கடந்த 5 ஆண்டு களாக 'அமைதிப்புறாவாக’ தினகரன் மாறிவிட்டதும் எதிர் பாராத திருப்பங்கள். ''தப்பு செய்தவங்களோட சேர்த்து, 'சும்மா’ உட்கார்ந்து இருந்த அண்ணனையும் நீக்கிட்டாங்க'' என்று தினகரன் ஆட்கள் புலம்புகிறார்கள்!
சினிமா டு தொழில்
முன்பு ஜெயலலிதா தொடங் கிய, ஜெ.ஜெ. டி.வி-யின் நிர்வாக இயக்குனராக இருந்தவர், பாஸ்கரன். சசிகலாவின் அக்கா வனிதாமணியின் இரண்டாவது மகன். அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி ஆங்கிலச் சேனலுக்கு இணையாக அப்போது டி.வி-யைக் கொண்டு சென்றார். அதனால் சினிமா ஜாம்ப வான்கள்கூட, தாங்களாகவே தேடிப் போய் நிகழ்ச்சி தயாரித்துக் கொடுத்தார்கள். அரசியலில் ஆர்வம் இல்லாத காரணத்தால், ஆரம்பத்தில் இருந்தே போயஸ் கார்டன் பக்கம் நெருங்கியது இல்லை. 'இவர் ஏலம் எடுத்த ஆந்திர மாநில கல்குவாரியில் நல்ல வருமானம்’ என்கிறார்கள். ஜெஜெ டி.வி. முடக்கப்பட்டபோது இவரும் முடங்கிப் போனார்.
சுதாகரன் திருமணத்தின்போது ஆஜானுபாகுவாக இருந்தவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திடீரென்று உருவம் இளைத்து சிக்கென்று வந்து நின்றார். ''என்னப்பா... சர்க்கரை ஜாஸ்தியா... இப்படி இளைச்சுப் போயிருக்கியே...'' என்று உறவினர்கள் கரிசனத்தோடு குசலம் விசாரிக்க, ''சினிமாவுல நடிக்கப் போறேன்... அதுக்காக தினம் அஞ்சு மணி நேரம் எக்சர்சைஸ் செஞ்சு கஷ்டப் பட்டு உடம்பை இளைக்க வச்சிருக்கிறேன். என்னைப் பார்த்து வியாதிக்காரன்னு சொல்றீங்களே'' என்று சிரித்திருக்கிறார். ''டைரக்டர் பூபதி பாண்டியனிடன் பேசிட்டு இருக்கேன். சீக்கிரமா ஆக்ஷன் ப்ளஸ் காமெடி ரோல் செய்யப் போறேன்'' என்று சொன்னபடியே விதவிதமான கெட்டப்பில் பாஸ்கரன் கொடுத்த அசத்தலான போட்டோக்களைப் பார்த்து உறவினர்களே வாய் பிளந்தார்கள்.
''கருணாநிதி குடும்ப வாரிசுகள் உதயநிதி, துரை தயாநிதி, அருள்நிதி போன்றவர்கள் சினிமாவை ஆக்கிரமித்தார்கள். இதனால் தான் கடந்த ஆட்சிக்கே கெட்ட பெயர். இந்த நேரம் நீ சினிமாவில் நடிக்கப் போறேன்னு விளம்பரம் கொடுத்து, எங்களுக்கும் அம்மாவுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கதே...'' என்று சிலர் அட்வைஸ் செய்யவே, கலைத்தாகத்தை அடக்கிக் கொண்டாராம். அம்மா வனிதா மீது மிகுந்த பாசம் கொண்ட பாஸ்கரனுக்கு, தாயின் திடீர் மறைவு பேரிடியாய் அமைந்து போனதாம். அதனால், சினிமா கனவை மூட்டைக் கட்டிவிட்டு, குவாரி தொழிலில் முழு கவனம் செலுத்தி வருகிறாராம்.
பிள்ளையார் சுழி போட்ட சுதாகரன்
சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன் சுதாகரன். தன் அக்காள் பிள்ளைகளில் சுதாகரன் மீதுதான் சசிகலாவுக்குக் கொள்ளைப் பிரியம். அந்தப் பிரியம்தான் வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தத்து எடுக்கக் காரணமாக அமைந்தது.
இந்தியாவே வாய்பிளக்கும் அளவுக்கு பிரமாண்டமாக சுதாகரனுக்குத் திருமணம் செய்துவைத்து, அதுவே தேர்தலில் தோல்விக்குக் காரணமாகவே, சுதாகரனை விரட்டியடித்தார் ஜெய லலிதா.
அதன்பிறகு தி.மு.க. ஆட்சியில் 'சின்ன எம்.ஜி.ஆர்.’ என்று அடைமொழியை சூட்டிக்கொண்டு ஆடம் பரத்தோடு வலம் வந்தார். 2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுமே சுதாகரனின் தி.நகர் வீட்டிலும் அபிராமபுரத்தில் உள்ள அலுவலத்தில் அதிரடியாக நுழைந்த போலீஸ் 88 கிராம் ஹெராயினைப் பறிமுதல் செய்து கைது செய்தது. துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாகவும் வழக்கு கடுமையாக்கப்பட்டது. 108 நாட்கள் சிறையில் இருந்தார் சுதாகரன். வழக்கு விசாரணை இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.
அதன்பிறகு பெண் திரைப்படத் தயாரிப்பாளர் பிரியா நாயருடன் ஆபாசப் பேச்சு, புலித்தோல் விவகாரம் என்று பல்வேறு விஷயங் களில் சிக்கினர். சிறுதாவூர் நில விவகாரத்தில் தொடர்புடையதாக பேசப்பட்ட பரணி ரிசார்ட்ஸ் நிறுவனத்திலும் சுதாகரன் பங்குதாரர். சுதாகரன் என்கிற பெயரை 'சுதாகர்’, 'விவேக சுதாகர்’ என்றெல்லாம் மாற்றிப் பார்த்தார். ஜெயலலிதா அடுத்தடுத்து வழக்கு களைப் பாய்ச்சிய போதும், அவருக்கு எதிராக சுதாகரன் ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை.
இரண்டு வாரம் முன்பு சுதாகரன் பெங்களூரு கோர்ட்டில் ஆஜர் ஆனபோது, சசிகலா மற்றும் இளவரசிக்கு நடுவில் உட்கார்ந்து பேசியதுதான் இன்றைய சசிகலா பிரச்னைக்கு ஆரம்பம் என்கிறார்கள்!
'பாஸ்’ என்ற திவாகரன்!
சசிகலாவின் தம்பி திவாகரன் மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் வசிக்கிறார். ஆரம்பத்தில் மன்னார்குடி பந்தலடியில் 'கிளைமேட்’ என்ற பெயரில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வந்தார். தற்போது செங்கமலத்தாயார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை மன்னார்குடியில் நடத்தி வருகிறார். நேரடியாக சசிகலாவிடம் போனில் பேசக்கூடிய ஒருசிலரில் இவரும் ஒருவர். டெல்டா மாவட்ட அ.தி.மு.க.வின் அதிகார மையம் என அழைக்கப்படுபவர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக மன்னார்குடியில் இருந்து நம்பகமான ஆட்களை அனுப்பி வைத்தார் திவாகரன். அன்று முதல், ஜெ-வின் அபிமானத்துக்கு உரியவர்களில் ஒருவராகிப் போனார். இவரும் கார்டனில் சில காலம் இருந்தார். பின்னர், ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், சசிகலா உறவு வட்டாரத்தில் யார் யார் போயஸ் கார்டனில் வலம் வரலாம் என அனுமானிக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவர் திவாகரன். சென்னைக்குப் போகாமலே காரியம் சாதிக்கும் ஆற்றல் பெற்றவர். இவரைக் கட்சிகாரர்கள் 'பாஸ்’ என அழைப்பார்கள். டெல்டாவில் இவர் கைகாட்டும் நபரே சட்டமன்ற வேட்பாளர் மற்றும் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்! அதனால் இவரின் வீட்டின் முன் காலையிலேயே அ.தி.மு.க கரை வேட்டிகள் திரண்டு நிற்கும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இவரின் கையே மேலோங்கி இருந்தது. முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம் கொண்ட டெல்டாவில், ஸ்ரீதர் வாண்டையாரின் பிரிவு அ.தி.மு.க-வுக்கு பின்னடைவு என கருதப்பட்ட நிலையில், மூ.மு.க-வை உடைத்து வாண்டையாரை கலங்கடித்தவர் திவாகரன். 'பணக்காரர்களை தன் அருகில் வைத்துக்கொள்வதும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தன்னுடைய விசுவாசிகளுக்கு கட்சிப் பதவி பெற்றுத் தருவதும் திவாகரனின் ராஜதந்திரம்!
திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க-வின் முன்னாள் செயலாளர் எஸ்.காமரஜுக்குத்தான் மன்னார்குடி தொகுதியில் ஸீட் கிடைக்கும் என அனைவரும் நம்பிக் கொண்டு இருந்த சூழலில், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சிவா.ராஜமாணிக்கத்தை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்து ஸீட் வாங்கித் தந்தார்.
தனது தீவிர விசுவாசியான ஆர்.காமராஜைத் தொடர்ந்து 15 வருடங்களாக திருவாரூர். மாவட்ட அ.தி.மு.க செயலாளராக நீடிக்க வைத்தவரும் திவாகரனே! அவருக்கு நன்னிலம் தொகுதிக்கு ஸீட் வாங்கிக் கொடுத்தவரும் திவாகரன்; அங்கு வெற்றி பெற்ற ஆர்.காமராஜை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக்கியதும் திவாகரனே! சசிகலா குடும்பம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதால், ஆர்.காமராஜ் பதவிக்கு வெடி காத்திருக்கிறது. இருந்தாலும், 'திரும்பவும் ஒண்ணா சேர்ந்துடுவாங்கப்பா’ என அ.தி.மு.க. கரை வேட்டிகள் கூட்டம் திவாகரன் வீட்டு வாசலில் காத்திருப்பது தொடர்கிறது.!
முதல்வர் உஷா ராகி, மன்னார் குடி வகையறா அத்தனை யையும் வாட்ச் பண்ணுகிறார் என்று தெரியாமல் போனிலும் நேரிலு மாக தன்னை தொடர்பு கொண்ட அதிகாரிகளுடன் எல்லாம் இவர் பாட் டுக்கு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்க... அப்படி பேசியவர்கள் பட்டியலை எல்லாம் தோட்டத்துக்குக் கொடுத்தது உளவுத் துறை. அந்த அதிகாரி கள் நிலைமை என்னாகுமோ, தெரியவில்லை!
'பிரமாண்டம்’ டாக்டர் வெங்கடேஷ்
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ். 'நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையின் ஆஞ்ச நேயா பிரிண்டர்ஸில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். கட்சியின் போஸ்டர்கள், புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகளை நிர்வகித்து வந்தார். அப்போது அவருக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. டாக்டர் தொழிலை சின்சியராகப் பார்க்காவிட்டாலும், டயகனஸ்டிக் சென்டர் ஒன்றைத் தனியாக நடத்தி வந்தார். இதன் திறப்பு விழாவுக்கு ஜெயலலிதாவே நேரில் சென்றார்.
தினகரன், மகாதேவன் ஆகியோர் ஓரம் கட்டப்பட்ட பிறகு, வெங்கடேஷை உள்ளே கொண்டு வந்தார் சசிகலா. மகாதேவன் வீட்டுக்கு அருகில்தான் வெங்கடேஷ் வீடும் தஞ்சாவூரில் இருந்தது. அண்ணன் தம்பிகளாக பழகி வந்தவர்கள் காலப்போக்கில் எதிரிகளாக மாறியது தனிக்கதை.
மகாதேவன் போன பிறகு தினகரன் மீண்டும் கார்டனில் கால் பதிக்க நினைத்தார். அது நடக்காமல் போனாலும் வெங்க டேஷ§க்கு ஆதரவுக் கரம் நீட்டினார். ஏனென்றால் தினகரனின் மனைவியும் ஜெயா டி.வி-யின் எம்.டி-யுமான அனுராதாவின் சகோதரர்தான் வெங்கடேஷ். இவரது திருமணத்தை நடத்தி வைத்தது, ஜெயலலிதாதான்.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என்று வெங்கடேஷின் கை ஓங்கியது. ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப் பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு மாநில செயலாளராகவும் ஆக்கப்பட்டார். வெங்கடேஷ§க்கு ஆதரவாக தினகரன், அனுராதா, கலியபெருமாள் ஆகியோரின் ஆசியும் கிடைக்கவே மளமளவென உயர்ந்தார். அவருக்குக் கட்சியில் கிடைத்த வரவேற்பு, வேறு யாருக்கும் கிடைக்காத வகையில் படுபிரமாண்டமாக இருந்தது. அதனாலோ என்னமோ இவரும் ஓரம் கட்டப்பட்டார். கடந்த சட்டசபைத் தேர்தலில் தனக்கு வேண்டியவர்களுக்கு இடம் வாங்கிக் கொடுப்பதில் இவர் கவனமாக இருந்தார். தனக்குப் பிடிக்காதவர்கள் மீது அவதூறு கிளப்பி ஒழிப்பதில் வெங்கடேஷ் கில்லாடி என்கிறார்கள். அப்படி முடக்கப்பட்டவர்களில் ஒருவர் கலைராஜன் எம்.எல்.ஏ.!
ராவணனின் ராஜ்ஜியத்திலே...
'கெட் லாஸ்ட்’ என்று ஜெயலலிதா விரட்டி அடித்திருக்கும் சசிகலா தலைமையிலான மன்னார்குடி 'நிறுவனத்தில்’ முக்கியப் புள்ளி ராவணன். கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல அ.தி.மு.க. இவரது பாக்கெட்டில்தான் இருந்தது. ''ராவணன் ராஜ்ஜியம் எப்போது, எப்படி தொடங்கியது?'' என்று ஆளுங்கட்சி புள்ளிகளிடம் விசாரித்தோம்.
''சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் மருமகன் இவர். குடும்ப விஷயங்களில் மிகவும் பற்றுதலாகவும் பண விவகாரங்களில் நேர்மையாகவும் நடந்து கொண்டதால், சசிகலா ஆசிர்வாதத்துடன் மிடாஸ் நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்புக்கு வந்தார். அதன்பிறகு நம்பிக்கையான நபராக தோட்டத் துக்குள் நுழைந்தவர்தான் ராவணன். கொடநாடுக்கு ஜெயலலிதா ஓய்வு எடுக்க வந்த நேரங்களில், சிறப்பான உபசரிப்புகள் செய்து குட்புக்கில் இடம் பிடித்தார்.
மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடைய செயல்பாடுகள் குறித்து ரிப்போர்ட் எடுத்து அம்மாவிடம் ஒப்படைப்பார். இவர் மீது வைத்த நம்பிக்கை காரணமாக, இவர் சொன்னதை அப்படியே அம்மா நம்பினார். அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராவணன், 'அம்மாவுக்குப் பிடிக்கலை’ என்று சொல்லியே, தனக்கு ஆகாத ஆட்களை எல்லாம் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். ராவணனைப் பத்தி புகார் எழுதி கார்டனுக்கு அனுப்பினால், அது நேரடியாக ராவணன் கைக்கே வந்துவிடும். புகார் எழுதினவரையே கூப்பிட்டு, அந்தத் தபாலை கையில் கொடுத்து தன்னுடைய பவரை காண்பிப்பார்.
கே.பி.ராமலிங்கம், ஆனந்தன், எடப்பாடி பழனிச் சாமி, தாமோதரன், வேலுமணி ஆகியோரை அமைச்சர் ஆக்கிக் காட்டிய ராவணன், செ.ம.வேலுசாமி, நீலகிரி மாவட்ட முன்னாள் செயலாளரான மறைந்த செல்வராஜ், ஊட்டி நகரச் செயலாளராக இருந்த கோபால கிருஷ்ணன் போன்றவர்களை விரட்டவும் செய்தார். அறிமுகமே இல்லாத புத்திசந்திரன் அமைச்சரானதும், அவர் பதவி பறிபோனதுக்கும் இவர்தான் காரணம். சண்முகவேலுவின் அமைச்சர் பதவி பறிப்பு, மலரவனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு, பொள்ளாச்சி ஜெயராமன் அமைச்சர் ஆகமுடியாமல் போனது எல்லாமே ராவணன் மகிமைதான்.
எந்த ஒரு எம்.எல்.ஏ-வும் தன்னுடைய தொகுதிக்கு சுயமா ஒரு திட்டத்தைக் கொடுக்க முடியாது. அத்தனையும் ராவணனோட கவனத்துக்கு வந்து, அவர் சொல்லக்கூடிய கான்ட்ராக்டர் வழியாத்தான் செயல்பாட்டுக்கு போக முடியும்.
சசிகலா டீமில் முதன்முதலில் அம்மாவோட கோபத்துக்கு ஆளானது ராவணன்தான். அம்மா வின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் அத்தனை அமைச்சர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது ராவணனின் பழக்கம். அதில் செங்கோட்டையன் மட்டும் கட்டுப்படாமல் இருந்தார். அதன் விளைவுதான் வேளாண்மைத் துறை அமைச்சராகவும் அதுக்குப் பிறகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் டம்மி யாக்கப்பட்டார்.
அதனால் ராவணன் மீது பெரும் ஆதங்கத்தில் இருந்த செங்கோட்டையனுக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அம்மாவிடம் மனம் விட்டுப் பேசும் ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைத்ததாம். அப்போது, ராவணன் சொத்து விவகாரங்களும் கட்சியில் அவரது பிடியும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டதாம். அதன் விளைவாகத்தான் ராவணன் வெளிநாடு போயிருந்த நேரத்தில், அறிவிக்கப்படாத ரெய்டு அவர் வீட்டில் நடந்தி ருக்கிறது. (இதை அப்போதே கழுகார் பகுதியில் சொல்லி இருந்தோம்!)
கிடைத்த தகவல்களைக் கண்டு அதிர்ந்துபோன அம்மா, ராவணனையும் சசியையும் அழைத்து இது பற்றி விசாரணை நடத்தினார். சசிகலா தலை குனிந்து அமைதியாக நிற்க, ராவணன் ஏதோ விளக்கம் கொடுக்க முன் வந்தாராம். உடனே டென்ஷனான அம்மா, ' போன ஆட்சியில மணல் எடுத்தவனே இப்பவும் பிசினஸ் பண்றான். கேட்டா, 'ராவணன் சாருக்கு தெரியும்னு’னு பதில் வருது. என்ன நடக்குது?’னு சீறியிருக்காங்க. அப்பவே ராவணனுக்கு நிலைமை புரிஞ்சுடுச்சாம். இப்போ நடந்திருக்கிறது நல்ல விஷயம். ஆனா, அவர் ரீ-என்ட்ரி ஆகாம இருந்தாத்தான் கட்சிக்காரங்க சந்தோஷம் நிலைக்கும்'' என்று சொன்னார்கள்.
உஷார் ராமச்சந்திரன்...
எம்.நடராஜனின் சகோதரர்தான் எம்.ராமச் சந்திரன். 'சசிகலா போயஸ் கார்டனில் இருந்தாலும் கணவர் நடராஜனோடு தொடர்பில்தான் இருந்தார். அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையே தூதுவர் இவர்தான்’ என்கிறார்கள்.
கார்டனுக்குள் அவர் கால் பதித்ததும், கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் தரும் மனுவைப் பரிசீலிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா கொடநாடு தங்குவதாக இருந்தால், ஒரு வாரத்துக்கு முன்னரே போய் தயார் செய்வது இவர் பணி.
சென்னை மயிலாப்பூர் ராஜரா ஜேஸ்வரி திருமண மண்டபத்துக்கு எதிரே இருக்கும் ஜே.பி. அவென்யூவில்தான் ராமசந்திரனுக்கு வீடு. அந்த அப்பார்ட்மெண்டில் தனக்காக தனியாக ஒரு லிப்ஃட் அமைத்திருந்தார் ராமச்சந்திரன். அந்த லிப்டில் யார் ஏறினாலும் அது ராமச்சந்திரன் வீடு இருக்கும் ஃபுளோரில்தான் நிற்கும். வெளிநாடுகளில் இருப்பது போலவே, லிப்ஃட்டைப் பயன்படுத்த ஆக்சஸ் கார்டு அமல்படுத்தப்பட்டது. அந்த அளவுக்கு டெக்னிக்கல் திறமையும், உஷார்தனமும் நிரம்பியவர்.
கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு போன்றவற்றில் ராமச்சந்திரன் கை ஓங்கியிருந்தது. பேச்சுவார்த்தை நடந்து கொண் டிருக்கும் போதே தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியல் வெளியான விவகாரத்துக்குப் பின்னாலும் இவருடைய கைங்கரியம் இருந்ததாம். எம்.நடராஜனை எப்படி 'எம்.என்’ என்று அழைக்கிறார்களோ அது போல ராமச்சந்திரனை அ.தி.மு.க-வினர் 'எம்.ஆர்’ என்றுதான் விளிக்கிறார்கள்.
'கார்டன் மாப்பிள்ளை’ ராஜராஜன்
1990-வாக்கில் இளவரசியின் கணவர் ஜெயராமன் ஹைதரா பாத்தில் பங்களா கட்டும் பணியை மேற்பார்வையிடும்போது மின்சாரம் தாக்கி இறந்தார். அதன்பிறகு, இளவரசி, அவரது இரண்டு மகள், ஒரு மகனுக்கும் ஜெயலலிதாதான் ஆதரவாக இருந்தார். போயஸ் கார்ட னிலேயே வளர்ந்த இளவரசியின் இரண்டாவது மகள் சகீலாவை 2001-ம் ஆண்டு சமயபுரம் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டவர்தான், ராஜராஜன். தஞ்சை மாவட்டம், நடுக்காவேரி என்கிற ஊரைச் சேர்ந்த பழனிராஜன் என்பவரின் இரண்டாவது மகன். சிவந்த நிறம். கூலிங் கிளாஸ். குறுந்தாடி இவை மூன்றும்தான் அவரது அடையாளம்.
திருமணம் முடித்த கையோடு சிங்கப்பூர் சென்று தொழில் செய்து வந்த ராஜராஜன், கடந்த ஒரு வருடம் முன்புதான் சென்னைக்குத் திரும்பினார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓடியாடி வேலை செய்த நேரத்தில் கட்சியினருக்கு அறிமுகம். திருச்சி மேற்கு இடைத்தேர்தல் நடந்தபோது, தலைக்கு 15 லட்சம் வீதம் மந்திரிகளிடம் வசூல் பண்ணி நிலைமையை சமாளித்து, வெற்றிக் கொடி கட்டியதால் போயஸ் கார்டனில் பவர்ஃபுல் மனிதராகிப் போனார். சமீபத்தில், பெங்களூரு கோர்ட்டுக்கு சசிகலா, இளவரசி சென்ற நேரத்தில் இவர்தான் ஒத்தாசைக்குச் சென்றார். தி.நகர் பத்மநாபா தெருவில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார்.
தடாலடி மகாதேவன்
'இவரைப் புரிஞ்சுக்கவே முடிய லப்பா!’ எனக் கட்சிக்காரர்களையே புலம்ப வைப்பவர் மகாதேவன். சசிகலாவின் அண்ணன் விநோதகன் மகன்தான் இவர். ''தன்னைப் பார்க்க வருபவர்கள் முன் துப்பாக்கி வைத்து பேசுவது, வீட்டிற்கு வருபவர்கள் கால் கழுவி விட்டுத்தான் உள்ளே வர வேண்டும் என சொல்வது என இவரின் தடாலடி குறும்புகள் அதிகம்'' என்கிறார்கள் இவரைச் சந்தித்துத் திரும்பியவர்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போயஸ் கார்டனில் அதிகாரத்தோடு வலம் வந்தவர். ஆடிட்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமே அவரது தைரியத்துக்கு சாட்சி என்பார்கள் மன்னார்குடி ஆட்கள். அதிரடி சேட்டைகள் அதிகமாகவே போயஸில் இருந்து துரத்தப்பட்டார். 'இனி கட்சிக்காரர்கள் யாரும் மகாதேவ னோடு தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். ஆனால், அதைப்பற்றி மகாதேவனும் கவலைப்படவில்லை. கட்சிக்காரர்களும் கண்டுகொள்ள வில்லை. 'எனக்கு சசி அத்தை துணை இருக்கிறார்’ என சொல்லிக் கொண்டிருந்தார். அதுபோலவே, அடுத்த சில வருடங்களிலேயே ஜெ. பேரவைக்கு மாநிலச் செயலாளர் ஆனார்.
தஞ்சாவூரில் விநோதகன் மருத்துவ மனை, டி.வி.எம். பேருந்துகள்.. ஆகியவை இவருக்கு சொந்தமான உள்ளன. அதிக ஆன்மீக ஈடுபாடு உண்டு. நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருக்கிறார். யாருமே இவரை எளிதில் அணுக முடியாது. எப்போதாவது சென்னைக்குச் சென்று சசிகலாவைச் சந்திப்பது உண்டு. திவாகரனுக்கு அடுத்து தஞ்சாவூரில் செல்வாக்குடன் இருப்பவர். இவருக்கும் தமிழக நகர்புறம் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கத்துக்கும் ஆகாது. அதனால் அவருக்கு ஏதாவது குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார் என்கிறார்கள். தஞ்சாவூர் நகராட்சித் தேர்தலில் தன் ஆதரவாளர்கள் சிலருக்குக் கவுன்சிலர் சீட் வாங்கிகொடுத்ததோடு, நிறுத்திக் கொண்டார். இப்போதைய அ.தி.மு.க ஆட்சியில், அடக்கியே வாசித்து வருகிறார். 'கட்சிப் பொறுப்பு களுக்கோ, டெண்டர் விஷயமாகவோ இங்கே யாரும் வரவேண்டாம்’ எனச் சொல்லி இருந்தாராம். தன்னுடைய தம்பி தங்கமணியையும் அடக்கி வாசிக்கச் சொல்லி இருக்கிறார். அதனால்தான், முதலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பட்டிய லில் மகாதேவன் பெயர் இல்லை. என்ன நடந்ததோ அடுத்த சில மணி நேரத்தில் மகாதேவன், தங்கமணி பெயரும் பட்டியலில் இடம் பெற்றது.
தலைகாட்டாத கலியபெருமாள்
அ.தி.மு.க-வின் அறிவிக்கப்படாத மத்திய மண்டலப் பொறுப்பாளராக இயங்கிக் கொண்டிருந்தவர் கலிய பெருமாள். இவர், சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தி. திருச்சி கே.கே.நகர் பகுதியில் வசிக்கும் இவர், ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர். திருச்சியில் முக்கியப் பதவிகளில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பலரும் இவரது சிபாரின் பேரில் உச்சத்துக்கு வந்தவர்கள்தானாம்.
கலியபெருமாள் பொது இடங்களில் அதிகம் தென்படுவது இல்லை. அதேபோலவே தனது வீட்டுக்கு கட்சிக்கொடி தாங்கிய வாகனங்கள், கரை வேட்டி, துண்டு அணிந்த நபர்கள் வருவதையும் விரும்ப மாட்டார். நம்பிக்கையான போலீஸ் அதிகாரி மூலம் கட்சி ஆட்களை உளவு பார்ப்பது, அவர்களுக்கு வருமானம் வரும் வழிகளைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றார் போல் பணிகளை கச்சிதமாகச் செய்து வந்தாராம்.
தடாலடி தங்கமணி
சசிகலாவுடன் நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் கடைசி இடம் பிடித்தவர் தங்கமணி. சசிகலாவின் அண்ணன் விநோதகனின் இளைய மகன். மகாதேவனின் தம்பி. தஞ்சாவூரில் தன் அம்மாவுடன் வசித்து வரும் தங்கமணி, இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கட்சி ஆட்களுடன் உலா போவது, நேரடியாக கட்சி விவகாரத்தில் தலையிடுவது ஆகியவை இவருக்குப் பிடிப்பது இல்லை. தஞ்சாவூர் பகுதிகளில் தன் முன்னால் கொண்டுவரப்படும் பஞ்சாயத்துகளை மட்டும் செய்து, தன் தடாலடி அதிகாரத்தைக் காட்டிக்கொள்வார். இந்த முறை அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகும், 'எங்கே தங்கமணி?’ என கட்சிக்காரர்களே கேட்கும் அளவுக்கு பதுங்கித்தான் இருந்தார். சசிகலா புயலில் இவரும் சிக்கி, வெளியே தள்ளப்பட்டு விட்டார்.
'பாதுகாப்பு’ பழனிவேலு
நடராஜனின் சகோதரர்தான் பழனிவேலு. சசிகலா உட்பட 14 பேர் அதிரடியாக நீக்கப்பட்ட 4வது நாள், பழனிவேலுவையும் கட்டம் கட்டினார் ஜெயலலிதா. போலீஸ் துறையில் வேலை பார்த்த பழனிவேலுவை, 1991-ல் ஜெயலலிதா முதல்வரானதும், அவருடைய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துக் கொண்டார். இதன் பிறகே இவர் மீது வெளிச்சம் படர்ந்தது. அதன்பிறகு இவருடைய நடவடிக்கை வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும், உள்ளுக்குள்ளே காய்களை நகர்த்தி வந்தாராம். எம்.என்., எம்.ஆர். போல இவரை 'எம்.பி.’ என்றே அழைக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
மர்ம மோகன்!
சசிகலா குடும்பத்திற்கு வேண்டப்பட்டவர்களால் நடத்தப்படும் மிடாஸ் நிறுவனத்துக்கும், 'மிடாஸ்’ மோகனுக்கும் என்ன தொடர்பு என்று ஆதாரங்களைத் தேடினால் கண்டிப்பாக கிடைக்காது. ஆனால், அடைமொழியில் மட்டும் மிடாஸ் இருக்கும். எந்த ஒரு விவகாரமானாலும், திரைமறைவில்தான் இயங்குவார். சசிகலாவின் உறவு முறைக்குள் வராதவர். மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்றாலும் வேறு ஒரு சமுதாயத்தவர். இவரை, 'அடையார்’ மோகன் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் அழைக்கிறார்கள்.
தென் சென்னையில் சுமார் 45 பார்கள் நடப்பது இவர் கண் அசைவில்தான். எந்த விவகாரமானலும், மிடாஸ் மோகனின் வலது, இடது கரங்களாக விளங் கும் இருவர்தான் தலையிடுவார்கள். வலதுகரம் - வடபழனி பஸ் நிலையம் எதிரில் ஒரு ஆபீஸ் நடத்தி வருகிறார். டவுன் பஸ்ஸில் போய்க்கொண்டு இருந்தவர் இன்று விமானத்தில் பறக்கிறார். ஒரு முறை சசிகலா தன்னிடம் இருந்த ஃபோர்டு ஐகான் காரை இவருக்கு விற்றார். அ.தி.மு.க. பிரமுர்களிடம் அந்தக் காரை காட்டி, 'சின்னம்மாவே எனக்குக் கொடுத்தார்' என்று பிளேட்டை மாற்றி தனது இமேஜை உயர்த்திக்கொண்டவர். அரசு வக்கீல் நியமனம், போலீஸ் டிரான்ஸ்ஃபர், கட்சிப் பதவி, உள்ளாட்சிப் பதவி என்று ஒவ்வொன்றுக்கும் இவரது தலையீடு உண்டாம்.
'மிடாஸ்’ மோகனின் இடதுகரம் - முன்னாள் அமைச்சரின் பி.ஏ. ஒருவராம். அரசாங்க ஃபைல்களை நுணுக்கமாக டீல் பண்ணும் விஷயத்தில் படு கில்லாடி. தற்போதைய மந்திரி களில் மூன்று பேர்களுக்கு அறிவிக்கப்படாத பி.ஏ-வாக இவர் செயல்படுகிறார். கடந்த சில மாதங்களாகவே 'மிடாஸ்’ மோகன் மற்றும் அவரது வலது, இடதுகளின் செயல்பாடுகள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகின்றனவாம்.
கில்லாடி குலோத்துங்கன்
'மிடாஸ்’ நிறுவனத்தின் உயர் அதிகாரி. எம். நடராஜனின் சகோதரி மகன் இவர். தற்போது தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்காக சுமார் 10 மதுபான தொழிற்சாலைகளிடம் இருந்து சரக்குகளை வாங்குகின்றனர். இதில் நம்பர் 1 மிடாஸ் நிறுவனம்தான். இப்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து டாஸ்மாக் வாங்கிய கொள்முதல் வழக்கத்தைவிட கன்னாபின்னாவென்று அதிகமாம். இதனால் மற்ற நிறுவனங்கள் அடைந்த வயிற்றெரிச்சல் கொஞ் சநஞ்சமல்ல என்கிறார்கள். தன்னை மறைத்துக் கொண்டு வேலை செய்வதில் பலே கில்லாடியாம்.

ஒழிந்ததா மன்னார்குடி மாஃபியா ?







வாழ்த்துக்கள்...... ஜெயலலிதா என்றுதான் இந்தக் கட்டுரையை தொடங்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் அப்படித் தொடங்குவதற்கு பெரும் தயக்கம் வருவதற்கு காரணம், கடந்த கால வரலாறு. நடராஜன் நீக்கம், தினகரன் நீக்கம் என்று போயஸ் தோட்டத்திலிருந்து பல அறிவிப்புகள் வந்திருக்கின்றன. அவை நீர்த்துப் போய் வெறும் அறிவிப்புகளாகவே நின்று விட்டது வரலாறு. காலப்போக்கில், நடராஜன் போன்றவர்கள் மீண்டும் அதிகார மையங்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
sasi1
சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்குமான நட்பு 1982ம் ஆண்டில் தொடங்கியது. சசிகலாவின் கணவர் நடராஜன் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அப்போது அவருக்கு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சந்திரலேகாவோடு இருந்த நட்பின் அடிப்படையில் தனது மனைவியையும் அறிமுகப் படுத்துகிறார். ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, எம்ஜிஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அதிமுகவில் எம்ஜிஆரால் கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிவிக்கப் பட்டிருந்தாலும், தற்போது இருப்பது போல ஜெயலலிதாவுக்கு பிசியான வாழ்க்கை இல்லை என்பதால், வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விடும் கடையை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவிடம் தனது வீட்டுக்கு தினமும் வீடியோ கேசட்டுகளை வழங்கச் சொல்கிறார்.

தினந்தோறும் வீடியோ கேசட்டுகளை சசிகலாக வழங்கி வரும்போது, ஜெயலலிதாவுடனான நட்பு சசிகலாவுக்கு நெருக்கமாகிறது. எம்.ஜி.ஆர் மறைவை ஒட்டி, ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பன் மற்றும், எம்.ஜி.ஆர் உறவினர்களால் அவமானப்படுத்தப் பட்ட நேரத்தில் சசிகலா, ஜெயலலிதாவுக்கு மிகுந்த ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்த போதுதான், ஜெயலலிதாவுக்கு உண்மையான அரசியல் என்றால் என்ன என்பது புரிகிறது. அப்போதைய சூழ்நிலையில், 1989 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தன்னுடைய அணிக்காக சேவல் சின்னத்தில் போட்டியிடும் அணிகளுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது சசிகலா ஜெயலலிதா கூடவே இருந்து பல உதவிகளைச் செய்கிறார். இதையடுத்து இவர்களின் நட்பு பலப்படுகிறது.

1991ல் ராஜீவ் காந்தி மரணத்தை அடுத்து ஏற்பட்ட அனுதாப அலையில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி மிகப் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடிக்கிறது. அது வரை தனது கணவர் நடராஜனோடு, பெசன்ட் நகர் இல்லத்தில் வாழ்ந்து கொண்டு அவ்வப்போது போயஸ் தோட்டத்துக்கு வந்து செல்லும் சசிகலா, ஒரேயடியாக போயஸ் தோட்டத்துக்கு வந்து விடுகிறார். அப்போதெல்லாம் நடராஜன், அதிமுகவில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது, தான் வைத்ததே சட்டம் என்றெல்லாம் மார்தட்டிக் கொண்டிருந்த போது, ஜெயலலிதா, சசிகலாவின் சம்மதத்தோடு, நடராஜன் கட்சியிலிருந்து நீக்கப் படுகிறார், அவரோடு கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டார்.
thirumalaisamy
சசிகலாவின் குடும்பத்தை எடுத்துக் கொண்டால், அது கருணாநிதியை விட மிகப் பெரிய ஆக்டோபஸ் குடும்பம்.

சசிகலாவோடு பிறந்தவர்களில் முதலாமவர் சுந்தரவதனம். இவரது மனைவி பெயர் சந்தானலட்சுமி. இவர்களது மகள் அனுராதாதான் தற்போது ஜெயாடிவியை நிர்வகித்து வருகிறார். இவர்களின் மற்றொரு மகன் தான் டாக்டர்.வெங்கடேஷ்.

சுந்தவரதனத்துக்கு அடுத்தவர் சமீபத்தில் காலமான வனிதாமணி. இவரது கணவர் விவேகானந்தன். இந்தத் தம்பதிக்குப் பிறந்தவர்கள்தான் டிடிவி.தினகரன், வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் டிடிவி.பாஸ்கரன். இவர்கள் கரன் சகோதரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். வளர்ப்பு மகன் சுதாகரனை ஜெயலலிதா விலக்கி வைத்து, அவர் மீது ஹெராயின் வழக்கு போட்ட போது, இந்த வனிதாமணி சென்னை வந்து ஜெயலலிதாவிடம் கடுமையான சண்டையிட்டிருக்கிறார். நீங்கள் கேட்டீர்கள் என்றுதான் சுதாகரனை வளர்ப்பு மகனாக எடுத்துக் கொள்ள சம்மதித்தேன், இப்போது இப்படிச் செய்தால் என்ன அர்த்தம் என்று கடுமையாக சண்டையிட்டிருக்கிறார். கோபமடைந்த ஜெயலலிதா, இனி என் முகத்தில் விழிக்காதீர்கள் என்று சொல்லி வனிதாமணியை அனுப்பி விட்டார். இதனால்தான் ஜெயலலிதா, வனிதாமணி மரணத்துக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இவர்களது மற்றொரு மகனான டிடிவி.தினகரன், இவர்களது தாய் மாமன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை திருமணம் செய்துள்ளார்.

வனிதாமணிக்கு அடுத்த சகோதரர் வினோதகன். மகாதேவன் என்பவர் இவரது வாரிசு என்று கூறப்படுகிறது.

இந்த வினோதகனுக்கு அடுத்த சகோதரர் ஜெயராமன். இவரது மனைவிதான் இளவரசி. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உண்டு.

இவர்களுக்கு அடுத்தவர்தான் சசிகலா. இவரது கணவர் நடராஜன். நடராஜனின் தம்பி ராமச்சந்திரன்.

சசிகலாவுக்கும் அடுத்த சகோதரர் திவாகரன். இவர் மன்னார்குடியிலேயே இருக்கிறார்.

இது சசிகலாவோடு பிறந்தவர்களைப் பற்றிய விபரம். (இதைக் கண்டுபிடிப்பதற்குள்ளேயே போதும் போதும் என்றாகி விட்டது) இது போக, மன்னார்குடியைச் சேர்ந்த, சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் சசிகலாவின் உறவினர்கள் என்று சொல்லிக் கொள்வது, அதிமுக ஆட்சியின் சோகங்களில் ஒன்று.

1991ல் போயஸ் தோட்டத்துக்கு குடிபெயர்ந்த சசிகலா மற்றும் அவர் உறவினர்களின் அராஜகத்தை அன்றைய தமிழகம் வேதனையோடு பார்த்தது. 1991-1996 ஆட்சி காலத்தில் சசிகலாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. அப்போதுதான் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி ரவுடிகளை விட்டு அடிக்கும் கலாச்சாரம் வளர்ந்தது. இந்த ஆட்டோ கலாச்சாரத்தையும் ரவுடிகளின் கூட்டத்தையும் பராமரித்துப் பேணிக் காத்தவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் மற்றும் மதுசூதனன். சசிகலா குடும்பத்தின் பேராசை எப்படி இருந்தது என்றால், சென்னை நகரில் அழகாக இருக்கும் கட்டிடங்களை பார்த்துப் பார்த்து, அதன் உரிமையாளர்களை மிரட்டி விலைக்கு வாங்குவார்கள். இந்த மிரட்டலுக்கு பிரபல இயக்குநர் பாரதிராஜாவும் தப்பவில்லை. பாரதிராஜாவும், அமிர்தாஞ்சன் நிறுவன உரிமையாளர் பந்துலுவின் குடும்பமும் சசிகலாவால் மிரட்டப் பட்டனர்.

தனக்கென்று சொந்தமாக ஒரு குடும்பம் இல்லாத ஜெயலலிதா, எனக்கென்று குடும்பமும், அதற்கு ஒரு வாரிசும் இருந்தால், அந்த வாரிசின் திருமணத்தை இப்படித்தான் நடத்துவேன் என்று இந்த சமூகத்துக்கு பறைசாற்றும் விதமாக வனிதாமணியின் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். நடிகர் திலகம் சிவாஜியின் மகளை பெண் கேட்டு, அந்தத் திருமணம் வெகு தடபுடலாக நடைபெற்றது. அந்த காலத்திலேயே 100 கோடி ரூபாய் திருமணம் என்று இந்தத் திருமணம் அழைக்கப் பட்டது.
jaya_sasi_weddig_jp_868559g
சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தால், அப்போது அதிமுகவிலிருந்து ராஜாராம், எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற எம்ஜிஆர் காலத்து அதிமுகவினர் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தனர். சசிகலா குடும்பத்தின் இந்த அராஜகம் தலைவிரித்து ஆடத் தொடங்கி வெகுஜன மக்கள் மத்தியில் அதிமுக ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஆனாலும், இது எதைப்பற்றியும் ஜெயலலிதா கவலைப்படாமல், தனது உடன்பிறவா சகோதரியோடு உற்ற துணையாக நின்றார்.
1991 முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போதுதான் சசிகலாவின் ஆதிக்கம் எத்தகையது என்பதை தமிழகம் உணர்ந்தது. முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, சபாநாயகராக சேடப்பட்டி முத்தையா தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்த சபாநாயகரின் இருக்கையில், சசிகலாவை அமர வைத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா, சசிகலா முன்னிலையில் சேடப்பட்டி முத்தையா சாஷ்டாங்கமாக காலில் விழுந்து தனது விசுவாசத்தைப் பறைசாற்றினார்.
IN19_JAYA_SASI_OPS_868555g
1992ம் ஆண்டு நடந்த மகாமகத் திருவிழாவில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வருகையால் நடந்த நெறிசலில் 48 அப்பாவி மக்கள் பலியானார்கள். ஆனால் இது எதுவுமே ஜெயலலிதா-சசிகலா நட்புக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
magamagam-1
magamagam01
1996ல் நடந்த தேர்தலில், மிக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது அதிமுக. அந்தத் தேர்தல் தோல்வி, ஜெயலலிதாவுக்கு முதன் முறையாக, தன் உடன் பிறவா சகோதரியால் இந்தத் தோல்வி என்பதை உணர வைத்தது. போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து சசிகலாவை வெளியேற்றினார் ஜெயலலிதா. இது குறித்த வெளிப்படையான அறிவிப்பையும் வெளியிட்டார்.

ஒரே மாதத்தில் சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு வந்தார். சசிகலா போயஸ் தோட்டத்துக்கு வருகை தரும் போது, ஜெயலலிதா வாசலில் வந்து நின்று, கேசரி கொடுத்து சசிகலாவை வரவேற்றார். வெளியேற்றி விட்டு, மீண்டும் சசிகலாவை ஜெயலலிதா இணைத்துக் கொண்டது, சசிகலாவுக்கு, நாம் இல்லாவிட்டால், ஜெயலலிதா இல்லை என்ற ஆணவத்தைக் கொடுத்தது.
19VBG_SASIKALA_868561g
2001ல் ஜெயலலிதா, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. அப்போது ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் கிடைத்திருந்த தண்டனையால், அவர் நீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. ஜெயலலிதாவுக்கு பதிலாக வேறு யாரை முதல்வராக நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்த போது, மூத்த தலைவர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் மற்றும் லால்குடி தொகுதியைச் சேர்ந்த ஒரு பெண் எம்எல்ஏ (பெயர் நினைவில்லை) ஆகிய இருவர் பெயர் ஜெயலலிதாவால் இறுதி செய்யப் பட்டது. ஆனால் மன்னார்குடி மாபியாவின் யோசனைப்படி, ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வரானார். பன்னீர்செல்வம், தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மன்னார்குடி குடும்பத்துக்கு விசுவாசமான அடிமையாக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
Augu---24-f
அந்த காலகட்டத்திலும், மன்னார்குடி ராஜ்யம் கோலோச்சிக் கொண்டிருந்த போதுதான், அந்த மாபியாவுக்குள்ளாகவே உள்மோதல்கள் துவங்கின. தினகரனுக்கும் மகாதேவனுக்கும் மோதல். டாக்டர்.வெங்கடேஷ் என்ற புதிய நபர் தலைதூக்கினார். இப்படியான உள்மோதல்களுடன், அந்த ஆட்சியும், அப்போது எடுக்கப் பட்ட தொடர்ச்சியான மக்கள் விரோத நடவடிக்கைகளால் 2006 தேர்தலில் மண்ணைக் கவ்வியது.

சரி ஆட்சியில்தான் இப்படி. கட்சியில் மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் உள்ளதா என்றால், மன்னார்குடி மாபியாதான் கட்சியையே நடத்தும். மன்னார்குடி மாபியா தேர்ந்தெடுக்கும் நபர்கள்தான் மாவட்டச் செயலாளர்களாக முடியும். அதிமுகவில் பல ஆண்டுகாலம் இருக்கும் தலைவர்களையெல்லாம் விட்டு விட்டு, 2007ல் தொடங்கப் பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு, நேற்றைக்கு முளைத்த காளானான டாக்டர்.வெங்கடேஷை தலைவராக்கியதே, மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்துக்கு ஒரு நல்ல உதாரணம்.
DSC02875
டாக்டர் வெங்கடேஷ்
2011 தேர்தல் கூட்டணி குறித்து மற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, ஜெயா டிவியில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப் பட்டது. அப்படி அறிவிக்கப் பட்ட பட்டியலில், கூட்டணிக் கட்சிகள் பல ஆண்டுகளாக வென்று வந்த தொகுதிகளும் அடக்கம். கட்சியில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்துக்கு ஒரு உதாரணம் இது. பட்டியல் வெளியானதும், கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி, மூன்றாவது அணி அமைக்கலாமா என்ற முடிவுக்கு சென்றன.
2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெறாமல் போயிருந்தால், அவரது அரசியல் எதிர்காலமே முடிவுக்கு வந்திருக்கும். அப்படி இருந்தும், அந்தத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில், பணத்தை வாங்கிக் கொண்டு, இப்படி ஒரு குளறுபடியைச் செய்யத் துணிந்தது மன்னார்குடி மாபியா. ஆனாலும் ஜெயலலிதா பொறுமையாகவே இருந்தார்.
2011ல், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்த மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் எல்லை மீறியது. பதவிக்கு வந்த நாள் முதலாகவே வசூல் வேட்டை கொடி கட்டிப் பறந்தது. அமைச்சர்கள் நியமனமாகட்டும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனமாகட்டும்… மன்னார்குடி மாபியா வைத்ததே சட்டம் என்று ஆனது.
IN19_JAYA_SASI_868554g
பூ ஒன்று புயலானதே !!!
திமுக ஆட்சியில் நடைபெற்று வந்த மணற்கொள்ளை அதிமுக ஆட்சியில் அப்படியே தொடர்ந்து நடைபெற்றது. சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை, கடந்த திமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக்குக்கு 5 சதவிகித மதுபானங்களை சப்ளை செய்து வந்தது. இந்த சதவிகிதம், தற்போது 35 சதவிகிதமாக அதிகரித்தது. சசிகலாவின் கட்டளைகளை கச்சிதமாக நிறைவேற்ற, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் துறை என்று ஒரு துறை உருவாக்கப் பட்டு, அந்தத் துறைக்கு பன்னீர்செல்வம் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப் பட்டார். இந்த பன்னீர்செல்வம், தற்போது பணியில் உள்ள தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர்களை விட, அதிக அதிகாரம பொருந்தியவராக மாறினார். அமைச்சர்கள் நாள்தோறும், இவர் அறைக்குச் சென்று இவரது ஆசியைப் பெறுவது வழக்கமான ஒன்றாக மாறியது. ஜெயலலிதாவிடம் 15 ஆண்டுகளாக இருந்த பாதுகாப்பு அதிகாரி திருமலைச் சாமி, சசிகலாவின் ஏவலாளாக மாறி, அவர்கள் சார்பாக கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த ஆட்சி காலத்தில் மிக முக்கிய பதவியான சென்னை மாநகர கமிஷனராக இருந்த கண்ணாயிரம், மாநிலத்தின் மிக முக்கியப் பதவியான உளவுத்துறையின் கூடுதல் டிஜிபியாக்கப் பட்டார்.

தற்போது ஜெயலலிதா பதவியேற்றதும் ஏற்பட்ட ஒரு பிரத்யேகமான பிரச்சினை, பெங்களுரு வழக்கு. இந்த பெங்களுரு வழக்கு சாட்சிகள் விசாரணை முடிந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை கேள்வி கேட்கும் நிலையை அடைந்துள்ளது. இனி இந்த வழக்கை காலம் தாழ்த்த முடியாத ஒரு நிலையில், ஜெயலலிதா ஒரு இக்கட்டான நிலையில் உள்ளார்.

இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, சசிகலாவின் கணவர் நடராஜன் தான் முதல்வராக முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. சவுக்கு இது குறித்த கட்டுரையை, ஏன் இப்படிச் செய்தீர்கள் கண்ணாயிரம் என்ற தலைப்பில் அக்டோபர் 16 அன்று வெளியிட்டிருந்தது. அப்போது அந்தக் கட்டுரைக்கு பின்னூட்டம் இட்ட பல அன்பர்கள், இதற்கு சாத்தியம் இல்லை என்று தெரிவித்திருந்தனர்.
DSC_4882
ஆனால், சட்டமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்டு, ஆட்சி அமைக்கும் போது சிக்கல்கல்கள் ஏற்படும் சூழலில், எம்.எல்.ஏக்கள் எப்படி கட்சி மாறுவார்கள் என்பது, கோவா, பெங்களுரு, உத்தரப்பிரதேசம், எம்ஜிஆர் இறந்த பிறகு, தமிழ்நாட்டில் ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்களை கூர்ந்து நோக்குபவர்களுக்கு நன்கு தெரியும். ஜெயலலிதாவுக்கு ஒரு வேளை பெங்களுரு வழக்கில் தண்டனை கிடைத்து விட்டால், அவர் மேல்முறையீடு செய்து, விடுதலை பெற்று வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். மீதம் உள்ள நான்கரை ஆண்டுகளுக்கு பதவியை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதில்தான் எம்எல்ஏக்கள் கவனம் செலுத்துவார்களே ஒழிய, ஜெயலலிதாவுக்கு நிச்சயம் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு எம்எல்ஏவும், பல கோடிகளை செலவழித்து எம்எல்ஏக்கள் ஆகிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

இந்த வழக்கின் முடிவை எதிர்நோக்கி, நடராஜன் வகுத்த சதித்திட்டத்திற்கு சசிகலா பக்கபலமாக இருந்ததாகத் தெரிகிறது. கடந்த வாரத்தில் பெங்களுரில், ஒரு ரகசியக் கூட்டம் நடந்ததாகவும், அந்தக் கூட்டத்தில், சசிகலா விலக்கி வைக்கப் பட்ட வளர்ப்பு மகன் சுதாகரனும், நடராஜனும், வேறு சில முக்கியப் புள்ளிகளும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவால் பழிவாங்கப் பட்ட சுதாகரன், எப்படியாவது, முதலமைச்சர் பதவியில் நடராஜனை அமர வைக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இளவரசி, இந்தத் தகவல்களை ஜெயலலிதாவிடம் சொல்லியிருப்பதாகவும் தெரிகிறது.
24
சசிகலாவுக்கு முன்னால் இருப்பவர்தான் இளவரசி
இதையடுத்தே, ஜெயலலிதா அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

கண்ணாயிரம் உளவுத்துறையிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டதும், பொன்மாணிக்கவேலை அந்தப் பதவிக்கு கொண்டு வந்ததும் சசிகலாதான். பொன்.மாணிக்கவேல் அப்புறப்படுத்தப் பட்டதும், அந்தப் பதவிக்கு தாமரைக்கண்ணனை கொண்டு வந்ததும் சசிகலாதான். முக்கியமான பதவிகளில், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த, தங்களுக்கு விசுவாசமான அதிகாரிகளை தொடர்ந்து நியமித்து வருவது, தன்னைச் சுற்றிப் பின்னப்படும் சதிவலையின் வெளிப்பாடே என்பதை ஜெயலலிதா நன்கு உணர்ந்து கொண்டதாலேயே இந்த அதிரடி நடவடிக்கை என்று போயஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

பரவலாக கூறப்படும் ஒரு கருத்து, ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையும் ஒரு கண்துடைப்பு நாடகமே என்பது. மேலும், பெங்களுரு வழக்கில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஜெயலலிதா இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என்றும் ஒரு தகவல் சொல்லப் படுகிறது. பெங்களுரு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நிலையில், தற்போது ஜெயலலிதா, சசிகலாவிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்வதால், சட்டரீதியாக எந்தப் பலனும் ஜெயலலிதாவுக்கு கிடைக்கப் போவதில்லை.
sasi3
இதை நாடகம் என்று ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும் கூட, சசிகலாவோடு சேர்த்து, எம். நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி. பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ். வெங்கடேஷ், எம். ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி. மகாதேவன், தங்கமணி ஆகியோரை ஜெயலலிதா நீக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.

அப்படியே இதை நாடகமாக எடுத்துக் கொண்டாலும், இந்த மன்னார்குடி மாபியா, மீண்டும் இது போன்ற அராஜகத்தை ஏற்படுத்த அஞ்சுவார்கள். மேலும் ஜெயலலிதாவின் குணாதிசயத்தை அறிந்தவர்கள், ஜெயலலிதா எந்த எல்லைக்கும் செல்லத் தயங்கமாட்டார் என்பதை நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். நம் எல்லாரையும் விட, ஜெயலலிதாவின் குணங்கள், மன்னார்குடி மாபியாவுக்கு நன்றாகவே தெரியும்.
19IN_JAYA_SASI_868551g
IN19_JAYA_IN_SUCEND_868553g
மக்கள் ஜெயலலிதாவிடம் எதிர்ப்பார்ப்பது, கட்சியிலிருந்து நீக்கி ஜெயலலிதா எடுத்த இந்த நடவடிக்கைகளோடு நின்று விடாமல், இந்த மாபியா கும்பல் சம்பாதித்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து, இவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்...

வியாழன், 29 டிசம்பர், 2011

கீழ்வெண்மணி-வண்கொடுமையின் உச்சம்

.
1968 டிசம்பர் 25
கிறிஸ்துமஸ் பண்டிகை
ஏசுநாதர் பிறந்த நாள் விழா



உலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.

ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை.

தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டது தான் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட காரணம்.

விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச் சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை நடந்தது.

25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத்தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து கட்டை அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பின்பு பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள்.

அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடி விட்டனர். தப்பித்து ஓட முடியாத தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள்.

ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன.

இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.

இத்தனை கொடுமையையும் செய்த அக்கிரமக்காரர்கள் அதன் பின் இதனை விவசாயத் தொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இதற்கு உதவிகரமாக சில பத்திரிகைகள் இட்டுக் கட்டி செய்திகள் வெளியிட்டன. “விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய்யைக் கூறினர். நிலபிரபுக்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பொய்யைச் செய்தி ஆக்கினர்.

ஆனால் போலீஸ் ஐஜியோ கீவளுர் வட்டாரத்தில் வைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42 இருப்பதாகவும், 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர் திருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11 பேர்.

மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும் பொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.

வெண்மணியில் நடைபெற்ற கோரக் கொடுமையை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரீகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.

மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து விட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு

“ Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene. -‘Hindu’

“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.
‘இந்து பத்திரிகை’

44 ஏழை உயிர்களின் மீது இதர மக்களுக்கு இரக்க குணம் ஏற்படாத நிலையில்- நீதிமன்றங்களிலும் - ஏழை மக்களுக்கு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காத போது - நிலப்பிரபுக்களும், பிற்போக்காளர்களும், சாதி வெறியர்களும் - சரடு போடப்படாத திமிர்க் காளைகளாக நாட்டில் இன்னமும் திரிந்து வருகிறார்கள்.


விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை பரவரோடு
குறவருக்கும் மறவருக்கும் விடுதலை.


என்ற பாரதி விடுதலைக் கனவு கண்டார். அக் கனவுகள் இன்னும் நனவாகவில்லை. பாரதியின் கனவை நனவாக்கக் கங்கணம் கட்டியாக வேண்டும்.

தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் - இதரப் பகுதியினரை விட சாதி அமைப்பில் கொடிய ஓடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்ள். அவர்களின் உரிமையை நிலை நாட்டுவது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாகும்.

கிராமங்களின் அடித்தட்டில் வாழும் விவசாயத் தொழிலாளர்களிடையே - சாதி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒன்றுபட்ட இயக்கமாக திரட்ட வேண்டும். வலியோர் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து, எளியோர்களுக்குப் பாதுகாப்பாகவும் மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

வலியோர் தம் ஆதிக்கமும், வன்முறையும் எந்த வழியில் வந்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும், மக்களை திரட்டவும் வேண்டும். அது உலகை மேலாண்மை செய்யத் துடிக்கும் அமெரிக்காவை எதிர்த்து என்றாலும் சரி. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கொடுமையை எதிர்த்து என்றாலும் சரி. நாம் எதிர்க்க வேண்டும்.


வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்

1. சுந்தரம் (45)
2. சரோஜா(12)
3. மாதாம்பாள்(25)
4. தங்கையன் (5)
5. பாப்பா (35)
6. சந்திரா (12)
7. ஆசைத் தம்பி (10)
8. வாசுகி (3)
9. சின்னப்பிள்ளை (28)
10. கருணாநிதி(12)
11. வாசுகி (5)
12. குஞ்சம்பாள் (35)
13. பூமயில் (16)
14. கருப்பாயி (35)
15. ராஞ்சியம்மாள் (16)
16. தாமோதரன் (1)
17. ஜெயம் (10)
18. கனகம்மாள் (25)
19. ராஜேந்திரன் (7)
20. சுப்பன் (70)
21. குப்பம்மாள் (35)
22. பாக்கியம் (35)
23. ஜோதி (10)
24. ரத்தினம் (35)
25. குருசாமி (15)
26. நடராசன் (5)
27. வீரம்மாள் (25)
28. பட்டு (46)
29. சண்முகம் (13)
30. முருகன் (40)
31. ஆச்சியம்மாள் (30)
32. நடராஜன் (10)
33. ஜெயம் (6)
34. செல்வி (3)
35. கருப்பாயி (50)
36. சேது (26)
37. நடராசன் (6)
38. அஞ்சலை (45)
39. ஆண்டாள் (20)
40. சீனிவாசன் (40)
41. காவிரி (50)
42. வேதவள்ளி (10)
43. குணசேகரன் (1)
44. ராணி (4)

செவ்வாய், 27 டிசம்பர், 2011

இராமய்யாவின் குடிசை -கீழ்வெண்மணி சம்பவ ஆவணப் படம் -வீடியோ


கீழ்வெண்மணி 44 உயிர்களும் அரைப்படி நெல்லும்




36 வருஷங்களாகியும் உயிர் பொசுங்கிய நெடியடிக்கிறது இந்தக் கிராமத்து மண்ணில். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில் கீழ்வெண்மணிக்குள் நுழைகிற இடத்தில் வெண்மணிச் சம்பவத்தை நினைவூட்டுகிற சிவப்பு வளைவு. உள்ளே போனால் காலனி தெரு. அதில் ரத்தசாட்சி போல சிவப்புமயமான கட்டிடம். 

1967ல் 44 உயிர்கள் விறகுகள் மாதிரி எரிக்கப்பட்ட இடம் இதுதான். ஜாலியன் வாலா பாக்கில் உள்ள நினைவுச் சின்னம் மாதிரியே வடிவமைத்திருக்கிறார்கள் இதையும். ஜோதிபாசு அடிக்கல் நாட்டி 1970ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டத்தைத் திறந்து வைத்தவர் கம்யூனிஸ்ட் தலைவரான பி. ராமமூர்த்தி. நினைவுத்தூண்களில் வரிசையாகப் பதிந்திருக்கின்றன சாகடிக்கப்பட்ட அந்த 44 பேர்களின் பெயர்கள். 

தஞ்சை மண்ணில் 'பண்ணையாள் முறை' ஆழமாக வேரூன்றியிருந்த காலம். விவசாய வேலைகளில் சற்று சுணக்கம் காட்டினாலும் உடம்பில் சவுக்கடி விழுந்து வலியுடன் ரத்தம் கசியும். அதோடு மாட்டுச் சாணியைப் பால் மாதிரி கரைத்து அந்தத் தொழிலாளர்களைக் குடிக்கச் சொல்வார்கள். கசங்கிய முகத்துடன் வேறுவழியில்லாமல் குடிப்பார்கள் விவசாயத் தொழிலாளிகள். எதிர்த்துச் சிறுவார்த்தை கூடப் பேச முடியாது. 

அவர்களிடமும் வந்தது விழிப்பு. "நியாயமான கூலியைக் கேள். குருடனாக இருக்காதே... கண்ணைத் திற ஊமையாக இருக்காதே - பேசு..." என்று நரம்புகளை அதிரவைக்கிறபடி பிரச்சாரம் பண்ணினார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் சீனிவாசராவும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். பிரச்சார பொறி பலருடைய மனசில் விழுந்து கணகணத்தது. ஒன்று சேர்ந்தார்கள். உருவானது விவசாயிகள் சங்கம். எழுந்தது தட்டிக் கேட்கிற குரல். 

அந்த ஒற்றுமையே பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டது. 'தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது' என்று கண்டுபிடித்துச் சொன்னார் ராஜாஜி. நிலச்சுவான்தார்களும் கூடினார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். மஞ்சள் கொடியை ஏற்றி செங்கொடியை இறக்கச் சொன்னார்கள். அதை மறுத்து அரைலிட்டர் நெல்லைக் கூட்டி கூலியாகக் கேட்டார்கள் விவசாயிகள். 

ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. தோல்விதான். அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரப் பொறி. 

1967 டிசம்பர் 25. கிறிஸ்துமஸ் தினம். நிலச்சுவான்தார்களின் அடியாட்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார்கள். கிராமமே ரணகளமானது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒரே பீதி. வேட்டையின் தீவிரம் தாளாமல் பலர் ஓடியிருக்கிறார்கள். ஒரு தெருவின் மூலையில் ராமையனின் குடிசை. மேலே கூரை. அதற்குள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சின்ன அறையில் அடைசலாக 48 பேர். 

கொஞ்ச நேரத்தில் கதவடைத்து தீவைத்து விட்டார்கள். வெப்பம் தகித்து ஒரே கூச்சல். நெருப்பை மீறி ஆறுபேர் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். வந்ததில் இரண்டு பேரையும், ஒரு தாய் தூக்கி வெளியே வீசிய குழந்தையையும் திருப்பி குடிசைத்தீயில் வீசியிருக்கிறது வெளியே இருந்த கும்பல். தீ வேகத்துடன் எரிய அந்தப் பிழம்பில் கசிந்தது உயிர் கருகிய நாற்றம். 

நடு இரவில் போலீஸ் வந்து கனன்று கொண்டிருந்த கனலை விலக்கிப் பார்த்தால், உள்ளே கரிக்கட்டைகளாக எரிந்து அவிந்து கிடந்தன 44 உயிர்கள். அதில் பெண்கள் 14 பேர். குழந்தைகள் 22 பேர். போஸ்ட் மார்ட்டத்திற்காக நாகப்பட்டினத்திலிருந்து வந்த டாக்டர் கைவிரித்தார். அடையாளம் சொல்ல முடியாமல் 'விடிந்ததும் செய்தி பரவி தமிழகமே அதிர்ந்தது'. 'நாட்டுக்கே அவமானம்' என்று கட்டம் கட்டி வெளியிட்டன டெல்லிப் பத்திரிகைகள். 

106 பேர் கைதானார்கள். திமுக ஆட்சி நடந்த அந்த நேரத்தில் கைதானவர்களில் பலர் காங்கிரஸ்காரர்கள். தப்பிப் பிழைத்தவர்கள் சாட்சியம் சொன்னார்கள். 'இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்' என்று சொன்னது போலீஸ். 

'அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல...' என்று 1973 ஏப்ரல் 6ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதும், விடுதலையானார்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள். சட்டரீதியாக அடங்கிப் போனது கீழ்வெண்மணிப் புகை. 

கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி - புதிய தமிழகம்



 
கீழ்வெண்மணியில் எரித்துக் கொல்லப்பட்ட 43 ஒடுக்கப்பட்ட வேளாண் குடிமக்களுக்கு வரும் 25ஆம் தேதி புதிய தமிழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :

இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் சமுதாய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படவில்லை. பிறந்த நாட்டில் மூன்று சென்ட் வீட்டு மனையோ, ஒரு ஏக்கர் நிலமோ கூட சொந்தமாக இல்லாமல் இன்னமும் வறிய நிலையில் வாழ்வோர் எண்ணற்றோர்.

இந்த நிலை போக்க எத்தனையோ போராட்டங்கள் நடந்திருப்பினும், 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தஞ்சை மண்ணாம் - கீழ்வெணிமணியில் நடந்த துயரச் சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது.

உழைத்த உழைப்பிற்காக அரைப்படி நெல் கூடுதலாக கேட்டதற்காக முதியோர், பெண்கள், குழந்தைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் 43 பேர் ஒரே குடிசையில் அடைத்து கொளுத்தப்பட்ட துயரச் சம்பவம் நடந்த நாள் அது. தியாகம் புரிந்தவர்கள் விவசாயத் தொழிலாளர்கள் எனினும் அவர்கள் அனைவரும் வீரம் செறிந்த வேளாண் குடிமக்கள் என்ற சமூக அடையாளம் அறவே மறைக்கப்பட்டுவிட்டது.

அம்மக்களின் அளிப்பரிய தியாகத்தை போற்றும் வகையில் புதிய தமிழக கட்சியின் சார்பாக எனது தலைமையில் கீழ்வெண்மணி கிராமத்தில் அவர்கள் நினைவிடத்தில் டிசம்பர் 25ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் அஞ்சலி நடைபெறும்.

அதேபோல, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், புதிய தமிழகம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சார்பாக நினைவஞ்சலி நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கீழ்வெண்மணி

எம் உறவுகள் 44 பேர் கீழ்வெண்மணியில் கொல்லப்பட்டதற்கு முதற்காரணம் சாதி.....இரண்டாவது 

காரணம்தான் கொல்லப்பட்டவர்கள் ஏழை கூலித்தொழிலாளிகள்...என்பது

இந்த சாதியை தூக்கி பிடிக்கும் இந்து மதத்தை தூக்கி பிடித்து கொண்டு வரும்....ஒவ்வொருவரிடமும் 

கேளுங்கள்.....நாங்கள் என்ன மசிறுக்கு இந்து மதத்தை மன்னிக்க வேண்டும்...என்று....கொடியங்குளம், 

மேலவளவு....இன்னும் எத்தனை..எத்தனை.....சமீபத்தில் பரமக்குடி...... இத்தனை உயிர்களை 

பலிகொடுத்த இந்த வெங்காய மதத்தை சீர்திருத்த முயற்சி செய்யணுமாம்....பரதேசிங்க....

பார்ப்பனீய இந்து மதத்தை வேரோடு பிடுங்கி எறிவதுதான் எம் தலையாய பணியாக இருக்க 

முடியும்....அதை நாங்களும்,எம் பிள்ளைகளும் சேர்ந்து செய்து முடிப்போம்..

தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி





முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 9 ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள தமிழக மக்களிடையே மிகப்பெரிய கசப்புணர்வு வளர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நிலைகளும் உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட மத்திய அரசு இந்த பிரச்சினையில் தீர்வுகாண்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காது கண்டிக்கத்தக்கது. இலங்கை பிரச்சனையில் கண்டுகொள்ளாததுபோலவே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையிலும் மத்திய அரசின் அணுகுமுறை உள்ளது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் முல்லைப்பெரியாறு பிரச்சினை மட்டும் அல்ல, கன்னியாகுமரி மாவட்டத்தில் மெய்யாறு, வடகரை பகுதிகளுக்கு கேரளாவில் இருந்துவந்துகொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யமுடியாத நிலை உள்ளது. ஆந்திரா எல்லையில் பாலாற்றின் குறுக்கே 300 க்கும் மேற்பட்ட தடுப்பு அணைகள் கட்டப்பட்டதால் பாலாறு வரண்டு, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழடையும் நிலையில் உள்ளது. இப்படிப்பட்ட எந்த பிரச்சினைக்கும் மத்திய அரசு தீர்வுகாண்பதாக தெரியவில்லை.

இதேபோல முல்லைப்பெரியாறு பிரச்சினையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் கேரள அரசு மதிக்கவில்லை. மத்திய அரசு தொடர்ந்து மெத்தன போக்கை கடைபிடித்து வருவது கண்டிக்கத்தக்கது.
எனவே கேரள தமிழக மாநிலங்களின் முதல் மந்திரிகளையும் பிரதமர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்.

இரண்டு மாநில மக்களும் மோதிக்கொள்ளும் சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளிவைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஜனவரி மாதம் 9 ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த மனு விபரம்








முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு மத்திய அரசே முழு பொறுப்பு: டாக்டர் கிருஷ்ணசாமி



முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு மத்திய அரசே பொறுப்பு என்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேனியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேசினார்.


முல்லைப் பெரியாறு அணையை மீட்டெடுக்க புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேனி பகவதியம்மன் கோவில் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தண்ணீர், காற்று ஆகியவை அனைவருக்கும் சொந்தமானது. இதனை யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக மக்கள் அரசியல் கட்சிகள் பாகுபாடு இன்றி பொது மக்களாக நாள்தோறும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

136
அடியில் இருந்து 142 அடியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு மத்திய அரசே முழு பொறுப்பு. இரு மாநிலங்களிடையே பிரச்சினை ஏற்படும் போது பிரதமர் இரு மாநில முதல் அமைச்சர்களையும் அழைத்து பேசி சுமுகமாக முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தவறிவிட்டதாக தெரிகிறது.

கேரளாவில் வாழும் தமிழர்கள் அகதிகளாக வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கேரள அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் விளைவு விபரீதமாக இருக்கலாம். இவ்வாறு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேசினார்.