ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

'தேவேந்திர குல வேளாளர்' என அழைக்க, அரசாணை பிறப்பிக்க கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில்ஆக 5ம் தேதி ஆர்ப்பாட்டம்.

பட்டியல் இன பிரிவில் இடம் பெற்றுள்ளவர்களை, தேவேந்திர குல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க கோரி, ஆகஸ்டு 5ம் தேதி, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த, புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.கோவையில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பன், பண்ணாடி, தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என அழைக்க, அரசாணை பிறப்பிக்க கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். தமிழக சட்டசபையில் பலமுறை பேசியும், வெளிநடப்பு செய்தும் பலனில்லை. கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, ஆறு கட்டங்களாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக, மதுரையில் ஆகஸ்ட் 5ம் தேதி எனது தலைமையில், காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு, நாட்டுக்கு ஈடு செய்ய இயலாத மிகப்பெரிய இழப்பாகும். இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தியவர். மக்களின் ஜனாதிபதி என இவரை அழைப்பதே பொருத்தம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

காலச்சுவடுகள்

.. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்புவிழா .....டாக்டர் ..கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லநாடு கிராமத்தில் வி.டி.வி.டி. அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் திறப்புவிழா இன்று நடந்தது. கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவருமான மருத்துவர் கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். வல்லநாடு பகுதியில் வாழும் அனைத்து சமூக மக்களும் "இதுவரை மாட்டுக்கொட்டகையாக இருந்த இடத்தை மாணவர்கள் கல்விகற்க கூடிய மாளிகையாக (வகுப்பறை கட்டிடம்) மாற்றிய டாக்டர் அய்யாவிற்கு நன்றி" என்று ஒருசேர பாராட்டினர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து சமூக பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், ஆசிரிய பெருமக்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்றவுடன் முதல் முதலில் இந்த பள்ளி கட்டிடத்துக்காக ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கிய டாக்டர் அய்யாவிற்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

காலச்சுவடுகள் ...செவ்வாய், மார்ச் 10,2015,

...ஓட்டப்பிடாரம் பகுதியில் ரூ.34½ லட்சம் செலவில் வளர்ச்சி பணிகளை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
வளர்ச்சி பணிகள்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமீனாட்சிபுரம் மற்றும் செவல்குளம் ஆகிய கிராமங்களில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.4¾ லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடந்தது. ஓட்டப்பிடாரம் யூனியன் அணையாளர் வசந்தா தலைமை தாங்கினார். யூனியன் கூடுதல் அணையாளர்உலகநாதன் முன்னிலை வகித்தனார்.
ரூ.34½ லட்சம்
புதிய தமிழகம் கட்சி நிறுவனரும், எம்.எல்.ஏ.வுமான டாக்டர் கிருஷ்ணசாமி, அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
முன்னதாக வெள்ளப்பட்டி, அனந்தமாடன் பச்சேரி, கொள்ளங்கிணறு ஆகிய கிராமங்களில் ரூ.13¾ லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அயிரவன்பட்டியில் ரூ.3½ லட்சம் செலவில் சிமெண்ட் சாலை உள்பட மொத்தம் ரூ.34½ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விழாவில் மாநில தொண்டர் அணி செயலாளர் லட்சுமண பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் கருப்பசாமி, கண்ணன், ராமராஜன், கதிரேசன், புதிய தமிழகம் பாராளுமன்ற பொறுப்பாளர் பட்டவராயன், மாநில செய்தி தொடர்பாளர் பாபு, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் மனோகரன், குலசேகரநல்லூர் பஞ்சாயத்து செயலாளர் முனியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்....

காலச்சுவடுகள் ..சனி 9, பிப்ரவரி 2013....


தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் உமரிக்காடு, நல்லூர், வாழவல்லான், குரங்கனி, ஏரல், முப்பிலிபட்டி, ஓசனூத்து, புதியம்புத்தூர், கவர்னகிரி, பாஞ்சாலங்குறிச்சி ஆகிய பகுதிகளில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான லாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு குடிநீர் என்ற போர்வையில் கடத்தப்பட்டு வந்தது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து, நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு, பொது மக்கள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை எழுந்தது. ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகளவு சுரண்டப்பட்டு, அபாய கட்டத்தில் உள்ளதாக மத்திய குடிநீர் வழங்கல் துறை எச்சரிக்கை விடுத்தது. பெரும்பாலான மக்களுக்கு சிறுநீரக கோளாறுகளும், சுகதாரமற்ற தண்ணீரால் பல நோய்களும் ஏற்பட்டது. சாலைகள் பாதிக்கப்பட்டு, விபத்துகள் அதிகளவில் நடந்து வந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் நிலத்தடி நீர் கொள்ளையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி சட்டசபையில் மூன்று முறை தனது தொகுதியில் நிலத்தடி நீர் சுரண்டலை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். ஆர்ப்பாட்டம், சைக்கிள் பேரணி, மறியல் போராட்டங்களை நடத்தினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய அரசியல் கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும், விவசாய சங்கங்களும் தொடர்ந்து நிலத்தடி நீர்க் கொள்ளையைக் கண்டித்து போராடினர். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நிலத்தடி நீர் கொள்ளைக்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழிற்சாலைகளுக்கு நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்க கோரி 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ”குடிநீர் லாரி உரிமையாளர் சங்கம்” என்று பெயர் வைத்து ஆழ்குழாய் கிணறு மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மீண்டும் நிலத்தடி நீர் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் ஓட்டப்பிடாரம் பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உருவானது.
இதையடுத்து ஓட்டப்பிடாரம் வட்டத்தில் தண்ணீர் லாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படுவதாக கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசன் உத்தரவிட்டுள்ளார். அவர் தண்ணீர் விற்பனை செய்கின்ற நபர்களுக்கு அளித்துள்ள உத்தரவில், "ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், குலசேகரநல்லூர், ஜம்புலிங்கபுரம், பசுவந்தனை, சிந்தலகட்டை, சில்லாநத்தம், வேப்பலோடை ஆகிய இடங்களில் பட்டா நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தனியார் தொழிற்சாலைகளுக்கு வணிக நோக்கில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
வறட்சி, விவசாயம் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் காரணமாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போராட்டங்கள் நடத்தினர். இதனால் ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தருவைக்குளம், புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் காவல் நிலையங்களில் இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனால் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து வணிக நோக்கத்தில் விற்பனை செய்பவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அவர்கள் கொடுத்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. இதனால் பொதுமக்களின் நலனுக்காக, சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133 ன் படி அனுமதியின்றி வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்வது நிரந்தரமாக தடை செய்யப்படுகின்றது. இந்த தடையை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நகல்கள் நிலத்தடி நீர் எடுக்கின்ற 37 பேருக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஓட்டப்பிடாரம் பகுதியில் தண்ணீர் லாரிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்..

தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும் ......!!!!...தேவேந்திரர் சமுக பிரிவில் வாதிரியார்கள் ..!!!!!..

..... தமிழகத்தின் மூவேந்தர் மரபைத் தோற்றுவித்து, மருத நிலத்தில் நெல் வேளாண்மையை உண்டு செய்து, மள்ளர், களமர், தேவேந்திர குல வேளாளர், காலாடி, கடையர், பலகனார், பணிக்கனார், குடும்பனார், பண்ணாடி, வயல்காரர், வாதிரியார்… என்று பல்வேறு பெயர்களில் வாழ்ந்து வரும் தமிழகத்தின் மூத்த குடி தேவேந்திர குல சமுகமாகும் ..தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிகளின நெருக்கடிக்கு ஆளாகி ஒடுக்கப்பட்ட மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களின் ஒரு பிரிவினரே இன்று தங்களை தனிச் சாதியினர் என்று சொல்லிக்கொள்ளும் வாதிரியார் இனத்தவர்...நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் ஆதிக்க சாதியினரின் பண்பாட்டு ஒடுக்குதலுக்கு ஆளான தேவேந்திரர்கள் தமது மருதநில வேளாண் மரபை விட்டு விடாது போராடி இன்றும் வேளாண் மக்களாக வாழ்ந்து வருகின்றனா;. ஆனால் இங்கே ஒரு வியப்பான, விந்தையான சமூக மாற்றம் இயல்பாக நடந்தேறியிருக்கிறது. வேளாண் தொழில் செய்த மள்ளர்களில் ஒரு பிரிவினர் நெசவு செய்தனர். அவர்களே இன்று வாதிரியார் என்று அழைத்து கொள்கின்றனர்.. தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் உள்ளடக்கி பரமன்குறிச்சியை மையமாகக் கொண்டு சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழும் மொத்த மக்கள் தொகை சுமார் 25000 பேர் மட்டுமே ஆவர்.... தமிழகத்தின் மக்கள் தொகையில் ஒரு கோடிக்கு மேல் வாழும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளரின் ஒரு பிரிவினர் தங்களை அந்நியப்படுத்தி சிறுபான்மையாக காணாமல் போய் விடுவரோ என்ற கருணையுடன் கூடிய தொலைநோக்கு பார்வையும் எமக்கு உ ண்டு... தமிழகத்தில் பெரிதும் பரவி வாழும் ஒன்றரை கோடி தேவேந்திர குல வேளாளாகளும் பல்வேறு குலப்பட்டங்களையும் பிரிவுகளையும் கொண்டு விளங்குவர் ஆவர். இதில் தென் மாவட்டங்களில் வாதிரியார் எனும் பட்டத்துடன் வாழும் சமுதாயத்தினர் தேவேந்திர குல வேளாளரில் ஒரு பிரிவினரே ஆவர்..வாதிரியார் தேவேந்திர குலத்தவரே என்பதற்கான ஆதாரங்கள்..... “பரமன்குறிச்சி பள்ளர்கள் நெசவுத்தொழில் செய்து வந்தார்கள். வெள்ளையரது வியாபாரச் சுரண்டலினால் இவர்களது தொழில் நசிந்தது. இவர்களில் சிலர் வெள்ளையரால் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதனால் அதிருப்தியுற்றிருந்த பள்ளரையும் ஊமைத்துரை வெள்ளையர் எதிர்ப்பணியில் சேர்த்துக் கொண்டான்”.. (வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் -பக்-14).... “வெள்ளையர் எதிர்ப்பு போரில் சாதி ரீதியில் பள்ளர்கள் கணிசமாக இருந்தார்கள். இவர்களைத் தன் பக்கம் குறிப்பாக பரமன்குறிச்சி பள்ளர்களை தமது போராட்டத்தில் பயன்படுத்திக் கொண்டான் ஊமைத்துரை” (கதைப்பாடல்களும சமூகமும் – பக்-70)...திரு.வே.கோபாலகிருஷ்ணன் சட்டமன்ற பேச்சு
4.5.95 அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற ஒறுப்பினர் திரு,வே.கோபால கிருஷ்ணன் ஆதிதிராவிட நலத்துறை மானியக் கோரிக்கையின் மீது பேசியபோது பின்வருமாறு பதிவு செய்திருக்கின்;றார். “தமிழகத்தில் 1 கோடி மக்கள் தொகை கொண்ட தேவேந்திர குல வேளாளர் பள்ளர், குடும்பன் பண்ணாடி, காலாடி, வாதிரியான், பட்டக்காரர் தேவேந்திர குலத்தான் என்று பல்வெறு பெயர்களில் அரசு பதிவு இதழ்களில் குறிப்பிட்டுள்ளது. இப்பிரிவு அனைத்தையும் ஒரே பிரிவாக “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்கப்பட வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்” (மள்ளர் மலர் – ஜூன் 1995- பக்22) இப்பதிவு தேவேந்திரர்களில் ஒரு பிரிவு வாதிரியார் என்பதையே காட்டுவதாகும். வாதிரியாருக்கென திருச்செந்தூரில் மடம் ஒன்று பாழடைந்த நிலையில் இன்றும் இருப்பதும், அது தேவேந்திர குலத்தாருக்கான மடத்தோடு ஒட்டி அமைந்துள்ளது – இவர்களது தேவேந்திர குல வேளாளருக்குமான பண்பாட்டு உறவையும சாதியத் தொடர்பையும வெளிக்காட்டும் சரித்திரச் சான்றாகும். 1976-க்கு முன்னர் இவர்கள் பள்ளர் என்றே வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வசதிக்காகத் தங்களை இனங்காட்டியது தேவேந்திரருக்கும் வாதிரியார்களுக்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை வலியுறுத்துவதாகும். வாதிரியார் தெரு “பள்ளக்குடி” என அழைக்கப்படுவது மேலும் இத்தொடர்பை வலு சேர்க்கிறது.
நெசவுத்தொழிலை ஏற்றுள்ள வாதிரியார் சமூகம் பண்பாடு பழக்க வழக்கங்கள் என்பதோடு பள்ளர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டு வாழ்வது அனைத்திலுமே தேவேந்திரரோடு தொடர்புடைய சமூகமாக விளங்குவதால் இவர்களைத் தேவேந்திரர்களின் ஒரு உட்பிரிவாகவே நான் கருதுகிறேன் .... தற்போது தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை கோரி வலிமையான போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் வாதிரியார்கள் தங்களையும் இணைத்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

காலச்சுவடுகள் ..(29/07/2013).....தூத்துக்குடி....விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கவில்லை: டாக்டர் .க .கிருஷ்ணசாமி ...M .D .M .L .A அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு...

காலச்சுவடுகள் ..(29/07/2013).....தூத்துக்குடி....விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கவில்லை: டாக்டர் .க .கிருஷ்ணசாமி ...M .D .M .L .A அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு................................................................புதிய தமிழகம் கட்சி நிறுவனரும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் கிருஷ்ணசாமி இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரிடம், தன் தொகுதி விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்று விவசாயிகளுடன் வந்து மனு கொடுத்துள்ளார்.
பின்னர், நிருபர்களிடம் பேசும்போது, ‘‘தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், எட்டையபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் கம்பு, சோளம், மிளகாய் போன்ற மானாவாரி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆனால், இதில் ஐந்தில் ஒரு பகுதி கூட விளைச்சல் அளிக்கவில்லை. மாவட்டத்தின் பல பகுதிகளில் தலையாரிகள், வி.ஏ.ஓ.க்கள் பதிவேட்டில் விவசாயம் செய்த நிலங்களையும் தரிசு நிலங்களாக குறித்துள்ளனர்.
இதனால், சுமார் பத்து ஏக்கரில் விவசாயம் செய்த விவசாயிக்கு வறட்சி நிதியாக 100 முதல் 500 ரூபாய் வரையே கிடைத்துள்ளது. ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் பரிவல்லிக்கோட்டை ஓனமாகுளம், அயிரவன்பட்டி, கொல்லங்கிணறு ஆகிய 40 கிராம விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக விவசாயிகள் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
சில கிராமங்களில் வறட்சி நிவாரணம் வழங்க வி.ஏ.ஓ.க்கள் லஞ்சம் கேட்கிறார்கள். வறட்சி நிவாரணம் பெறாத விவசாயிகளுக்கு விரைவில் வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும். அதேபோல், லஞ்சம் கேட்கும் வி.ஏ.ஓ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள பல கிராமங்களில் சுமார் 40 சதவீதத்திற்கும் மேல் தேவேந்திர குல மக்கள் வாழ்கின்றனர். அந்த பகுதிகளில் கிராம சாலைகள் நீண்ட காலமாக பழுதாகி உள்ளது. இதனால், பேருந்துகள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுவதில்லை. எனவே பாரத் நிர்மாண் திட்டம் அல்லது மாவட்ட ஆட்சியரின் பொது நிதியில் இருந்து சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஆட்சியரும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்’’ என்றார்.

தேவேந்திர குல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க கோரி, ஆகஸ்டு 5ம் தேதி, மதுரையில் ஆர்ப்பாட்டம் ..

தேவேந்திர குல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க கோரி, ஆகஸ்டு 5ம் தேதி, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த, புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.
கோவையில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பன், பண்ணாடி, தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என அழைக்க, அரசாணை பிறப்பிக்க கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
தமிழக சட்டசபையில் பலமுறை பேசியும், வெளிநடப்பு செய்தும் பலனில்லை. கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, ஆறு கட்டங்களாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக, மதுரையில் ஆகஸ்ட் 5ம் தேதி எனது தலைமையில், காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு, நாட்டுக்கு ஈடு செய்ய இயலாத மிகப்பெரிய இழப்பாகும். இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தியவர். மக்களின் ஜனாதிபதி என இவரை அழைப்பதே பொருத்தம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

ஞாயிறு, 26 ஜூலை, 2015

டாக்டர் அய்யாவிற்கு நன்றி ..!!!!!!!..


டாக்டர் அய்யாவிற்கு நன்றி ..!!!!!!!..

... எனது முகநூல் மற்றும் இணைய தள சேவையை பாராட்டி கடைய நல்லூர் புதிய தமிழகம் நண்பர் ஒரு கணினியை வழங்கினார் .... மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்களின் பொற்கரங்களால் எனக்கு வழங்கினார்கள் ..ஆலோசனையும் அறிவுரையும் வழங்கி என்னை பாராட்டிய . மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

டாக்டர் அய்யாவிற்கு நன்றி ..!!!!!!!..

... எனது முகநூல் மற்றும் இணைய தள சேவையை பாராட்டி கடைய நல்லூர் புதிய தமிழகம் நண்பர் ஒரு கணினியை வழங்கினார் .... மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்களின் பொற்கரங்களால் எனக்கு வழங்கினார்கள் ..ஆலோசனையும் அறிவுரையும் வழங்கி என்னை பாராட்டிய . மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

வாழ்த்துக்கள்.

திருவாரூா் மாவட்டத்தைச் சாா்ந்த திரு.சிவகுமாா் தேவேந்திரா் அவா்களின் இணையதள பதிவுகளை பாராட்டி அவா்களுக்கு புதிய தமிழகம் கட்சி இளைஞரணி சாா்பாக, மாநில இளைஞரணி செயலாளா் திரு. பாஸ்கா் மதுரம் அவா்களின் முயற்சியில்Sivakumar Devendrar அவா்களுக்கு டாக்டா் அய்யா அவா்களின் ஆசிா்வாதத்துடன் கணினி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளா் திரு.பாஸ்கா் மதுரம், தூத்துக்குடி மாவட்ட தளபதி அண்ணன் கனகராஜ், டாக்டா் அய்யாவின் நோ்முகச்செயலாளா் பவுன்ராஜ், மாநில மாணவரணி துணை செயலாளா் ராஜீவ்பாண்டியன், நெல்லை மேற்கு மாவட்ட செய்தி தொடா்பாளா் இசக்கிப்பாண்டி மற்றும் தென்காசி ஒன்றிய இளைஞரணி செயலாளா் சுந்தரபாண்டியபுரம் சுரேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
Sivakumar Devendrar அவா்களின் கட்சிப்பணிகளும், இணையதள பதிவுகளும் சிரமமின்றி பணிகள் தொடா்ந்திட வாழ்த்துக்கள்.

தாமிரபரணியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நினைவு அஞ்சலி!...

...................நெல்லை மாவட்டம், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியான மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தியதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி, இந்த கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போதைய த.மா.கா தலைவரான ஜி.கே மூப்பனார், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
ஆட்சியர் அலுவலகம் அருகில் பேரணி வந்தபோது காவல்துறையினருக்கும், தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டினர். அப்போது பேரணியில் வந்தவர்கள் தடியடிக்கு பயந்து அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு ஓடினர். ஆனால், போலீஸார் அங்கும் விரட்டியதால் ஆற்றுக்குள் குதித்தனர். இதில், நீச்சல் தெரியாதவர்கள் மற்றும் காவலர்கள் தடியடியில் காயமடைந்தவர்கள் 17 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
இப்படி உயிரிழந்தவர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 23ஆம் தேதி தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று காலை முதலாகவே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், சமுதாய அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய தேவேந்திரகுல கூட்டமைப்பு, தமிழ்ப்புலிகள், நாம் தமிழர், ஆதித்தமிழர் கட்சி, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பல்வேறு அமைப்புகளும் இதில் பங்கேற்றதால் ஒவ்வொரு அமைப்புகளுக்கும் தனித்தனியாக காவல்துறையினர் நேரம் ஒதுக்கினர். அதன்படி, தலைவர்கள் தங்களது தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மலரஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நெல்லையில் பல்வேறு சமுதாயப் பிரமுகர்களும் ஒரே சமயத்தில் குவிந்ததால் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் .................தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை வெளியிடக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்....பள்ளர்,குடும்பர்,காலாடி,பன்னாடி, தேவேந்திரகுலத்தான் உள்ளிட்ட ஆறு பெயர்களில் அழைக்கக் கூடிய ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்திடும் அரசானை பிறப்பிக்க கோரியும்,நீதிபதி ஜனார்த்தனன் அவர்களின் அறிக்கையை வெளியிடக் கோரியும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாள்:06-08-2015.
நேரம்:காலை 11 மணி.
இடம்:இராமநாதபுரம் மாவட்டம். ...

கொள்கை, லட்சியம் எதுவும் இல்லாமல் ஊறுவிளைவிக்கும் கருத்துகளை டாக்டர் ராமதாஸ் பரப்புகிறார்.....டாக்டர் . க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,.

...........................மதுரை, : கொள்கை, லட்சியம் எதுவும் இல்லாமல், சமுதாயத்துக்கு ஊறுவிளைவிக்கும் கருத்துகளை டாக்டர் ராமதாஸ் பரப்பி வருகிறார் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பல்லபட்டி சாலையில் கடந்த 15ம் தேதி பட்டாசு ஆலைக்கழிவுத் தீயில் ஜீப் சிக்கி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்தனர். இதை சாலை விபத்தாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டாசு ஆலை கழிவுகளால் ஏற்பட்ட விபத்தை சாலை விபத்தாக பதிவு செய்து மூடி மறைக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் நஷ்டஈடு பெற முடியாமல் பரிதவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது. கொள்கை, லட்சியம் இல்லாத கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. தமிழ் சமுதாய மக்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் டாக்டர் ராமதாஸ் கருத்துக்களை பரப்பி வருகிறார். திரைப்படங்கள் எந்த சமூகத்தையும் உயர்த்தியும், தாழ்த்தியும் எடுக்கக்கூடாது நடுநிலையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மருதம் உடனிருந்தார்.

சனி, 25 ஜூலை, 2015

புதிய தமிழகம் பொறுப்பாளர்களுக்கு நன்றி ..!!!!...

....புதிய தமிழகம் கட்சி இளைஞரணி சாா்பாக, மாநில இளைஞரணி செயலாளா் திரு. பாஸ்கா் மதுரம் அவா்களின் முயற்சியில் டாக்டா் அய்யா அவா்களின் ஆசிா்வாதத்துடன் எனக்கு கணினி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளா் திரு.பாஸ்கா் மதுரம், தூத்துக்குடி மாவட்ட தளபதி அண்ணன் கனகராஜ், டாக்டா் அய்யாவின் நோ்முகச்செயலாளா் பவுன்ராஜ், மாநில மாணவரணி துணை செயலாளா் ராஜீவ்பாண்டியன், நெல்லை மேற்கு மாவட்ட செய்தி தொடா்பாளா் இசக்கிப்பாண்டி மற்றும் தென்காசி ஒன்றிய இளைஞரணி செயலாளா் சுந்தரபாண்டியபுரம் சுரேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.அனைத்து புதிய தமிழகம் உ றவுகளுக்கும் நன்றி, நெல்லை பேரணி , மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை பணிகளுக்கு மத்தியில் எமக்காக நேரம் ஒதுக்கி கனிவுடன் ஆலோசனையும் , அறிவுரையும்
வழங்கிய மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்களுக்கும் , புதிய தமிழகம் இணைய தள நண்பர்கள் தோழர் நெல்லை சிவா , அண்ணன் கார்த்திக்மள்ளர் , கருப்புசாமி , அண்ணன் சோ . அய்யர் அவர்களுக்கும் எனது பணிவான நன்றி ..!!!!

''பா.ம.க., ராமதாஸ் மது விலக்கிற்கு எதிரானவர்,'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி .M .D .,M .L. A .,..

''பா.ம.க., ராமதாஸ் மது விலக்கிற்கு எதிரானவர்,'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி .M .D .,M .L. A .,....................சிவகாசி பள்ளபட்டியில் சாலையில் கொட்டப்பட்ட பட்டாசு கழிவுகளால் ஏற்பட்ட தீ விபத்தில் வாகனம் சிக்கியதில் ஜூலை 15ல் நான்கு பெண்கள் பலியானார்கள். எட்டு பேர் உடல் கருகினர். கவனக்
குறைவாக, வேகமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பட்டாசு கழிவுகளில் தீப்பிடித்ததால் தான் விபத்து நேர்ந்தது. உண்மையை போலீசார் மறைத்து விட்டனர். எனவே இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நஷ்டஈடு வழங்க ஜாதி அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது.
தேவேந்திரர், பள்ளர், குடம்பர், காலாடி, மூப்பர், பன்னாடி ஆகிய இனங்களை தேவேந்திர குல வேளாளர் பட்டியலுடன் சேர்க்க வேண்டும், என அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தபோது முதல்வர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்தினேன்.அதை தற்போது வரை நிறைவேற்றவில்லை.
மது விலக்கை அமல்படுத்துவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்பது ராமதாஸ் விருப்பம். வேற்று ஜாதியினரை திருமணம் செய்வோரை கவுரவக் கொலை செய்ய ராமதாஸ் துாண்டுகிறார். மது விலக்கு வரக்கூடாது என்பதில் ராமதாஸ் கவனமாக உள்ளார், என்றார்.

'பா.ம.க., ராமதாஸ் மது விலக்கிற்கு எதிரானவர்,'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி .M .D .,M .L. A .,

'பா.ம.க., ராமதாஸ் மது விலக்கிற்கு எதிரானவர்,'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி .M .D .,M .L. A .,.......மதுரை,: ''பா.ம.க., ராமதாஸ் மது விலக்கிற்கு எதிரானவர்,'' என புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி கூறினார்.மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சிவகாசி பள்ளபட்டியில் சாலையில் கொட்டப்பட்ட பட்டாசு கழிவுகளால் ஏற்பட்ட தீ விபத்தில் வாகனம் சிக்கியதில் ஜூலை 15ல் நான்கு பெண்கள் பலியானார்கள். எட்டு பேர் உடல் கருகினர். கவனக்
குறைவாக, வேகமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பட்டாசு கழிவுகளில் தீப்பிடித்ததால் தான் விபத்து நேர்ந்தது. உண்மையை போலீசார் மறைத்து விட்டனர். எனவே இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நஷ்டஈடு வழங்க ஜாதி அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது.
தேவேந்திரர், பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பர், பன்னாடி ஆகிய இனங்களை தேவேந்திர குல வேளாளர் பட்டியலுடன் சேர்க்க வேண்டும், என அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தபோது முதல்வர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்தினேன். அதை தற்போது வரை நிறைவேற்றவில்லை.
மது விலக்கை அமல்படுத்துவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்பது ராமதாஸ் விருப்பம். வேற்று ஜாதியினரை திருமணம் செய்வோரை கவுரவக் கொலை செய்ய ராமதாஸ் துாண்டுகிறார். மது விலக்கு வரக்கூடாது என்பதில் ராமதாஸ் கவனமாக உள்ளார், என்றார்.
இளைஞரணி பொதுச் செயலாளர் பாஸ்கர்மதுரம், நிர்வாகிகள் பவுன்ராஜ், சிற்றரசு, பாஸ்கர் உடனிருந்தனர்.

மாஞ்சோலை படுகொலைகள் ......மறக்க முடியாத தொழிலாளிவர்கத்தின் தியாகம் ...!!!!!..

...............உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளியதன் விளைவாக தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 20.08.1998 முதல் வேலைப்புறக்கணிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள். தங்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தோள் கொடுக்க மாஞ்சோலை பகுதி மக்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., சி.பி.அய்., சி.பி.அய்(எம்)., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கத்தையும் கலைத்து புதிய தமிழகம் தொழிற்சங்கம் என்ற ஒரே குடையின் கீழ் அணி திரண்டனர்.....மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி 23.07.1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு பகுதி மக்களுடன், தமிழ் மாநில காங்கிரஸ், அய்க்கிய ஜமாத், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள்..ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டதை பொறுக்க முடியாத ஆளும் வர்க்கம், லட்சோப லட்சம் மக்கள் தன்னெழுச்சியாக புதிய தமிழகம் என்ற கட்சியின் பின்னால் அணி திரள்வதை சகித்துக் கொள்ள முடியாத அதிகார வர்க்கம் காவல்துறையின் மூலமாக கலவரத்தை கட்டவிழ்த்து விட திட்டமிட்டது. பேரணியை வழிநடத்திவந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்க்குள் சென்று மனு கொடுப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது.ஆளும் தி.மு.க.வால் திட்டமிட்டே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர். தலைவர்களின் உயிருக்கும் குறைவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள். உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல் துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர். தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை. இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர். நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது.இப்படுகொலை நடந்த சில் நாட்களில் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது. சிறைக்கு சென்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்....இதனை தொடர்ந்தது நீலகிரி மாவட்டம் குன்னூர் , சேலம் மாவட்டம் ஏற்காடு , கோவை மாவட்டம் வால்பாறை தோட்ட தொழிலார்கள் புதிய தமிழகம் கட்சியின் பின்னால் அணிதிரண்டார்கள் .... மாஞ்சோலை தோட்ட தொழிலார்களின் தியாகத்தால் இந்த பகுதி தொழிளார்களுக்கு தொழிலாளர் நல சட்டங்களும் , கூலி உ யர்வும் , புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன 

வெள்ளி, 24 ஜூலை, 2015

தாமிரபரணியில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ... M .D .M .L .A . : அவர்கள் அஞ்சலி..!!!!!.

....புதிய தமிழகம் கட்சியினர் டாக்டர் கிருஷ்ணசாமி...... M .D .M .L .A . அவர்கள் :., தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கொக்கிரகுளம் தாரமிபரணி ஆற்றுக்கு சென்றனர். சந்திப்பு அண்ணா சிலை அருகே கட்சி நிர்வாகிகள் திரண்டு நின்றனர். அவர்கள் மத்தியில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., அவர்கள் :பேசினார். பின்னர் அங்கிருந்து ஆற்றுக்கு சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வி.கே.அய்யர், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா, புறநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொறுப்பாளர் ஜெயகுமார், நிர்வாகிகள் இன்பராஜ், மகேஷ், சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் :நிருபர்களிடம் கூறியதாவது:–
15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும், கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும், 8 மணி நேர வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றது. அப்போது போலீசாரின் தாக்குதலில் 17 பேர் உயிர் இழந்தனர்.
அவர்களுக்கு தொடர்ந்து 15 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தி வருகிறோம். தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த 17 பேருடைய நினைவாக தாமிரபரணி ஆற்றங்கரையில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக அரசு நினைவிடம் அமைக்க தாமிரபரணி ஆற்றங்கரையில் நிலம் ஒதுக்கித்தர வேண்டும்.
பாலியல் குற்றங்கள்
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. சிறுமிகள், பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. கரூர் மாவட்டம் பிச்சம்பட்டியில் வனிதா என்ற பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.
இது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பினால் எங்களை பேச அனுமதிப்பதில்லை. சட்டசபையில் எதிர்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படுகிறது. ஜனநாயகத்திற்கு அங்கு மதிப்பு கிடையாது. இந்த நிலை தொடர்ந்தால், வருகின்ற சட்டசபை தேர்தலில் ஆளும்கட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினம்: தாமிரபரணி ஆற்றில் கட்சிகள் அஞ்சலி..... புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .. டாக்டர் கிருஷ்ணசாமி ... M .D .M .L .A . : அவர்கள் தலைமையில் அஞ்சலி..!!!!!.

..நெல்லை தாமிரபரணி ஆற்றில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் உயிர் நீத்த நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகள், மற்றும் கட்சிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
1999ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம்தேதி மாஞ்சோலை தோட்ட தொழி லாளர்கள் போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியதில் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்த தோட்ட தொழிலாளர்கள் 17பேர் உயரிழந்தனர். அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மலரஞ்சலி செலுத்த காலை 9மணி முதல் மாலை 5.30 மணி வரை நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி புதிய தமிழகம் கட்சியினர் நெல்லை சந்திப்பில் இருந்து. டாக்டர் ..கிருஷ்ணசாமி ... M .D .M .L .A . : அவர்கள் தலைமையில் ஊர்வலமாக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த பேரணிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அரவிந்தராஜ், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 19 ஜூலை, 2015

மள்ளர்களின் சமுக வாழ்வியல் ..

மள்ளர்களின் சமுக வாழ்வியல் .......தமிழரின் சமயம், வாழ்க்கையோடு இணைந்த, மிக இயல்பான மிக எளிமையான சமயம். வாதங்கள், தத்துவங்கள் இல்லாத மகிழ்ச்சி தரக்கூடிய சமயம். தமிழர்களே அடிப்படையில் இன்ப நாட்டம் உடையவர்கள். அன்பும், காதலும், மிக இயற்கையாக வெளிப்பட்ட சண்டையும், போரும், போருக்குப்பின் சமாதானமும் என்று மிகச் சாமான்ய, அதேசமயம் மிக எளிமையான சமூகம் இது.
மிகக் கடுமையான சண்டையும் மிகக் கடுமையான அன்பும் கொண்ட, தூய்மையான மனமும் இயற்கையாகிய வாழ்வும் கொண்ட மகத்தான இனம் தமிழினம். வடநாட்டிலிருந்து வந்த சமயங்களும் உள்நாட்டுச் சமயங்களும் அவர்கள் வாழ்க்கை என்ற குளத்தில் கல் வீசி அவர்கள் அமைதியக் கெடுத்தன.
என்றாலும் மள்ளர்கள் பலருக்கே அவர்கள் வரலாறு தெரியவில்லை. அவர்கள் விளைவித்த நெல் மணிகளின் குவியல்தான், ஒரு காலச்சக்கரத்தையே கட்டி எழுப்பியது. தமிழ்க் கலாசாரம், பண்பாடு என்று தமிழரின் பெருமைகளாகப் பேசப்படுவது எல்லாம் தமிழ் உழவர்களின் கலாசாரம்தான் என்பதே உண்மை. நெற்களம்தான் தமிழ்க் களம். நெல் என்பதே சொல்லும் ஆயிற்று. நீர் என்பதே நீர்மை ஆகி, அன்பாயிற்று. வரப்பு என்பதே வரம்பாகி, சட்டம் நீதி ஆயிற்று. விளைச்சல் என்பதே சமூக வளர்ச்சி என்று ஆயிற்று. உழப்பட்டதுக்கே நிலம் என்று பேர். உழப்படாதது வெறும் மண்தான். உழவர்களே சகல முன்னேற்றத்துக்கும் அச்சாணி.

மள்ளர்களின் சமுக வாழ்வியல்

மள்ளர்களின் சமுக வாழ்வியல் . ‘மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.
‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்…’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது.
இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்.
‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள்.
நம் உழவர்ப் பெருங்குடியினராகிய மள்ளர்கள், தேவேந்திரர் எனவும் தேவேந்திர குல வேளாளர் என உரக்க சொல்வோம் . இழந்த, மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்போம் 

வெள்ளி, 17 ஜூலை, 2015

தி இந்து தமிழ்' நாளிதழ் இருட்டடிப்பு செய்த டாக்டர் . க . கிருஷ்ணசாமி M . D .M .L .A ., அவர்களின் .சிறப்புப் பேட்டி..


புரட்சிகர மார்க்சிஸ்ட் இயக்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் நீங்கள். உங்கள் பொதுவுடமை பார்வை, இப்போது ஒரே ஒரு சாதிக்கான பார்வையாக சுருங்கிவிட்டதே?
முதலாளித்துவ நாடாக இருந்த ரஷ்யாவில், தொழிலாளர்களைத் திரட்டி புரட்சி செய்தார்கள். சீனாவில் நிலச்சுவந்தார்களுக்கு எதிராக விவசாயிகள் புரட்சி செய்தார்கள். ஆனால், இங்கே பண்ணையாளர்களுக்கு எதிராக விவசாயிகளை ஓரணியில் திரட்ட முடிந்ததா-? அதற்கு சாதி தடையாக இருக்கிறது. கீழவெண்மணியில் 1968ல் பண்ணையார்களுக்கு எதிராக அனைவருக்கும் தான் போராடினார்கள். ஆனால் கொளுத்தப்பட்டது தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் பறையர் சமுக மக்கள் மட்டும் தானே. மற்ற சமுதாய விவசாயிகள் எல்லாம் பண்ணையார்களுக்கு ஆதரவாகவும், அடியாட்களாகவும் ஆகிவிட்டார்களே? இந்த மண்ணில் மார்க்சியத்தை நேரடியாக செயல்படுத்த முடியாது. சாதிப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் வர்க்கமாக ஒன்றிணைய முடியாது. சர்க்கரை வியாதியுள்ள மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால், முதலில் சர்க்கரை வியாதியை குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஆபரேஷன் வெற்றியடையாது. அதை தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்யவில்லை. நாங்கள் செய்கிறோம். உண்மையான பொதுவுடமை இயக்கம் நாங்கள் தான்.மற்ற தலைவர்களாவது ஈழ அரசியல், தமிழ் ஆர்வலர் போன்ற சாயம் பூசிய சாதி அரசியல் செய்கிறார்கள். நீங்கள் அப்பட்டமான சாதித்தலைவராக தென்படுகிறீர்களே?
இது தவறான குற்றச்சாட்டு. அம்பேத்கர் மகர் என்ற ஒரு சாதியினரை வைத்துக் கொண்டு தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்காக அவர் மகர் சாதிக்கு மட்டுமான தலைவராகி விடுவாரா? நாட்டில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்திற்கு, அம்பேத்கருக்கு எப்படி மகர் மக்கள் பின்புலமாக இருந்தார்களோ அதைப்போலவே என்னுடைய போராட்டத்திற்கு தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் பின்புலமாக உள்ளார்கள். பிற சமுதாயத்திற்கும் சேர்த்து போராடுகிற போர் வீரர்களாகவே நாங்கள் அவர்களைக் கருதுகிறோம்.
-தென்மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளருக்கும், தேவர் சமுதாயத்திற்கும் இடையே 1928ல் இருந்தே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதை வைத்து அரசியல் செய்யும் நீங்கள், இதற்கான தீர்வை நோக்கி எப்போதாவது நகர்ந்திருக்கிறீர்களா?
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஆட்சியாளர்களின் கையில் தான் இருக்கிறது. ஒரு சாதிக்கு முன்னுரிமை தருவதையும் இன்னொரு சாதிக்கு பின் தள்ளுவதையும் ஆட்சியாளர்கள் முதலில் நிறுத்த வேண்டும். சிலை வைப்பது, பெயர் சூட்டுவது, தலைவர்களின் நினைவிடத்திற்குச் செல்வது போன்றவற்றில் காட்டுகிற வேறுபாட்டை நிறுத்த வேண்டும். அதன் மூலமாகத் தான் தென்மாவட்டங்களில் நடைபெறுகிற மோதல்களை நடத்து நிறுத்த முடியும். தேவேந்திர குல மக்கள் வேறு யார் மீதும் சாதி ரீதியான வெறுப்பை காட்டியதில்லை. அவர்கள் வேற்றுமைக்கும், வெறுப்புக்கும் ஆளானவர்கள். வெறுப்பை நீக்க வேண்டியவர்கள் எதிர்தரப்பினர் தான்..

'தி இந்து தமிழ்' நாளிதழ் இருட்டடிப்பு செய்த டாக்டர் . க . கிருஷ்ணசாமி M . D .M .L .A ., அவர்களின் .சிறப்புப் பேட்டி..

'தி இந்து தமிழ்' நாளிதழ் இருட்டடிப்பு செய்த டாக்டர் . க . கிருஷ்ணசாமி M . D .M .L .A ., அவர்களின் .சிறப்புப் பேட்டி..
-1984 முதல் 1991 வரை நீங்கள் திமுககாரராகவே இருந்திருக்கிறீர்கள். தொடர்ந்து அங்கேயே இருந்திருந்தால் பட்டியல் சமுக மக்களுக்கு ஏதாவது செய்திருக்க முடியும் என்று கருதுகிறீர்களா?
திமுகவில் அதற்கான ஸ்பேஸ் எல்லாம் எப்போதோ போய்விட்டது. மாவட்ட அளவிலான தலைவர்கள் எல்லாம் சுய சாதிப்பற்றோடு இருந்து கொண்டு வெறுமனே அண்ணா, பெரியார், அம்பேத்கரின் பெயர்களைச் சொல்கிறார்கள். உண்மையிலேயே அவர்களது லட்சியங்களை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவதில்லை. எனவே தான் இதில் நீடிக்க முடியாது என்று வெளியேறினேன்.
--உங்கள் கட்சி தொடங்கி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் செய்ததை பட்டியலிட முடியுமா?
நிற்கதியாக நின்ற பட்டியல் சமுக மக்களுக்கான தமிழகத்தில் உருவான முதல் அரசியல் கட்சி புதிய தமிழகம் தான். மக்களுக்கான பிரச்சினையை எடுக்கவே ஆளே இல்லாத நிலையில் அதை முன்னெடுத்தது நாங்கள் தான். ஆரம்பத்தில், தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை இருந்தது அதை முதன்முதலில் சட்டசபையில் பதிவு செய்தது புதிய தமிழகம் கட்சியே. இப்போது அது வெகுவாக குறைந்திருக்கிறது. ஒரு கால கட்டத்தில் தமிழகத்தில் பட்டியல் சமுக மக்கள் தாக்கப்படாத நாளே இல்லை என்ற நிலை இருந்தது. இன்றைக்கு அது எவ்வளவோ குறைந்திருக்கிறது. குரலற்றவர்களின் குரலாக புதிய தமிழகம் இருக்கிறது. இடஒதுக்கீடு இருந்து பல உரிமைகளை காப்பாற்றித் தருகிறது. ஆதிக்க மனப்பான்மையுடன் யார் செயல்பட்டாலும் அதைத் துணிவோடு எதிர்த்து நிற்கும் வல்லமையை எங்கள் மக்களுக்கு ஊட்டியிருக்கிறோம்.
--கட்சி ஆரம்பிக்கும் முன், நீங்கள் ஒரு எம்எல்ஏ. கட்சி ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகிய பிறகு கூடுதலாக ஒரு எம்எல்ஏ. இதுதான் உங்கள் வளர்ச்சியா?
முற்போக்கு சக்தி ஒரு வெற்றியை பதிவு செய்துவிட்டால், பிற்போக்கு சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்துகொள்வார்கள். ஓட்டப்பிடாரத்தில் நாங்கள் ஒரு வெற்றி பெற்றதும், மற்ற தொகுதிகளில் எல்லாம் பிற்போக்கு சக்திகளும், எம் மக்களுக்கு எதிரானவர்களும் ஒன்று சேர்ந்துவிட்டன. இதற்கு சில அரசியல்கட்சிகளும் உடந்தையாக இருக்கின்றன. பணத்திற்கு எளிதாக இரையாகக் கூடிய சிலரை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு தேர்தலிலும் எங்களுக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்தார்கள். தேவேந்திரர் என்ற அடையாளத்துடன் போட்டி வேட்பாளர்களை நிறுத்துவது, எங்களைப் பற்றி அவதூறு பிரச்சாரம் செய்வது, நான் தேவேந்திர குலத்தானே இல்லை என்று வழக்குப் போடுவது என்று அவர்கள் செய்த சதிகளுக்கு அளவே கிடையாது. ஆனாலும், 99 சதவிகித தேவேந்திர குல மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். 2001ல் 10 தொகுதிகளில் போட்டியிட்டோம். வரும் தேர்தலில் எங்கள் வளர்ச்சி இன்னும் பிரகாசமாக இருக்கும்.உங்கள் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களே இல்லையே? உங்களுக்கு அடுத்து என்று யாரை அடையாளம் காட்ட விரும்புகிறீர்கள்?
கொள்கை ரீதியாக சிலரை வளர்த்துவிடுவதில் ஆர்வம் காட்டுகிறேன். உரிய நேரத்தில் அவர்கள் அடையாளம் காட்டப்படுவார்கள்.
-ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள். இடையில் மக்களவைத் தேர்தல் வந்தபோது, நீங்களே வேட்பாளராக இறங்குகிறீர்கள். கட்சியில் வேறு யாரையும் நிறுத்தியிருக்க கூடாதா?
ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் தமிழகத்தில் 7 எம்பிக்கள் பட்டியல் இன சமுதாயத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லாம் தங்கள் கட்சியின் குரலாகத் தான் ஒலிக்கிறார்களே தவிர இந்த மக்களுக்கான கருத்தைப் பதிவு செய்வதில்லை. அங்கே பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. அங்கே வலுவான குரலாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே, நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து நான் முயற்சி செய்கிறேன். நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், சட்டமன்ற உறுப்பினராக வேறொருவரைத் தான் நிறுத்தியிருப்பேன்.

தி இந்து தமிழ்' நாளிதழ் இருட்டடிப்பு செய்த டாக்டர் . க . கிருஷ்ணசாமி M . D .M .L .A ., அவர்களின் .சிறப்புப் பேட்டி

..இப்போது திமுக கூட்டணியில் இருக்கிறீர்கள். உங்கள் இலக்கு என்ன?
எண்ணிக்கையை வைத்து நாங்கள் ஒரு கூட்டணியில் அங்கம் பெறுவது இல்லை. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான குறிக்கோளை அடைவதற்காகவே கூட்டணி வைக்கிறோம். ஒரு அரசின் செயல்பாடுகளை வைத்துத் தான் அடுத்த தேர்தலில் கூட்டணியை முடிவு செய்கிறோம். எங்களுக்கு கூடுதலாக சீட் கொடுத்தால், மற்ற சாதிக்காரர்கள் கோபித்துக் கொள்வார்களே என்ற தயக்கம் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் வந்துவிடுகிறது. பட்டியல் சமுக மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்று சொன்னால் மட்டும் போதாது, எங்களுக்கு அதிமான வாய்ப்பு தருவதில் தான் அவர்கள் உண்மையிலேயே பெரியார், அம்பேத்கர்வாதிகளா என்பது தெரியவரும்.
-கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்துடன் திருமாவளவன் அணி திரட்டும் முயற்சியை முன்னெடுத்துள்ளாரே? ஈகோவை விட்டுவிட்டு அதில் இணைவீர்களா?
அவரது செயல் தும்பைவிட்டுவிட்டு வாலைப்பிடிப்பது போல் இருக்கிறது. தமிழக மக்கள் தொகையில் பட்டியல் சமுக மக்கள் 22 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இவர்களோடு 14 சதவிகித சிறுபான்மையினரையும், முக்குலத்தோர், கவுண்டர், வன்னியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்களையும் ஓரணியில் திரட்டினால், ஆட்சியையே பிடிக்க முடியும். இதைத் தான் உத்திரப்பிரதேசத்தில் கன்சிராம் செய்து காட்டினார். ஆனால், தமிழகத்தில் குறைந்தபட்சம் பட்டியல் சமுக மக்களிடையே கூட ஒற்றுமையை ஏற்படுத்தாமல், ஆட்சியில் பங்கு கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. வெறும் ராமதாஸ் 5 மாவட்டத்தில் உள்ள தன் சாதியினரை வைத்துக் கொண்டு, முதல்வர் வேட்பாளரையே ராமதாஸ் அறிவிக்கிறார். தமிழகத்தின் 30 மாவட்டங்களிலும் பரந்துகிடக்கும் பட்டியல் சமுக மக்களை ஒன்றிணைத்து அரசியல் செய்யாமல் விட்டது தவறு. பட்டியல் சமுக மக்களின் ஒற்றுமை தான் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கும்.
தர்மபுரி கலவரத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த ராமதாஸ், பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை எல்லாம் பட்டியல் சமுக மக்களுக்கு எதிராக அணி திரட்டினார். அப்போது பட்டியல் சமுக மக்களை ஓரணியில் திரட்டும் முயற்சியில் நான் இறங்கினேன். அந்த கூட்டத்திற்கு வர மறுத்த திருமாவளவன், வேறு சில தலைவர்களையும் வரவிடாமல் தடுத்துவிட்டார். பிரச்சினைகள் அடிப்படையில் சேர்ந்து செயல்படாமல் இருந்துவிட்டு வெறும் கோஷங்களை மட்டும் எழுப்புவது பலன் தராது. இனியாவது பட்டியல் சமுக மக்களை ஓரணியில் திரண்டும் முயற்சியில் அவர் என்னோடு இணைந்து செயல்பட வேண்டும். அதைவிட்டுவிட்டு கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தோடு என்னை சந்திக்க வந்தால், அதற்கு உடன்பட நான் தயாரில்லை.
-தென்மாவட்டங்கள் என்றாலே தொழில்நிறுவனங்கள் பின்வாங்குவதற்கு சாதிக்கட்சிகளின் ஆதிக்கமும் ஒரு காரணம் என்கிறார்கள். தென்தமிழக வளர்ச்சிக்காக குரல் கொடுத்துள்ளீர்களா?
தொழில் தொடங்குவதற்கு ஏற்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தென்மாவட்டங்களில் இல்லை. அதைச் செய்து கொடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய வளர்ச்சியை தென்மாவட்டங்கள் பெற வேண்டும் என்றால், ஆண்டிற்கு ஒன்றிரண்டு முறையாவது சட்டசபை கூட்டத் தொடரை மதுரையில் கூட்ட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அப்போது தான் தென்மாவட்ட பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படும், தீர்வும் கிடைக்கும். மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் மட்டும் சட்டசபை கூட்டத் தொடர் நடப்பது கிடையாது, நாக்பூரிலும் நடத்துகிறார்கள். வேறு சில மாநிலங்களிலும் இதுபோல் நடக்கிறது.

வியாழன், 2 ஜூலை, 2015

கோவை அவினாசிலிங்கம் பல்கலைகழக பேராசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்:டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,வலியுறுத்தல்..ஆதரவு ..

கோவை அவினாசிலிங்கம் பல்கலைகழக பேராசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்:டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,வலியுறுத்தல்..ஆதரவு ..''கோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை பிரச்னைக்கு ஒரு வார காலத்துக்குள் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் கல்வியாளர்களின் ஒத்துழைப்புடன் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசு உதவி பெறும் சில கல்வி நிறுவனங்கள், 'அரசு உதவி பெறும் நிறுவனம்' என்பதையே வெளியில் தெரிவிக்காமல், தங்களது சொந்த நிறுவனம் எனக்கூறி, நடத்தி வருகின்றன. அத்தகைய நிலைதான், தற்போது கோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் நிலவுகிறது.
வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், பெண்களின் மேம்பாட்டுக்காக, முன்னாள் கல்வியமைச்சர் அவினாசிலிங்கத்தால், 1957ல் இக்கல்லுாரி துவக்கப்பட்டது. கடந்த, 1988ம் ஆண்டு நிகர்நிலை பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டது.
ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் மனிதவள மேம்பாட்டு துறையால் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள், 205 பேர், பணியாளர்கள், 99 பேர் பணிபுரிகின்றனர். மாணவியர், 5,334 பேர் பயில்கின்றனர். இந்த பல்கலையை, சுய உதவி கல்வி நிறுவனமாக மாற்றும் முயற்சி நடக்கிறது.
'பல்கலையை நிர்வகிக்கும் அறக்கட்டளை தலைவரோ, அறங்காவலரோ, அவர்களது உறவினரோ, வேந்தராக நியமிக்கப்படக்கூடாது' என்பது, யு.ஜி.சி., விதி.
அதற்கு மாறாக, அறக்கட்டளை தலைவரான மீனாட்சிசுந்தரம், ஐந்தாண்டாக வேந்தராக செயல்படுகிறார். இந்த விதிமீறலால், மூன்று மாதமாக பணியாளர் சம்பளத்தை, யு.ஜி.சி., நிறுத்தி வைத்துள்ளது.
தற்போதுதான், ஆசிரியர்களுக்கு பல்கலை நிர்வாகத்தின் முறைகேடு தெரியவந்துள்ளது.
மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தை, வணிக நோக்கத்தில் மாற்ற இடம் தராமல், மனிதவள மேம்பாட்டுத்துறை, யு.ஜி.சி., இணைந்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர, ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அறக்கட்டளையிலுள்ள பணத்தை முடக்க வேண்டும். வேந்தர் தாமாக முன்வந்து, பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அல்லது மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்.
தவறும்பட்சத்தில், முற்றிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாநிலம் முழுவதும் அனைத்து கல்வியாளர்களையும் சந்தித்து, அவர்களது ஒத்துழைப்புடன் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

சேலம் என்ஜீனியரிங் மாணவர் கோகுல்ராஜ் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்...டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,வலியுறுத்தல்.

.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
அப்போது அங்கு வேற்று ஜாதி பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 23–ந் தேதி கோவிலுக்கு தோழியுடன் சென்ற போது மர்மநபர்களால் அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.
அவரது தலையை ரெயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்று உள்ளனர். இந்த சம்பவத்தில் போலீசார் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் இதுநாள் வரை 105 காதல் ஜோடிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு தர்மபுரியில் இளவரசன் என்ற இளைஞர் காதல் விவகாரத்தில் இறந்தார். இந்த ஆண்டு நாமக்கலில் கோகுல் ராஜ் காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டு உள்ளார். தமிழகத்தில் இளைஞர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கலப்பு காதல் ஜோடிகள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
எனவே மத்திய அரசு கோகுல்ராஜ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய விசேஷ சட்டம் பிறப்பித்து கண்காணிக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் கிளையாக மாறிய தேர்தல் கமிஷன்... டாக்டர் . க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A .. குற்றசாட்டு .

.....கோவை: ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தேர்தல் கமிஷனின் செயல்பாடு அ.தி.மு.க.வின் கிளைபோல் இருந்தது’ என்று கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்தார். கோவையில் நேற்று நிருபர்களிடம், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியது: கோவையில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒரு தேர்தலாக கருத முடியாது. அதிமுக கட்சியின் தேர்தல் கிளை போன்று தேர்தல் கமிஷனின் செயல்பாடு இருந்தது. திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் துவக்கத்தினை, அனைத்து அரசியல் கட்சியினரையும் அழைத்து பெரிய விழாவாக நடத்தாமல், வீடியோ கான்பரன்சிங் மூலமாக செய்தது ஏற்புடையதாக இல்லை. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்திட ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.