ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

மள்ளர் குலத்தில் பிறந்த போதுவுடமை போராளி..s.g.m. முருகையன்தேவேந்திரர் அவர்களின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...

மதுரை ... டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி எஸ்.அல்லிநகரம் தேவேந்திரகுல மக்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்..

...கடந்த சனிக்கிழமை பெங்களூரில் மரணமெய்திய அல்லிநகரம் பகுதியைச் சார்ந்த ஒரு சமூகப் பிரமுகரது சவ அடக்க ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அந்த ஊர்வலம் தேனி நகரத்தினுடைய ஒரு பகுதியில் புறப்பட்டு 1 கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஏறக்குறைய 2 மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் ஆக்கியிருக்கிறார்கள். ஊர்வலம் அல்லிநகரத்தின் பல குடியிருப்புகளைத் தாண்டி தலித் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர், ஆதிதிராவிடர், தேவேந்திரகுல வேளாளர்களின் குடியிருப்புகளை நெருங்கிய பொழுது ஊர்வலத்தில் வந்தவர்கள் தாங்கள் வந்த டிராக்டர் மற்றும் பிற வாகனங்களில் ஏற்கெனவே சேகரிக்கப்பட்டு வைத்திருந்த கற்களை வீசி, அங்கிருந்த மக்களை காயப்படுத்தி இருக்கிறார்கள். தேனி-பெரியகுளம் சாலையில் அமைந்திருக்கக் கூடிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கட்டிடத்தின் மீது செருப்பை வீசியிருக்கிறார்கள். ஊர்வலத்தில் வந்தவர்கள் ஒருகட்டத்தில் கற்களை ஏற்றிவந்த அந்த டிராக்டரையே தேவேந்திரகுல மக்கள் பிரதானமாக வாழக்கூடிய அல்லிநகரம் அம்பேத்கர் காலனி மக்கள் மீது ஏற்றி கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பொதுவாக இறந்தவர்களை அடக்கம் செய்கிறபோது அடக்கமாகவும் அமைதியாகவும் செல்வதுமே ஒழுக்கம் மிகுந்த செயலாகும். ஆனால் சவ ஊர்வலத்திலும் சாதிவெறியைக் காட்டவேண்டுமென்கிற அவர்களின் நடவடிக்கையே மேலோங்கி இருக்கிறது. அண்மைக்காலமாக ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்களது சாதி வெறியை தென்தமிழகத்தில் வாழக்கூடிய மிகவும் பின்தங்கிய மக்களின் மீது திணிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு பலவிதமான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தென்தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக நிலவி வந்த சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பதற்காகவே அவர்கள் திட்டமிட்டு செயல்படுவது வெட்டவெளிச்சமாகிறது.
நெடுஞ்சாலையில் செல்லும் புதிய தமிழகம் கட்சி உட்பட பிற தலித் அமைப்புகளின் வாகனங்களில் கட்டியிருக்கக் கூடிய கொடிகளை வலுக்கட்டாயமாக அகற்றச் சொல்வது போன்ற பல சம்பவங்கள் தொடர்கதைகள் ஆகின்றன. காவல்துறையிடம் அந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருடைய அத்துமீறகளை எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
தேனியில் மயானம் ஒரு பகுதியில் இருக்க, அல்லிநகரம் ஊர்ப் பகுதிக்குள் ஊர்வலத்தை அனுமதித்தது ஏன்? காலையிலிருந்தே அவர்களுடைய நடவடிக்கை நகர் முழுவதும் ஆத்திரமூட்டக்கூடிய வகையில் இருந்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயற்சித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் அப்பாவி தலித் மக்கள், அதிகார பின்புலமற்றவர்கள் என்ற காரணத்தினால் தலித் பகுதிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தயங்குமேயானால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக விளங்கும். அன்று தலித் மக்கள் மீது வன்முறையை ஏவியவர்கள் மீது காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அருந்ததியர்கள், ஆதிதிராவிடர்கள், தேவேந்திரகுல வேளாளர்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்றவர்கள் மீதும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
அதைவிடுத்து காலங்காலமாக காவல்துறை கடைபிடித்துவரும் சமாதான பேச்சுவார்த்தை எனும் ஏமாற்று நாடகத்தை கைவிட வேண்டும். இது இரு தரப்பினர்களுக்கிடையே நடைபெற்ற மோதல் அல்ல; அதிகாரத்தில் உள்ளவர்களின் அரவணைப்பு தங்களுக்குக் கிடைக்கும் என்ற மமதையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வன்முறை நடவடிக்கையாகும். எனவே காவல்துறையினர் முதலில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்களையும் தற்காப்புக்காக அணிதிரண்டவர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக்கூடிய தவறான நடவடிக்கையை காவல்துறை கைவிட வேண்டும்.

திங்கள், 29 டிசம்பர், 2014

திராவிட கட்சிகள் ஆட்சியில் அதிகரிக்கும் கவுரவக் கொலை: கிருஷ்ணசாமி சாடல்..

மதுரை: ''திராவிட கட்சிகள் ஆட்சியில் தொழில் வளருகிறதோ இல்லையோ கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன,'' என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: கலப்பு திருமணம் செய்வோர் கொலையாவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. 20 மாதங்களில் 40 பேர் கொலையாகி உள்ளனர். காதல் திருமணம் செய்தவர்களை தாக்கும்படி பா.ம.க., எம்.எல்.ஏ., ஒருவரே தூண்டுகிறார். பெண் சிசு கொலைக்கும், கலப்பு திருமணம் செய்யும் பெண் கொலை செய்யப்படுவதற்கும் வித்தியாசம் இல்லை. ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியில் இருந்துள்ளன. இவர்கள் ஆட்சியில் கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தொழில், வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்கிறதோ இல்லையோ, கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் நெடுமாறன், சீமான் போன்றோர் இதை கண்டிக்காதது ஏன்? ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும், என்றார். 

கௌரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்'

கௌரவக் கொலைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கூறினார்.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே கீழமருதூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும், கலப்பு திருமணம் செய்த மாற்றுத் திறனாளியுமான அமிர்தவள்ளி (30), அவரது கணவர் பழனியப்பன் (37), இத்தம்பதியின் 40 நாள்களே நிரம்பிய குழந்தை அகிலேஷ் ஆகியோர் அண்மையில் உறவினர்களால் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில், திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, கிருஷ்ணசாமி பேசியது:
தமிழகத்தில் அண்மைக்காலமாக கலப்புத் திருமணங்களை தடுக்கும் வகையில், கௌரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
தர்மபுரியில் இளவரசன்- திவ்யா கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பிறகு தமிழகத்தில் ஓர் அமைப்பினர் மாவட்டம்தோறும் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
கௌரவக் கொலைகளைத் தடுக்க, கலப்பு திருமணத் தம்பதியரை காக்க தனிச்சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட இணைச் செயலர் செளந்திரபாண்டியன், மாவட்டச் செயலர் ராஜேந்திரன், நகரச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருவாரூரில் கட்சி நிர்வாகிகளுடன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் க. கிருஷ்ணசாமி.

கெளரவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் : டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..

கெளரவக் கொலைகளைத் தடுóத்திட தனிச்சட்டம் இயற்றவேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
 கெளரவக் கொலைகள் மற்றும் காவல் நிலைய சாவுகளைக் கண்டித்து புதிய தமிழகம் சார்பில் மதுரையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மாவட்டங்களில் கடந்த 20 மாதங்களில் 40 பேர் கெளரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வடமாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட அமைப்பினர் தென்மாவட்டங்களில் உள்ளோருடன் சேர்ந்து படுகொலைகளில் ஈடுபடுகின்றனர். ஆகவே இதுகுறித்து அரசு தீவிர விசாரணை நடத்திடவேண்டும்.
 கெளரவக் கொலைகளைத் தடுக்க சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவும், சிறப்பு சலுகைகள் அளிக்கவும் முன்வரவேண்டும். திராவிட ஆட்சியில்தான் சீர்திருத்த திருமணம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 கெளரவக் கொலைகளைத் தடுக்க அனைத்து அமைப்பினர் பங்குபெறும் வகையில் புதிய தமிழகம் சார்பில் மாநில அளவில் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது.
 மாநிலத்தில் காவல் நிலையச் சாவுகள் நடந்துவருகின்றன. செம்பட்டி, இளையான்குடி உள்ளிட்ட இடங்களில் நடந்த காவல் நிலையச் சாவுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே காவல் நிலையச் சாவுகளை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
 ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் மதுரை புறநகர் மாவட்டச் செயலர் பி.பாஸ்கர், மதுரை செய்தித்தொடர்பாளர் தெய்வம், மாநிலச்செயலர் மதுரம் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அரசு சிமின்ட் ஆலையை தனியாருக்கு தாரைவார்க்க சதி; புதிய தமிழகம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..

ராஜபாளையம் : ""சிவகாசி அருகே ஆலங்குளம் அரசு சிமின்ட் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க அரசியல் சதி நடக்கிறது,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
இந்த ஆலையை நவீனப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலங்குளத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்கலந்து கொண்ட கிருஷ்ணசாமி தெரிவித்ததாவது: ஆயிரக்கணக்கானவர்கள் வேலை பார்த்த 40 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள இந்த அரசு சிமின்ட் ஆலையை நவீனப்படுத்தவில்லை. சட்டசபையில் இதற்காக குரல் கொடுத்தேன். அதன்விளைவாக 2012-2013 பட்ஜெட்டில் 165 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவிப்பு வந்தது. இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணி நடக்கவில்லை.
இந்த ஆலையை நவீனப்படுத்தி உற்பத்தியை பெருக்கினால் தற்போது மூடை 390 ரூபாய்க்கு விற்பனையாகும் சிமின்ட்டை 110 ரூபாய்க்கு விற்க முடியும். இந்த சிமின்ட் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க அரசியல் சதி நடப்பதாக குற்றம் சாட்டுகிறேன். ஆலையை மூடினால் அதற்கு இந்த மாவட்டத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் தான் பொறுப்பு. அடுத்து தென்மாவட்ட அளவில் போராட உள்ளோம்,'' என்றார்.

கெளரவக் கொலைகள் மற்றும் காவல் நிலைய சாவுகளைக் கண்டித்து புதிய தமிழகம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்..

கெளரவக் கொலைகள் மற்றும் காவல் நிலைய சாவுகளைக் கண்டித்து புதிய தமிழகம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்.
கெளரவக் கொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்றவேண்டும்
இதில் பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
'திராவிட கட்சிகள் ஆட்சியில் தொழில் வளருகிறதோ இல்லையோ கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தென்மாவட்டங்களில் கடந்த 20 மாதங்களில் 40 பேர் கெளரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வடமாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட அமைப்பினர் தென்மாவட்டங்களில் உள்ளோருடன் சேர்ந்து படுகொலைகளில் ஈடுபடுகின்றனர். காதல் திருமணம் செய்தவர்களை தாக்கும்படி பா.ம.க., எம்.எல்.ஏ., ஒருவரே தூண்டுகிறார். பெண் சிசு கொலைக்கும், கலப்பு திருமணம் செய்யும் பெண் கொலை செய்யப்படுவதற்கும் வித்தியாசம் இல்லை. ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியில் இருந்துள்ளன. இவர்கள் ஆட்சியில் கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தொழில், வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்கிறதோ இல்லையோ, கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் நெடுமாறன், சீமான் போன்றோர் இதை கண்டிக்காதது ஏன்?
கெளரவக் கொலைகளைத் தடுக்க சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவும், சிறப்பு சலுகைகள் அளிக்கவும் முன்வரவேண்டும். திராவிட ஆட்சியில்தான் சீர்திருத்த திருமணம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கெளரவக் கொலைகளைத் தடுக்க அனைத்து அமைப்பினர் பங்குபெறும் வகையில் புதிய தமிழகம் சார்பில் மாநில அளவில் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது.
மாநிலத்தில் காவல் நிலையச் சாவுகள் நடந்துவருகின்றன
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்ற தேவேந்திர குல சமுதாய இளைஞர் 2012 ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று விசாரணைக்காக வேடஞ்சந்தூர் காவல் நிலையம் அழைத்து செல்ல பட்டவர் பிணமாகவே வெளியே வந்தார். இரண்டு வருடங்கள் ஆகியும் எந்த விசாரணையும் நடைபெற வில்லை .
இளையான்குடி காவல் நிலையத்தில் மாலைராஜ் என்ற தேவேந்திர குல இளைஞர் மரணம் அடைந்தார். காவல் நிலைய மரங்களுக்கும் இன்று வரை நியாயம் கிடைக்க வில்லை.ஆகவே காவல் நிலையச் சாவுகளை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீன படுத்த கோரி ஆர்ப்பாட்டம்!!! டாக்டர் க.கிருஷ்ணசாமி..

விருதுநகர் ..டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

விருதுநகர் ..டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

தமிழகத்தில் மொத்தம் 16 சிமெண்ட் ஆலைகள் உள்ளன.அரியலூரிலும்,ஆலங்குளத்திலும் உள்ள ஆலைகள் அரசுக்கு சொந்தமானவை.தொடக்கத்தில் 2000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பினை தந்தது இந்த ஆலை.இது தொடங்கப்பட்டது முதல் நவீனப்படுத்தப்படாமல் உள்ளது.பழைய இயந்திரங்களால் தான் ஆலைக்கு நஷ்டம் ஏற்படுகிறது.உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் மழை குறைவு.விவசாயம் குறைவாகத்தான் உள்ளது.இது போன்ற தொழிலை நம்பித்தான் தொழிலாளர்கள் உள்ளனர்.அரசு இந்த ஆலையை நவீனப்படுத்தாமல் மூடினால் மாவட்டம் முழுவதும் தொழிலாளர்களை திரட்டி புதிய தமிழகம் போராட்டம் நடத்தும்.டாக்டர் க.கிருஷ்ணசாமி.

விருதுநகர் ..டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

"கௌரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்' டாக்டர் க.கிருஷ்ணசாமி

(28 Dec) கௌரவக் கொலைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கூறினார்.திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே கீழமருதூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும், கலப்பு திருமணம் செய்த மாற்றுத் திறனாளியுமான அமிர்தவள்ளி (30), அவரது கணவர் பழனியப்பன் (37), இத்தம்பதியின் 40 நாள்களே நிரம்பிய குழந்தை அகிலேஷ் ஆகியோர் அண்மையில் உறவினர்களால் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில், திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, கிருஷ்ணசாமி பேசியது:தமிழகத்தில் அண்மைக்காலமாக கலப்புத் திருமணங்களை தடுக்கும் வகையில், கௌரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.தர்மபுரியில் இளவரசன்- திவ்யா கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பிறகு தமிழகத்தில் ஓர் அமைப்பினர் மாவட்டம்தோறும் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.கௌரவக் கொலைகளைத் தடுக்க, கலப்பு திருமணத் தம்பதியரை காக்க தனிச்சட்டம் இயற்ற புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என கூறினார்.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

காதல் மணம் செய்த அமிர்தவள்ளி கௌரவ கொலை -கண்டன ஆர்ப்பாட்டம் --டிசம்பர் 27 - திருவாரூர் ..

டிசம்பர் 11ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் கீழமருதூர் கிராமம் தேவேந்திர குல சமுதாய அமிர்த வள்ளி என்ற பெண்மணியும் அதே கிராமத்து வன்னியர் சமுதாய இளைஞரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரு ஆண்டு காலத்துக்கு மேலாக திருப்பூரில் அவர்களுடைய மூன்று மாத கை குழந்தையுடன் வாழ்ந்துவந்தனர். அவ்மூவரையும் வஞ்சகமாக அவர்கள் சொந்த ஊருக்கே வரவழைத்து அப்பெண்மணியின் கணவரின் சகோதர்கள் கொடுரமான வகையில் மூவரையும் கொலை செய்தனர். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை திருமணம் செய்தார் என்பதற்க்காகவே தனது சொந்த குடும்பத்தினராலே பச்சிளம் குழந்தையையும் சேர்த்து கொன்று குவித்த சம்பவம் தமிழ் சமுதாயத்திற்கும் இந்திய நாட்டுக்கும் சர்வதேச அளவில் ஒரு அவமானத்தை உருவாக்க கூடிய நிகழ்வாகும். இக்கொடூர சம்பவத்தை கண்டிக கூடிய வகையில் டிசம்பர் 27ஆம் தேதி திருவாரூர் தபால் அலுவுலகம் முன் புதிய தமிழகம் சார்பாக ஆர்பாட்டம்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-
கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களை காக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்தியாவிலேயே முற்போக்கு மாநிலமாக தமிழகம் விளங்கி வந்தது.
பெரியார் லட்சியத்தின் அடிப்படியில் இங்கு சீர்திருத்த திருமணம் நடந்தது. இதை ஆதரிக்கும் வகையில் திமுக ஆட்சியில் பல்வேறு உதவிகள் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அண்மை காலமாக கலப்பு திருமணங்களை தடுக்கும் வகையில் கெளரவ கொலைகள் நடக்கிறது. கெளரவக் கொலைகளை தடுக்க, ஜாதிக்கலவரங்களை தடுத்து நிறுத்த, புதிய சட்டம் கொண்டு வரவேண்டும்.

சனி, 27 டிசம்பர், 2014

பூமணியின் 'அஞ்ஞாடி' நாவல்: சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு..

திருநெல்வேலி: நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் பூமணியின் 'அஞ்ஞாடி' நாவலுக்கு இந்த ஆண்டுக்கான 'சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாவல் 2012ல் 'க்ரியா' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கடந்த 1895 முதல் 1900 வரை தென் மாவட்டங்களில் நடந்த வன்முறைகள் குறித்தும், அவை சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளையும் நெல்லையின் 'கரிசல்' பேச்சு வழக்கில் எழுதியுள்ளார். நேற்று, டில்லியில் 'சாகித்ய அகாடமி' அறிவிப்பு வெளியிட்டது. 67 வயதாகும் பூமணியின் இயற்பெயர் பூ.மாணிக்க வாசகம். தந்தை பூலித்துரை, தாயார் தேனம்மை; கோவில்பட்டி அருகே ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர். மனைவி செல்லம்மாளுடன் கோவில்பட்டியில் வசிக்கிறார். மகன் சிபிரவி, மகள் கவிதா சென்னையில் வசிக்கின்றனர். பூமணி, கூட்டுறவுத்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது முதல் சிறுகதை 'அறுப்பு' 1971ல் தாமரை இதழில் வெளியானது. வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதை தொகுப்புகளையும்; வெக்கை, நைவேத்யம், வாய்க்கால்கள் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். வெக்கை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இலக்கியச் சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 2011ல் விஷ்ணுபுரம் விருது பெற்றுள்ளார். தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம் பூக்கள் திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது. நெல்லை ஹாட்ரிக் சாதனை: சாகித்ய அகாடமி விருது துவக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் இன்பம் படைப்புக்கு விருது கிடைத்தது. 1965ல் ஸ்ரீராமானுஜர் என்ற நூலுக்காக பி.ஸ்ரீஆச்சார்யா; 1970ல் கு.அழகிரிசாமியின் அன்பழைப்பு; 1978ல் வல்லிக்கண்ணனின் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்; 1983ல் தொ.மு.சி.ரகுநாதனின் பாரதியின் காலமும் கருத்தும்; 1990ல் சு.சமுத்திரத்தின் வேரில் பழுத்த பலா; 1991ல் கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள்; 1992ல் தோப்பில் முகம்மதுமீரானின் சாய்வு நாற்காலி; 2012ல் செல்வராஜின் தோல்; 2013ல் ஜோ டீ குரூசின் கொற்கை நாவல் ஆகியவற்றிற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக நெல்லையை சேர்ந்தவர்களே இந்த விருது பெறுகின்றனர்.

பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது...

தற்போது பரிசுபெற்றிருக்கும் அஞ்ஞாடி, க்ரியா பதிப்பகத்தால் 2012ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
கரிசல்காட்டின் நூற்றி ஐம்பது ஆண்டு கால வரலாற்றை பின்னணியாகக் கொண்ட இந்த நாவலுக்காக 8 ஆண்டுகளுக்கும் மேலாக பூமணி ஆய்வுமேற்கொண்டார். கலைகளுக்கான இந்திய அறக்கட்டளை இந்த ஆய்வுக்காக கணிசமான தொகையை 2004ஆம் ஆண்டில் மானியமாக அளித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் 1947ல் பிறந்த பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம்.
கரிசல்காடு என்று அழைக்கப்படும் கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதியின் வாழ்க்கையை குறிப்பாக அப்பகுதியின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை தன் படைப்புகளின் பின்னணியாகக் கொண்டிருந்தார் பூமணி.
இவரது முதல் நாவலான பிறகு வெளிவந்தபோது, இலக்கிய உலகில் பெரும் பரபரப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
பூமணி இதுவரை வெக்கை, பிறகு, வரப்புகள், வாய்க்கால், நைவேத்தியம், அஞ்ஞாடி உள்ளிட்ட நாவல்களையும் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.
இவ்வளவு விரிவான ஆய்வில் அடிப்படையில் தமிழில் இதுவரை வேறு எந்த நாவலும் வரவில்லை என்கிறார் இதனை வெளியிட்ட க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாளர் எஸ் ராமகிருஷ்ணன்.
பரிசை வென்றிருக்கும் இந்த நாவலில் 1880களில் தமிழகத்தை உலுக்கிய தாது வருஷப் பஞ்சமும் தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் ஜாதிக் கலவரங்களும் மிகச் சிறப்பாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
அடித்தட்டு மக்கள்தான் தன் படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறார்கள் என்கிறார் விருதை வென்றிருக்கும் பூமணி. ஆய்வுகளின் அடிப்படையில் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற போக்கு தமிழில் இல்லை என்ற கருத்தையும் முன்வைக்கிறார் அவர்.
தமிழ் இலக்கியத்தில் மனம் சார்ந்தே படைப்புகள் வெளிவந்துகொண்டிருந்த நிலம் சார்ந்து படைப்புகளை முதன் முதலில் முன்வைத்த எழுத்தாளர் பூமணிதான் என்கிறார் கவிஞரும் விமர்சகருமான எழுத்தாளர் சுகுமாரன்.
தற்போது கோவில்பட்டியில் வசித்துவரும் பூமணி, கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இவருடைய வெக்கை நாவல் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
புவியரசு, சிவசங்கரி, ஈரோடு தமிழன்பன் ஆகியரைக் கொண்ட நடுவர் குழு பூமணியைத் தேர்வுசெய்த்து. இந்த விருது, மார்ச் 9ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

'அஞ்ஞாடி' நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது..

அஞ்ஞாடி நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி.
'அஞ்ஞாடி' நாவலுக்காக தமிழ் எழுத்தாளர் பூமணிக்கு 2014ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தலித் படைப்பிலக்கியம் என்ற வகைமை உருவாகும் முன்பே ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பின்னணியாக கொண்டு ‘பிறகு’ என்ற கலாபூர்வமான நாவலை எழுதியவர் பூமணி.
சிறுகதை, மொழிபெயர்ப்பு, சினிமா என பல தளங்களில் இயங்கிவரும் கரிசல் காட்டுப் படைப்பாளியான பூமணி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து எழுதிய பிரமாண்ட வரலாற்று நாவலான ‘அஞ்ஞாடி’-க்கு 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. வருடாவருடம் சர்ச்சைக்குள்ளாகும் சாகித்ய அகாடமி விருது சிறந்த எழுத்தாளரான பூமணிக்கு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்நாவலை ஒரு கலைப்படைப்பாகவும் மானுடவியல் ஆவணமாகவும், வெவ்வேறு சமூகங்களின் வரலாற்று நூலாகவும் வாசிக்க முடியும். தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கற்பனை கிராமமான கலிங்கல் என்ற ஊரில் ஒடுக்கப்பட்ட இரு சாதிகளைச் சேர்ந்த ஆண்டி மற்றும் மாரி என்ற இரு மனிதர்களின் குழந்தைப்பருவத்தில் இருந்து நாவல் தொடங்குகிறது. காலம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி. இந்திராகாந்திப் படுகொலையில் நாவல் முடிகிறது. இந்தக் காலப்பகுதியில், ஒரு ஊர் மற்றும் இரு குடும்பத்தினரின் வம்சபுராணமாக இந்த நாவல் இருந்திருந்தால் தமிழின் எதார்த்த நாவல்களில் பத்தோடு பதினொன்றாக இப்படைப்பு இருந்திருக்கும்.

ஆனால் 19-ம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம் தொடங்கி, பாண்டியர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களின் யுத்தங்கள், ஜமீன்கள் உருவாக்கம், கழுகுமலை மற்றும் சிவகாசி சாதிக்கலவரங்கள், நாடார் மக்களின் எழுச்சி, ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம்கூட்டமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்போக்குகள் என ஆயிரம் ஆண்டு வரலாற்றைக் கதைகளோடு புதைத்து வைத்துள்ளது இந்த நாவல்.

19 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தாதுவருஷப் பஞ்சங்களின் போது மக்கள் அவதிப்பட்ட அனுபவங்களை அஞ்ஞாடி போல இவ்வளவு தீவிரமாக வேறு எந்த நாவலாவது பதிவுசெய்திருக்குமா என்று தெரியவில்லை. சமீபத்தில் வெளியான ஜெயமோகனின் வெள்ளையானையிலும் தாதுவருஷ பஞ்சம் சித்தரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போர்கள், சண்டைகள், மோதல்களுக்கு நடுவில் ரத்தமும் சதையுமாக அஞ்ஞாடி நாவலில் கதாபாத்திரங்கள் உலாவருகின்றனர். கிராமிய வாழ்க்கை நோக்குகள் கரிசல் மொழியில் அங்கதத்துடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்து போன காலகட்டத்தின் வாழ்வாதாரம் மற்றும் பொருள்சார் கலாசாரத்தைத் தெரிந்துகொள்ளும் களஞ்சியமாகவும் இந்நாவலை வாசிக்கமுடியும்.

மொழிக்கு, பண்பாட்டுக்கு ஒரு படைப்பாளியின் கொடை இதுவாகவே இருக்கமுடியும். பூமணி அதை தனது ‘அஞ்ஞாடி’ நாவலின் மூலம் சரியாகவே சாதித்துள்ளார். பூமணிக்கு வாழ்த்துகள்.

எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். இவர் 1947-ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

பிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது...

பிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய உலகில் மிக உயரிய விருது என்ற அங்கீகாரம், சாகித்ய அகாடமி விருதுக்கு உண்டு. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும், பாராட்டுப்பத்திரத்தையும் கொண்டதாகும். இந்த விருது, படைப்பாளிகளின் கனவாக உள்ளது.

இந்த ஆண்டு 20 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது குறித்த அறிவிப்பு, டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் தமிழ் மொழிக்கான விருது, பிரபல எழுத்தாளர் பூமணி (வயது 68) எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘அஞ்ஞாடி’ நாவலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1,066 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.925.

இந்த நாவல், தமிழ்நாட்டில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் இரு சாதிக்கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், சமுதாயத்தின் ஒவ்வொரு தளத்திலும் நிகழ்கிற வன்முறை, மனிதர்களைப் பிரிக்கிற வன்முறையின் இடையேயும் இழையோடுகிற ஆண்டி-மாரி என்னும் இருவரிடையேயான தூய நட்பு, மண்ணையும், மனிதர்களையும் பிணைக்கிற அன்றாட வாழ்வின் அற்புதங்கள் ஆகியவற்றை சித்தரிக்கிறது. 10 ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து, தனக்கே உரித்தான அற்புதமான நடையில் பூமணி எழுதி உள்ளார்.

வரும் மார்ச் மாதம், 9-ந்தேதி டெல்லியில் நடக்கிற விழாவில் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

எழுத்தாளர் பூமணி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்க வாசகம். விருதுநகர் செந்திகுமார் நாடார் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் படித்து, கூட்டுறவு துறையில் வேலைக்கு சேர்ந்தார். 2005-ம் ஆண்டில் கூட்டுறவு துணை பதிவாளராக சென்னையில், பணி ஓய்வு பெற்ற அவர், அதன்பின்னர் கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.

இவருக்கு செல்வம் என்ற மனைவியும், கவிதா என்ற மகளும், சிபி, ரவி ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மகள், மகன்களுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்கள்.

சிறுவயதிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த பூமணிக்கு, ஏற்கனவே பல விருதுகள் கிடைத்து இருக்கின்றன. அதில் ‘அஞ்ஞாடி’ நாவலுக்கு மட்டும் 6 விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து எழுத்தாளர் பூமணி கூறியதாவது:-

பள்ளிக்கூடம், கல்லூரியில் படித்த போதே இலக்கிய ஆர்வம் இருந்தாலும், 1966-ம் ஆண்டில் கவிதை, சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். பின்னர் நாவல் எழுதும் ஆவல் ஏற்பட்டது.

‘பிறகு’, ‘வெட்கம்’, ‘நைவேத்யம்‘, ‘வரப்புகள்’, ‘வாய்க்கால்’ என்று வரிசையாக பல நாவல்கள் எழுதினேன். அதன் பின்பு எழுதப்பட்டதுதான் ‘அஞ்ஞாடி’ நாவல்.

வரலாற்று பின்னணியை கொண்டது என்பதால், அஞ்ஞாடி என்று பெயரிட்டேன். பலதரப்பட்ட தகவல்களும் அடக்கம் என்பதாலேயே, அதற்கு அவ்வாறு பெயர் வைத்தேன். ‘அம்மாடி’ என்று கிராமத்தில் அடிக்கடி கூறுவார்கள். அதன் தழுவலாகவும் இந்த சொல்லை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நாவலுக்கு மிகப்பெரிய விருதான சாகித்ய அகாடமி விருது கிடைத்து இருக்கிறது. இதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த சமயத்தில் எனது எழுத்துக்கு ஊக்கம், ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு எழுத்தாளர் பூமணி கூறினார்.

மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களுக்கு மள்ளர் மீட்பு, களத்தின் 3ம்ஆண்டு வீரவணக்கம்

விருதுநகர் ..டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கலப்பு திருமணம் தம்பதிகளை காக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் இன்று திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களை காக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்தியாவிலேயே முற்போக்கு மாநிலமாக தமிழகம் விளங்கி வந்தது.
பெரியார் லட்சியத்தின் அடிப்படியில் இங்கு சீர்திருத்த திருமணம் நடந்தது. இதை ஆதரிக்கும் வகையில் திமுக ஆட்சியில் பல்வேறு உதவிகள் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அண்மை காலமாக கலப்பு திருமணங்களை தடுக்கும் வகையில் கெளரவ கொலைகள் நடக்கிறது. கெளரவக் கொலைகளை தடுக்க, ஜாதிக்கலவரங்களை தடுத்து நிறுத்த, புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

காதல் மணம் செய்த அமிர்தவள்ளி கௌரவ கொலை -கண்டன ஆர்ப்பாட்டம் --டிசம்பர் 27 - திருவாரூர்
டிசம்பர் 11ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் கீழையூர் கிராமம் தேவேந்திர குல சமுதாய அமிர்த வள்ளி என்ற பெண்மணியும் அதே கிராமத்து வன்னியர் சமுதாய இளைஞரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரு ஆண்டு காலத்துக்கு மேலாக திருப்பூரில் அவர்களுடைய மூன்று மாத கை குழந்தையுடன் வாழ்ந்துவந்தனர். அவ்மூவரையும் வஞ்சகமாக அவர்கள் சொந்த ஊருக்கே வரவழைத்து அப்பெண்மணியின் கணவரின் சகோதர்கள் கொடுரமான வகையில் மூவரையும் கொலை செய்தனர். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை திருமணம் செய்தார் என்பதற்க்காகவே தனது சொந்த குடும்பத்தினராலே பச்சிளம் குழந்தையையும் சேர்த்து கொன்று குவித்த சம்பவம் தமிழ் சமுதாயத்திற்கும் இந்திய நாட்டுக்கும் சர்வதேச அளவில் ஒரு அவமானத்தை உருவாக்க கூடிய நிகழ்வாகும். இக்கொடூர சம்பவத்தை கண்டிக கூடிய வகையில் டிசம்பர் 27ஆம் தேதி திருவாரூர் தபால் அலுவுலகம் முன் புதிய தமிழகம் சார்பாக ஆர்பாட்டம் நிறுவனர் - தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நலைபெற்றது.

மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களுக்கு 3ம்ஆண்டு வீரவணக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

காதல் மணம் செய்த அமிர்தவள்ளி கௌரவ கொலை -கண்டன ஆர்ப்பாட்டம் --டிசம்பர் 27 - திருவாரூர்
டிசம்பர் 11ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் கீழையூர் கிராமம் தேவேந்திர குல சமுதாய அமிர்த வள்ளி என்ற பெண்மணியும் அதே கிராமத்து வன்னியர் சமுதாய இளைஞரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரு ஆண்டு காலத்துக்கு மேலாக திருப்பூரில் அவர்களுடைய மூன்று மாத கை குழந்தையுடன் வாழ்ந்துவந்தனர். அவ்மூவரையும் வஞ்சகமாக அவர்கள் சொந்த ஊருக்கே வரவழைத்து அப்பெண்மணியின் கணவரின் சகோதர்கள் கொடுரமான வகையில் மூவரையும் கொலை செய்தனர். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை திருமணம் செய்தார் என்பதற்க்காகவே தனது சொந்த குடும்பத்தினராலே பச்சிளம் குழந்தையையும் சேர்த்து கொன்று குவித்த சம்பவம் தமிழ் சமுதாயத்திற்கும் இந்திய நாட்டுக்கும் சர்வதேச அளவில் ஒரு அவமானத்தை உருவாக்க கூடிய நிகழ்வாகும். இக்கொடூர சம்பவத்தை கண்டிக கூடிய வகையில் டிசம்பர் 27ஆம் தேதி திருவாரூர் தபால் அலுவுலகம் முன் புதிய தமிழகம் சார்பாக ஆர்பாட்டம் .

திருவாரூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது.

திருவாரூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் ..புதிய தமிழகம் கட்சி சார்பில் ..நிறுவனர். டாக்டர் கிருஷ்ணசாமி..M.D.M.L.A. அவர்கள் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம்.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களை கைது செய்யக் கோரி கிருஷ்ணசாமி போராட்டம் ...

திருவாரூர் ..புதிய தமிழகம் கட்சி சார்பில் ..நிறுவனர். டாக்டர் கிருஷ்ணசாமி..M.D.M.L.A. அவர்கள் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் ..புதிய தமிழகம் கட்சி சார்பில் ..நிறுவனர். டாக்டர் கிருஷ்ணசாமி..M.D.M.L.A. அவர்கள் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் ..புதிய தமிழகம் கட்சி சார்பில் ..நிறுவனர். டாக்டர் கிருஷ்ணசாமி..M.D.M.L.A. அவர்கள் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம்.

மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களை கைது செய்யக் கோரி கிருஷ்ணசாமி போராட்டம் ...

கரூர்: கரூரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவிற்குட்பட்ட பிச்சம்பட்டியில் கடந்த ஜூன் 23 ம் தேதி தற்காலிகமாக பணிக்கு சென்று வீடு திரும்பிய பள்ளி மாணவி வினிதாவை வெற்றிலை கொடிக்காலுக்கு தூக்கி சென்ற மர்ம நபர்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெண்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி., கற்பழித்து கொலை செய்யப்பட்ட மாணவி வினிதா வழக்கில் 6 மாதங்களாகியும் தமிழக காவல் துறை குற்றவாளிகளை கைது செய்யாதது என்பது குற்றவாளிகள் அரசியல் பின்புலம் உடையவர்களாக இருப்பதாக சந்தேகம் தெரிவித்த அவர் தலைநகரான டெல்லியில் இதே போன்ற வழக்கில் பொதுமக்கள் கடுமையாக போராடுவதும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்பட்டு வரும் சூழலில் தமிழகத்தில் மட்டும் கொலை, கொள்ளைகள் நடப்பது வழக்கமாகி வருகிறது. எனவே இவ்வழக்கை சி.பி.ஐ யிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என்றார்.மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களை கைது செய்யக் கோரி கிருஷ்ணசாமி போராட்டம்மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களை கைது செய்யக் கோரி கிருஷ்ணசாமி போராட்டம்

தஞ்சை மண்ணில் வீர வரலாறு படைத்த தேவேந்திரர்களுக்கு வீர வண்ணக்கம்

ஊர் உறங்கிய நேரம், உலகம் உறங்கிய நேரம், 46 வருடங்களுக்கு முன்பு டிசம்பர் 25 ஆம் நாள் நள்ளிரவில் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம், திருவாரூர் அருகே கீழ்வெண்மணி எனும் கிராமத்தில் முதியோர், பெண்கள் மற்றும் குழைந்தைகள் உட்பட 44கு தேவேந்திர குல வேளாளர்கள் ஒரே குடிசையில் வைத்துக் கொளுத்தபட்டார்கள் .
கொளுத்தியவன் கொழுத்த நிலபிரபு, வர்க்க மற்றும் சாதி ஆதிக்கம் நிறைந்த கொடூரன். கொலையுண்டவர்கள் ஏதுமற்ற நிராயுத பாணிகள். பகலெல்லாம் பண்ணையாரின் கழனியில் பாடுபட்டு இரவு திரும்பினால் அரைத் தூக்கம் போடுவதற்குக் கூட சொந்த வீடு அற்றவர்கள். பண்ணையார் படி அளந்தால் மட்டும் தான் அரை வயிறு கஞ்சியாவது குடிக்க முடியும் என்ற நிலையில் வாழ்ந்து வந்தவர்கள். பண்ணையாருக்கு நிகராக நின்று தாங்கள் பாடுபற்ற கூலியை கூடக் கேற்பதற்கு அருகதை அற்றவர்களாக வைக்கப் பட்டுஇருந்தவர்கள்
கல்வி இல்லை, சொந்த நிலம் இல்லை, பிறப்பால் உயர்வு இல்லை அரை அடிமைகளாகக் கருதப் பட்டவர்கள், ஒற்றுமை இல்லாமல் உணர்வற்று இருந்தவர்கள் . குடும்பத்தோடு நெல் களஞ்சியத்தில் பாடு பட்டும் அரை வயிர் பசி ஆற கூடக் கூலி கிடைக்காதவர்கள் ஒரு நாள் ஒன்று கூடினார்கள் அவர்கள் கேட்டது ஒரு நாளைக்கு அரைப் படி நெல் கூடுதலாக மட்டுமே. இதைக் கூடப் பொருத்துக் கொள்ள முடியாத பண்ணையார் கோபாலகிருஷ்ணன் நாயுடு கண்ணசைத்தார், அவரது அடியாட்கள் கூலி உயர்வு கேட்டவர்களைக் கூண்டோடு கொளுத்தினர். எந்த விதத்திலும் ஓடி தப்பிப் பிழைக்கத் திராணியற்ற முதியோர், குழந்தைகள், பெண்கள் என 44 பேரும் மாண்டனர்.
அவர்கள் ஆயுதம் தாங்கி எதிர்த்துப் போராடி வரலாறு படைக்கவில்லைதான், ஆனால் முதல்முறையாக பண்ணையாரை எதிர்த்த வீரவரலாற்றை தஞ்சை மண்ணில் பதித்தவர்கள், வீரமிகு தேவேந்திரர்கள் !! ஆதிக்கவர்கத்தினர் அவர்கள் உடலை கொளுத்தி இருக்கலாம், ஆனால் அவர்கள் எழுப்பிய உரிமை குரலை கொளுத்த முடியாது என்பதே வரலாறு . வர்க்கத்தை மறந்த சாதியமும், சாதியை மறந்த வர்க்கப் போராட்டமும் வெற்றி பெறாது என்று உலகிற்கு உணர்த்தியநாள் - டிசம்பர் 25
போராளிகளையும் தியாகிகளையும் கூலிகாரர்களாகக் சித்தரிப்பது கோழைத்தனம். அவர்கள் எழுச்சிமிகுச் சமுதாயத்தின் அடையாளம். எவர் அவர்களை மறப்பினும் புதிய தமிழகம் கட்சி மறவாது . டிசம்பர் 25 காலை 11 முதல் 12 மணி வரையிலும் அணைத்து மாவட்டங்களில் அவர்களின் 46வது நினைவு நாளை நினைவு கூறும் வகையில் 46 மெழுகுகளை ஏந்தி அஞ்சலி செலுத்துவோம். தியாகிகளைப் போற்றுவோம் !!

டிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம்.

டிசம்பர் 25 திருச்சி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் கீழ வெண் மணி தியாகிகளுக்கு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி..

டிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம்.