ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 24 அக்டோபர், 2012

மாமள்ளர் இராஜராஜ சோழனின் 1027 வது சதய விழா!!!


மள்ளர் குல மாமன்னனின் 1027 வது சதயவிழா
” தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு.

குடவோலை முறையை கொண்டுவந்தவனை,
ஈழம் முதல் இமயம் வரை வென்று, இமயத்தில் புலி இலச்சினையை பதித்தவனை,
சிங்கபூரிலும், மலேசியாவிலும், இலங்கையிலும் இன்று தமிழ் ஆட்சி மொழியாய் அலங்கரிக்கபடுவதற்கு காரணமானவனை,

வீராணம் ஏரி வெட்டி, கல்லணை எடுத்து கடலுக்கு வீணே போன காவிரி பிரவாகத்தை
உபயோகமாய் திருப்பி தமிழகத்தை செழிக்கச் செய்தவனை,
ஆயிரம் ஆண்டுகளாய் பெருமை குறையாமல் உறுதி குறையாமல் தமிழ்க் கலாச்சாரத்தை தலை நிமிரச்செய்து நிற்கும் தஞ்சாவூர் கோவிலைக் கட்டியவனை,

திரைகடல் ஓடிய தேசங்களிலெல்லாம் தமிழ் மனம் பரப்பியவனின்
1026 வது சதயவிழாவை கொண்டாட தஞ்சாவூர் நோக்கி தேவேந்திர குல மக்கள் அரசியல் பாகுபாடின்றி அலைகடலென ஆர்பரித்து அணிதிரள்வீர்.

மாமள்ளர் இராசராச சோழனின் 1027வது சதய விழா

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம், இலங்கை, இந்தோனேசியா, சுமத்திரா, ஜாவா, பர்மா, அந்தமான் நிகோபார் லட்ச தீவுகள் ஆகிய அனைத்தையும் ஒரு குடையின் கீழ் 30 ஆண்டு காலம் திறம்பட ஆண்டவனும்,
அறுபதாயிரம் யானைப்படையும்,
ஒரு லட்சம் குதிரைப் படையும்,
ஒன்றரை லட்சம் காலாட்படையும்,
ஆகியவற்றை உள்ளடக்கிய வலிமையான இராணுவத்தை கொண்டவனும்,
இந்தியாவின் முதற் கப்பற்படை கட்டியவனும்,
கடல் கடந்து நாடுகளை வென்றவனும்,
தஞ்சை, உறையூர் மற்றும் காஞ்சி மூன்று தலைநகரையும் கொண்ட தமிழ் நாட்டை அமைத்தவனும்,
இந்தியாவின் தற்கால ஆட்சி முறைமையை அன்றே செயல்படுத்தியவனும்,
தென்னிந்தியாவின் தன்னிகரற்ற பேரரசனுமாகியவனும்,
மும்முடி சோழன் என்று அழைக்கப்பட்டவனுமாகிய
மாமள்ளர் இராஜராஜ சோழனின் 1027 வது (பிறந்தநாள்) சதய விழா 5 நவம்பர் 2011 அன்று தஞ்சையில் நடைபெற இருக்கிறது!!! இனமான மள்ளர்களே படை எடுத்து வா நம் மாமள்ளனின் நினைவை போற்றுவோம்!!

சுந்தரபாண்டியன்: உசிலம்பட்டி வழக்கா, தேவர் சாதி அழுக்கா?

தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் “பாண்டியன்”’ என்ற சொல், ரசிக இலக்கு யார் என்பதை கோடிட்டுக் காட்ட… முதல் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம் என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.
சசிகுமார்-சுந்தரபாண்டியன்
“சுந்தரபாண்டியன்”’ திரைப்படம் ஒன்றும் நாட்டை ‘திருத்த’ வந்த கருத்து சினிமா இல்லை. அப்படி அவர்களும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த திரைப்படம் மோசமான பிற்போக்குத்தனங்களையும், அசூசையான பிழைப்புவாதத்தையும் நேர்மறையில் உணர்த்துகிறது. அவற்றை அன்றாட வாழ்க்கையின் இயல்புகள் போல சித்தரிக்கிறது. காமடி, செண்டிமெண்ட் முதலான அதுவும் தேய்ந்து போன அரதப்பழசான காட்சிகளின் ஓட்டத்தில் பார்வையாளர்கள் அதை உணர்வாளர்களா என்பது சந்தேகம்தான்.
சுந்தர பாண்டியன்’ என்ற தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் “பாண்டியன்”’ என்ற சொல், இந்தப் படத்தின் ரசிக இலக்கு யார் என்பதை நமக்கு கோடிட்டுக் காட்ட… திரை விலகி ஆரம்பக் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம்’ என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.
“இதுதான் உசிலம்பட்டி”’ என்ற வாய்ஸ் ஓவரில் முத்துராமலிங்க தேவர் பெயர் பலகையுடன் துவங்குகிறது படம். சுவரில் போஸ்டர் ஒட்டும் ஒருவரை “எங்க ஆளுகளை தவிர யாரும் ஒட்டக்கூடாது… போ, போ’” என்று விரட்டிவிடுகிறார் ஒரு வயதானவர். தமிழ்நாட்டில் எவ்வளவோ நடிகர்கள் இருந்தாலும் இவர்களுக்கு பிரபுவும், கார்த்திக்கும்தான் ஸ்டார்கள்’ என்கிறது குரல். இருவரும் தேவர் சாதி நடிகர்கள் என்பது நமக்கு உணர்த்தப்படுகிறது. “தமிழ்நாட்டில் ஆயிர கட்சிகள் இருந்தாலும் இவர்கள் வட இந்திய தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்துவார்கள். நேதாஜிதான் இவர்களுக்குத் தலைவர்”’ என்கிறார்கள். ஃபார்வர்டு பிளாக் பற்றியும் முத்துராமலிங்க தேவர் பற்றியும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.
“எவ்வளவு பாசக்காரய்ங்களோ, அதே அளவுக்கு கோபக்காரய்ங்க. குலசாமியா நினைச்சு வளர்க்கும் பொண்ணுங்க மனசை காதல், அது இதுன்னு எவனாவது கெடுத்துட்டா என்ன செய்வாங்க தெரியுமா?”’ என குரல் நிறுத்த.. இளைஞர் ஒருவரை கருவேலங்காட்டுக்குள் சுற்றி வளைத்து வெட்டிக் கொல்கிறது ஒரு கும்பல். “குல கவுரவத்த சீண்டுறவனை கருவருக்குற இடம் இதுதான்”’ என்கிறது குரல். எங்க கிட்ட மோதினா இதுதான் கதி’ என்று நமக்கு மிரட்டல் விடப்படுகிறது. சாதித் திமிரே பெருமிதமாக, ஒரு கொலையை நியாயப்படுத்தும் நீதியாக காட்டும் இந்தக் காட்சிகளை உசிலம்பட்டி பற்றிய டாக்குமென்டரி’ என்கிறார்கள் சிலர். ஆனால், இதுதான் உசிலம்பட்டியா? தேவர்கள் மட்டும்தான் உசிலம்பட்டியா?
ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களும் அதே உசிலம்பட்டியில்தான் வாழ்கின்றனர். பாப்பப்பட்டியும், கீரிப்பட்டியும் கூட உசிலம்பட்டிக்கு மிக அருகில்தான் இருக்கின்றன. இவர்கள் யாரும் அந்தக் காட்சியின் வரம்புக்குள் வரவில்லை. தலித்துக்களையும் இதர சாதி உழைக்கும் மக்களையும் கணக்கிலேயே எடுக்காமல் உசிலம்பட்டியின் ஒவ்வொரு அங்குலமும் தேவர் சாதிக்கு மட்டுமே பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதை போல “இதுதான் உசிலம்பட்டி”’ என்கிறார்கள்.
சுந்தரபாண்டியன்இதை விட முக்கியமானது.. இந்த சுந்தரபாண்டியன் படமாகட்டும்… இதேபோல அண்மை ஆண்டுகளாக மதுரையை மையப்படுத்தி வந்த மற்ற தேவர் சாதி படங்களாகட்டும்… அனைத்தும் தேவர் சாதிவெறி நடவடிக்கைகளை ஒரு நகைச்சுவையான அழகியலுடன் சித்தரிக்கின்றன. இதை ஒரு ரசனையாகவே மாற்றி வைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் அவரை நல்லவர் என்று நிறுவ வேண்டியதில்லை. ஏனெனில் ரசிகர்களின் மனங்களில் ஆல்ரெடி எம்.ஜி.ஆர் நல்லவராக இருக்கிறார். மிச்சக்கதையை சொன்னால் போதும். அதுபோல கடந்த கால தேவர் சாதி பெருமித படங்கள், அந்த சாதி வெறியை ரசிக்க பழக்கப்படுத்தியிருக்கின்றன. அந்த அஸ்திவாரத்தில்தான் சுந்தரபாண்டியன் எழுந்து நிற்கிறது.
கதாநாயகன் சசிகுமார் அந்த ஊரின் பெரிய குடும்பத்தின் பையன். வேலை வெட்டி எதுவும் இல்லை. நண்பர்களுக்கு உதவுவதையே முழுநேர வேலையாக செய்கிறார். அந்த ஊர் வழியே செல்லும் பேருந்தில் கல்லூரி சென்று வரும் ஹீரோயினை சசிகுமாரின் நண்பர் காதலிக்கிறார். அவருக்கு உதவ இவர் போக… அங்கு ஏற்கெனவே அதே பெண்ணை இன்னொருவர் காதலிக்கிறார். அந்த இன்னொருவர் சசிகுமாரின் நண்பனின் நண்பன். உடனே “நீ ஒரு மாசம், அவன் ஒரு மாசம்”’ என அந்த பெண்ணை காதலிப்பதற்கான வாய்ப்பை நண்பர்களுக்கு ஓப்பன் டெண்டர் விடுகிறார். ஆனால் தன்னை டெண்டர் விட்ட சசிகுமாரையே காதலிக்கிறாள் அந்தப் பெண். பிறகு ஒரு கொலை, அதற்கான பழிவாங்கல்… என்று போகிறது கதை. இதில் நாம் பல விஷயங்கள் பேசலாம் என்றாலும், முக்கியமானது கதாநாயகின் பாத்திரம்.
தன்னை இரண்டு பேர் காதலிக்கிறார்கள். அந்த இரண்டு பேரிடமும் ஆளுக்கு ஒரு மாதம் என தன்னை ஒருவன் ஏலம் விடுகிறான் என்பதை அறிந்ததும் ஒரு பெண்ணுக்கு கோபம் வர வேண்டாமா? சாதி, வர்க்கம், ஆண்&பெண் பேதம் எல்லாம் பிறகு. முதலில் சுயமரியாதையுடன், ‘என்னை ஏலம் விட நீ யாருடா நாயே?’ என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்? ஆனால் கதையின் நாயகியோ, தன்னை ஏலம் விட்டது தெரிந்த பிறகும் சசிக்குமார் மீது கோபப்படவில்லை. மாறாக அவரையே காதலிக்கிறார். காரணம், மூவரில் சசிகுமார்தான் பணக்காரர் என்பதாலா? சுயமரியாதை இழிவுபடுத்தப்படுவதை ஏற்கும் இந்த பெண்தான் நாயகி. செய்பவன் நாயகன்.
“யார் மீது காதல் வரும் என்று எப்படி சொல்ல முடியும்?”’ என்று கேட்கலாம். எனில் மற்ற இருவரையும் நிராகரித்துவிட்டு, சசிகுமாரை ஓ.கே. செய்வதற்கு கதைப்படி எந்த தர்க்க நியாயமும் இல்லையே?! அதுபோலவே, தனக்கு யார் மீது காதல் இருக்கிறது என்பதை அந்த பெண்தான் முடிவு செய்ய வேண்டும். சசிகுமாரோ, தனது நண்பர்களில் ஒருவரை காதலிக்குமாறு கட்டாயப்படுத்துகிறார். “பயலுகளை பின்னாடி சுத்த விடுறதுல உங்களுக்கு ஒரு சந்தோஷம்”’ என்ற தொனியில் கதாநாயகியை பார்த்து சசிகுமார் பேசும் வசனத்தை வேறு பல படங்களிலும் கேட்டிருக்கிறோம். ஆனால் கதாநாயகன்தான் வேலை வெட்டி இல்லாமல் எல்லா படங்களிலும் பல பெண்களின் பின்னால்தான் சுற்றுகிறான்.
பொறுக்கித்தனத்தை ஹீரோயிசமாக முன்னிருத்தும் தமிழ் சினிமா ஃபாமுலாவில் இருந்து துளியும் மாறாமல் இருக்கிறது சசிகுமாரின் பாத்திரம். நாம் அனைவரும் வேலைபார்த்துதான் வாழ்கிறோம். சுந்தரபாண்டியன் படத்தை பார்க்கும் ரசிகர்களும் ஏதோ ஒரு வேலை பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் படத்தின் கதாநாயகனுக்கோ எந்த வேலைவெட்டியும் இல்லை. எந்த வேலையுமே இல்லாமல் ஒருவன் எப்படி இருக்க முடியும்? இருக்கிறான். நாமும் அதை ஏற்றுக்கொள்கிறோம். அவருக்கு மட்டுமில்லை… சசிகுமாரின் நண்பர்களுக்கும் வேலை இல்லை. அவர்கள் வேலை பார்ப்பது போல் ஒரு காட்சி கூட இல்லை. அவர்களின் வேலை எல்லாம் டீக்கடையில் அமர்ந்துகொண்டு பெண்களை கிண்டல் செய்வது, பேருந்தில் வரும் பெண்களை சைட் அடிப்பது, காதலில் கஷ்டப்படும் நண்பர்களுக்கு உதவுவது… இவைதான்.
இதில் அப்புக்குட்டியின் கதாபாத்திரம் தோற்றத்தை வைத்து மோசமாக கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது. குட்டையான, குண்டான, கருப்பான அப்புக்குட்டி மாதிரியான ஆண்கள், அழகிய’ பெண்களை கனவில் கூட நினைத்துப் பார்ப்பது தப்பு என்கிறார் இயக்குநர். இங்கும் இயக்குநருக்கு கை கொடுப்பது முந்தைய ‘எம்.ஜி.ஆர் உதாரணம்’தான். “அழகற்ற அசிங்கமான ஆண்கள் அழகான பெண்களை விரும்புவது கிண்டலுக்குரியது”’ என்பது ஏற்கெனவே ரசிக மனதில் பதிந்திருப்பதால் இயக்குநர் அதை பயன்படுத்தி அந்த கிண்டலை வில்லத்தனமாக மாற்றுகிறார். இதனால் அப்பு குட்டி போன்ற தோற்றத்தில் ‘அழகில்லாதவர்கள்’ குரூர குணம் கொண்டவர்களாக இப்படம் உணர்த்துகிறது. ஆனால் தான் காதலிக்கும் பெண்ணுக்காய் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடும் அப்புக்குட்டி வில்லன் என்றால் ஒரு காலத்தில் காதலித்த பெண்ணை மற்ற இருவரிடமும் ஏலம் விடும் சசிகுமார் யார்?
சுந்தரபாண்டியன்-2அக்காவையும், தங்கையையும் ஒருசேர திருமணம் செய்துகொண்டவர் சசிகுமாரின் அப்பா. வழக்கொழிந்து போய்விட்ட இருதார மணம் எந்த விமர்சனமுமின்றி அழகியல் அம்சமாக காட்டப்படுகின்றது. கதைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத இந்த காட்சி எதற்கென தெரியவில்லை. ஒருவேளை ஊரில் உள்ள பெண்களை எல்லாம் கிண்டல் செய்து திரியும் சசிகுமாரின் பாத்திரத்தை நியாயப்படுத்த அப்பாவையும் அதேபோல மைனர் குஞ்சுவாக அமைத்திருக்கிறார்களோ என்னவோ…  ஆனால் இந்த மைனர் குஞ்சுகள் படத்தில் நெஞ்சு நிமிர்த்திய கனவான்களாக வரும்போதுதான் சகிக்க முடியவில்லை.
சசிகுமார் பாத்திரம் திருமணம் ஆன, ஆகாத முறைப் பெண்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்கிறது. இப்படிப்பட்ட காட்சிகளை இப்போதும் நாம் கிராமங்களில் காணலாம். ஆனால் அந்த முறைப்பையன்கள் யாரும் அந்த முறைப்பெண்களை திருமணம் செய்துகொள்வது இல்லை. கிண்டல் செய்வதற்கு மட்டும் அவர்கள்.. திருமணம் செய்துகொள்ள தங்கள் வசதிக்கு ஏற்ற வேறு பெண்கள்… என காரியவாதமாக பிரித்துக் கொள்கிறார்கள். சுந்தரபாண்டியனிலும் அப்படித்தான். ‘மாமா, மாமா’ என்று சசிகுமாரையே சுற்றி வரும் பக்கத்து வீட்டுப் பெண்ணை கிண்டல் செய்யும் எல்லையில் நிறுத்தி வைக்கும் சசிகுமார், தன் சொந்த சாதியில், தனக்கு இணையான வசதியில் உள்ள பெண்ணையே திருமணத்துக்கு தேர்ந்தெடுக்கிறார்.
எந்த விழுமியங்களுமற்ற நட்பு, காரியவாதமான காதல், பெண்களை அசிங்கப்படுத்தும் பாத்திரப் படைப்பு, தோற்றத்தை வைத்து கீழ்மைப்படுத்தும் வக்கிரம், சாதித் திமிர் என அனைத்து வகையான பிற்போக்குத்தனங்களையும் சிறு விமர்சனமும் இல்லாமல் நேர்மறையில் அணுகும் இந்தப் படத்தை சிலர் பயங்கர ஜாலியான படம் என்கிறார்கள். வலையுலகிலும், சமூக வலைதளங்களிலும் குடும்பத்துடன் இந்தப் படத்தை பார்க்கச் சொல்லி பரிந்துரைக்கின்றனர்.
அவர்களிடம்…. இதே கதையை இப்படி எடுக்க முடியுமா என்று பாருங்களேன்… ‘இதுதான் பரமக்குடி…’ என்று வாய்ஸ் ஓவர் துவங்குகிறது. இமானுவேல் சேகரன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. தேவர் படம் போட்ட போஸ்டர் ஒட்ட வரும் இளைஞர்களை ‘ஏம்பா.. யாருப்பா இங்கே போஸ்டர் ஒட்டுறது.. எங்க ஆளுக மட்டும்தான் ஒட்டனும்’ என்று ஒரு பெரியவர் விரட்டிவிடுகிறார். படம் நெடுக காட்டப்படும் தேவர் குறியீடுகளுக்கு மாற்றாக அம்பேத்கர், இமானுவேல் சேகரன் படங்கள் காட்டப்படுகின்றன. ஒரு பெண், திருமணம் ஆன/ஆகாத தன் முறை பையன்களை எல்லாம் கிண்டல் செய்கிறாள். சாத்தியமா இவை எல்லாம்? கிரியேட்டரின்’ மூளையே இந்த சிந்தனையை சுய தணிக்கை செய்துவிடும். அதை மீறி வெளியே வந்தால் தணிக்கைத்துறை தாளித்துவிடும்.
உசிலம்பட்டி பற்றி வரும் துவக்கக்காட்சியை அப்படியே கத்தரித்துவிட்டாலும் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அந்தக் காட்சியை வலுக்கட்டாயமாக திணித்து, “இது அசல் தேவர் சினிமா”’ என்று உணர்த்தி, குறைந்தப்பட்ச சந்தையை பிடிக்கிறார்கள். ஆகவே சுந்தரபாண்டியன் மற்றுமொரு குடும்பப்படம் அல்ல. இது ஒரு திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஆபத்தான அழுக்கான சினிமா! மதுரை வழக்கில் மயங்கியவர்கள் அந்த அழுக்கின் வீச்சை உணரவேண்டும்.

மாமள்ளர் இராசராச சோழனின் 1027வது சதய விழா

  தஞ்சை தரணி ஆண்ட பேரரசன் மாமள்ளர் இராசராச சோழனின் 1027வது சதய விழாவிற்கு வருகை தரும் தேவேந்திரகுல சொந்தங்களே வருக வருக
எங்கள் முப்பாட்டன் தஞ்சை தரணி ஆண்ட பேரரசன் மாமள்ளர் இராசராச சோழனின் 1027வது சதய விழாவிற்கு வருகை தரும் தேவேந்திரகுல சொந்தங்களே வருக வருக

ராஜ ராஜ சோழ தேவேந்திரர் கல்லறை -ஒரு ரிப்போர்ட் (படங்களுடன்

)

ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாள் ஊருக்கு செல்வேன் இந்த தடவை ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கும் போது நண்பன் ஒருவனின் தொலைபேசி அழைப்பு.அதாவது கும்பகோணத்திற்கு அருகில் ஒரு கிராமத்தில் ராஜராஜ சோழன் கல்லறை இருப்பதாகவும் அதை ஒரு பெரியவர் பராமரித்து வருவதாகவும் அதை அவசியம் பார்க்கவேண்டும் என்று சொல்ல அப்போதே ஆர்வம் தொற்றி கொண்டது...!

எனக்கு அதுபுதிய தகவல்..!



சரி..! இந்த தடவை ஊருக்கு போகும்போது அவசியம் போய் பார்த்து அதை பதிவெழுத முடிவு செய்தாகிவிட்டது . எங்கள் ருக்கு கும்பகோணம் வழியேதான் செல்ல வேண்டும் ஊருக்கு போய்விட்டு திரும்ப கும்பகோணம் வரவேண்டுமெனில் அறுபது கிலோ மீட்டர் வரவேண்டும். எனக்கு அதுவரை பொறுமை இல்லை காலையில் கும்பகோணத்தில் றங்கியவுடன் குளிக்க கூட இல்லாமல் ஒரு ஆட்டோ பிடித்து அந்த இடம் நோக்கி புறப்பட்டுவிட்டேன் ஒரு நல்ல விவரமான ஆட்டோக்காரர் கிடைத்தார்.


உடையாளூர்



இந்த உடையாளூர் என்ற ஊரில்தான் அந்த நினைவிடம் இருக்கிறது .
கும்பகோணம் மகாமக குளம் தண்டி ஆட்டோ செல்கிறது. இதுபோன்ற ஒரு இடத்திற்கு நான் தனியே சென்றதில்லை மனதில் ஒரு இனம்புரியாத உணர்வு.


பொன்னியின் செல்வன் படித்ததிலிருந்து முன் பிறவியில் ஒரு சோழமன்னர் என்ற நினைப்பு வேறு எனக்கு..! குறைந்த பட்சம் ஒரு சோழ படைவீரனாக இருந்திருப்பேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை..!



உடையாளூர் நெருங்க நெருங்க ஒரு அவசரம் ,ஆர்வம் எல்லாம் தொற்றிகொள்கிறது அந்த இடத்தை பற்றிய ஒருமாதிரியான கற்பனையுடன் செல்கிறேன்.

தனது கட்டிட கலையால் உலகையே திரும்பிபார்க்கவைத்த ஒரு மாமன்னனின் கல்லறையாக சொல்லப்படும் இடம் இதுதான்.!


மிகவும் சாதாரணமாக ஒரு சிறிய ஓலை கொட்டகையில் இருக்கிறது இந்த நினைவிடம் ...!


இந்த நினைவிடத்தை பராமரித்து வரும் பெரியவர்







பக்கிரி சாமி என்ற இந்த பெரியவர்தான் இந்த நினைவிடத்திற்கு பூஜை செய்து பராமரித்து வருகிறார் இந்த பெரியவர் சொன்ன சில முக்கிய தகவல்கள் ...!



இந்த இடம்தான் ராஜராஜனின் நினைவிடம் என்று ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டு உள்ளது ..!
இந்த இடத்தில் முன்னர் ஒரு கோவில் இருந்ததாகவும் 1960 ஆம் வருடம் ஏற்பட்ட மிக பெரிய வெள்ளபெருக்கில் கோயில் புதையுண்டதாக சொன்னார்..!

இந்த இடத்தை பற்றி முதலில் கேள்விப்பட்டு வந்த அதிகாரிகள் ஒரு அமைச்சர் ,மாவட்ட கலெக்டர் ஆகியோர் முன்னிலையில் ஒரு போக் லைன் எந்திரத்தின் மூலம் சுமார் ஒரு பதினைந்து அடி ஆழம் தோண்டி பார்த்தார்களாம் உள்ளே ஒரு கட்டிடம் போன்று இருந்து இருக்கிறது . இந்த இடத்தை தோண்டிய அதேவேளையில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் திருவாரூரில் வெட்டி கொலை செய்ய படுகிறார் உடனே இந்த இடத்தை தோண்டிய அதிகாரிகள் அப சகுனமாக கருதி அந்த இடத்தை மூடி சென்று விட்டதாக அந்த பெரியவர் சொன்னார் . தஞ்சை பெரிய கோயிலுக்குள் ஆட்சியில் இருபவர்கள் சென்றால் ஆட்சி பறிபோய்விடும் என்ற ஒரு தகவல் உள்ளது சில சம்பவங்கள் அப்படி நடந்தும் உள்ளது இந்த காரணத்தால் இந்த இடத்தை தோண்டியவர்கள் கொலை சம்பவத்தை அப சகுனமாக நினைத்திருக்கலாம்..!

பல முக்கியஸ்தர்கள் இந்த இடத்திற்கு வந்து சென்று உள்ளனர் சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் சீமான் வந்து போனாராம்..!

இங்கே ஒரு குறிப்பேடு வைத்து உள்ளனர் இங்கே வந்த பலர் தங்கள் கருத்துகளை இதில் எழுதி வைத்து உள்ளனர் ...!

மேலும் இந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்ட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக சொன்னார் இந்த பெரியவர்..!

தஞ்சைப்பெரியக்கோவில், சதயத்திருவிழா, தஞ்சாவூர்,

படிமம்:Sadhaya Vizha, Thanjai periya kovil.jpg

ராஜராஜனின் 1,027வது சதய விழா தஞ்சையில் கோலாகலம்!



 



Tomarrow 25.10.2012 evening 3.00pm ku start.... Live telecast in Maamallar Rajaraja chola Devendrar 1027th sathaya (birthday) function...
.

திங்கள், 22 அக்டோபர், 2012

- மாவட்ட ஆட்சியருடன் டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு :

தூத்துக்குடி, : ஓட்டப்பிடாரம் மற்றும் கருங்குளம் பகுதிகளில் நிலத்தடி நீர் கடத்தல் தொடர்வதாக கிருஷ்ணசாமி எம்எல்ஏ கலெக்டரிடம் மனு அளித்தார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் ஆஷிஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 386 ஊராட்சிகளில் 160 ஊராட்சிகளில் நிலத்தடி நீர் மோசமான நிலையில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கருங்குளம், புதுக்கோட்டை, புதியம்புத்தூர், பகுதிகளில் நிலத்தடி நீரை லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
இதுகுறித்து போராட் டம் நடத்தியபோது லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்ல வருவாய் கோட்டாட்சியர் தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால், நிலத்தடி நீர் கடத்தப்படுவது தொடர்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரி டம் மனு கொடுத்துள் ளோம்.
மனுவை பரிசீலித்த கலெக்டர், லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினா

ஓட்டப்பிடாரம், கருங்குளம் பகுதிகளில் நிலத்தடி நீர் கடத்தல் தொடர்கிறது கிருஷ்ணசாமி எம்எல்ஏ புகார்

தூத்துக்குடி, : ஓட்டப்பிடாரம் மற்றும் கருங்குளம் பகுதிகளில் நிலத்தடி நீர் கடத்தல் தொடர்வதாக கிருஷ்ணசாமி எம்எல்ஏ கலெக்டரிடம் மனு அளித்தார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் ஆஷிஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 386 ஊராட்சிகளில் 160 ஊராட்சிகளில் நிலத்தடி நீர் மோசமான நிலையில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கருங்குளம், புதுக்கோட்டை, புதியம்புத்தூர், பகுதிகளில் நிலத்தடி நீரை லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
இதுகுறித்து போராட் டம் நடத்தியபோது லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்ல வருவாய் கோட்டாட்சியர் தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால், நிலத்தடி நீர் கடத்தப்படுவது தொடர்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரி டம் மனு கொடுத்துள் ளோம்.
மனுவை பரிசீலித்த கலெக்டர், லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினா

ஓட்டப்பிடாரம், கருங்குளம் பகுதிகளில் நிலத்தடி நீர் கடத்தல் தொடர்கிறது கிருஷ்ணசாமி எம்எல்ஏ புகார்

தூத்துக்குடி, : ஓட்டப்பிடாரம் மற்றும் கருங்குளம் பகுதிகளில் நிலத்தடி நீர் கடத்தல் தொடர்வதாக கிருஷ்ணசாமி எம்எல்ஏ கலெக்டரிடம் மனு அளித்தார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் ஆஷிஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 386 ஊராட்சிகளில் 160 ஊராட்சிகளில் நிலத்தடி நீர் மோசமான நிலையில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கருங்குளம், புதுக்கோட்டை, புதியம்புத்தூர், பகுதிகளில் நிலத்தடி நீரை லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
இதுகுறித்து போராட் டம் நடத்தியபோது லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்ல வருவாய் கோட்டாட்சியர் தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால், நிலத்தடி நீர் கடத்தப்படுவது தொடர்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரி டம் மனு கொடுத்துள் ளோம்.
மனுவை பரிசீலித்த கலெக்டர், லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினா

ஓட்டப்பிடாரம், கருங்குளம் பகுதிகளில் நிலத்தடி நீர் கடத்தல் தொடர்கிறது கிருஷ்ணசாமி எம்எல்ஏ புகார்

தூத்துக்குடி, : ஓட்டப்பிடாரம் மற்றும் கருங்குளம் பகுதிகளில் நிலத்தடி நீர் கடத்தல் தொடர்வதாக கிருஷ்ணசாமி எம்எல்ஏ கலெக்டரிடம் மனு அளித்தார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் ஆஷிஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 386 ஊராட்சிகளில் 160 ஊராட்சிகளில் நிலத்தடி நீர் மோசமான நிலையில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கருங்குளம், புதுக்கோட்டை, புதியம்புத்தூர், பகுதிகளில் நிலத்தடி நீரை லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
இதுகுறித்து போராட் டம் நடத்தியபோது லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்ல வருவாய் கோட்டாட்சியர் தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால், நிலத்தடி நீர் கடத்தப்படுவது தொடர்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரி டம் மனு கொடுத்துள் ளோம்.
மனுவை பரிசீலித்த கலெக்டர், லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினா

ஓட்டப்பிடாரம், கருங்குளம் பகுதிகளில் நிலத்தடி நீர் கடத்தல் தொடர்கிறது கிருஷ்ணசாமி எம்எல்ஏ புகார்

தூத்துக்குடி, : ஓட்டப்பிடாரம் மற்றும் கருங்குளம் பகுதிகளில் நிலத்தடி நீர் கடத்தல் தொடர்வதாக கிருஷ்ணசாமி எம்எல்ஏ கலெக்டரிடம் மனு அளித்தார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் ஆஷிஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 386 ஊராட்சிகளில் 160 ஊராட்சிகளில் நிலத்தடி நீர் மோசமான நிலையில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கருங்குளம், புதுக்கோட்டை, புதியம்புத்தூர், பகுதிகளில் நிலத்தடி நீரை லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
இதுகுறித்து போராட் டம் நடத்தியபோது லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்ல வருவாய் கோட்டாட்சியர் தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால், நிலத்தடி நீர் கடத்தப்படுவது தொடர்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரி டம் மனு கொடுத்துள் ளோம்.
மனுவை பரிசீலித்த கலெக்டர், லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினா

சனி, 13 அக்டோபர், 2012

இருக்கன்குடியில் 2-வது நாளாக கடையடைப்பு: உண்ணாவிரதம்


 
இருக்கன்குடியில் 2-வது நாளாக கடையடைப்பு: உண்ணாவிரதம்


சாத்தூர் அருகே இருக்கன்குடியில் நத்தத்துப்பட்டி மற்றும் இருக்கன் குடி பஞ்சாயத்துகளுக் கிடையே கோவில் இருக்கும் பகுதியில் வரிவசூல் செய்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் கோவில் பகுதியில் வரி வசூல் செய்யப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து இரு கிராமத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதில் 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று போலீஸ் தடியடியைக் கண்டித்தும், வரி வசூல் தொடர்பான மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பிரச்சினைக்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இருக்கன்குடி பகுதியில் உள்ள 200 கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து இருக்கன்குடி மேட்டுப் பகுதியில் இருக்கன்குடியைச் சேர்ந்த சுமார் 200 பெண்கள் உள்பட 400 பேர் தங்கள் கோரிக்கையினை வலியுறுத்தி தொடர் உண்ணா விரத போராட்டத்தை தொடங்கினர். வருவாய் துறை அதிகாரிகள் உண்ணா விரதம் இருந்து வரும் கிராம மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து 2-வது நாளாக உண்ணாவிரதத்தில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

சபாநாயகரை வாழ்த்தி டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு

இந்தியாவில் உள்ள வேறு எந்த பேரவையிலும் அருந்ததிய சமுதாயத்தை சேர்ந்தவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படவில்லை. தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற, கண்ணியம் மிக்க சபாநாயகராக நீங்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): 1955ம் ஆண்டிற்கு பிறகு தமிழக சட்டபேரவையில் மீண்டும் ஒரு அருந்ததி இனத்தவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுகவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள 2 கோடி தலித்மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வியாழன், 11 அக்டோபர், 2012

பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறைகளை எதிர்த்து தீரத்துடன் போராடிய இமானுவேல் சேகரன்


            சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் - 1924 அக்டோபர் 9 ஆம் தேதி, முகவை மாவட்டம் செல்லூரில் வேதநாயகம் என்ற ஆசிரியருக்கு மகனாக பிறந்த அவர்பள்ளி இறுதி வகுப்பை முடித்து சில ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி ஊர் திரும்பினார்: தென்மாவட்டங்களில்பார்ப்பனியத்தில் ஊறிப்போய்சாதி ஆதிக்க வாதிகள்தேவேந்திரர்கள் மீது ஏராளமான சாதி அடிமைக் கட்டளைகளைப் பிறப்பித்திருந்த காலம் அது;
      அன்று முகவை மாவட்டங்களில் சாதி ஆதிக்க சக்திகள் முத்துராமலிங்க தேவர் தலைமையில் அணிதிரண்டு நின்றனர். முத்துராமலிங்க தேவர் பார்வர்டு பிளாக் கட்சியின் முக்கிய தலைவர்; அவரை எதிர்த்து, பச்சைத் தமிழர் காமராசர் வழி நடத்திய காங்கிரஸ் கட்சிக்குள் தன்னை இணைத்துக்கொண்டுபார்ப்பனிய சாதி ஒடுக்குமுறைகளை எதிர்த்து தீரத்துடன் போராடினார் இமானுவேல் சேகரன்.
      மறவர் சமூகம்தேவேந்திரர் மக்கள் மீது திணித்த அடிமைக் கட்டளைகளை இமானுவேல் சேகர் தலைமையில் திரண்ட மக்கள் ஏற்க மறுத்தனர்; தேனீர்க்கடைகளில்இரட்டை டம்ளர்இருக்கையில் அமரத் தடை போன்றஅவங்களைநேருக்கு நேர் எதிர்த்துப் போராடினார் இமானுவேல் சேகரன்.
       1957 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர்முதுகுளத்தூர் தேர்தல்களில் முத்துராமலிங்க தேவரை எதிர்த்துஇமானுவேல் சேகரன்காங்கிரஸ் கட்சிக்காகமக்களை அணி திரட்டியதால் ஆத்திரம் அடைந்த முத்துராமலிங்க தேவரின் சாதி ஆதரவாளர்கள் கலவரத்தைத் தொடங்கினர்இமானுவேல் சேகரன் தலைமையில் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் துணிவோடு எதிர்த்து நின்றனர்.
      முத்துராமலிங்க தேவர்இமானுவேல் சேகர் ஆகிய இரு தரப்பினரையும் அழைத்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், முதுகுளத்தூர் தாலுக்காஅலுவலகத்தில் சமரசப் பேச்சு நடத்தினார். ஆங்கிலம், ரஷ்ய மொழி உட்பட 7 மொழிகள் அறிந்தவர் இமானுவேல் சேகரன்; தமது மக்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ணித்தரமாக மறுத்தார் இமானுவேல்; ஆங்கிலப் புலமை மிக்க முத்துராமலிங்க தேவர் ஆங்கிலத்தில் பேசிய போது அவருக்கு அதே மொழியில் பதிலளித்தார் இமானுவேல்; தங்களுக்கு சமமாகஒரே இடத்தில் ஒன்றாக திரண்டுசமநிலையில் வாதாடும் நிலைக்கு ஒடுக்கப்பட்ட சமூகம் அணிதிரண்டு வாதாடியதை ஆதிக்க சாதியினரால் ஏற்க முடியவில்லை. இந்த சமரசப் பேச்சுக் கூட்டம் நடந்த நாள் - 1957 செப்டம்பர் 10:
     அடுத்த நாள் செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடியில்தனது இல்லத்தின் அருகேஇரவு 8-30 மணியளவில் இமானுவேல் சேகரன் வெட்டி கொலை செய்யப்பட்டார்; அப்போது அவருடைய வயது 33.
      முதுகுளத்தூரில் பெரும் கலவரம் வெடித்தது ; அக்கால கட்டத்தில்முத்துராமலிங்க தேவரின் பின்னால்வலிமையான சாதி ஆதிக்க வாதிகள் இருந்த நிலையில்எந்த ஒரு கட்சியும்ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தினருக்கு குரல் கொடுக்க தயாராக இல்லை.
       பெரியாரும்விடுதலைநாளேடும் மட்டும் தான்உறுதியாகசாதி ஆதிக்க சக்திகளை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது. கலவரத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளை அரசு கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று காமராசர் ஆட்சிக்கு வேண்டுகோள் விடுத்த பெரியார்,  இல்லாவிட்டால் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நானே போராட்டத்தில் குதிப்பேன் என்று அறிக்கை விடுத்தார்: காந்தியாரின் கொள்கையில் தீவிரப் பற்றுக் கொண்டவரும்முக்குலத்தோர் சாதியில் பிறந்தவருமான தினகரன் என்ற பத்திரிக்கையாளர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகசுயசாதி எதிர்ப்பாளராக மாறிதனது பத்திரிகையில் எழுதியதால்அவரது அலுவலகத்தை சூறையாடி அவரது சொந்த சாதியினரே, அவரைப் படுகொலை செய்தனர். சுயசாதி மறுப்பாளராக தீரத்துடன் போராடிய தோழர் தினகரனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் !
     சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் வரலாறுகள்சாதி ஒழிப்புப் போரில் களத்தில் நிற்கும் போராளிகளூக்குவழிகாட்டும் ஒளி விளக்கு ! பெரியார் தடம் பதித்தவரலாற்றுச் சுவடுகளில் தொடர்ந்து போராட, மாவீரன் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் – “திராவிடர் விடுதலைக் கழகம்உறுதி ஏற்கிறது !