ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 1 மே, 2013

இராஜபாளையம் சித்திரை வெண்குடைதேவேந்திரர் திருவிழா


 சித்திரை மாதம் என்றாலே பாண்டியப் பள்ளர்களின் பல்வேறு வரலாற்று திருவிழாக்களை நாம் காணமுடியும்

16-17 ம் நூற்றாண்றுகளில் வடுக நாயக்கர்கள் பாண்டியப் பள்ளர்களின் தலைநகரமான மதுரையை கைப்பற்ற பல்வேறு போர்முயற்சிகளை மேற்கொன்டனர் அவைகள் பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்தன.

பாண்டியப் பள்ளர்களை தனியாக வெல்ல முடியாது என்றும் பாளையங்களில் களவு திருட்டு ஆகியவற்றை குலதொழிலாக கொண்ட மக்களை சூழ்ச்சிக்காக வடுகு நாயக்கர்கள் சேர்ந்துக்கொண்டனர்.

பல்வேறு போர் சூழ்ச்சி முறைகளால் பாண்டியப் பள்ளர்கள் போரால் பின் தங்கி பல பிரிவுகளாக பிரிந்து பாண்டியர்கள் மதுரை சிவகங்கை இராமநாதபுரம் மற்றும் தெற்கே திருநேல்வேலி இராஜபாளையம் செங்கோட்டை ஆகிய பகுதிகளில் குடியேறினார்கள்
இவற்றில் பல்வேறு பகுதிகளை வடுகு நாயக்கர்கள் கைப்பற்றினாலும் தெற்கே செங்கோட்டை இராஜபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பாண்டியப் பள்ளர்களை கைப்பற்றமுடியவில்லை வடுகு நாயக்கரின் பல போர் சூழ்ச்சிமுறைகள் தோல்வியில் தான் முடிந்தன.

இராஜபாளையம் வாழ் பாண்டியப் பள்ளர்கள் தங்களது வெற்றியை நிலைநாட்டும் விதமாக சித்திரை முதல் தேதியில் சித்திரை வெண்குடை திருவிழா நடத்தி வருகின்றனர் இத்திருவிழா சுமார் 325 ஆண்டுகள் நடைபெற்று வருகின்றன தற்போது 326 வருடம் நடைபெற உள்ளது..
இவை சுமார் 4 நூற்றான்டுகள் ஆகும்
இந்த திருவிழாவையும் நாயக்கர்கள் மதுரையை கைப்பற்றிய காலத்தையும் கணக்கிடும் போது 100% பாண்டியர்கள் பள்ளர்கள் என நிருபிக்கப்படுகிறது.

நாயக்கர்கள் மதுரையை கைப்பற்றிய காலம் 16 நூற்றாண்டு அதில் இருந்து 325 & 326 ஆண்டுகள் திருவிழா நடைபெறுகிறது சுமார் 4 நூற்றாண்டுகள் ஆகும்

16+4=20 ஆகும் தற்போது 20-21 ம் நூற்றாண்டு நடக்கிறது

திருவிழா முறை:-

இத்திருவிழாவில் பாண்டியப் பள்ளர்கள் வேந்தர்களின் போர் வெற்றி மரபு முறையான. வேந்தர் என்ற முறையில் பள்ளர் குல இளைஞர் ஒருவருக்கு வேந்தர் வேடம் அனிந்து காலில் கால் வளையம் வெற்றி வாகை என்னும் வெண்குடை ஏந்தி யானைப்படைகளுடன் இராஜபாளையத்தில் தேவேந்திர குலத்தினர் வாழும் 7 தெருகள் மற்றும் பாளைப்பகுதிகளை சுற்றி ஊர் திரும்புவது வழக்கம்
இங்கு பாளையம் என்பது இராஜக்கள் போர் படைகளை நிறுத்தும் இடம் ஆகும்

கொள்ளர் இன மரபு முறை:-

இங்கு பாண்டியப் பள்ளர்கள் வெற்றி வாகை சூடி ஊர் திரும்பும் போது கொள்ளர் என்னும் ஆசாரி இனத்தை சார்ந்தவர்கள் போரில் வென்று வரும் பாண்டியப் பள்ளர்களை தங்களின் குல தெய்வமான அய்யனார் கோயிலில் பாண்டிய பள்ளர்களை மேளதாளங்களுடன் வரவேற்று மரியாதை செய்து வருவதாகவும் இவை 325 வருடங்கள் நடைபெறுவதாகவும் கொள்ளர் இன மக்களும் அவர்களின் ஆவனங்களும் சொல்லுகிறது.

முருகன் ஆசாரி இராஜபாளையம்:-

இவர் கொள்ளர் இனத்தை சார்ந்தவர் இவர் சொல்லுவது பாண்டியப் பள்ளர்கள் ஏரும் போரும் தங்களின் குல தொழிலாக கொண்டு வாழும் மக்கள். அவர்களின் உழவு தொழிலுக்கு ஏர் கலப்பை போன்ற ஆயுதங்களையும்
போர் முறைக்கு ஈட்டி வாள் பாதுகாப்புகவசம் போன்ற போர் ஆயுதங்களை கொள்ளர் சமுதாய மக்கள் தான் செய்து கொடுத்து வந்துள்ளனர்

பாண்டியர்கள் வெற்றி பெறுவதற்கு போர் கருவிகள் அவசியம் என்பதால் போர் வெற்றியில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதாலும் தங்களது ஆயுங்களுடன் போரில் வென்று வரும் பாண்டியப் பள்ளர்களை வரவேற்று முதல் மரியாதை செய்வதாக தெரிவிக்கிறார்

போர் மரபு முறை:-

போர் மரபு முறை என்பது போர்களத்தில் போர்வீரர்களும் ஆண்களும் இளைஞர்களும் மட்டுமே செல்லுவது மரபு முறை ஆகும்
பென்களுக்கும் முதியவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம்.

அதைப்போல் வெண்குடை திருவிழாவில் பாண்டியர் வம்சம் என்ற முறையில் பள்ளர் குல இளைஞர்கள் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும்
பென்கள் பங்கு கொள்ள கூடாது என்பது மரபு முறை ஆகும்

பாண்டியர் வம்சம் இல்லாத பிற சமுதாயத்தினர் பங்கு கொள்ள கூடாது என்பது குறிப்பிடதக்கது ஆகும்

இராஜபாளையம் சித்திரை வெண்குடை திருவிழாவை கணக்கிடும் போது பாண்டியர்கள் பள்ளர்கள் தான் என 100% நிருபிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக