ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 14 ஜூன், 2011

மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும்சட்டமன்றத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி உரை!





மதுரையிலே விமானநிலையத்திற்கு பெயர் வைக்க கடந்த 10 ஆண்டுகாலமாக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் ஏனென்று சொன்னால் சுதந்திர போராட்ட காலத்திற்குப் பிறகு அப்பொழுதே ஆங்கிலேயருடைய காலத்திலேயே அந்த மதுரை விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் சின்ன உடைப்பை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள். எனவே அரசாங்கத்தினுடைய விதிகளின் படி யார் நிலத்தை அரசாங்கத்தினுடைய கட்டிடங்களுக்கு கொடுக்கிறார்களோ அவர்கள் விரும்பக்கூடிய பெயரைச் சூட்ட வேண்டும் என்பது அந்த அடிப்படையிலேயும், சமுதாய நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய வகையிலேயும் ஒரு முனையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும். என்னுடைய வேண்டுகோளை வைத்து இதிலே பேசுவதற்கு வாய்ப்பு அளித்தத் தங்களுக்கு நன்றி கூறிவிடை பெறுகிறேன். வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக