ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 11 மார்ச், 2012

வன்னிக்கோனேந்தலில் சரத்குமார் எம்எல்ஏ, டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பிரச்சாரம் [Restore Description] 1/1 சங்கரன்கோவில்.மார்ச்.11 - சங்கரன்கோவில் தொகுதி வன்னிக்கோனேந்தல் , தேவர்குளம் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். சில மணி நேர இடைவெளியில் இரு தலைவர்கள் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது அப்பகுதி தொண்டர்கள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் போது தமிழகத்தை ஏமாற்றியவர் இன்னமும் ஏமாற்றி கொண்டிருப்பவர் கருணாநிதி. அவரின் பேச்சை மக்கள் நிச்சயம் நம்பவேண்டாம். மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவரின் வேட்பாளர் முத்து செல்விக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டினார். பின்னர் பிரச்சாரத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எதிர்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். அவரால் தான் எந்த நேரமும் மக்களுக்கு என்ன தேவையோ அதை தேவையான நேரத்தில் கொடுக்க முடியும். அதனால் தான் பள்ளி மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் மற்றும் உலகிலேயே முன்னோடி திட்டமான இலவச லேப்டாப் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்காலத்ததை பற்றி சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் தன் குடும்பத்ததை பற்றிய சிந்தனை மட்;டுமே செய்பவர் கருணாநிதி. அதனால் தான் இந்த கரண்ட் தட்டுப்பாடு. அதுவும் விரைவில் தீர்ந்து விடும் என்று பேசினார். இந்த பிரச்சாரங்களை தேவர்குளம் வன்னிக்கோனேந்தல் பகுதி தேர்தல் பொறுப்பாளரும், திருவாருர் மாவட்ட செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் திருவாருர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மேலநீலித நல்லுார் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குணசீலன், ஊராட்சி செயலாளர்கள் வன்னிக்கோனேந்தல் வெளியப்பதேவர், அடைக்கலாபுரம் செல்வராஜ், தொழிற்சங்க துணை செயலாளர் செல்வராஜ், குருக்கள்பட்டி செயலாளர் பிச்சைபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இருந்தனர். தலைவர்களின் இந்த பிரச்சாரங்களை காண ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்ததை கண்டதுமே அதிமுகவின் தேர்தல் எழுச்சி வெட்ட வெளிச்சாமானது.

வன்னிக்கோனேந்தலில் சரத்குமார் எம்எல்ஏ, டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பிரச்சாரம்
1/1
சங்கரன்கோவில்.மார்ச்.11 - சங்கரன்கோவில் தொகுதி வன்னிக்கோனேந்தல் , தேவர்குளம் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். சில மணி நேர இடைவெளியில் இரு தலைவர்கள் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது அப்பகுதி தொண்டர்கள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் போது தமிழகத்தை ஏமாற்றியவர் இன்னமும் ஏமாற்றி கொண்டிருப்பவர் கருணாநிதி. அவரின் பேச்சை மக்கள் நிச்சயம் நம்பவேண்டாம். மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவரின் வேட்பாளர் முத்து செல்விக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டினார். பின்னர் பிரச்சாரத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எதிர்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். அவரால் தான் எந்த நேரமும் மக்களுக்கு என்ன தேவையோ அதை தேவையான நேரத்தில் கொடுக்க முடியும். அதனால் தான் பள்ளி மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் மற்றும் உலகிலேயே முன்னோடி திட்டமான இலவச லேப்டாப் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்காலத்ததை பற்றி சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் தன் குடும்பத்ததை பற்றிய சிந்தனை மட்;டுமே செய்பவர் கருணாநிதி. அதனால் தான் இந்த கரண்ட் தட்டுப்பாடு. அதுவும் விரைவில் தீர்ந்து விடும் என்று பேசினார். இந்த பிரச்சாரங்களை தேவர்குளம் வன்னிக்கோனேந்தல் பகுதி தேர்தல் பொறுப்பாளரும், திருவாருர் மாவட்ட செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் திருவாருர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மேலநீலித நல்லுார் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குணசீலன், ஊராட்சி செயலாளர்கள் வன்னிக்கோனேந்தல் வெளியப்பதேவர், அடைக்கலாபுரம் செல்வராஜ், தொழிற்சங்க துணை செயலாளர் செல்வராஜ், குருக்கள்பட்டி செயலாளர் பிச்சைபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இருந்தனர். தலைவர்களின் இந்த பிரச்சாரங்களை காண ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்ததை கண்டதுமே அதிமுகவின் தேர்தல் எழுச்சி வெட்ட வெளிச்சாமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக