ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 5 மே, 2012

வரும் 30-ல் கிருஷ்ணசாமி உண்ணாவிரதம்

தூத்துக்குடி : நலத்திட்ட உதவிகளை வழங்குவதி்ல மாவட்ட ‌கலெக்டர் முட்டுக்கட்டை போடுகிறார் என ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ., புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார் மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படுகிறார். ‌‌தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவி பெற வழங்கும் பரிந்துரை கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. கலெக்டரின் இத்தகைய போக்கை கண்டித்து வரும் 30-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாகவும், முதல்வரிடம் இது சம்பந்தமாக புகார் அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சட்ட சபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் இப்பிரச்னை எழுப்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக