ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 11 மே, 2012

ஜாதிவாரி கணக்கெடுப்பு: கிருஷ்ணசாமி வேண்டுகோள்


சென்னை: புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி அமைப்பாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், ஜாதி பின்னணி என்னவென்று தெரியாமல் உள்ளனர். இது போன்றவர்கள் கணக்கெடுப்பதால், உண்மை பிரதிபலிக்கப்படாது, கணக்கெடுப்பு முடிந்த பின்பு, பிரச்னைகளும், சர்ச்சைகளுமே எழும். திறன்பெற்றவர்கள் மற்றும் சமூகத்தை புரிந்து கொண்டவர்களை மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஈடுபடுத்த வேண்டும்.  பட்டியல் இனத்தில் பள்ளர், பறையர், சக்கலியர் உள்ளனர். பள்ளர் தேவேந்திர குலவேளாளர் என்றும், பறையர் ஆதிதிராவிடர் என்றும், சக்கலியர் அருந்ததியர் என்றும் அடையாளப்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக