ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மத்திய மாநில அரசுப் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம்-தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் கடந்த முறை ஆசிரியர் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாததைக் கண்டித்தும், ஆசிரியர் பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றக் கோரியும் சென்னை ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு இடஒதுக்கீட்டுப் பாதுகாவலரும் சமூக சமநீதிப் போராளியுமான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா தலைமையில் தமிழக மத்திய மாநில அரசுப் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம்-தமிழ்நாடு நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம். இட ஒதுக்கீட்டை பாதுகாக்க ஆசிரியர்களும், மாணவர்களும் அணிதிரண்டு வாரீர்! ஆசிரியர் தேர்வு வாரியம் நோக்கி

நாள்: 23.09.2013.
நேரம்: காலை 11 மணி.

இவண்:

மத்திய மாநில அரசுப் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம்-தமிழ்நாடு.
விருப்பம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக