ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 19 மே, 2014

தென்காசி தொகுதி இல் டாக்டர் கிருஷ்ணசாமி ...?


தென்காசி தொகுதி இல் டாக்டர் கிருஷ்ணசாமி தோற்று விட்டதால் பெரு மகிழ்ச்சி கொள்ளும் சில எனதருமை தேவேந்திரகுல சகோதரர்களே, புதிய தமிழகம் கடந்த 15 வருட கள போராட்டத்தில் எத்தனையோ வெற்றி தோல்விகளை சந்தித்து வந்து இருக்கிறது.டாக்டர் கிருஷ்ணசாமி தோற்று விட்டதால் இழப்பு அவருக்கு அல்ல, நமக்கு தான். மிகவும் நேர்மையான துணிச்சலான கள போராளியான டாக்டரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியாமல் நாம் தோற்று விட்டோம். இந்த 2014ம் ஆண்டில் 2,62147 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளோம். வரும் 2020ம் ஆண்டில் தென்காசி தொகுதி இல் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டிப்பாக வெற்றி மகுடம் சூட்ட போகதான் போகிறார். தோல்விகளில் இருந்து மீண்டு மீண்டும் எங்களது கள போராட்டத்திற்கு திரும்புவோம்.
எமக்கு தொழில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுதல், சாதியத்தை ஒழிப்போம், சம தர்ம புதிய தமிழகம் படிப்போம்.
விழ விழ எழுவோம் வீழ்ந்து விட மாட்டோம் சகோதரர்களே...
எங்களது கள போராட்டம் தொடரும் .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக