ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 21 மே, 2014

எனதருமை புதிய தமிழகம் கட்சி தோழர்களே.............

 2014 தென்காசி லோக்சபா தேர்தலில் நாம் வீழ்ந்து விட்டோம் என்றும் நமது தலைவர் டாக்டர் அய்யாவை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியாமல் தோற்று விட்டோம் என்றும் நீங்கள் ஒரு போதும் சோர்வடைய வேண்டாம். நமது புதிய தமிழகம் கட்சி தோழர் ம.பிலிப் அந்தோணி,தோழர் பாரதி தேவேந்திரன் மற்றும் தோழர் விக்னேஷ்(குழந்தை) தேவேந்திரன் போன்ற நூற்றுக்கணக்கான தியாகிகள் தங்களது உயிரை தியாகம் செய்து அதனால் வுருவாக்கபட்ட ஒரு மாபெரும் இயக்கம். நமது இயக்கத்திற்கு என்றுமே அழிவே கிடையாது. தோல்வியை கண்டு ஒருபோதும் புதிய தமிழகம் அஞ்சாது. 2016 மற்றும் 2019ம் ஆண்டு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள இப்பொழுதே நாம் நம்மை தயார் செய்வோம். தென் தமிழகத்தில் தேவேந்திர குல மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்ட போது அதை எதிர்த்து நமது ஒடுக்கப்பட்ட மக்களை ஓரணியில் இணைத்து புதிய தமிழகம் என்ற மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்தவர் நமது சமூக நீதி போராளி டாக்டர் அய்யா. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பிற வுதவாகரை கட்சிகளில் இருக்கும் தேவேந்திர குல சொந்தங்களே நீங்கள் அந்த கட்சிகளில் இருந்து விலகி புதிய தமிழகம் கட்சியில் இணைந்து எங்களது கள போராட்டத்திற்கு வாருங்கள். ஓரணியில் இணைந்து நாம் அடக்குமுறைக்கு எதிராக போராடி நமது வுரிமைகளை மீட்போம். 2016ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் மிகபெரும் சக்தியாக வுருவெடுத்து உலக தமிழர்களின் தலைவராக டாக்டர் அய்யாவை ஆக்குவோம்.
தமிழ் தேசிய இனத்தின் அக முரண்பாடுகளை களைவோம், தமிழராக எழுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக