ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 27 நவம்பர், 2010

டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் பனகல் மாளிகை அருகே இன்று காலை 12.00 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது



1சென்னை மாநகரில் பல நூறு ஆண்டு காலம் பூர்வீகமாக வாழ்ந்த ஏழை,எளிய மக்களை கூவத்தை அழகுபடுத்துகிறோம் என காரணம் காட்டி நகரின் மைய பகுதிகளிலிருந்து பல கிலோ மீட்டருக்கு அப்பால் குப்பை கூழங்களை அகற்றுவதுபோல அகற்றிய தமிழக அரசின் மனிதாபிமானமற்ற செயலை கண்டித்தும்,



2.சட்டமன்ற மேலவைத் தேர்தலில்  பட்டியல்வகுப்பினர்


மற்றும் பழங்குடி மக்களுக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும்,



3.வேலைவாய்ப்பில் சென்னை பல்கலை கழகம் மற்றும் மதுரை அண்ணா பல்கலை கழகங்களில்பட்டியல்வகுப்பினர்


  மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் முறைகேடுகளை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாவட்ட,ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள் உட்பட தொண்டர்கள் நூற்றுக்கனோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக