ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

பிப். 27ல் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு

பிப். 27ல் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு






அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு மதுரையில் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இது குறித்து சங்க நிறுவனத்தலைவர் பெ.ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-



தேவேந்திரகுல மக்களும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் அரசியல் அதிகாரத்தை முழுமையான அளவில் பெற்றிடவும், இந்த சமூக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கிலும், சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளாக பிரிந்து கிடக்கின்ற தேவேந்திரகுல இன அமைப்புகளும், தாழ்த்தப்பட்ட இன அமைப்புகளும், தலைவர்களும் ஒரே அணியில் சேர்ந்து நாம் தமிழ்சாதிகள் என்று தமிழக அரசுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது தேர்தலுக்கான கூட்டம் அல்ல? சிதறிக்கிடக்கும் அமைப்புகளை ஒன்று சேர்க்கும் பணியாகும். இந்த தலைவர்களை ஒருங்கிணைக்க ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் டாக்டர் கிருஷ்ணசாமி, பசுபதிபாண்டியன், திருமாவளவன் மற்றும் சில தலைவர்களை அழைத்து பேசுவோம். இதைத்தொடர்ந்து வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி மதுரையில் அகில இந்திய தேவேந்திர குலவேளாளர் முன்னேற்ற சங்கம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் அனைத்து அமைப்புகளின் தலைவர்களையும் அழைக்க உள்ளோம்.



சமுதாயத்திற்கு உரிய கொடியை முன்னோர்கள் 1805-ம் ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த கொடியை அரசியல் கொடியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் நேரத்தில் தான் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவுசெய்வோம். போட்டியிடுவது குறித்து கட்சி பொதுக்குழுவில் தான் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவு செய்வோம். தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.



மருத்துவ கவுன்சில் நுழைவுத் தேர்வை ரத்து செய்யவேண்டும். பெட்ரோல் விலை உயாவை ரத்து செய்யவேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது குறித்து தற்போது கருத்து சொல்ல விரும்பவில்லை. இதுகுறித்து முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவேன். ஸ்டெக்ரம் 2-ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் சாதி தடையில்லை. பள்ளமடை குளத்திற்கு தண்ணீ­ர் விட அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜனவரி 15-ந்தேதி பழனி கோவிலில் நடைபெறுகின்ற மண்டகபடி விழாவில் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கத்தினர் திரளாக கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக