ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 29 ஜனவரி, 2011

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கை: நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் குழு




செய்திக்குறிப்பில், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் என்றும்; அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண்டும் என்றும்; தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் ம. தங்கராஜ் அளிக்கப்பட்ட கோரிக்கை கடையநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் மூலமாக தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.



இந்தக் கோரிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில், நிதியமைச்சர் அன்பழகன், உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் ஆ. தமிழரசி, பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், எஸ். பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர், ஆதி திராவிடர் நலத் துறைச் செயலாளர், ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.







இந்தக் கோரிக்கையைச் சட்ட ரீதியாகப் பரிசீலித்து நடைமுறைப்படுத்திட; நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழு அமைத்து, பரிந்துரை பெறலாம் என்று முதல்வர் கலைஞர் இன்று (26 1 2011) ஆணையிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக