ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன் மீது குண்டு வீசி தாக்குதல்

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன் மீது குண்டு வீசி தாக்குதல்













தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன். இவர் கடந்த மூன்று நாட்களாக கட்சி பிரசாரம் கூட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தி வருகிறார்.



இந்நிலையில், இன்று கமுதியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் மண்டலமாணிக்கம் என்ற இடத்தைக் கடந்து கச்சேரி என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டது.





அப்போது, ஜான் பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், மண்டல மாணிக்கத்தைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கல், கம்பு போன்றவற்றால் தாக்கிக் கொண்டனர்.







இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில், பதட்டத்தைத் தடுக்க போலீசார் தடியடி மற்றும் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். கமுதி போலீசார் இருதரப்பினருக்கிடையே சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் பதட்டம் நீடிக்கிறது.

ராமநாதபுரம்மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவி வருகிறது. சாதிக்கலவரம் நடக்காமல் இருக்க அங்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது



பஸ் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ராமநாதபுரத்தில் இருந்து எந்த விதமான பஸ்சும் வெளிமாவட்டங்களுக்கு செல்லவில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்சும் ராமநாதபுரத்திற்கு வரவில்லை .



வன்முறை ஏதும் ஏற்படாமல் தடுக்க எல்லா இடத்திலும் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது. 1,000க்கும்அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அவர்கள் தொடர்ந்து ரோந்து பணியிலும்ஈடுபட்டு வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக