ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 11 மே, 2011

ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும்.


ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பதுகாப்பிற்காக அரை நூற்றாண்டுகளாக போராடி வருகிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிர்ரான இறுதிப்போர் என்ற போர்வையில் அண்மையில் இலங்கையில் ராஜபக்சே அரசு 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழ் மக்களின் மீது மிகப்பெரிய தக்குதலை தொடுத்தார்.அந்த தாக்குதல் சர்வதேச விதிகளுக்கு மாறானது என்று தமிழ் ஆர்வலர்களும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.



ராஜபக்சே அரசின் போர் விதிமுரை மீரல் குறித்து ஐ.நா அமைப்பின் சிறப்புக்குழு அண்மையில் தனத் அறிக்கையை தெளிவாக வெளியிட்டது. அதில் ஒரே சமயத்தில் 40 ஆயிரம் தமிழ் மக்களை கடல் நீருக்குள் அமுக்கி கொன்றுவிட்டு கொடூரமான தகவல் உலகையே நிலைகுலையச் செய்தது.மேலும் முள்ளிவாய்க்காலில் 30 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களை ஒருசேர கொன்று குவித்ததையும் சுட்டிகாட்டியுள்ளது.



இவை போன்ற மனித உரிமை மீறல்களின் காரணமாக ராஜபக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பாக மே10 அன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் ந்டைபெற்றது




ஆர்ப்பாட்டத்தி முக்கியமாக மே 13 ஆம் தேதி வெளிவரும் தேர்தல் முடிவிற்குப் பிறகு அமையும் அரசு தனது முதல் தீர்மானமாக ராஜபக்சேவை கைது செய்ய இந்திய அர்சும் குரல் கொடுக்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக