ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 15 மே, 2011

டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் வரலாறு








பெயர் : மருத்துவர் கருப்புசாமி கிருஷ்ணசாமி, எம்.பி..பி.எஸ்., எம்.டி.,

 சட்டமன்ற உறுப்பினர்





பெற்றோர் : கருப்புசாமி - தாமரை அம்மாள்





பிறந்த நாள் : 03.04.1952





இடம் : மசக்கவுண்டர் புதூர், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை,

(பழைய கோவை மாவட்டம்) திருப்பூர் மாவட்டம்.





கல்வி

பள்ளி : அரசினர் உயர்நிலைப் பள்ளி பூளவாடி (பள்ளிஇறுதிவரை)



புகுமுக வகுப்பு : அரசினர் கலைக்கல்லூரி, கோயமுத்தூர். (தேசிஅறிவியல் தகுதிகாண் திட்டம் - சிறுவாணி நீர் மாசு குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தல்)





கல்லூரி

1. வேளாண்மைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை

கழகம், கோயமுத்தூர். 45 நாட்கள் - வேளாண்மைப் பல்கலைக் கழக துணை முதன்மையர் முனைவர் தானியல் சுந்தராசு அறிவுரைப்படி மருத்துவக் கல்லூரியில் சேரல்.(மருத்துவக் கல்லூரி சேர்ப்பு அனுமதிக் கடிதத்தை சாதி வெறி பிடித்த அஞ்சல்காரர் 10 நாட்கள் மறைத்து, வேண்டுமென்றே தாமதப்படுத்தி இடையூறு செய்து கொடுத்தார்.



2. இளநிலை மருத்துவம் M.B.BS.,

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி (1972-75) முதல் இரண்டாண்டுகள்) மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை. (1975-78) மூன்றாம் ஆண்டு முதல் பயிற்சி மருத்துவர் பணி வரை),





3. முதுநிலை மருத்துவம் (M.D)

முதுநிலை மருந்தியல் கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரி (1982 - 84)





திருமணம் : வி.வி. சந்திரிகா, பி.எஸ்.சி., எம்.பி.பி.எஸ்.,





நாள் : 22.01.1984 (திருமணமான இரண்டாவது நாளில் விழுப்புரம் 12

தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை தொடர்பான கைது. மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்படல் - மிசா கால சிறை நண்பர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்த வழக்கறிஞர் விஸ்வநாதன் அவர்களின் வாதத்திறமையால் பிணையில் விடுதலை)





குழந்தைகள் :

மகள் : திருமதி டாக்டர் கி. சங்கீதா ஓம்நாத் ;

மருமகன் : டாக்டர் ஓம்நாத்

மகன் : கி.ஷ்யாம்







சமுதாயப் பணிகள் :-

கோவையில் தன் அண்ணன் திரு.ராஜு அவர்கள் தலைமையில் நிலவுடைமையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது பங்கேற்பு - கொங்கு நாட்டில் விவசாய கூலிகளுக்கு கூலியாக விளைபொருளை மட்டும் வழங்கும் போக்கிற்கு எதிர்ப்பு - முதன்முறையாக கூலியாக பணம் கொடுக்க நிலவுடைமையாளர்களுக்கு எதிராக போராடியமை.





- பிறந்த மண்ணில் பள்ளி நாட்களில் தீண்டாமை எதிராக, மனித உரிமைகளுக்காகப் போராடுதல் - பள்ளியில் நடந்த தீண்டாமைக் கொடுமைகளை தட்டிக் கேட்டல் - பள்ளி மாணவர் தலைவர் பொறுப்பு வகித்து சிறப்பாக பணி புரிதல் - சாதி வெறியர்கள் நீக்கக் கோரிக்கை - ஆசிரியர்களிடம் நிலவிய தீண்டாமையைக் கண்டித்து போராட்டம். (1966 - 1970)





- மருத்துவக் கல்லூரி மாணவர் பருவத்தில் பீகார் வெள்ளச்சேதம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் உடமைகள் திரட்டி உதவியமை - அன்றைய இந்திய பிரதமர் அன்னை இந்திராகாந்தி அம்மையார் பாராட்டுச் சான்றிதழ் பெற்றார். (1975)





- நெருக்கடி நிலையின்போது (1976 - 77) இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிய - லெனிய பிரிவு) மாணவர் பிரிவு மாநில அமைப்பாளராக இருந்தமை - கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு எதிர்ப்பு - ஜனநாயக நெறிகளை மீறி கலைக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் கலைப்பின்போது தி.மு.க, தி.க, ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களுக்கு புரட்சியாளர்களின் அறைகூவல் என்ற துண்டு பிரசுரம் அச்சிட்டு வெளியிட்டமை - கைது - சிறைவாசம் - 9 மாதம். ஆயுதம் தாங்கிய காவலர்கள் சூழ்ந்து நிற்க மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ தேர்வு எழுதியமை - ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்று மெராஜ்ஜிதேசாய் பிரதமராக பதவி ஏற்ற அன்று விடுதலை.





- 1978 விழுப்புரம் கலவரம் -12 தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை - கலவரம் - கண்டனம் - மதுரை மாநகராட்சி தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகள் -சுவரொட்டி அச்சிட்டு வெளியிட்டமை - காந்தி சிலை மீது தார் ஊற்றிய செயல் - மூன்று காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு.





- விழுப்புரத்தில் 1978 ஆம் ஆண்டு நடந்த சாதிக்கலவரத்தின் போது

அறிக்கை வெளியிட்டதற்காக இறுதியாண்டு மாணவராக இருந்தபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மூன்றுமாத சிறைவாசம் - விடுதலை.





- வேடசந்தூர் குடகனாறு அணை உடைப்பின் போது நிதி, உணவுப் பொருட்கள், உறைவிடப் பொருள்கள் திரட்டி பாதிக்கப்பட்ட இராமநாதபுரம் மக்களுக்கு நேரிடையாக சென்று விநியோகம் - அரசு இயந்திரம் அணுக முடியாத சில கிராமங்களுக்கு முதன்முதலாக சென்று உதவியமை (1978)





இராமநாதபுரம் வெள்ளச்சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியமை (1980)





மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் விடுதி தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மாணவர்களால் புறக்கணிப்பு - தொழிலாளர்களின் உரிமைகள் பாதிப்பு - மாணவர்களுக்கு எதிராக தொழிலாளர்களுக்கு ஆதரவாக முதல் குரலை வெளிப்படுத்தியமை - மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி தொழிலாளர்களுக்கு உதவி.





தென்தமிழகக் கல்லூரிகளில் பயின்ற தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல நிலைகளில் போராடுதல்





மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - தேவர்சமூக மாட்டை பிடித்த தேவேந்திர குல வேளாளர் முதியவர் மீது கத்திக் குத்து - தட்டிக் கேட்ட அவனியாபுரம் மலைச்சாமி; மீது தாக்குதல் - வழக்கு - அவர்களுக்காகப் போராடுதல் - மார்க்சிய லெனினிய இயக்க தோழர்கள் எதிர்ப்பு - அமைப்பினருடன் கருத்து முரண்பாடு.





மதுரையில் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு - மாணவர்கள் போராட்டம் - போராட்டத்தை ஒருங்கிணைத்தல் (1977-79)





எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது நடைபெற்ற போலீசார் சங்கம் அமைப்பதற்கு நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு.





- உடுமலை பூளவாடியில் மருத்துவமனை தொடக்கம் - தொடக்கவிழாவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி பங்கேற்பு.





- பூளவாடி கிராமப் பகுதியில் பகுத்தறிவு பரம்பரைப் பணிகளில் ஈடுபடல் -





கு.இராமகிருஷ்ணன், திருமகள், பார்வதி, திருமகள், சேலம் அருள்மொழி பங்கேற்பு -





பள்ளிக் குழந்தைகளிடம் சாதிய எதிர்ப்பு பிரச்சாரம் - விடுதலை நாள் ஆகஸ்ட் 15 புறக்கணிப்பு.





- உடுமலைப்பேட்டை பூளவாடியில் மருத்துவர் தொழில் மூலம் ஏழை, எளிய

மக்களுக்கு உதவியதை பொறுக்க முடியாத சாதி வெறியர்களின் இடையூறு (1981).





சாதிவெறியர்களின் இடையூறுகளை முறியடிக்க திராவிடர் கழக செயல்வீரர் கு.இராமகிருஷ்ணன், திராவிடர் கழக வீராங்கனை தோழியர் வழக்கறிஞர் அருள்மொழி, வெள்ளக்கோவில் முத்துக்குமார், தாராபுரம் கருணாநிதி, சுப்பிரமணியன், ரங்கசாமி, ஆத்துக்கிணற்றுப்பட்டி பழனிச்சாமி, எம்.கே.நடராஜன், பேராசிரியர் தங்கவேலு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வீரத்துடன் துணை நின்றனர். தோள் கொடுத்தனர். இடையூறுகள் முறியடிக்கப்பட்டன.





- பாரதீய தலித் பேந்தர்ஸ் கட்சியை (DPI) கட்சி தொடங்கப்பட்டது - அதே ஆண்டு அண்ணல் அம்பேத்கரின் மனைவி திருமதி. சவிதா அம்பேத்கரை அழைத்து மாநாடு - பாரதீய தலித் பேந்தர்ஸ் நடத்திய மாநாட்டின் அமைப்பாளர் - இம்மாநாட்டில் வை.பாலசுந்தரம், ராம்தாஸ் அத்வாலே, மலைச்சாமி, டாக்டர்.கிருஷ்ணசாமி, மற்றும் பலர் சிறப்புரை (1982).





செப்டம்பர் 1984, கோவையில் பாரதீய தலித் பேந்தர் இயக்கம் சார்பில் வ.உ.சி. திடலில் இரண்டாவது மாநில மாநாடு - தலித் வாய்ஸ் ஆசிரியர் வீ.டி.ராஜசேகர் பங்கேற்பு - பார்வையாளர்கள் பகுதியில் சாதி வெறியர்கள் காரை புகுத்தி வன்முறை - கூட்டத்தைக் கலைக்க முயற்சி - முறியடிப்பு.





- பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தின் சார்பில் மாநில அளவில் சூழ்நிலைகளுக்கேற்ப தேர்தலில் போட்டியிட முடிவு - முற்போக்கு இயக்கங்களின் ஆதரவுடன் போட்டியிடலாம் என அறிவிப்பு - சவீதா அம்பேத்கர் திருப்பதி தொகுதியில் போட்டி - இராம்தாஸ் அத்வாலே மகாராஷ்டிராவில் போட்டி - தலைவர் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட முடிவு.





- பொள்ளாச்சி (தனித்) தொகுதியில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி (1984).





- நவம்பர் 10, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சங்கீதா மருத்துவமனையைத் திறந்து வைத்தார் மு.கண்ணப்பன், சி.டி.தண்டபாணி, மு.இராமநாதன், பொங்கலூர் பழனிசாமி மற்றும் தி.மு.க. முன்னனி பிரமுகர்கள் பங்கேற்பு (1984).







- இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க போராட்டம் - போராட்டம் பங்கேற்பு - 15 நாட்கள் சிறை. (1985)





- பரம்பிக்குளம் - ஆழியாறு உழவர்களுக்கான உரிமைப் போராட்டம் (1988) (கோவை மாலைமுரசு இதழில் தொடர் கட்டுரைகள் வெளியீடு).



- செப்டம்பர் 11 புறம்போக்கு நில விவசாயிகளுக்கு தண்ட தீர்வை உயர்வை கைவிடுக - மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோவை டாக்டர் கிருஷ்ணசாமி மனு. (1998)





- போடி மாவட்டம் மீனாட்சிபுரம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

கணிசமான நிதி உதவி (1989).





- செப்டம்பர் 15 தீண்டாமை ஒழிப்புப்பணி - கோவை டாக்டர் கிருஷ்ணசாமிக்கு விருது! கலெக்டர் இராமன் வழங்கினார். (கோவை மாலைமுரசு)





- சாதி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் - கோவை டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை. (கோவை மாலைமுரசு)





- விமான நிலையங்களில் குரூப் IVபணியிடங்களில் காண்ட்ராக்ட் முறையைப் புகுத்தி தொழிலாளர் வயிற்றில் அடிப்பதா - கோவை டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம். (கோவை மாலைமுரசு)





- இரண்டு தலைமுறைகளாக இரண்டு தாழ்த்தப்பட்ட கிராமங்கள் நடைபாதையின்றி தவிப்பு - 30 அடி அகல நடைபாதை வயல் ஆனது - ஆக்கிரமிப்பிலிருந்து 10 ஏக்கர் நிலம் மீட்பு - டாக்டர் கிருஷ்ணசாமி புகாரின் அடிப்படையில் அன்றைய கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் (ஆளுநர் ஆட்சிக் காலத்தில்) கலெக்டர் நடவடிக்கை. (கோவை மாலைமுரசு).





- 1988 அக்டோபர் 18, உடுமலை அருகே 100 கிராமங்களில் இலவச மருத்துவ சிகிச்சை - பெத்தம்பட்டியில் அரசுப் பள்ளியில் முகாம் - 70 ஏழைத் தாய்மார்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம் - இலவச கண்புரை அறுவை சிகிச்சை - 100 சதவிகிதம் வெற்றி





- 1989 ஆகஸ்ட் 25, கோவை சங்கீதா மருத்துவமனை மற்றும் அறக்கட்டளை சார்பில் தாராபுரம் என்.சி.பி. மேல்நிலைப்பள்ளிக் கூடத்தில் இலவச சிகிச்சை முகாம் - தி.மு.க. மாவட்ட செயலாளர் அ.கணேசமூர்த்தி, தி.மு.க. முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்சா பங்கேற்பு.





- 1989 ஜுலை 02 உடுமலை அருகே ஏழை மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் - டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்பாடு செய்த விழாவில் தி.மு.க இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் - டாக்டர் கிருஷ்ணசாமியின் கொடைத்தன்மை எல்லோருக்கும் வரவேண்டும் என புகழாரம்.





- 1991 டிசம்பர் 06, கோவையில் அம்பேத்கர் நினைவு நாள் பேரணி! டாக்டர் கிருஷ்ணசாமி கு.வெ.கி.ஆசான், இ.லெ.கந்தசாமி, முனைவர் அருணா பங்கேற்பு





- உடுமலைத் தாலுக்கா சந்தனக்கருப்பனூர் தி.மு.க செயற்குழு உறுப்பினா; தளி மாரிமுத்து குடும்பத்தினர் தேவேந்திரர்கள் மீது வன்கொடுமை - தலையீடு - காப்பாற்றுதல்.





- தமிழர் பாதுகாப்பு பேரவை தொடக்கம் - இந்தி ஆதிக்க எதிர்ப்பு - தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டி உடைப்பு போராட்டம் (1991)





- 1991 கர்நாடகா மாநிலத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு - தலைவர் தலைமையில் உண்ணாவிரதம் - கோவையில் தங்கியிருந்த கர்நாடகத் தமிழர்களுக்கு கோவை வீடியோ ஒளிப்பதிவாளர் சங்கம் ஏற்பாடு செய்த மருத்துவமுகாமில் பங்கேற்பு - 50,000 ரூபாய் பெறுமானமுள்ள மருந்துகள் வழங்கல்.





- 1993 தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு -

மதுரையில் தொடக்கம் - கூட்டமைப்பின் தலைவராக தலைவர் தேர்வு.





1994 தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு எனப் பெயர் மாற்றம்.





1995 கொடியன்குளம் தாழ்த்தப்பட்ட கிராமம் அழிப்பு - வன்முறைக்கு எதிராக முதல் குரல்





- பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராடுதல் - இழப்பீட்டுத் தொகை வழங்க கோரிக்கை - நீதிமன்றத்தில் வழக்கு - டெல்லியில் போராட்டம்.





1996 தமிழக சட்டமன்றத்திற்கு ஒட்டப்பிடாரம் தொகுதியிலிருந்து போட்டி - வெற்றி. (1996 - 2001 சட்டமன்ற உறுப்பினர் பணி).














1997 டிசம்பர் 15, புதிய தமிழகம் அரசியல் கட்சி தொடக்கம்..............

5 கருத்துகள்:

  1. டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் அயராத உழைப்பு தென்காசி தொகுதி மக்களுக்கும் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
    சாதி பார்க்காமல் அவருக்கு வாக்களித்தால் இதுவரை இல்லாத ஒரு திறமையாளரை இந்த தொகுதி பார்க்கும்...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் சமூக பணி வளர்ச்சி பெற என் வாழ்த்துக்கள் அன்புடன் பாலபுகழேந்தி

    பதிலளிநீக்கு
  3. டாக்டர்.கிருட்டிணசாமி அவர்கள்
    பிராமணரா?
    தேவேந்திரகுலம்
    என்பதன் பொருள் என்ன?

    பதிலளிநீக்கு
  4. வாழ்க டாக்டர் அய்யா வளர்க புதிய தமிழகம் கட்சி

    பதிலளிநீக்கு