ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 22 மே, 2011

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை தொகுதி - வல்லநாடு பகுதியில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் மக்களுக்கு நன்றி அறிவிக்கவும், மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்திடவும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் செய்கின்றார்.




முதல் நாளான இன்று வல்லநாட்டில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முன்னதாக தேர்தலில் பணியாற்றிய அ.தி.மு.க. கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.



கருங்குளம், வசவப்பபுரம், வல்லநாடு, மணக்கரை, அனவரனல்லூர், நாணல்காடு உள்ளிட்ட பல்வேறு கிரமாங்களை சேர்ந்த மக்கள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் மனுக்களை அளித்தனர்.தூத்துக்குடி மாவட்ட பல்வேறு துறையின் உயர் அதிகாரிகள் இம்முகாமில் கலந்து கொண்டு குறை தீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.





































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக