ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 30 அக்டோபர், 2014

கண்ணீர் அஞ்சலி!...

அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இணைந்த தேவேந்திரர்களின் சார்பாக வீரவணக்கம்!
மீண்டும் நெல்லையில் சமூகத்தை தாங்கிப்பிடித்த விழுதுகள் இரண்டு வெட்டி சாய்க்கபட்டிருக்கிறது...
இராமநாதபுரம், திருநெல்வேலி தேவேந்திரர்கள் சதீயத்திற்கு என்றோ சாவுமணி அடித்து சமத்துவத்தை ஏற்படுத்தி விட்டனர் அங்கே நடப்பது பொருளாதார முன்னேற்றத்திற்கான போட்டி இனிமேல் இரு சமூகத்திலும் உயிர்பலி இருக்காது என்ற பரவலான கருத்தே நிலவுகிறது.
அதை பொய்யாக்கி அங்கே நடப்பது ஆதிக்க சாதி யார் என்கிற போட்டியே நிலவுகிறது என்பதை உறுதிப்படுத்துவதாய் அமைந்துள்ளது இந்த இரட்டை கொலை.
மாநில அரசே! காவல்துறையே! வேண்டாம் என ஒதுங்கி நின்று தற்காப்பு நிலையை கடைபிடிக்கும் தேவேந்திரர்களை தொடர்ந்து தாக்கி படுகொலை செய்யும் சமூக விரோதிகளான மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் தேச துரோகிகளை உடனடியாக கைது செய்.
எதற்கும் தயார் என தேவேந்திரர்கள் விழித்து எழுந்து தாக்குதல் நிலையை துவங்கினால் எதிர்ப்பவன் இருந்த இடமும் தெரியாது போன தடமும் தெரியாது ஜாக்கிரதை. அதன் பிறகு அரசு என்ன ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது என்று எச்சரிக்கிறோம்.
தேவேந்திர சொந்தங்களே!
போதும் உயிர்பலிகள்! எம் சொந்தங்களை பலியிட்டு தான் சமூகம் விடுதலை அடைய வேண்டுமா? களத்தில் ஆட்டத்தை மாற்றுங்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மரபு வழி போருக்கு தயாராகுங்கள் சொந்தங்களே...
பலவாறு பிரிந்து நிற்பதால் தான் இந்த இழப்புகள் என்பதை உணருங்கள். இனிமேலாவது கருத்தியல் ரீதியாக பிரிந்து நின்றாலும் உணர்வில் தேவேந்திரன் என்று இணைந்து நில்லுங்கள்.
அன்பு சகோதரர்கள் மகேஷ் மள்ளர் & மாரிமுத்துவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம் அவர்கள் விட்டுசென்ற இலட்சிய கனவை செய்து முடிப்போம் என உறுதி ஏற்போம்.
வீர வணக்கம்! வீரவணக்கம்! வீரவணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக