ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 1 அக்டோபர், 2010

டாக்டர் கிருஷ்ணசாமி, உமாசங்கர் ஐ.ஏ.எஸ். -சிறப்புமிக்க சந்திப்பு

சென்னையில் செப்டம்பர் 28ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களும் சந்தித்தனர். இரண்டு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் பல விசயங்கள் பற்றி விவாதித்தனர். தேவேந்நிரர்களின் அரசியல் எழுச்சிபற்றியும், புதிய தமிழகம் கட்சி முன்னெடுக்கின்ற தற்போதைய அரசியல் கூட்டணி பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மற்றும் பசுபதி பாண்டியன் அகிய மூவரும் ஓரணியில் இணைந்து வருகின்ற சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே தேவேந்திரர்களின் ஆசை என்று உமாசங்கர் ஐ.ஏ.எஸ். தெரிவித்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது உண்மை. குறிப்பாக இச்சந்திப்பு தேவேந்திர அரசு ஊழியர்கள் மத்தியில் புதிய தாக்கத்தை உண்டாக்கும். சென்னையில் செப்டம்பர் 28ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களும் சந்தித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக