ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 27 அக்டோபர், 2010

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள்

சமூக உரிமை போராளி மள்ளர் குல சிங்கம் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் செப் 11 பரமக்குடியில் மிக மிக அமைதியாக நடந்து முடிந்தது. வேறெந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மள்ளர் குல சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நினைவு நாள் அன்று ஒவ்வொரு மள்ளர் இன இளைகர்களின் முகத்தில் தோன்றிய சந்தோசம் அளவில்லாதது. அவர்கள் முகத்தில் தோன்றிய சிரிப்பு "நான் மள்ளர் இனத்தவன்" என்ற உரிமையை எனக்கு எடுத்து காட்டுவதாக எனக்கு தோன்றியது. வழி நெடிகிலும் அய்யா இம்மானுவேல் படம் போட்ட பேனர்கள் இருந்தன. கூட்டத்தில் ஒவ்வொரு மள்ளர் இன இளைகனும் ஆடி பாடி நினைவு நாளை விமரிசையாக கொண்டாடினர். நானும் ஆடி பாடி கொண்டிருக்கையிலே கூட்டத்தில் ஒரு சகோதரன் கேட்டான் "ஏன் பாசு இவ்வளோ பேரு இருக்காங்களே அப்புறம் ஏன் நம்ம கட்சி தேர்தல்ல ஜெயிக்க மாட்டேங்குது. அவன் கேட்ட அந்த கேள்வி எனக்குள் என்னமோ மாதிரி பண்ணியது.அவன் கேட்ட கேள்வியிலே எந்த வித குறையும் இல்லை. அப்படிஎன்றால் யார் மீது குறை ?அவன் கேட்ட கேள்வியால் அங்கு இருக்க முடியாமல் அய்யாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தி விட்டு அதற்கு விடை தேடி கொண்டே என் ஊருக்கு நடை பயணமானேன். அதற்கு விடை எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரியுமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக