ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 23 டிசம்பர், 2010

ராசபக்சே தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார்: டாக்டர் கிருஷ்ணசாமி

ராசபக்சே தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார்: டாக்டர் கிருஷ்ணசாமி




புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-



சுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஈழத்தமிழ் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தனி ஈழத்திற்கான தமிழ் மக்களின் போராட்டத்தை ஈவு இரக்கமற்ற வகையில் ராசபக்சே இராணுவ நடவடிக்கையின் மூலமாக ஒடுக்கி வருகிறார். 2008 -09ம் ஆண்டுகளில் தமிழ் மக்களின் மீதான தாக்குதலின் போது, போர் முடிவுற்ற பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்படும் என்று ராசபக்சே அறிவித்திருந்தார். தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டி இந்திய அரசும், தமிழக முதலமைச்சரும் இதே கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.



போர் முடிந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெறும் வேளையில் அரசியல் தீர்வுக்கான எந்த முயற்சியையும் ராசபக்சே எடுக்கவில்லை. மாறாக எந்த தமிழ் இலட்சியத்திற்காக தமிழ் மக்கள் லட்சக்கணக்கான பேர் தங்கள் இன்னுயிரை ஈந்தார்களோ, அந்த இலட்சியத்தை தவிடு பொடியாக்கும் வகையில் ராசபக்சே இப்பொழுது தன் சுயரூபத்தை காட்டியிருக்கிறார். சிங்கள மொழிக்கும், சிங்களவர்களுக்கும் நிகரான அந்தஸ்து என்ற நிலையிலிருந்து முற்றிலுமாக மாறி இப்பொழுது சிங்கள மொழியை மட்டுமே முன்னிலைப்படுத்தி தமிழ் மொழியினுடைய எல்லா விதமான அடையாளங்களையும் அழிக்கும் வகையில் இப்பொழுது சிங்கள மொழி மட்டுமே தேசிய கீத மொழியாக அறிவித்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.



உடனடியாக ஈழத்தில் தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தையும், இன்னும் சொல்லப் போனால் இரு மொழிக்குண்டான சம அந்தஸ்தை கொடுக்கத் தவறும் பட்சத்தில் மீண்டும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறேன். அதே நேரம், சிங்கள இனவெறிக் கும்பலின் கைகளில் சிக்கியுள்ள இலங்கைத் தீவில், தமிழீழம் மலர்வது ஒன்றே, தமிழ் மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட ஒரே தீர்வு என்பதை ராசபக்சேவின் நடவடிக்கை நிரூபித்துள்ளது என்பதை இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக