ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

பரமக்குடி துப்பாக்கிச்சூடு துரதிருஷ்டவசமானது



டாக்டர் கிருஷ்ணசாமி - ஒட்டப்பிடாரம் தொகுதி (புதிய தமிழகம்)

ஒட்டப்பிடாரம் தொகுதியின் தனித்தன்மை என்ன?
வரலாற்றுரீதியாக இந்திய சுதந்தரத்துக்காகத் தன்னுயிரை நீத்த எண்ணற்ற தியாகிகள் பிறந்து வாழ்ந்து போராடிய மண்ணாகும். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. முதல் வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது தளபதியாக செயல்பட்ட சுந்தரலிங்கம் வரை பல்வேறு மாவீரர்களைக் கொண்ட ஊர் இது. பாரதியாரும் இப்பகுதியை சேர்ந்தவர்தான்.
தென் மாவட்டங்களில் அதிகம் தொழில்கள் வராமல் தொடர்ந்து மக்கள் வேலைவாய்ப்புக்காகத் தலைநகரத்துக்கு இடம்பெயரும் நிலை தொடர்வது ஏன்?
தலைநகர் சென்னையிலிருந்து மிகத் தொலைவில் இப்பகுதிகள் உள்ளன. போக்குவரத்து வசதிகள் இல்லை. வறட்சிப் பகுதியாகவும் உள்ளது. ஆனால் ஆட்சியாளர்கள் சென்னை யைச் சுற்றியிருக்கும் இடங்களிலேயே தொழில்களை ஊக்குவிக்கின்றனர்.
சட்டமன்ற உறுப்பினருக்கான நிதியை பைசா மிச்சமில்லாமல் தொகுதி மக்களுக்குச் செலவழிப்பவர் நீங்கள். இந்தமுறை உங்கள் நிதியை எப்படிச் செலவழிக்க திட்டமிட்டுள்ளீர்கள்?
சென்றமுறை சட்டமன்ற உறுப்பின ராக இருந்தபோது இணைப்புச் சாலைகள், சமூகக்கூடங்கள், குடிநீர் குழாய்கள், அங்கன்வாடிகள் அமைப்பதற்கு எனக்குத் தரப்பட்ட நிதியைப் பயன்படுத்தினேன். ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கை வசதி இல்லாத நிலை இருந்தது. அத்துடன் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வசதியும் சேர்த்து இருக்கை வசதிகளை உருவாக்க 80 லட்சம் ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளது. இதுதான் முக்கியமான வேலை என்று சொல்வேன்.
கொங்கு மண்டலத்தில் பிறந்த நீங்கள் தென்மாவட்டங்களில் செல்வாக்கான தலைவராய் எப்படி மாறினீர்கள்?
போராட்டத்துக்கான தளம் வலுவாக, களம் தயாராக இருந்தது. அதுதான் காரணம்.
பரமக்குடி துப்பாக்கிசூடு அதிமுக அரசின் நிர்வாகத்திற்கு கரும்புள்ளியாகவே உள்ளது. அதுகுறித்துக் கூறுங்கள்?
அந்தச் துப்பாக்கிசூடு அவசியமற்றதென்றும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் நஷ்ட ஈடும் கோரினேன். அதற்கு அரசும் இசைந்தது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவுக் கூட்டத்திற்கு கூடிய மக்கள் அவ்வளவு பேரையும் போராட்டக்காரர்களாக அரசு பார்த்ததுதான் துரதிருஷ்டமானது.
தென் மாவட்டங்களில் தலித்துகள் மற்றும் ஆதிக்க சாதியினரிடையே குறிப்பிடத்தக்க அளவு சமத்துவத்தை உருவாக்கியவர் நீங்கள். ஆனால் உங்கள் கட்சி பெரிய அளவில் வளர முடியாமல் போனதற்குக் காரணம்..?
திராவிட கட்சிகள்தான் காரணம். அவர்கள் உருவாகும்போது பிராமண எதிர்ப்பு இயக்கமாக உருவானார்கள். வளர்ந்த பிறகு தலித்துகளுக்கு விரோதமான மனநிலையை வளர்த் துக் கொண்டுள்ளனர். தலித் மக் களின் இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து ஒருங்கிணையும் காலம் வரும்
ஷங்கர்ராமசுப்ரமணியன் | செப்டம்பர் 29, 2012
நன்றி: த சண்டே இந்தியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக