ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 நவம்பர், 2012

காடுவெட்டி குரு மீது உரிமை மீறல் விவாதம்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்



தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில், காதல் திருமணம் காரணமாக எழுந்த கலவரம் மற்றும் வன்முறை தீவைப்புச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை இன்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
"பாமகவைச் சேர்ந்தவரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு போன்றோர் இது போன்ற சம்பவங்களுக்குக் காரணம். சாதீய ரீதியான மோதல்களைத் தூண்டும் வகையில் சிலர் பேசி வருகின்றனர்.
அண்மையில் மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டுக் கூட்டத்தில் பேசிய காடுவெட்டி குரு, வன்னியர் இனப் பெண்களை வேறு சாதியினர் திருமணம் செய்துகொண்டால் அவர்களை வெட்ட வேண்டும் கொல்ல வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
இது அவர் எம்.எல்.ஏ.வாகப் பொறுப்பேற்றுக் கொண்ட செயலுக்கு உகந்தது அல்ல. அவர் எல்லோருக்கும் பொதுவாக சட்ட மன்ற உறுப்பினர் ஆனவர். ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பதவி ஏற்கும் போது மேற்கொள்ளும் பிரமாணத்தை அவர் மீறியிருக்கிறார். இதற்காக அவர் மீது சட்டமன்றத் தலைவரிடம் உரிமை மீறல் மனு கொடுத்தேன்.
ஆனால், சட்டமன்றக் கூட்டம் விரைந்து முடிந்துவிட்டதால், அப்போது விவாதிக்க இயலாமல் போய்விட்டது. அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த உரிமை மீறல் குறித்து விவாதிக்கப்படும் என்று நினைக்கிறேன்” என்று கூறினார் டாக்டர் கிருஷ்ணசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக