ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 2 ஜூலை, 2015

சேலம் என்ஜீனியரிங் மாணவர் கோகுல்ராஜ் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்...டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,வலியுறுத்தல்.

.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
அப்போது அங்கு வேற்று ஜாதி பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 23–ந் தேதி கோவிலுக்கு தோழியுடன் சென்ற போது மர்மநபர்களால் அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.
அவரது தலையை ரெயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்று உள்ளனர். இந்த சம்பவத்தில் போலீசார் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் இதுநாள் வரை 105 காதல் ஜோடிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு தர்மபுரியில் இளவரசன் என்ற இளைஞர் காதல் விவகாரத்தில் இறந்தார். இந்த ஆண்டு நாமக்கலில் கோகுல் ராஜ் காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டு உள்ளார். தமிழகத்தில் இளைஞர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கலப்பு காதல் ஜோடிகள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
எனவே மத்திய அரசு கோகுல்ராஜ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய விசேஷ சட்டம் பிறப்பித்து கண்காணிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக