ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும்!

மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மக்கள் தமிழகம் கட்சி வலியுறுத்தியுள்ளது.




புதுக்கோட்டையில் நேற்று முன்தினம்( 09-02-11) மக்கள் தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் அரசியல் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-



* தியாகி இமானுவேல்சேகரனுக்கு மணிமண்டபம் அமைத்தி, அரசு விழா எடுப்பதுடன், தபால் தலை வெளியிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



* மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும்.



* தேவேந்திர குல மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.



* சென்னை மெரீனா கடற்கரையில் வீரன் சுந்தரலிங்கம் உருவச்சிலையை நிறுவ வேண்டும்.



* மறைந்த மூதறிஞர் தேவ ஆசீர்வாதத்தின் நூல்களை நாட்டுடமையாக்கி தஞ்சையில் அவர் வாழ்ந்த வீட்டை மணிமண்டபமாக மாற்ற வேண்டும்.



* தமிழக மக்களின் சம்மதமின்றி இந்திய அரசால் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



* பன்னாட்டு முதலாளிகளுக்கு தமிழகத்தின் நீண்ட கடற்கரையைத் தாரை வார்க்க வழிவகுக்கும் இந்திய கடற்கரை மேலாண்மைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மாநாட்டுக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் அ.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாநில செய்தித்தொடர்பாளர் டென்னீஸ், மாவட்ட இளைஞரணிச் செயலர் சி.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முத்தரையர் சங்கத் தலைவர் குழ.செல்லையா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கட்சியின் நிறுவனத்தலைவர் வழக்குரைஞர் புரட்சிக்கவிதாசன் மாநாட்டு பேருரையாற்றினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக