ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் – சென்னை கருத்தரங்கில் டாக்டர்



ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் – சென்னை கருத்தரங்கில் டாக்டர் கிருஷ்ணசாமி சூளுரை



சென்னை அவ்வை சண்முகம் சாலையில் ஹேமா மலினி திருமண மண்டபத்தில் பிப்ரவரி 12ம் தேதியன்று பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு மீட்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றார்
தமிழக மத்திய மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் இந்த கரித்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அரசு ஓழியகளும் ஆசிரியர்களும் திரளாக வந்திருந்தனர்
கல்வி – வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட- பழங்குடி பட்டியலினத்தவர்களுக்கு 19சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அரசியல் சாசன விதி,ஆனால் தமிழ் நாட்டில் முறையாக அமல் செய்யப்படாத்தால் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பின்னடைவு பணியிடங்கள் நிரப்ப்ப்படவில்லை இதனை வலியுறுத்தி பட்டியலின மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.புதிய தமிழகம் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஏற்கனவே இடஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் பிரச்சினை எழுப்பி “வெள்ளை அறிக்கைகேட்டிருந்தார் முழுமையாக இடஒதுக்கீடு நிரப்பப்படவில்லை.இந்த நிலையில் தமிழக அரசு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் தனி உள் இடஒதுக்கீடு ஒன்றை அறிவித்தது. இந்த உள் இடஒதுக்கீடு காரணமாக தமிழ் நாட்டில் பல்கழைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகளும்,அரசு துறையில் பல உயர் பொறுப்புகளும் ஒட்டு மொத்தமாக தாழ்த்தப்ப்பட்டோருக்கான 3சதவிகித பணிகளும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே ஒதுக்கும் ஒரு மோசமான நிலை உருவாகியுள்ளது, எனவே, ஏற்கனவே கொடுக்கப்பட்ட மூன்றரை லட்ச பின்னடைவு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும்,உள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் 3சதவீத இடங்களும் சமுதாயத்தின் ஒரே பிரிவினருக்கு மட்டுமே வழங்க கூடாது என்பதை வலியுறித்தியும் “இட ஒதுக்கீடு மீட்புக் கருத்தரங்கம்” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
      சென்னை ஹேம மாலினி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய டாக்டர்.கிருஷ்ணசாமி “மூன்றரை லட்சம் பின்னடைவு இடங்களை உடனே நிரப்பவும், உள் இட ஓதுக்கீடு முறைக்கு முடிவு கட்டவும்தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை” என வலியுறித்தினார். மாற்றம் நிகழ கடுமையாக உழைக்குமாறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்த டாக்டர்.கிருஷ்ணசாமிஅவர்கள் தமிழகத்தில் நிச்சயம் அதிமுக ஆட்சி மலரும் என்று நம்பிக்கை தெரிவித்தார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக