ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

தேவர் தேவேந்திரர் - அரசியல்



தேவர் தேவேந்திரர் இணைந்து அரசியல் செய்வது ஆ.தி.மு.க கூட்டணியில் நம் சமூக கட்சியை இணைப்பது இதனால் நெடும் பகையாய் பிரிந்து கிடக்கும் இரு சமூகத்திற்கும் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது போன்ற திட்டத்தை எம் இரு சமூகமும் இனைந்து செயல்பட தயாராகிகொண்டிருக்கும் இந்த தருணத்தில் நம் சமூகத்தின் அரசியல் எதிரியான தி.மு.க கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் வாக்குறுதிகளை சற்று யோசிதொமானால் நம்மை நிரந்தர எதிரிகளாக்க அவர்களின் திட்டம் விளங்கிவிடும்.

மதுரை விமான நிலையத்திற்கு நம் சமூக மக்களின் நிலம் அபகரிக்கபட்டது மற்றும் அந்த விமான நிலையத்திற்கு தியாகி.இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும் என்பது இந்த அரசிடம் எம் தேவேந்திர குல மக்களின் நீண்டநெடுநாள் ஆவா... என்பதை அனைவரும் அறிவர்.



இந்த தருணத்தில் அரசியல் ஆதாயம் கருதியும் புதியதமிழகம் ஆ.தி.மு.காவில் இணைந்ததனால் எங்கே இரு சமூகமும் இணைந்து தி.மு.காவின் தோல்வியை தென்னகத்தில் நிர்ணயித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மீண்டும் பிரிவினையை தூண்ட அவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் தான் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம் தேவைப்பட்டால் மீண்டும் நினைவூட்டுவோம் என்ற பகட்டு பேச்செல்லாம்.



எந்த சமூகமும் தனித்து அரசியலில் வெல்வது என்பது இயலா காரியம் தான் அரசியல் பலமில்லாததால்தான் பசும்பொன் செல்லும் இந்த அரசியல் கோமாளிகள் எல்லாம் பக்கத்தில் நடந்த பரமக்குடி குருபூஜைக்கு வரவில்லை ஓட்டு சதவீதம் ஒன்றும் தேவருக்கும் தேவேந்திரற்கும் பெரிய வித்தியாசம் இல்லை அரசியல் அறிவு மட்டுமே இருவருக்கும் உள்ள மிக பெரிய வித்தியாசம். இன்று ஆ.தி.மு.காவாக இருந்தாலும் சரி தி.மு.காவாக இருந்தாலும் சரி மாவட்டம் வட்டம் ஒன்றியம் என அனைத்திலும் தலைவர்களாய் அவர்கள் மட்டுமே ஏன் தேவேந்திரர்கள் மிகுதியான தொகுதிகளில் கூட மற்ற சமூகத்தவர்கள் தானே இன்றும் மாவட்ட செயலாளர்களாகவும் வட்ட செயலாலர்கள்ளவும் இருக்கிறார்கள் தேவேந்திரர்கள் இன்றும் அவர்கள் பின்னால் திரியும் சிப்பந்திகளாக தானே இருக்கிறார்கள் பிறகெப்படி அரசியல் பலம் பெறமுடியும்.



புதியதமிழகதினை போன்றே ஒரு அரசியல் கட்சி தான் டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்ற கழகமும் ஏன் ஒட்டு மொத்த முக்குலத்தொரும் அவரின் பின்னால் செல்லவில்லை. தி,மு.க பத்து சீட்டுகளை புதியதமிழகத்திற்கு வழங்கிய போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு மூன்று சீட்டுகள் வழங்கிய ஜெயலலிதாவை ஒரு தேவர் இனத்தவரும் கேள்வி எழுப்பவில்லையே விமர்சனம் செய்யவில்லையே ஏன்? அதுதான் அரசியல் சாணக்கிய தனம்.



ஆம் அன்றைய சட்டசபையில் ஆ.தி.மு.க அமைச்சரவையில் சரி பாதி தேவர் இனத்தவர் எங்கே சென்றது எம் தேவேந்திரகுலம் அவர்களுக்கு இணையான ஒட்டு வங்கி கொண்ட தேவேந்திர குல அமைச்சர்கள் அங்கு இல்லாமல் போனதற்கு காரணம் என்ன???



நம் இனம் நீங்கள் கூறும் ஒருகுடையின் (ஜாதி தலைவனின்) கீழ் அகப்பட்டதன் வெளிப்பாடு தான் இன்றைய அரசியல் தோல்விக்கான காரணம் அதுதான் நம்மை இன்று வரை மீளமுடியாமல் செய்துவிட்டது நாம் அரசியல் பலம் பெற நமக்கு தலைவன் தேவை இல்லை தலைமைத்துவமும் தேவை இல்லை நமது அத்தியாய தேவை மாநில மற்றும் தேசிய கட்சிகளில் உயரிய பொறுப்புகள் அது தான் உங்களுக்கு அரசியல் முகவரியை ஈட்ட்டிதருமே ஒழிய வேறொன்றும் இல்லை.



மீண்டும் தேவேந்திரகுல சமூகம் தலைமைத்துவத்தையும் தலைவனையும் தேடினால் அந்த தலைவனால் நம் சமூகம் மீண்டும் அரசியல் அடமானம் வைக்கப்படும் என்பது மறுப்பதற்கு இயலா உண்மை. ஒரு ஜாதி தலைவனை நம்பி நீ ஏன் இருக்க வேண்டும் உனக்கு திறமை இருந்தால் ஒரு மாநில தேசிய கட்சிகளில் பெரிய பொறுப்பிற்கு வா... பின் உனக்கு சமூக அக்கறை இருந்தால் உன் சமூகம் மாற்றப்பட வேண்டும் என்று நீ விரும்பினால் மறைமுகமாகவோ நேராகவோ (சானானை நாடார்களாக உயர்த்திக்காட்டிய காமராஜரை போல்) உன்னால் ஆனதை இந்த சமூகத்திற்கு செய்து இதன் இழிநிலையை மாற்ற முயற்சி செய் (பள்ள்னை தேவேந்திரனாக மாற்று) இது தான் அரசியல் சாணக்கியத்தனம்.



இதை விட்ட்டுவிட்டு தலைவர்களை இணைக்க நீ யார்? அவர்களால் நீயும் உன் சமூகமும் அடைந்த பயன் என்ன யோசித்து பார்?

இன்றைய தி.மு.க அமைச்சரவையில் ஒரு ஒரு பத்து பேர் முக்கிய அங்கத்தினர்களாக அமைச்சர்களாக இருந்திருந்தால் இன்று வரிஞ்சுகட்டிகொண்டு பசும்பொன் சென்ற அத்துணை அரசியல் கோமாளிகளும் பரம்பையை நோக்கி பயணிக்காமல் இருந்திருக்கமுடியுமா? எம் சொந்தங்களின் இடத்தில விமான நிலையம் அமைத்துவிட்டு அதற்கு தேவர் பெயர் சூட்ட பரிசீலிப்போம் என்று அறிக்கைவிட முடியுமா? சிந்தியுங்கள்!!! ஏன் இந்த நிலை? இதை மாற்ற தலைவன் தேவை இல்லை தலைமைத்துவமும் தேவை இல்லை தமிழகத்தின் எல்லா கட்சிகளிலும் உயரிய பொறுப்புகளில் தேவேந்திரர்கள் ..அது தான் இதற்கு தீர்வு.



இதையெல்லாம் கடந்து இரு சமூகமும் அரசியலில் இணைய வாய்ப்புள்ள இந்த தருணத்தில் தி.மு.க கூட்டணி அரசியல் கோமாளிகளின் வவிஷமத்தனமான அறிக்கை மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவது குறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் நினைவூட்டுவோம் என்றால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெயர் பிரச்னையை பெரிது படுத்தி மீண்டும் இரு சமூகத்திற்கு இடையே பிரிவினையை தூண்டி அரசியல் ஆதாயம் காண்பது தானே அவர்களின் நோக்கம்? இதை எப்படி சாமர்த்தியமாக சமாளித்து அரசியல் அங்கீகாரம் பெற போகிறார்கள் இந்த தேவேந்திர குல ஜாதி தலைவர்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக