ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 11 அக்டோபர், 2012

முதுகுளத்தூர் கலவரம் - தினகரன்


முதுகுளத்தூர் கலவரம் - தினகரன்




தொகுப்பும் பதிப்பும் : கா. இளம்பரிதி
யாழ் மை 134 மூன்றாம் தளம்
தம்பு செட்டித் தெரு
சென்னை 600 001
பக்கங்கள் : 120
விலை : ரூ 70

முதுகுளத்தூர் கலவரம் குறித்து முக்கிய வரலாற்றுப் பதிவு இது. உதடசைந்தால் உயிர் போய்விடும் என்று உலகமே பயந்த காலத்தில், இந்த நூலின் மூலம் முதுகுளத்தூர் கலவரத்தின் பின்னணியை அன்றைக்கே தைரியமாகச் சொன்னவர் தினகரன்.

தலித்களுக்கு ஆதரவாக இந்த நூலை எழுதியுள்ளதன் மூலம் சாதி கடந்த மனசாட்சியாகத் திகழ்கிறார். அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம். அவர் நடத்திய பத்திரிகையை மூட நேர்ந்தது மட்டுமல்லாமல், சொந்தச் சாதியினராலேயே படுகொலை செய்யப்பட்டார். 1958ல் வெளிவந்த இந்நூலைத் தேடிக் கண்டுபிடித்து, மறுபதிப்பு செய்துள்ளனர் பதிப்பாளர் இளம்பரிதியும், பதிப்பாசிரியர் அ.ஜெகநாதனும்.

நன்றி ஆனந்த விகடன்
18.04.2007

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக