ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 24 அக்டோபர், 2012

மாமள்ளர் இராஜராஜ சோழனின் 1027 வது சதய விழா!!!


மள்ளர் குல மாமன்னனின் 1027 வது சதயவிழா
” தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு.

குடவோலை முறையை கொண்டுவந்தவனை,
ஈழம் முதல் இமயம் வரை வென்று, இமயத்தில் புலி இலச்சினையை பதித்தவனை,
சிங்கபூரிலும், மலேசியாவிலும், இலங்கையிலும் இன்று தமிழ் ஆட்சி மொழியாய் அலங்கரிக்கபடுவதற்கு காரணமானவனை,

வீராணம் ஏரி வெட்டி, கல்லணை எடுத்து கடலுக்கு வீணே போன காவிரி பிரவாகத்தை
உபயோகமாய் திருப்பி தமிழகத்தை செழிக்கச் செய்தவனை,
ஆயிரம் ஆண்டுகளாய் பெருமை குறையாமல் உறுதி குறையாமல் தமிழ்க் கலாச்சாரத்தை தலை நிமிரச்செய்து நிற்கும் தஞ்சாவூர் கோவிலைக் கட்டியவனை,

திரைகடல் ஓடிய தேசங்களிலெல்லாம் தமிழ் மனம் பரப்பியவனின்
1026 வது சதயவிழாவை கொண்டாட தஞ்சாவூர் நோக்கி தேவேந்திர குல மக்கள் அரசியல் பாகுபாடின்றி அலைகடலென ஆர்பரித்து அணிதிரள்வீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக