ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

விஜயநாராயணம் அருகே வீரன் சுந்தரலிங்கம் படம் அவமதிப்பு: பொதுமக்கள் மறியல்

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள காரியாண்டியில் வீரன் சுந்தரலிங்கம் பேரவை சார்பாக ஒரு போர்டு வைக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள சுந்தரலிங்கம் படத்தில் யாரோ சாணம் பூசி அவமரியாதை செய்திருந்தனர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து கிளை செயலாளர் முத்து தலைமையில் அங்குள்ள ரோட்டில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். 

சுந்தரலிங்கம் படத்தை அவமரியாதை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்க திருமாறன் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு நடத்தினார். 

இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக