ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 6 ஜனவரி, 2015

சித்தமல்லியில் இன்று முருகையன்தேவேந்திரர் எம்.பி.நினைவு தினம்.(.06.01.2015)

சித்தமல்லியில் இன்று முருகையன் எம்.பி.நினைவு தினம் அனுசரிப்புதிருவாரூர் மாவட்டத்தின் பொதுவுடைமைவாதியும், மறைந்த எம்.பி.யுமான சித்தமல்லி எஸ்.ஜி. முருகையனின் 36-வது நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி சித்தமல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
சித்தமல்லியைச் சேர்ந்தவர் எஸ்.ஜி. முருகையன் (படம்). இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் நிலவி வந்த நிலப்பிரபுத்துவ முறைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். நாகை எம்.பி.யாக இருந்தபோது, 1979-ல் கொலை செய்யப்பட்டார். அவரின் 36-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சித்தமல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பலர் அஞ்சலி செலுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை எஸ்.ஜி.எம். ரமேஷ், எஸ்.ஜி.எம். லெனின் ஆகியோர் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக