ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 8 ஜனவரி, 2015

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன்..அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள்...

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கல், நத்தவனத்துப்பட்டி பகுதியில் 2012 ஜன., 10 ல் கொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினத்தில் அவரது சொந்த கிராமமான அலங்காரதட்டு பகுதியில் நினைவு தினம் அணுசரிக்கப்படும். இதில் கலந்து கொள்ள அவரது ஆதரவாளர்கள் பல மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வருகை தருவார்கள். அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்கமால் இருக்க, ஜன., 8 ம் தேதி இன்று காலை 6 மணிமுதல் 11 ம் தேதி காலை 6 மணி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக