ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 13 ஜூன், 2015

விஜயகாந்துடன் டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு...

விஜயகாந்துடன் டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்புபுதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினார்.
காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை போன்ற விஷயங்களில் தமிழர்களின் குரல் ஒன்றுபட்டு ஒலிக்க தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் டாக்டர் கிருஷ்ணசாமி ஈடுபட்டுள்ளார்.
இதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் விஜயகாந்தை இன்று சந்தித்தார்.
காலை 11 மணிக்கு கிருஷ்ணசாமி தே.மு.தி.க. அலுவலகத்துக்கு வந்தார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழர் நலன் காக்க, உரிமைகளை மீட்டெடுக்க ஒருமித்த கருத்துக்களை உருவாக்க கடந்த 2 மாத காலமாக பல அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறேன். குறிப்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜி.கே.வாசன், வைகோ, கம்யூனிஸ்டு ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விட்டேன். இன்று தே.மு.தி.க. தலைவரை சந்தித்துள்ளேன். அவரோடு பல்வேறு விஷயங்கள் பேசினேன். அவரும் உற்சாகமாக பேசினார்.
முல்லைப் பெரியாறு பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசினேன். வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் புதிய தமிழகம் கட்சியின் 6–வது மாநில மாநாடு நடக்க இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக விஜயகாந்தை கலந்து கொள்ளும்படி அழைத்தேன். அது குறித்து பின்னர் தெரிவிப்பதாக கூறினார்.
ஈழத்தமிழர் பிரச்சனை, காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இவர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் கட்சிகளுக்கு இடையேயான இறுக்கங்கள் குறையும். முதல் முறை அனைவரையும் சந்தித்து விட்டேன். தேவைப்பட்டால் மீண்டும் அனைவரையும் சந்திப்பேன்.
இது தமிழர் நலன் காக்க நடத்தப்படும் பேச்சுவார்த்தை தேர்தல் கூட்டணி குறித்து அல்ல.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பீர்களா? என்கிறீர்கள். நிச்சயமாக அவரையும் சந்திக்க நேரம் கேட்பேன். நேரம் ஒதுக்கினால் சந்தித்து பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக